Friday, December 05, 2008

கலைஞருக்கு 'செம்மொழிச் செம்மல்' விருது!


முதல்வர் கலைஞருக்கு டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் செம்மொழிச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இதற்கான விழா டெல்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்தது. இதே நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சிலை நாட்டுவிழா, முத்தமிழ் தோரண வாயில் கால்கோள் விழா ஆகியவையும் நடந்தன. முதல்வர் கலைஞர் திருவள்ளுவர் சிலையை நாட்டி சிறப்புரை ஆற்றுகிறார்.

இதில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். சங்கத் தலைவர் கிருஷ்ணமணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சங்கப் பொதுச் செயலாளர் முகுந்தன் வரவேற்புரை ஆற்றுகிறார், இணைச் செயலாளர் ராகவன் நாயுடு நன்றி கூறினார்.

செய்தி உதவி : கோவி கண்ணன் & தட்ஸ் தமிழ்

Wednesday, December 03, 2008

ஜெ.ஜெ. பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் "இம்சை அரசி"

தயாரிப்பு: செல்வி ஜெயலலிதா
கூட்டு தயாரிப்பு: தோழி சசிகலா
பட்ஜெட்: எந்திரன் 100 கோடி எல்லாம் ஒரு பட்ஜெட்டா இந்த படத்தில் ஒரு கல்யாண சீனுக்கே பல நூறு கோடிகள் செலவழித்துள்ளார்கள்
கதை: உலகமகா மேதாவி 'சோ'ராமசாமி
திரைக்கதை: மூத்த பதிவர் T.V.Radhakrishnan
இயக்கம்: செல்வி ஜெயலலிதா
வசனம்: வைகோ
மொழிபெயர்ப்பு: டோண்டு ராகவையங்கார்
பாடலகள்: 'மானாட மார்பாட' ஞாநி
வில்லன்: சுதாகரன்
வில்லி: சந்திரலேகா
அறிமுக வில்லன்: சங்கராச்சாரியார்
காமெடி: சுப்பிரமணிய சுவாமி
சண்டை பயிற்சி: வால்டர் தேவாரம்
உதவி இயக்குநர்கள்:
மதுசூதனன் ராமானுஜம்
வீ தெ பீப்பிள்
மாயவரத்து 'ஜெ' அடிவருடி மற்றும் பல பதிவுலக மேதாவிகள்

கதைச் சுருக்கம்: இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். 'சோ'ராமசாமியும் டீமில் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமே கிடையாது. மதமாற்ற தடைச் சட்டம் பின்னர் வாபஸ், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் பின்னர் வாபஸ் போன்று ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம்

பாடல் காட்சிகள்களுக்கு வெளிநாடு செல்லாமல் உள்ளூர் கொடாநாட்டிலேயே படம் பிடித்து இருப்பது மிகப் பெரிய ஆறுதல்

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒரு பேரூந்தை தீ வைப்பது போன்ற மயிர் கூசச் செய்யும் காட்சிகளும் உண்டு

பின் குறிப்பு: சிங்கப்பூர் விநியோகஸ்தருக்கு ஒரு நல்ல ஆளாக தேடிக் கொண்டு இருப்பதாக கேள்வி. ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்

Tuesday, October 28, 2008

ஜெயலலிதா முதல்வராய் இருந்திருந்தால்....

இந்த பதிவிற்கு தலைப்பு முதல்வராய் என்பதற்கு பதில் சாதியை பறைசாற்றும் விதமாக அமைத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் அளவுக்கு கீழே இறங்கி போக விரும்பவில்லை. நாம் ஏற்கனவே போலி பற்றிய பதிவில் சொன்னது போல் நாம் யாரும் பார்ப்பனீயத்தை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டால் அவர்களுக்கு பிழைப்பு ஓடாது. அதை அவர்களே கிளறிவிட்டுக் கொண்டு இருப்பார்கள். நாம் போலி பதிவில் சொன்னதை நூற்றுக்கு நூறு நிரூபித்து இருக்கிறார்கள் தங்கள் செயல் மூலம்

இலங்கை பிரச்சினை மூலம் அதிக கொள்ளை இலாபம் அடைந்தவர்கள் அவர்களே என்றால் மிகையாகாது. தமிழர்கள் என்றும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பது தான் அவர்கள் எண்ணம். அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டது இலங்கை பிரச்சினை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்று சேர்வதை கண்டதும் அதற்கு முதலில் முட்டுக்கட்டை போட்டது அவர்கள் தான். இந்திய இறையாண்மை என்ற அஸ்திரத்தை ஏவினார்கள். அந்தோ பரிதாபம்! இப்போது யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு கூட அஞ்சுகிறார்கள். அவர்களின் முதல் திட்டம் நிறைவேறிவிட்டது

பேசினாலே சட்டம் பாயும் நிலை ஏற்படுத்திவிட்ட பின்பு கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இவர்கள். அவர் தனது ஆட்சியை இழக்க வேண்டுமாம். அவர் ஆட்சியில் இருக்கும் போதே இந்த ஆட்டம் போடுகிறீர்களே அவர் ஆட்சியையும் பறித்துவிட்டால் நீங்கள் என்னென்ன செய்வீர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ. இவர்கள் வடிப்பது ஈழத்தமிழர்களுக்கான நீலிக் கண்ணீர் அல்ல. கலைஞர் ஆட்சியை காவு வாங்க காத்திருந்து காய்ந்த கண்களின் கண்ணீர்

சரி, நம் கேள்விக்கு வருவோம் "ஜெயலலிதா முதல்வராய் இருந்திருந்தால்.... " என்ன செய்து இருப்பார். கலைஞர் எடுத்த முயற்சியில் எந்த ஒரு துளியும் எடுக்காமல் கொடநாட்டில் ஓய்வு எடுக்க போயிருப்பார். அப்போது இவர்கள் வேறு மாதிரி எழுதிக் கொண்டு இருப்பார்கள்

Friday, October 24, 2008

நன்றி வைகோ

பல வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகி இருந்தது. ஈழத்
தமிழர்களுக்கு ஆதரவாக பல தரப்பில் இருந்தும் ஆதரவுக் கரங்கள் நீண்டன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
கலைஞர் அவர்களும் களம் இறங்கினார். இப்படிப்பட்ட சூழலில் ஆயுதம் ஏந்தி போராடுவேன் என்று பேசும்
அளவுக்கு வைகோவுக்கு என்ன அவசியம் வந்தது

உணர்ச்சி வசப்படுவதற்கு பெயர் போன வைகோ ஈழப் பிரச்சினையில் அதீத உணர்ச்சி வசப்படுவதில் எந்த வித
ஆச்சர்யமும் இல்லை. இன்று வரை கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்ததை அவர் மறுத்ததாக
தெரியவில்லை. அப்படிப்பட்டவர் உணர்ச்சி வசப்பட்டு தீவிரவாதத்தை தூண்டும் வரை போனது மிகப் பெரிய
முட்டாள் தனம். தலைவர் பாதையை விட்டு விலகாத கண்ணப்பணும் தன் பங்குக்கு ஏதேதோ உளறிக் கொட்டி
இருக்கிறார்

வைகோ உணர்ச்சி மேலிடும் போது எந்த அளவுக்கும் செல்வார் என்பதை உலகுக்கு காட்டிவிட்டார். இங்கே
ஒன்றை நினைவுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். வைகோவை கழகம் நீக்கிய போது வைகோவால் தலைவர்
உயிருக்கு ஆபத்து என்ற உளவுத் துறையின் செய்தி ஆதாரமாக சொல்லப்பட்டது. ஆனால் வைகோவோ
ஸ்டாலினை கட்சியில் முன்னிலைப்படுத்துவதற்காக தன் மீது அபாண்ட பழி சுமத்தப்படுவதாக ஒப்பாரி
வைத்தார். அவர் உணர்ச்சி மேலிடும் போது தான் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் செயல்படுவார்
என்பதை அவருடைய சமீபத்திய பேச்சுக்கள் மீண்டும் நிரூபித்து இருக்கின்றன.
உங்கள் உண்மை முகத்தை உலகுக்கு வெளிக் காட்டி கொண்டதற்கு நன்றி வைகோ

Thursday, October 16, 2008

அம்மாவின் கபட நாடகம் பாரீர்.

அம்மாவின் கபட நாடகம் பாரீர்.

அட, இந்த அம்மா கூட இலங்கை தமிழருக்கு ஆதரவா பேசுதேனு ஒரு ஆச்சரியம்.. அதெல்லாம் ஒரு மன்னும் இல்லனு தெளிவு படுத்திய அம்மாவுக்கு நன்றி..

தந்தி அடியுங்கள் என்ற சொன்னவுடன் , என்ன தந்தி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்ல வேண்டியது தானேனு அம்மா கத்துச்சி.. இப்போ அதுவே தீர்மானமாக அனைத்து கட்சிக்கூட்டத்துல வந்தப்ப, மொதல்ல, நான் சொன்னதுக்காத்தான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்தார்னு ஒரு அறிக்கை விட்டுச்சு.. அந்த பப்பு வேகல.. கலைஞர் எடுத்த இந்த முடிவுக்கு எல்லோரும் , ஆதரவு தந்தத பார்த்து அதுக்கு உள்ளே ஒரு உதறல்..

இப்பொ என்னடானா, அயிரெத்துட்டு கேள்வி கேட்குது.. அமைச்சர் பதவி விலகுவாங்களா.. அது இதுனு,

அட லூசே.. அனைத்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்னு தெளிவா சொல்லிட்டாங்களே அப்புறம் ஏன் ஒப்பாரி உனக்கு?? வக்கிருந்து உங்க கட்சி சார்ப்பா அனைத்து கட்சி கூட்டத்து போய் இருக்கனும்.. அத விட்டுட்டு லூசு முன்டம் மாதிரி அறிக்கை விடற... அதுக்கு அந்த வைக்கோல்சாமி வேற ஒத்து...

யம்மா.. நீ வழக்கம் போல, தாம்பரம் 2 வது முட்டுசந்துல அ தி மு க போராட்டம் , கிழக்கு சைதாப்பேட்டைல மூனாவது மூத்திர சந்துல ஆர்ப்பாட்டம்னு அறிக்கைவிட்ட்கிட்டு வேலைய பாரு.. லூசுத்தனமா, உனக்கு சம்பந்தமே இல்லாத தமிழர் பிரச்சனைக்கு தலைய விடாதே.. சரியா..

இது நீலிக்கண்ணீர் விடுது.. இலங்கை பிரச்சனை பற்றிய உன் மூஞ்சி லட்சணம் என்னனு ஊருக்கே தெரியும், இப்போ திடிர்னு நீ வந்து சும்மா ஆதரவு அறிக்கை விடுறீயா??

இதுல ரெண்டு பக்கம் இருக்கு , ஒரு பக்கத்தை ஆதரிக்கிறேன், இன்னொரு பக்கத்தை கடுமையா எதிர்க்கிறேன்னு அறிக்கை விட்டுது இந்த லூசு இரண்டு நாளைக்கு முன்னாடி.. இப்போ வந்திருக்க கடைசி அறிக்கைய பாருங்க.. என்ன நாடகம் ஆடுது இந்த புண்ணாக்கு.

லூசே, இப்போ சொல்றீயே.. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை நு , அட முன்டமே. அப்புறம் என்னத்துக்கு இங்கே இருந்து எதுக்கு அறிக்கை விட்டே?? மத்திய அரசில் இருக்கும் கருணாநிதி இதை பற்றி ஏன் பேசலனு..

லூசு அம்மாவின் பதில் - அட , கருனாநிதி இலங்கையோட அமைச்சரையில் இடம்பெற்றிருக்காருன்னா நெனைச்சுன்டிருக்கேன்... அவா கூட இல்லையா....

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிட வாய்ப்பு ஏற்படும். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்' என்பது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னை

லூசு அம்மா, இந்தியா தலையிடவும் கேட்கக்கூடாது, தாக்குதல்களும் நிக்கனும் . என்ன கணக்கு இது? அப்புறம் ஏன் இங்கே இருந்து அறிக்கை விடற அதுவும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரா..?

லூசு அம்மா பதில் - அட ஆமா, சரி சரி.. அப்போ , இந்தியால இருக்கு எல்லா எல் கே ஜி, யூ கே ஜி க்கும் 2 நாள் லீவு விட்டுடலாம், இலங்கை அரசு பயந்துடும்.. அப்படியும் பயப்படலனா... போயஸ் தோட்டம் பக்கத்துல இருக்க மூத்திர சந்துல ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி நடுநடுங்க வெக்கலாம்..

இது ஓக்கே வாம் , அது ஓக்கே இல்லையாம்.. சரி இந்தியா தலையிட்டு பேசலாம்னா , அது கூடாதாம், அது இந்திய இறையான்மையை பாதிக்குமாம்..

அட லூசே , என்னத்தான் நிலை நு தெளிவா சொல்லு... நீ அரசியல் குளிர் காயறதுக்கு, நடுவுல பூந்து குளிர்காயாதே.. ஓடு உன் கொட நாடு எஸ்ட்டேட்டுக்கு,குளிர் காயனும்னா..

இந்தியா எதுவும் செய்ய முடியாதுனு பேசுற நீ மத்திய , மாநில அரசுக்கு எதிரா வாய் சவடால் அறிக்கை விடாம எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இரு.. சரியா.. இல்லைனா ராஜபக்சேக்கு எதிரா அறிக்கை விடு.. அத விட மாட்டே, ஏன்னா வைக்கோல்புலி ஏற்கனவே சொன்ன மாதிரி நீ சந்திரிக்காவின் ஊது குழல் தானே.. . வைக்கோல் புலி அதை இப்போ மறந்திருக்கலம்..

லூசு அம்மா - மத்திய மாநில அரசு இந்தியாவுலயா இருக்கு?? இது தெரியாம போச்சே...

Thursday, October 09, 2008

ஓரணியில் திரளக் கூடாதோ?

சரித்திரம் படைத்த தமிழர்
சாகிறார் என்ற செய்தி
செவியினில் எட்டியவுடன்
கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம்
கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க
கரமும் நீட்டியது.

நாடு கடந்து வாழ்கின்ற
நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்;
நம்பிக்கை துளிர்த்திடக் கடிதம் எழுதி
நன்றி தெரிவிக்கின்றார்! இலண்டன்
நாடாளு மன்றத் தமிழ் உறுப்பினர் குழுவின்
நற்றமிழர் சார்பில் நமது முயற்சியைப் பாராட்டி
வீரேந்திர சர்மா வெளியிடுகிறார்,
விடியல் தோன்றுமென்று!
வெந்த புண்ணுக்கு மருந்தாக வன்றோ
வெளிநாட்டில் வாழ்கின்ற இன உறவுத்
தமிழர்களின் இதயம் துடிக்கிறது!
அமெரிக்க மருத்துவர் பஞ்சாட்சரம் என்பார்
அடைந்திடும் மகிழ்ச்சிக்கு அளவு தான் ஏது?

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சேனாதிராஜா, எம்.பி.,
இதயம் மலர இனிய வாழ்த்துக் கூறி இன்புறுகின்றார் -
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் -
வாழ்த்துக்களை வாரியன்றோ இறைக்கின்றார்
வற்றாத அன்பைப் பொழிந்து இலங்கையில்
பொற்றாமரை போல் அமைதி பூத்திட தவமிருக்கின்றார் -
உலகத் தமிழ்ச் சாதி ஒன்று திரண்டு ஓர் உளம் கொண்டு
உதயமாகட்டும் ஈழத்தில் அமைதியென்று இறைஞ்சி நிற்கும்போது;
இங்குள்ள தமிழரிடை ஆயிரம் அரசியல் வேறுபாடு உண்டெனினும்
மூட்டை கட்டி அவற்றையெல்லாம் வைத்து விட்டு -
ஒன்றுபட்டு இலங்கைத் தமிழர் கேட்டை நீக்கிட
ஓரணியில் தான் திரளக் கூடாதோ?

- தலைவர் கலைஞர்

Wednesday, October 08, 2008

ஒகேனக்கல் திட்டம்

ஒகேனக்கல் குடிநீர் திட்டம். இத்திட்டத்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் வாழும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர்.

இந்த திட்டத்துக்கான மேலான்மை பணிகளை கவனிப்பதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இதுவரை நடைபெற்று வந்தன. பல நிறுவனங்களின் விண்ணப்பத்தில் இருந்து ஆராய்ந்து தற்பொழுது ஜப்பானின் நிப்பான் கோய் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா. அக்டோபர் 4 இதழ்). இந்நிறுவனம் திட்டத்தின் கட்டுமானத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான பணிகளில் கை தேர்ந்தவர்களின் உதவியோடு சிவில் வேலைகளுக்கான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்டம் முடிவடையும்(2012) வரை அதன் நிர்வாகத்தில் ஈடுபடும்.

இந்த பணிகள் எல்லாமே முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள்ளாகவே நடைபெற்று வருகின்றன.

Tuesday, October 07, 2008

தமிழக நதிகள் இணைப்பு திட்டம்

தமிழகத்தில் காவிரி ஆற்றை குண்டாற்றுடன் இணைக்கும் திட்டத்துக்கான டென்டர் தமிழக அரசால் கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. அடுத்து பட்ஜட்டிலேயும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் கலைஞர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார். தற்பொழுது டென்டர் கோரப்பட்டு, விரைவில் இணைக்கும் பணிகள் துவங்கப்படவிருக்கிறது.

முதற்கட்டமாக காவிரியையும் வைகை ஆற்றுடனும் குண்டாற்றுனடனும் இணைக்கும் பணிகள் துவங்கப்படும். இணைப்பு நீளம் - 225 கி.மீ.

அடுத்தகட்டமாக தாமிரபரணியையும் கருமேனியாறையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மொத்த நீளம் - 369 கி.மீ.

ஆதாரம்.

கொக்கரித்த கூட்டமே... இங்கே பார்

இதோ, கலைஞரின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு, இலங்கை தூதரை அழைத்து, இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது. மேலும் தலைவர் கலைஞர் அவர்களால் வைக்கப்பட்ட மற்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்..

இது நிச்சயம் கலைஞருக்கு வெற்றி.

அடேங்கப்பா.. ஓரிரு நாளில் எத்தனை நக்கல் பதிவுகள்.. தந்தி அனுப்புவது பற்றி நக்கலடித்து, எள்ளி நகையாடி.. , இதனால் நிகழப்போவது, தபால் அலுவலகத்துக்கு கூடுதல் வருமானம் மட்டுமே என்றெல்லாம் நக்கல் வேறு.
அதே போல, அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்ற செய்தியை படித்துவிட்டு எத்துனை எள்ளல் , சிறுபிள்ளைத்தனமான பதிவுகள்.. 90 காசு கொடுத்து தொலைபேசியில் கூட பேசாமல், 25 பைசாவில் முடித்துவிட்டார் என்று எக்காளமிட்டது ஒரு கூட்டம்.. கலைஞர் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் அந்த கூட்டத்துக்கு.. என்ன செய்ய.. அவர் எது செய்தாலும் எதிர்க்கும் கூட்டம்..

இனிமேலாவது செய்தி தாள்களில் வரும் செய்திகளை அரைகுறையாக படித்துவிட்டு, குறை சொல்லவேண்டுமே என்று பதிவு போடாதீர்கள் நல்லவர்களே...

இன்று செய்திகள் தெளிவாகியுள்ளது. தந்தி அனுப்ப சொல்லிய கலைஞர், கடிதமும் கொடுத்தனுப்பி, தொலைபேசியிலும் பேசி, குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.. தந்தி என்பதும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும்., இது ஓட்டு மொத்த (சோ, ஜெ, சுவாமி போன்ற வகையறாக்கள் தவிர்த்து) தமிழினத்தின் ஏக்கம் என்பதை மத்திய அரசின் மனதில் பதிய வைக்கவுமே.. மற்றபடி, கலைஞர் கடிதம், தொலைப்பேசி மூலம் பேசியதன் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேவையே இல்லாமல், அனைத்திலும் கலைஞரை திட்டுவதற்கென்றே அலைகின்ற கூட்டமே, இப்போதாவது திருந்துங்கள்..

தலைவர் கலைஞர் அவர்களே, மீன்டும் ஒரு முறை நீங்கள் ஒரு தமிழினத்தலைவர் என்பதை நிரூபித்துள்ளீர்..வாழ்க கலைஞரே..

Friday, October 03, 2008

கலைஞரின் எண்ணி பார்க்க முடியாத சாதனைகள்


ஆயிரம் விளக்கு மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளில் மானிய விலையில் மளிகைப் பொருட்களை வழங்கி மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது :-

உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அற்புத திட்டமான மானிய விலையில் 10 மளிகை பொருட்களை வழங்கும் விழாவில் கலந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்று சென்னை மாநகரில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளிலும், மேலும், தமிழகம் எங்கும் உள்ள நகரம், ஒன்றியம், கிராமம் தோறும் இந்நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 5 ஆம் முறையாக தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக எத்தனையோ திட்டங்கள், எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகள் இந்த ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது.

2006 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதி மொழிகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். கிலோ அரிசி ரூ. 2 க்கு வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம். அப்போது, எதிர்கட்சியினர் இது முடியுமா ? நடக்குமா ? சாத்தியமா ? என்றனர், மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக நாம் சொன்னதாக விமர்சனம் செய்தனர். ஆனால், எதிர்கட்சியினர் பொய் பிரச்சாரத்தை, நீங்கள் நம்பவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதிமொழியை நம்பினீர்கள், வாக்களித்தீர்கள்.

வெற்றிபெற்ற தலைவர் கலைஞர் கோட்டைக்கு செல்லவில்லை, கோப்பை வரவழைத்து கிலோ அரிசி ரூ. 2 க்கான கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பித்தார். இப்போது, செப்டம்பர் 15 அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகின்ற திட்டத்தினை கலைஞர் அவர்கள் தொடங்கியுள்ளார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினால் போதுமா ? சாம்பார், குழம்பு சமைக்க முடியுமா ? என்று எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா போன்றவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தற்போது, தலைவர் கலைஞர் அவர்கள் மளிகை பொருட்களின் விலையை குறைத்து மானிய விலையில் வழங்குகின்ற சிறப்பான திட்டத்தினை தொடங்கியுள்ளார்கள். மஞ்சள் தூள் 50 கிராம் ரூ. 2 க்கும், மல்லித்தூள் 250 கிராம் ரூ.18 க்கும், மிளகாய்த்தூள் 250 கிராம் ரூ. 14 க்கும், கடலை பருப்பு 75 கிராம் ரூ. 2 க்கும், வெந்தியம் 25 கிராம் ரூ. 1 க்கும், கடுகு 25 கிராம் ரூ. 1 க்கும், சோம்பு 25 கிராம் ரூ. 1.50 க்கும், மிளகு 25 கிராம் ரூ. 3 க்கும், சீரகம் 50 கிராம் ரூ. 5.50 க்கும், பட்டை மற்றும் கிராம்பு 10 கிராம் ரூ. 2 க்கும் ஆக மொத்தம் 10 பொருட்கள் ரூ. 50 க்கு ஒரே பொட்டலமாக வழங்கப்படுகிறது.

மளிகை பொருட்கள் சிலருக்கு தனித்தனியாக தேவைப்பட்டாலும், குறிப்பிட்ட பொருட்களை குறித்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இவை மட்டும் இல்லாமல் நியாய விலைக்கடைகளில் தாய்மார்கள் குடும்பத்தை நடத்துவதற்கு வசதியாக துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.32 க்கும், உளுத்தம்பருப்பு ஒரு கிலோ ரூ. 36 க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.40 க்கும், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஒரு கிலோ ரூ. 11 க்கும், ரவா ஒரு கிலோ ரூ. 17 க்கும், மைதா ஒரு கிலோ ரூ.16 க்கும் மேற்கண்ட அத்தியாவசிய பொருட்களை அரசே மானியம் வழங்கி மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கிவருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரை 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெறுவார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள 21 லட்சத்து 52 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களில் 18 லட்சத்து 14 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள், மானிய விலையில் மளிகை பொருட்கள் திட்டத்தில் பயன்பெறுவார்கள். குறிப்பாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களில் 72 ஆயிரத்து 168 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைய உள்ளனர். அதேபோல் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 271 குடும்ப அட்டை தாரர்களில் 78 ஆயிரத்து 716 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்கள்.

தலைவர் கலைஞரின்அரசில் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக திட்டங்கள் மற்றும் சாதனைகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஏற்றம் பெற பல்வேறு திட்டங்களைஇந்த அரசு செயல்படுத்திவருகிறது. தலைவர் கலைஞர் ஆட்சியில் சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததும் நடக்கிறது. ஒரு கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்குவோம் என்றோம், ஆனால் தற்போது கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகின்றோம்.

சத்துணவில் வாரம் 2 முட்டை வழங்குவோம் என்றோம், ஆனால் தற்போது வாரம் 3 முட்டைகள் வழங்குகின்றோம் அதுமட்டும் அல்ல முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்குகின்றோம். மகளிருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்குவோம் என்றோம், ஆனால் ரூ. 20 ஆயிரம் வழங்கிவருகிறோம். இப்படி பல்வேறு சாதனைகள் ! எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகள் ! கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகத்திலேயே தமிழகத்தை தவிர வேறு எங்கும் இல்லை. இப்படி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் உன்னத ஆட்சி, இந்த நல்ல அரசிற்கு தொடர்ந்து உங்கள் நல்லாதரவினை வழங்கிட வேண்டும். என்று மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. மு.க..ஸ்டாலின் அவர்கள் பேசினார்கள்.

Friday, September 26, 2008

தந்தையின் மரணத்தை கொண்டாடியவர்களுக்கு கூஜா தூக்கும் சன் டிவி

மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்கள் கலைஞரின் அரசியல் வாழ்வில் நெடுங்காலம் அவருக்கு உறுதுணையாக இருந்தவர். கழகத்தில் தலைவருக்கு அடுத்தபடியாக உடன்பிறப்புகள் அதிக மரியாதை வைத்து இருந்த தலைவர் அவர். கலைஞர் எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் திரு.முரசொலி மாறன் அவர்களை கலந்து எடுப்பது வழக்கம். நள்ளிரவில் தலைவர் வீட்டுக்குள் புகுந்து அவரை கைது செய்ய போலீஸ் வந்த போது தலைவர் முதலில் வரச் சொன்னது திரு.முரசொலி மாறன் அவர்களை தான். உடல்நிலை சரியில்லாமல் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு இருந்த திரு.முரசொலி மாறன் அவர்களை போலீஸ் எப்படி கையாண்டது என்பதை நாம் எல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்று இதை எல்லாம் ஒளிபரப்பிய அதே சன் தொலைக்காட்சி இன்று...

முரசொலிமாறன் இறந்த பொழுது தங்கள் கட்சி அலுவலகத்திலே பட்டாசு வெடித்து கொண்டாடிய ஜெயலலிதாவின் அறிக்கைகள் தினந்தோறும் சன் டிவி
செய்திகளில் ............


மேலும் வாசிக்க கலைஞரும் கலாநிதி மாறனும்

Friday, September 19, 2008

ஒருவனுக்கு ஒருத்தி எனும் டுபாக்கூர் கலாச்சாரம் !

நம்ம பசங்களுக்கு ஏதோ கொஞ்சம் படிச்சு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்த உடனேயே வெள்ளைக்கார துரை ஃபேமிலி என்ற நினைப்பு வந்துவிடுகிறது போல் இருக்கிறது. அதனால் தான் கேட்குறாங்க கேள்வி. பல தார மணம் புரிவது தான் பகுத்தறிவா என்று. இப்படி கேட்பவர்கள் தங்கள் பாட்டன் முப்பாட்டன் வரலாறு எல்லாம் தெரியாதவர்கள் அல்ல அதை குழி தோண்டு புதைத்து மூடி மறைக்க நினைப்பவர்கள். என்னமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்துக்கு காப்பிரைட் வாங்கி வைத்து இருப்பவர்கள் போல் பீற்றிக் கொண்டு திரிவார்கள்

அவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட நம்ம உண்மை திராவிடர் கோவியார் சொன்ன பதிலை சொன்னாலாவது புரியும் என்று நினைக்கிறேன். அவர் "ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !" என்று தலைப்பு வைத்து பதிவு ஒன்றை எழுதி இருந்தார். அந்த தலைப்பில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இப்படி தலைப்பு வைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று தலைப்பு வைத்தேன்

கோவியார் சொன்னதின் சாரம் இது தான். நம் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது எந்த அளவு கடைப்பிடிக்கப்பட்டது என்பது பற்றி கூறி இருந்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்னவர்கள் தான் தேவதாசி முறையின் கன்ஸ்யூமர்களாக இருந்தார்கள். காலையில் வீட்டில் பூஜை அறையில் நுழைந்து பல தார கடவுள்களை வரிசையாக வணங்குபவர்கள் தான் இந்த வெள்ளைக்கார துரை வீட்டு பிள்ளைகள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் கிறுத்துவர்களான ஆங்கிலேயர்களிடம் இருந்து வந்தது தான் என்பது தான் அவர் பதிவின் சாரம். பூஜை முடிந்து வெளியே வந்ததும் கலைஞர் பல தார மணம் புரிந்தது சரியா என்று கரித்து கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள்

ஆங்கிலேயர்கள் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் திருமணத்துக்கு முன்னர் அவர்கள் எல்லாம் சில பல துணைகளையாவது டிரை செய்துவிடுகிறார்கள். அப்புறம் போதும்டா இதுக்கு மேல தாங்காது என்ற நிலை வந்தவுடன் மணம் புரிந்து கொள்கிறார்கள். மணம் புரிந்த பின்னும் அடங்காதவர்கள் மணவிலக்கு பெற்றுக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் சட்டத்தின் ஒட்டையை பயன்படுத்துவது மாதிரி தான் இருக்கிறது. இப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கி வாழ்வதை விட நெஞ்சுரத்துடன் உண்மையாக வாழ்ந்தால் சிலருக்கு ஏனோ ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை

கோவியாரின் பதிவு இங்கே ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !

Wednesday, September 17, 2008

பேரறிஞர் அண்ணா!


வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும் தங்கத் தலைவனின் நூற்றாண்டு விழா இன்று.

“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்தியா என்ற பெயரில் இக்கண்டம் தனியொரு நாடாக இருக்கிறது. ஆரிய ஆதிக்கம் மற்ற இனத்தவரின் நல்வாழ்வை நசுக்கியிருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் கட்டாயமாக ஒரே நாடாக வாழவேண்டுமென்று திணிக்கப்படுகிறார்கள். இதனால் புரட்சிகளையும், குழப்பங்களையும் தவிர்க்க இயலாது.

குழப்பங்களையும், போராட்டங்களையும் தவிர்க்க வேண்டுமானால் இனவாரியாக இக்கண்டம் தனித்தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும். அசோகர், கனிஷ்கர், சமுத்திரகுப்தர் போன்ற பேரரசர்களின் காலத்தில் கூட ‘இந்தியா' என்ற பெயரில் ஒரே நாடாக இக்கண்டம் இருந்ததில்லை. இந்திய துணைக்கண்டம் பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு நாடும் தனக்கிருக்கும் வளங்களை கொண்டு பொருளாதாரரீதியாக இலகுவாக முன்னேற முடியும். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு தனி நாடிருந்தால் எல்லா இனமுமே சமமான முன்னேற்றத்தை பெற இயலும். சமத்துவம் மலரும். ஒரு இனத்தின் ஆதிக்கத்தில் இன்னொரு இனம் வாழவேண்டிய நிலை இருந்தால் வன்முறை தான் மிஞ்சும். வன்முறைகளிலிருந்து மக்களை காக்க பிரிவினை அவசியப்படுகிறது.”

1940ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேரறிஞர் அண்ணா துரை பேசியதின் சாராம்சம் இது. விருப்பு வெறுப்பின்றி இதை வாசித்துப் பார்த்தோமானால் 68 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவுக்கு இருந்த தீர்க்கதரிசனத்தை உணரலாம்.


காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே ஒரு கீழ்நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருக்கு அபார புலமை இருந்தது. நவயுவன், பாலபாரதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் என்ற நாளிதழின் துணையாசிரியாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்குண்டு. தந்தை பெரியாரின் விடுதலை பத்திரிகையில் பட்டை தீட்டப்பட்டப் போது தான் வைரமாய் மின்னினார் பேரறிஞர் அண்ணா.

அண்ணாதுரைக்கு திருப்புமுனை தந்தது திருப்பூர். 1934ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அவர் சந்தித்தது இங்கே தான். பெரியாரை சந்தித்தபின் தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் அனைத்தையும் சுயமரியாதை இயக்கத்திற்கு காணிக்கையாக்கினார். நூல்கள் வாசிப்பிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா, வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமென தமிழர்களை வற்புறுத்தினார். தமிழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவு என்று குறைபட்டுக் கொண்டவர் எழுதியதைப் பாருங்கள்.

“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால். மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார். ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”

அறிஞர் அண்ணாவின் எழுத்துலக ஆளுமை அப்போது சினிமாவுக்கு பரவியது. திராவிட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க அச்சாரம் போட்டவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவுக்கு முன்பான தமிழ் சினிமாவில் “அவா வருவா, இவா ஊதுவா” என்ற அளவிலேயே தமிழ் இருந்தது. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி கண்டன. மேடைத்தமிழை சினிமாவுக்கும் கொண்டு சென்ற பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இவரைப் பின் தொடர்ந்து நுழைந்த திராவிட சிந்தனையாளர்கள் இயல்புத்தமிழையும் பிற்பாடு சினிமாவுக்கு கொண்டு வந்தார்கள்.

எழுத்து, பேச்சு என்று அலுவலக அறைக்குள் மட்டுமே தமிழர்களுக்கான அண்ணாவின் சேவை நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டம், மும்முனைப் போராட்டம், கட்டாய இந்தி பதினேழாவது மொழிப் பிரிவு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் அண்ணா.

1949ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக தி.மு.கழகத்தை தொடங்கினார். கழகம் தொடங்கி பதினெட்டாவது ஆண்டில் 1967ல் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தை அலங்கரித்தது. அப்போது இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளாத மாநிலமாக தமிழகம் தான் இருந்தது. உலகளவில் ஒரு பிராந்திய கட்சி பொன்விழா கொண்டாடியும் மக்கள் மத்தியில் வலுவாக, செல்வாக்காக இருக்கிறதென்றால் அது அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

1967ஆம் ஆண்டிலிருந்து 69ஆம் ஆண்டுவரை மிகக்குறுகிய காலம் மட்டுமே முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார். இதற்குள்ளாகவே மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அழகுத்தமிழை அரசாட்சி ஏற்றினார். இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை உலகம் வியக்குமளவுக்கு சிறப்பாக சென்னையில் நடத்திக் காட்டினார். கலப்புத் திருமணத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சட்ட அங்கீகாரம் அளித்தார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்று பேராசிரியர் கல்கியால் புகழப்பட்டார்.

பிப்ரவரி 2, 1969ல் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள். உலகளவில் ஒருவரின் மறைவுக்கு மிக அதிகமான பேர் கூடியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் பதிவாகியிருக்கிறது. தமிழ் வளர, தமிழர் தம் வாழ்வுயர காலமெல்லாம் பாடுபட்ட தலைவனின் இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேர் திரண்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?


அகில இந்திய வானொலியில் தலைவர் கலைஞர் கதறிய உலகப்புகழ் பெற்ற “அண்ணா, எம் இதய மன்னா” கவிதாஞ்சலியை இங்கே கேட்கவும்.


பேரறிஞர் அண்ணா சுமாராக ஓவியமும் வரைவார். அவரது ஓவியங்கள் கீழே :





Monday, September 08, 2008

சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா?

ஒரு பதிவர் உன்டன்பிறப்புகளுக்கு ஒரு கேள்வி என்று ஒரு பதிவு போட்டு சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இத்தகைய பதிவுகளையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம். கேள்வி கேட்பது தானே பகுத்தறிவின் அடிப்படை. ஆனால் நாம் முன்பே சொல்லியது போல் எல்லோரிடமும் போய் கேளுங்கள். எல்லோரிடமும் இருந்து பதில் வருமா என்பது வேறு விஷயம். கேள்வி கேட்டால் கஞ்சா வழக்கு போடுவதற்கு இங்கே சர்வாதிகார ஆட்சியும் நடக்கவில்லை, கைது செய்தால் சுனாமி வரும் என்று பயம் காட்டுவதற்கு இங்கே மடமும் நடத்தவில்லை

முதலில் சாய்பாபா பற்றிய கேள்வியை பார்ப்போம். சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா? என்பது கேள்வி

இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். ஒரு முறை இந்து முன்னணி தலைவர் திரு.இராமகோபாலன் அவர்கள் கலைஞர் அவர்களுடன் நடந்த சந்திப்பின் போது பகவத் கீதையை அன்பளிப்பாக கொடுத்தார் பதிலுக்கு கலைஞர் அவர்களோ திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை பரிசளித்தார். தன்னை ஒருவர் எப்படி அனுகுகிறார்களோ அதே முறையில் தான் தலைவரும் அவர்களை அனுகுவார்

சாய்பாபா கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவர். அவரை தரிசனம் செய்வதற்கு எல்லோரும் தவம் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட சந்திரமுகி பட விழாவில் சொன்னார், என்னைப் போன்ற பக்தர்களை எல்லாம் தேடி வராத சாய்பாபா கலைஞர் அவர்களை வீடு தேடி போய் இருக்கிறார் என்று. அப்படி வீடு தேடு வந்தவரை அதுவும் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவருக்கு எப்படி பதில் உபகாரம் செய்ய வேன்டும் என்பது தலைவருக்கு நன்றாகவே தெரியும். மேலே சொன்ன இராமகோபாலனும் ஆன்மீகவாதி தான் சாய்பாபாவும் ஆன்மீகவாதி தான் ஆனால் அவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் கலைஞருக்கு தெரியும். கலைஞர் எதிர்ப்பது ஆன்மீகத்தை அல்ல அதை அவர்கள் கடைபிடிக்கும் விதத்தை. இந்த விஷயத்தில் உடன்பிறப்புகளுக்கும் நிலையும் இது தான். நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல

கலைஞர் பகுத்தறிவு வேஷம் போடுபவர் என்றால் சாய்பாபா காலை தன் மனைவியார் தொட்டு வணங்குவதை இப்படி ஊரறிய பத்திரிக்கைக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த படத்தை அவர் வெளிவராமல் தடுத்து இருக்கக் கூடும். ஆனால் பதில் மரியாதை செய்வது தான் அவர் பண்பு. இங்கே தன் கூட்டணி கட்சியில் இருந்த வைக்கோவை சிறையில் அடைத்ததையும், சமயப் பெரியவர் என்று மதிக்கப்பட்ட சங்கராச்சாரியாரை ஆந்திராவரை துரத்தி சென்று சிறையில் அடைத்ததையும், கூட்டணி கட்சியின் ஜார்ஜ் பெனாண்டஸை வீட்டு வாசலிலேயே காக்க வைத்த அரிய செயல்களோடு கலைஞரின் ஒப்பற்ற பண்பை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்

கீழே உள்ள படங்களை பார்த்தால் உங்களுக்கே எது சரி எது தவறு என்று தெரியும்




மேலும் பதில்கள் தொடரும்...

Thursday, September 04, 2008

நேற்று எதற்கு விடுமுறை - ஆன்மீக பகலவன்களுக்கு பதில்

கலைஞர் தொலைக்காட்சியில் நேற்றைய சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரம் பார்த்து பல ஆன்மீக பகலவன்களுக்கும் ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்கிவிட்டது. அது என்ன விடுமுறை. வருடத்தில் ஒருமுறை தான் விடுமுறையா என்று எல்லாம் கேள்வி எழுப்பி தங்களுக்கு ஆறு அறிவு இருப்பதை கோடிட்டு காட்டிவிட்டனர். இந்த பகலவன்கள் இந்த கேள்விகளை எல்லாம் கடவுளின் பெயரை சொல்லி கொள்ளை அடிக்கும் போலிச் சாமியார்களிடம் போய் கேட்டு இருந்தால் இன்று உடன்பிறப்புகளுக்கு நிறைய வேலை மிச்சமாகி இருக்கும். அவர்கள் அப்படி கேட்க வேண்டிய கேள்விகளை கேட்க வேண்டியவர்களிடம் கேட்காததால் தான் இன்றைக்கு உடன்பிறப்புகள் இரவு பகலாக வேலை செய்ய வேண்டி இருக்கிறது


நேற்றைக்கு விநாயகர் சதூர்த்தி அதனால் அரசு விடுமுறை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்துக்களுக்கு அது விநாயகர் சதூர்த்தி மற்ற மதத்தினருக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் அது விடுமுறை. வருடத்தில் பல விடுமுறைகள் வந்தாலும் அதை கொண்டாடுபவர்களுக்கு தான் பண்டிகை கொண்டாடாதவர்களுக்கு அது விடுமுறை தானே. இதில் என்ன சந்தேகம் வந்தது இந்த பகலவன்களுக்கு


கொண்டாடாதவர்கள் ஏன் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி கல்லா கட்ட வேண்டும் என்று இவர்களின் கேள்வி நகைப்புக்குரியது. உதாரணத்துக்கு நேற்று விடுமுறை என்பதால் பீச்சில் கூட்டம் அலைமோதி இருக்கும். பீச்சில் பல மதத்தினரும் கடை வைத்து இருக்கிறார்கள் மற்ற மதத்தினரும் இதில் உண்டு. பண்டிகை கொண்டாடவில்லை என்பதற்காக மற்ற மதத்தினர் தங்கள் கடைகளை மூடிவிட்டா சென்றுவிட்டனர். கூட்டம் அதிகம் வரும் என்று மேலும் ஆர்வத்துடன் தங்கள் கடைகளை திறந்து வைத்து இருப்பார்கள். அது போல் தான் இதுவும்

பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு பதிவர் வர்ணித்துள்ளார். பகுத்தறிவு இயக்கத்துக்கு பரிணம வளர்ச்சி உண்டு என்று ஒத்துக் கொண்டுள்ள பகலவன்களே எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உங்களுக்கு மட்டும் வளர்ச்சியே கிடையாதா


Thursday, August 28, 2008

ஜெயாவுக்கு செல்வகணபதி எழுதிய கடிதம்!

அன்புள்ள அம்மா அவர்களுக்கு!

உங்களின் பாசத்திற்குரிய செல்வம் எழுதுவது. நீங்கள் டெல்-யில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபொழுது அப்பொழுது டெல்லியில் எல்.எல்.பி. படித் துக்கொண்டிருந்த மாணவனான என்னை சேலம் முன்னாள் எம்.பி. கண்ணன் உங்களது உதவி யாளராக நியமித்தார். அன்று முதல் செல்வம் என பாசமாக நீங்கள் அழைத்த போதெல்லாம் நாய்க்குட்டிபோல ஓடிவந்த என்னை இன்று நட்டாற்றில் விட்டுவிட்டீர்கள்.

98-ம் ஆண்டு திருநெல்வேல்யில் கட்சி மாநாடு நடத்த 3 கோடி ரூபாய் சசிகலா கேட்டார். கடன் வாங்கி கொடுத்தேன். அதை திருப்பிக்கேட்டேன். அன்று முதல் சசிகலா என்மீது கோபம் கொண்டார். அன்று முதல் எனக்கு இறங்கு முகம்தான். அதேநேரம் வாழப் பாடியாரை எதிர்த்து என்னை நிற்கவைத்தீர்கள். நான் அந்தத் தேர்தலில் ஜெயித்தேன். அந்த வெற்றியும் உழைப்பும் சசிகலா மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன். நடக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் பேச்சைக் கேட்டு செயல்படும் நீங்கள் அவர்களின் கைப்பாவையாகவே மாறிவிட்டீர்கள்.

2001-2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான வழக்குகளை எல்லாம் சரி செய்துகொண்டீர்கள். என் மீதான சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கை அப்படியே விட்டுவிட்டீர்கள். நீங்களும் நானும் குற்றவாளிகளாக இருந்த ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கை அதிகாரிகளைப் பயன்படுத்தி விடுவித்துக்கொண்ட நீங்கள் சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் என்னை விடுவித்துக்கொள்ள, நான் அதிகாரிகளைச் சந்திக்க எடுத்த முயற்சிகளை எல்லாம் தடுத்துவிட்டீர்கள்.

கடந்தவாரம் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 150 சாட்சிகளுக்கும் வாரண்ட் பிறப்பித்து ஆஜராக உத்தர விட்டுவிட்டார். அந்த வழக்கு வேகம் பெறப்போகிறது. இப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உங்களுடன் பேச பல முறை முயற்சி செய்தேன். சசி கலாவின் ஆட்கள் விடவில் லை. அதன்பிறகு என் மனைவிக்கு கேன்சர் என நான் சசிகலாவின் உறவினர் மூலம் சொல்லி அனுப்பியதால் தான் நீங்கள் என்னிடம் தொலை பேசியில் சில நிமிடங்கள் பேசினீர்கள். அப்பொழுது உங்களிடம் இந்த வழக்கு விபரங்களை சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

ஒருசில மாதங்களுக்கு முன்பு தலைமைக் கழகத்தில் நீங்கள் தி.மு.க.வுக்கு போகப் போகிறீர்களா? அதற்காக வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? என கேள்வி கேட்டீர்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்பொழுது எங்களைப்போன்ற கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எதுவும் செய்யாமல் நடுத்தெருவில் நிற்கவைத்தீர்கள். அதனால் தி.மு.க. அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே நீங்கள் தி.மு.க.வுக்குப் போகப்போகிறீர்களா? என விசாரணை நடத்துகிறீர்கள்.

ப்ளசண்ட் ஸ்டே, கலர் டி.வி., சுடுகாட்டு கூரை ஊழல் போன்ற வழக்குகளின் காரணமாக செல்வகணபதியால்தான் நான் ஜெயிலுக்குப் போனேன் என கட்சிக்காரர்களிடம் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள்.

நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

அன்று ஊழல் செய்து ஒவ்வொரு மந்திரியும் இவ்வளவு கப்பம் கட்டுங்கள் என உத்தரவிட்டது யார்? நீங்கள்தானே! அத னால்தானே நாங்கள் தவறு செய்தோம். ஊழல் வழக்குகளை சந்திக்கிறோம். இன்னமும் ஊழல் வழக்குகள் பல பாக்கியுள்ளது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

நன்றி!

இப்படிக்கு,

செல்வம் (எ)
டி.எம்.செல்வகணபதி

(அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மாஜி அமைச்சரும் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளருமான செல்வகணபதி எழுதிய கடிதம்தான் இது. இக்கடிதத்தைப் படித்துவிட்டுத்தான் ஜெயலலிதா, செல்வகணபதியை கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.)

Tuesday, August 26, 2008

அவாள் நமக்கு சவால் - (சோ) ராமசாமியுடன் ஒரு பேட்டி

இங்கே பல அம்பிகள் கலைஞரிடம் பேட்டி காண்கிறார்கள் அதே மாதிரி ஒரு உடன்பிறப்பு அம்பிகளின் குருநாதரான சோ ராமசாமியிடம் பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை

உடன்பிறப்பு: கலைஞருக்கு வயது ஆகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
(சோ) ராமசாமி: அம்பி! வாஜ்பேயியை பார் ஏற்கனவே ரிடையர் ஆகி கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறார், அத்வானி பிரதமர் ஆவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். அது போல் கலைஞரும் அத்வானி போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்

உடன்பிறப்பு: கலைஞர் ஏதாவது சொன்னால் உடன் கார்டூன் போடும் நீங்கள் ரஜினி மன்னிப்பு விஷயம் பற்றி இன்னும் எனக்கு தெரியாது என்று சொல்கிறீர்களே
(சோ) ராமசாமி: உண்மை தான் அம்பி! நான் எப்போதும் முரசொலி மட்டும் தான் வெளிவந்த உடனேயே படித்துவிடுவேன். மற்ற தினசரிகளை எல்லாம் பழைய பேப்பர் கடையில் தான் வாங்குவேன்

உடன்பிறப்பு: ஸ்டாலின் லண்டன் போனது மற்றும் ஜெயலலிதா கொடநாடு போய் ஓய்வு எடுத்தது பற்றி உங்கள் கருத்து
(சோ) ராமசாமி: அம்பி! ஸ்டாலின் லண்டனுக்கு என்னையும் அழைத்தால் கூட போயிருக்கமாட்டேன் ஏனென்றால் எனக்கு பஸ்போர்ட் எல்லாம் கிடையாது. ஆனால் ஜெயலலிதா உள்ளூர் கொடநாட்டுக்கு கூட என்னை அழைக்காததில் கொஞ்சம் வருத்தமே. அப்படி என்ன குறை கண்டுவிட்டார் என் ஜால்ராவில் என்று தெரியவில்லை

உடன்பிறப்பு: உங்களை போன்ற ஒத்த கருத்து உடைய ஞாநி மற்றும் மதன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
(சோ) ராமசாமி: அம்பி! நீ என்ன கேட்க வருகிறாய் என்பது எனக்கு புரிகிறது. ஞாநி ஒரு பொழைக்க தெரியாத மனிதர் அவர் இப்படி குமுதத்தில் மாங்கு மாங்கு என்று எழுதுவதற்கு பதில் அம்மாவிடம் சரணடைந்தால் அவர் காலத்துக்கும் செட்டில் ஆகிவிடலாம். என்னை தொடர்பு கொண்டால் நல்ல டீலாக முடித்து கொடுப்பேன் அதில் எனக்கு ஒரு கட்டிங் கொடுத்து விட வேண்டும். மதனை பற்றி நினைக்கும் போது எனக்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல அம்பி இருக்கிறான் என்று பெருமிதமாக இருக்கிறது

உடன்பிறப்பு: ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: அது பற்றி கணிக்க நான் ஆருடம் சொல்பவன் அல்ல

உடன்பிறப்பு: மோடி பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: இது ஜனநாயக நாடு அவர் பிரதமாராக வரும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது

உடன்பிறப்பு: கலைஞர் அவாள் நமக்கு சவால் என்று கவிதை பாடி இருக்கிறாரே
(சோ) ராமசாமி: பாவம் அவரால் கவிதை தான் எழுத முடியும் என்னை போல் கேணை தனமாக கார்ட்டூன் போட முடியுமா?

உடன்பிறப்பு: அப்போ அவர் செஞ்சா நீங்களும் செவீங்களா?
(சோ) ராமசாமி: வேற வழி இல்லை அம்பி, அவர் கவிதை எழுத அதை நக்கல் நையாண்டி பண்ணி தான் பொழப்பு ஓடுது அவர் முரசொலியில் எழுதவில்லை என்றால் துக்ளக்கை இழுத்து மூடிவிட்டு அம்மா சரணம் பாட போக வேண்டியது தான்

உடன்பிறப்புக்கு இப்போது லேசாக கண்ணை கட்ட ராம்ஸ் மாமியிடம் சாரி சோ ராமசாமியிடம் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார்

Monday, July 28, 2008

வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்ற முடியாது!

வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்ற முடியாது!

(கலைஞர் கேள்வி - பதில்)

கேள்வி :- “விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி” என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு “தினமணி” ஒருவரது பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே?

கலைஞர் :- ஆமாம் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் - 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு - விவசாயிகள் கடனை ரத்து செய்ததும் - யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு (?) வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!

விவசாயிகளுக்காக தி.மு.கழக அரசு செய்த சாதனைகளின் பட்டியல் வேண்டுமா? இதோ :-

இந்தியாவிலேயே முதன்முதலாக 1990இல் தி.மு. கழக அரசு தான் விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம்; தொடர்ந்து எத்தனையோ எதிர்ப்புகள், சிரமங்களுக்கிடையிலும் நீடிக்கப்பட்டு அதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
டிசம்பர் 1996இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக விளைபொருள் இழப்புக்காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.

மீண்டும் நவம்பர் 1997இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக - விவசாயிகளுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட்பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர். மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசினால் ரத்து செய்யப்பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.

இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000/; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000/- நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.

மூன்று குதிரைத்திறன் கொண்ட ஆயில் என்ஜின்களுக்குப் பதிலாக ஐந்து குதிரைத் திறன் கொண்ட ஆயில் என்ஜின்கள் வாங்க சிறு விவசாயிகளுக்கு 25 விழுக்காடு அளவிற்கும், மிகச்சிறு விவசாயிகளுக்கு 30 விழுக்காடு அளவிற்கும், தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இன விவசாயிகளுக்கு 50 விழுக்காடு அளவிற்கும் மானியத் தொகை கழக அரசினால் வழங்கப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் 13 சதவிகித வட்டி 12 சதவிகிதமாகவும், 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு விதிக்கப்படும் 16 சதவிகித வட்டி 15 சதவிகிதமாகவும் குறைப்பதென்று 24-10-2000 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

30-6-99க்கு முன்பு தவணை தவறிய வேளாண்மை சார்ந்த கடன்களுக்கு, 31-7-2000க்குள் வட்டியுடன் கடனைச் செலுத்திய 3,40,727 சிறிய, பெரிய விவசாயிகள் அனைவர்க்கும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.

1998-99ல் நடப்புக் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 6.25 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

1999-2000இல் இந்த ஊக்குவிப்புத் தொகை 7 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை 2,42,817; நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 100 என்பது 1997இல் ரூ.150 ஆகவும், 2000-2001இல் ரூ. 200 ஆகவும் தற்போது 2006இல் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 400 ஆகவும் கழக அரசிலே உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த பாதைக் கட்டணம் (கூசயஉம சுநவே) 2000-2001இல் கழக அரசில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க கழக அரசில் திரு.கோலப்பன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு அமைக்கப்பட்டு - அவரது பரிந்துரைகளையேற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது.

விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனியாக நல வாரியம் ஒன்று தொடங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு 1 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேர் இதுவரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு - இது வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 7 விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு 159 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 963 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தை களை தமிழகமெங்கும் அமைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல விலையிலே விற்கவும், வாங்கிப் புசிப்போர் நியாய விலையிலே அவைகளைப் பெறவும் வழி வகை செய்ததும் தி.மு. கழக அரசு தான்.

2006ஆம் ஆண்டு பதவிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே பிறப் பிக்கப்பட்ட மூன்று ஆணைகளில் ஒன்றே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்தது தான். கடன்களை ரத்து செய்தது மாத்திரமல்லாமல், புதிய கடன்களை அவர்கள் 1500 கோடி ரூபாய் அளவிற்கு பெறவும் நிதி நிலை அறிக்கையிலே வசதி செய்யப்பட்டது.

விவசாயிகளின் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-2007இல் 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்து, அதனை 2007-2008இல் 5 சதவிகிதமாக மேலும் குறைத்து, அதுவும் போதாதென்று இந்த ஆண்டு முதல் வட்டி வீதத்தை 5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாகக் குறைத்துள்ள ஆட்சியும் தி.மு. கழக ஆட்சி தான்.

நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப் பண்படுத்தி இலவசமாக அளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கி யுள்ளது.

2008-2009ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு நெல் கொள் முதல் விலையை சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 850 ரூபாய் என்றும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 880 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்து அறிவித்தவுடன், தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1000 ரூபாய் என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1050 ரூபாய் என்றும் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

***

கேள்வி :- காவேரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயி களை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் தினமணியில் விஷம் கக்கி யிருக்கிறாரே?

கலைஞர் :- காவேரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டுமேயானால் - அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதி மன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்; தமிழக தி.மு.க. அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதியான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவசரக்கார அரசியல் வாதிகள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்ச நீதி மன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும் - அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவேரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபர மறிந்தவர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கிறார்கள்.

***

கேள்வி :- வருமான வரித்துறைக்குப் பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிரமுகர் பேசியதாக “தினமணி” பிரசுரித் திருக்கிறதே?

கலைஞர் :- வருமான வரிக்குப் பயந்து இப்போது காங்கிரஸ் காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!

***

கேள்வி :- “ஒகேனக்கல்” கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப் பிரமுகர் உளறியிருக்கிறாரே?

கலைஞர் :- பாவம்; ஒகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது - ஒகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிதி ஆதாரத்தைத் தேடிய நேரத்தில் ஜப்பான் நாட்டு உதவியை நாடி யிருந்தோம். அப்போது “பொக்ரான்” குண்டு பரிசோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.

அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது உண்மை. ஆனால் 2006இல் தி.மு.கழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடந்த பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசு சார்பிலும் - மாநில அரசுகள் சார்பிலும் பேசப்பட்டு - பிரச்சினைகள் இல்லாமல் விரைவில் நிறைவேற்றப்பட்டு - தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட இருக்கிறது.

விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகி விட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட “தினமலர்” நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என்பதையும் எழுதியுள்ளது. “போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்றவாறு அவர் பேசத் துவங்கினார். அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தகவலையே திரும்பத் திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார். தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்துகொண்டார். காவிரி பிரச்சினை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய்தது” என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந்தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.

***

Saturday, July 05, 2008

ஓடி ஒளிந்து ஓய்வெடுப்பவரும் - ஓடியாடி உழைப்பவரும்!

தொண்டர்களை போராட்டத்தில் ஈடுபடும்படி தூண்டிவிட்டு - தான் அதில் பங்கேற்காமல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அறிக்கைமேல் அறிக்கை விட்டு குளு குளு கொடநாட்டு அரண்மனையில் தோழி சகிதம் ஓய்வெடுத்து வருபவர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்.

தலைவர் கலைஞரின் பொது வாழ்வில் ஓய்வு என்ற சொல்லுக்கே இடமில்லை. அண்மையில் ‘இந்தியா டுடே’ இதழ் தயாரித்த கலைஞர் சிறப்பிதழில் கலைஞரின் ஒரு நாள் - காலைத் தொடங்கி இரவு வரை அவரின் பணிகளை கவனித்து சொல்லும் போது காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11.30 மணி வரை அவர் உழைத்துக் கொண்டிருப்பதாக அந்த இதழ் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது. சதா சர்வகாலமும் அவர் விழித்துக் கொண்டு உழைத்துக் கொண்டே இருப்பதால் தமிழகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொது வாழ்வில் அவர் கண்ட களமும் பெற்ற விழுப்புண்களும் இன்று வெத்துவேட்டு அறிக்கை நாயகி அறியாது - புரியாது.

தலைவர் கலைஞர் அவர் உழைப்பு, கண் துஞ்சாமை, தியாகம், போராட்டம், விழுப்புண் ஆகிய அழகிய நற்பண்புகளால் அரசியலில் அனைவராலும் மதிக்கப்படுபவர்.

1945-ஆம் ஆண்டிலேயே புதுவையில் திராவிடர் கழக மாநாட்டில் ‘சிவகுரு’ சீர்திருத்த நாடகத்தில் நடித்ததற்காக எதிரிகளின் கடுந்தாக்குதலுக்கு ஆளானார் தலைவர். இதே ஆண்டில் அவர் மீது சட்ட எரிப்பு வழக்கு 1948-ஆம் ஆண்டு திருவையாற்றில் கறுப்புக் கொடிப் போராட்டம், 1950-ஆம் ஆண்டு இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், 1951-ஆம் ஆண்டு இராஜாஜிக்கு கருப்புக் கொடி போராட்டம், 1953-ஆம் ஆண்டு கல்லக்குடிப் போராட்டம், 1957-ஆம் ஆண்டு நங்கவரம் விவசாயிகள் போராட்டம், 1958-ஆம் ஆண்டு நேருவுக்கு கருப்புக் கொடி போராட்டம், இதே ஆண்டில் திருச்சி பீடித் தொழிலாளர் போராட்டம், 1959-ஆம் ஆண்டு தஞ்சை எஸ்.எம்.டி. பேருந்துத் தொழிலாளர் போராட்டம்,
1962-ல் விலைவாசி உயர்வு போராட்டம்,

1963 - 1964 - 1965 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தனிமைச் சிறை, 1967-ல் சைதைத் தொகுதியில் போட்டியிட்ட போது எதிரிகளால் கடுந்தாக்குதலுக்குள்ளானார்.

இப்படியாக கலைஞரின் போராட்டக்களங்கள் நீள்கிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 2001-ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று ஜெயலலிதா ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் அடித்து இழுத்துச் சென்ற காட்சியை இன்றளவும் எந்தத் தி.மு.க. தொண்டனும் மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான். கிறுத்துவர்களுக்கு புனித வெள்ளி, இஸ்லாமியர்களுக்கு ஈகைத் திருநாள் போல் தி.மு.க. தொண்டனுக்கு ஜூன் 30.

சீமாட்டிகளும் சிங்காரிகளும் கலைஞரின் தியாகத் தழும்புகளுக்கு அருகே கூட வர முடியாது. அவர் ஒரு சிறைப் பறவை.

கலைஞரின் நல்லாட்சியை இன்று அகில இந்தியாவே வியந்து போற்றுகிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆர்.இரகுபதி அவர்கள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களை பாராட்டியது வரலாற்று வரிகளில் அடிக் கோடிட்டுக் காட்ட வேண்டிய ஒன்று.

"பொறுமை, விருப்பு, வெறுப்பற்ற

உயர்ந்த மன உறுதி - நீதித்துறைமீது

மரியாதை கொண்ட மிகச் சிறந்த ராஜியவாதி

முதல்வர் கலைஞர் அவர்கள், அரசின் தலைவரான

முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை

வைத்திருக்கிறேன். எந்தப் பிரச்சினை

களுக்கும் லாவகமாக தீர்வு காண்பதில்

திறமைக்குப் பெயர் கலைஞர்"

என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அறிக்கை ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் விடுத்த குட்டு ஒன்றா இரண்டா?

உச்சநீதிமன்றத்தால் தகுதி இழப்புக்குள்ளாகி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தனது மனசாட்சியை அவர் கேள்விக்குள்ளாக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் அடங்காப்பிடாரியின் மனசாட்சியே கேள்விக்குள்ளாக் கியது.

நீதிபதிகளைப் பற்றி எந்த விவாதமும் உள் நோக்கம் கற்பிக்கிற வகையில் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படக்கூடாது என்று அரசியல் சட்டப்பிரிவு 211 தெளிவாக கூறுகிறது. ஆனால் இதையும் மீறி 4.2.2005 அன்று தமிழக சட்டப்பேரவையில் நீதிபதிகளை தாறுமாறாக விமர்சனம் செய்தவர் அரிதாரபொம்மையான அம்மையார்.

முதல்வர் தலைவர் கலைஞரை இந்தியாவின் அனைத்துத் துறை வல்லுனர்களும் பாராட்டுகின்றனர். காரணம் அவர் உழைப்பாளி, தியாகி, இன்முகத்துடன் மக்களுக்காக சிறைச் சென்றவர்.

அலங்காரப் பதுமைகள் - தங்கம் முலாம் பூசிய அலுமினியப் பளிங்குகளால் கலைஞரை ஒன்றும் செய்துவிட முடியாது.

தலைவர் கலைஞர் அலங்கார பொம்மையல்ல - தியாகங் களால் செதுக்கப்பட்ட சிற்பம். எத்தனையோ ஜூன் 30களை கண்டவர்.

(நன்றி : முரசொலி)

Thursday, July 03, 2008

கலைஞரின் காவியப் பயணம் - இந்தியா டுடே சிறப்பிதழ்

மதியம் இரண்டு மணிக்கு வாங்கி படிக்க ஆரம்பித்தது. இப்போது இந்தப் பதிவை எழுதும் போது இரவு மணி சரியாக 10:02. மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தாகி விட்டது. கலைஞர் போன்ற ஆளுமையின் என்பத்தைந்து வருட வரலாற்றை 120 பக்கங்களிலெல்லாம் அடக்கி விட முடியவே முடியாது என்றாலும் இந்தியா டுடேயின் இந்த வார சிறப்பிதழான "காவியப் பயணம்", கலைஞர் குறித்தும் அவர் எழுத்துக்களையும் தேடிச் சென்றுபடித்தேயாக வேண்டும் என்கிற தணியாத ஏக்கத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இருபத்தாறு கட்டுரைகளும் கலைஞரின் சிறப்புப் பேட்டியும் ஒரு புகைப்படக் கவிதையுமாக இதழ் முழுக்க கலைஞரைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் "உங்களுக்குத் தெரியுமா?", கலைஞரின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள்கள் என்று சர்க்கரைப் பொங்கலின் இடையே தட்டுப்படும் முந்திரிப் பருப்பைப் போல இந்த இதழ் வாசிப்பு ஓர் சுகானுபாவமாக இருக்கிறது. என்பத்தைந்து வயதில் விடாப்பிடியாக அவர் யோகப் பயிற்சிகள் செய்யும் படங்களைப் பார்த்து விட்டு தலையைக் குனிந்தால் எனக்கு முன்னே சரிந்த என் தொப்பை வெட்கத்தைத் தான் வரவழைக்கிறது.

கலைஞர் எல்லோருக்கும் ஏதோவொரு விதத்தில் இன்ஸ்பிரேஷனாய் இருக்கிறார். காலை நாலேகாலுக்கு துவங்கி இரவு பதினோரு மணிக்குத்தூங்கச் செல்லும் வரை அவரின் அந்த ஓயாத உழைப்பைப் பற்றி படிக்கும் சோம்பேரி எவனும் தனது சோம்பேரித்தனத்தை நினைத்து வெட்கப்பட்டேயாக வேண்டும். ஓயாத அரசுப்பணி, அரசியல் பணி, பத்திரிகைப் பணி -இத்தனைக்கும் இடையே மறக்காமல் பேரனின் முத்தத்தைக் கேட்டுப் பெறும் பாசக்காரப் பெரிசு! ஒவ்வொரு நாளையும் ஒரு புத்தக வாசிப்போடு முடிக்கும் தேடுதல் வேட்கை கொண்ட இளைஞர் என்று எண்ணிலடங்காத பரிமாணங்கள் நம் கண் முன்னே விரிகிறது.

ஏதாவது ஒரு கட்டுரையை ஹைலைட்டாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே முன்றாம் முறையாக வாசித்துப் பார்த்து சோர்ந்தே விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கலைஞரின் வெவ்வேறு பரிமாணத்தைக் கண்முன்னே விரிக்கிறது ( விதிவிலக்கு பிரபு சாவ்லாவின் அந்த மொக்கைக் கட்டுரை). அரசியல்வாதியாக, முதல்வராக. கவிஞராக, வசனகர்த்தாவாக, விளையாட்டு ரசிகராக, ராஜதந்திரியாக, சிறந்த பேச்சாளராக, பத்திரிகையாளராக, பெரியாரின் சீடராக, குயுக்தியான வியூகவகுப்பாளராக... இப்படி ஏதோவொரு வகையில் ஆறுகோடித் தமிழர்களையும் ஈர்க்கும் ஒரே பர்சனாலிடி கலைஞரைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது.

அட... இதெல்லாவற்றையும் வெறுத்தாலும் கூட அந்தக் குறும்புக்கார கிழவரை ரசிக்காதவர் எவர் இருக்க முடியும்? கலைஞரை ஒருத்தன் கட்டோ டு வெறுக்கிறான் என்றால் ஒன்று அவன் பாப்பானாய் இருக்க வேண்டும் இல்லை பைத்தியமாய் இருக்க வேண்டும்.

கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரையில் நேரு காலத்தில் சோசலிசம் பேசிய காங்கிரஸின் பிற்காலத்திய "பரிணாம" வளர்ச்சியைக் கிண்டலடித்து 92ல் அவர் எழுதியகவிதை -

"திருப்பதியில் காங்கிரசு மாநாடு
ஆவடியில் மொட்டாக வெடித்த சோஷலிசம்
ஆண்டவன் சந்நிதியில் மொட்டையாக நின்றது"

இந்தக் குறும்பு தான் கலைஞர்! கலைஞரின் பேணாவிலிருந்து கவிதையாய்ப் புறப்படும் எள்ளலும் கிண்டலும் எதிரியின் முகத்தில் கூட புன்னகையை வரவழைத்து விடக்கூடியது.

உடன்பிறப்புக்கள் மட்டுமல்ல தமிழ் வாசிக்கத்தெரிந்த ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய இதழ்.

தி.மு.க.வின் திமுதிமு வளர்ச்சி

கழகத்துக்கு எதிரான செய்தி எப்படா வெளிவரும் என்று நாக்கை தொங்க போட்டு அலைந்து கொண்டு இருக்கும் எச்சி இலை பதிவர் ஒருவர் கல்கி இதழில் வெளியான கட்டுரை ஒன்றை தன் எச்சி இலையில் வெளியிட்டார். அந்த எச்சி இலையில் இருந்து வெட்கமே இல்லாமல் சுட்டு அதே பதிவை மற்றொரு பதிவர் வெளியிட்டு இருந்தார். அதுவும் எக்கு தப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சூடான இடுகைகளிலும் இடம் பிடித்தது. இந்த மகத்தான காரியத்தை செய்த அந்த எச்சி இலை பதிவருக்கும் அதை சுட்டு தன் பதிவில் வெளியிட்ட பாசறை பதிவருக்கும் கழகம் சார்பாக எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்

பொதுவாக உடன்பிறப்புகளுக்கும் மற்ற கட்சியினருக்கும் ஒரு மாபெரும் வேறுபாட்டினை கண்கூடாக காணலாம். உடன்பிறப்புகள் என்றுமே தங்கள் கட்சி விசுவாசத்தை காட்ட தவறுவதில்லை. நான் தி.மு.க.காரன் என்று மார்தட்டி சொல்வார்கள். இதே அளவு நம்பிக்கையுடன் நான் இந்த கட்சிக்காரன் என்று சொல்லும் தொண்டர்கள் மற்ற கட்சிகள் குறைவு. இவர்களிடம் ஒரு பொதுவான குணத்தை காணலாம். தான் யாரை ஆதரிக்கிறோம் என்று இவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இவர்கள் எப்போதுமே தலைவரை பற்றி விமர்சித்து கொண்டே இருப்பார்கள். நாம் தலையிட்டு அவர்களின் அபிமான தலைவர் அல்லது தலைவி இந்த விஷயத்தில் எப்படி என்று கேட்டால். அவரும் அப்படி தான் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள். அதாவது கலைஞரை வசைபாட ஆயிரம் வார்த்தைகள் என்றால் தங்கள் அபிமான தலைவர் அல்லது தலைவியை திட்ட ஒரு வார்த்தை மட்டும் தான். இதை வைத்தே இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். சில சமயங்களில் இவர்களின் இந்த பண்பு எதிர்வினைகளையும் ஏற்படுத்தலாம். அப்படி தான் நடந்தது நேற்றைய எச்சி இலை பதிவு

கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் என்ற நப்பாசையுடன் இவர்கள் பிரசுரித்த கட்டுரையை படித்தவர்களுக்கு தெரியும் அந்த கட்டுரையில் கழகத்தின் வளர்ச்சியை கால வாரியாக விவரித்து எழுதி இருக்கிறார்கள். கழகத்தையும் உடன்பிறப்புகளையும் அந்த கட்டுரை தூக்கி நிறுத்துகிறது. கலைஞர் என்ற தனிமனிதரை மட்டும் ஆங்காங்கே குறை காண்பது போல் எழுதப்பட்டுள்ளது. தளபதி ஸ்டாலின் பற்றி கூட பாராட்டி தான் எழுதி இருக்கிறார்கள். பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் தலைவரின் மீது வீசப்பட்டுள்ள ஒன்றிரண்டு குற்றச்சாட்டுகளை நாம் புறம் தள்ளிவிடலாம். அனுதினமும் தாங்கள் அதிகாலையில் மந்திரம் ஓதுகிறார்களோ இல்லையோ தலைவரை அர்சிப்பதை மட்டும் மறவாமல் செய்துவரும் இவர்களை நாம் கண்டு கொள்ள தேவை இல்லை. தாங்கள் பிரசுரித்த கட்டுரை மூலம் கழகத்தின் சிறப்பினை வலை உலகத்துக்கு எடுத்து சொன்ன அந்த பதிவர்களை மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறோம்

Tuesday, July 01, 2008

மாரநேரிக்கு பதில்!

வலைப்பதிவில் கலைஞர் மீது அவ்வப்போது அவதூறுகளோடு பொய்ப்புகார்களும் பரப்பப்படுவது வழக்கம். எல்லாவற்றுக்கும் நாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பது கிடையாது. ஆணவத்தால் அல்ல, கேள்விகள் கேட்பவரின் உள்நோக்கம் என்னவென்பது நமக்குத் தெரியும் என்பதால். ஆனால் தலைவர் கலைஞர் மீது அன்பு கொண்ட சிலருக்கும் அவ்வப்போது சந்தேகம் வருகிறது, கேள்விகள் பிறக்கிறது. அதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம், கேள்விகள் பிறந்தால் தான் தெளிவுகளும் பிறக்கும் என்ற அடிப்படையில்.

திராவிடப் பாரம்பரியத்தில் வந்த நம் பெருமைமிகு உடன்பிறப்பு அபி அப்பா அவர்களை மாரநேரி ஜோசப் பால்ராஜ் என்ற நண்பர் சில கேள்விகள் கேட்டிருக்கிறார். அவருக்கு நம்மால் முடிந்த விடைகளை அளிக்க முயற்சிக்கிறோம்.


//இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? //

தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே.


//1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே? //

அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்.


//பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.//

துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்.


//இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?//

ஒகேனக்கல் திட்டம் தூசுதட்டப்பட்டு முன்பைவிட வேகமாக நடந்துவருகிறது. கூட்டாட்சி முறையில் மதிப்பு கொண்டிருக்கும் கழகத்தின் ஆட்சி அண்டைய மாநிலங்களோடு சுமூகமான, நட்புமுறை பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே பிரச்சினைகளை தீர்க்கும். மாறாக முதல்வர் உண்ணாவிரதம் போன்ற ஸ்டண்டுகள் மூலமாக பிரச்சினையை இன்னமும் இடியாப்பச் சிக்கலாக்கிக் கொள்ள கலைஞர் எப்போதுமே முயற்சிக்க மாட்டார்.


//த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா? //

சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது.


//2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.//

மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும்? 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.


//ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள்.//

வேறு என்ன செய்யமுடியும்? கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும்? இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?


//2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்? //

கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


//பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ? //

இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா? பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது.


//த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? //

தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா? - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்.


//ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.//

உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா? தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா?


//இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? //

விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம்.

Wednesday, June 25, 2008

குருவி பதிவு பற்றி அறிவு"சீவி" காமெடி

ஒரு முறை பேருந்து பயணத்தின் போது நிகழ்ந்த சம்பவம். பேருந்து ஓட்டுனருக்கும் சட்டை பையில் பேனா சொருகி இருந்த பயணி ஒருவருக்கும் வாக்குவாதம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருவரும் வாக்குவாதம் செய்துவிட்டு சோர்வடைந்த நேரம் பேனா ஆசாமி ஓட்டுனரை பார்த்து, சிலருக்கு ஸ்டியரிங்கை பிடித்துவிட்டா என்னவோ ஏரோபிளேன் ஓட்டுவதாக நினைப்பு என்றார். உடனே ஓட்டுனர் பதிலுக்கு சிலருக்கு சட்டை பையில் பேனா வைத்துவிட்டால் மேதாவின்னு நினைப்பு என்று பதிலடி கொடுத்தார். சட்டை பையில் பேனா வைத்து இருப்பவர்கள் படித்தவர்கள் என்பது பொதுவான கணிப்பு. அல்லது படித்தவர் போல் காட்டிக் கொள்ள சட்டை பையில் பேனா வைத்து இருப்பார்கள் சிலர். இந்த மனோபாவம் சில வலைப்பதிவர்களுக்கும் இருக்கிறது போலும்

நமது குருவி (குருவி படத்தின் மீது ஏன் இந்த கொலைவெறி - பிரமிட் சாய்மீராவுக்கு வேண்டுகோள்)
பதிவு பற்றிய சில அறிவு"சீவி" பதிவர்களின் கருத்தை பார்க்கும் போது அப்படி தான் எண்ண தோன்றுகிறது. ஒரு வலைப்பூ ஆரம்பித்து பதிவுகள் எழுதிவிட்டா என்னவோ தாங்கள் மேதாவி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் மற்றவர்களும் அவர்களை போல் மட்டும் தான் சிந்திக்க வேண்டுமாம். உடன்பிறப்புகளை விசிலடிச்சான் குஞ்சுகள், பிரியாணி பொட்டல குஞ்சுகள் என்று விமர்சிக்கும் இவர்கள் தங்கள் வலைப்பூவுக்கு வரும் பின்னூட்டங்களை பிரியாணி பொட்டலமாக கருதும் இவர்கள் தங்களுக்கு ஜிங்ஜாங் அடிக்கும் சக பதிவர்களின் வலைப்பூவில் சென்று விசிலடித்து பின்னூட்டம் இடும் இவர்கள் எந்த வகையில் வேறுபட்டவர்கள் என்று தெரியவில்லை. பொதுவாக உடன்பிறப்புகள் தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் இவர்கள் அறிவு"சீவி" தனம் என்று பண்ணும் காமெடி தாங்க முடியவில்லை

அய்யா மேதாவிகளே உங்களுக்கு தான் அறிவு"சீவி" என்று இமேஜ் எல்லாம் இருக்கு. அதனால் உங்களால் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வந்து எழுத முடியாது ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எங்களுக்கு தோன்றுவதை எழுதாமல் இருக்க முடியாது. இறுதியாக நம்ம சாத்தான்குளத்து அண்ணாச்சி சொன்னதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். "ஊருல நாலு பேரு உடுக்கு உடுக்குன்னு பேசுனா மீதி நாலு பேரு *டுக்கு *டுக்குன்னு புலம்பத்தான் செய்வான". இதில் யார் எந்த நால்வர் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

Friday, June 20, 2008

குருவி படத்தின் மீது ஏன் இந்த கொலைவெறி - பிரமிட் சாய்மீராவுக்கு வேண்டுகோள்

சமீபத்தில் வெளியான குருவி படம் பற்றி ஒரு மோசமான மனோபாவம் குறிப்பிட்ட சில ரசிகர்களிடமும், சில வலைப்பதிவர்களிடம் நிலவுகிறது. குருவி படம் என்னவோ இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களிலேயே மட்டமான படம் என்பது போல் ஒரு தோற்றத்தை நிறுவ ஒரு கூட்டம் இரவு பகலாக கண் விழித்து ரூம் போட்டு யோசித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் துக்ளக் கார்ட்டூன் வராதது தான் பாக்கி

குருவி படம் கில்லி அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பை ஏற்றுக் கொள்ள சிலருக்கு மனம் இடம் கொடுக்க. அதனால் அவர்கள் திட்டமிட்டு குருவி படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். குருவி படத்துக்கு முன் வெளிவந்த இளைய தளபதியின் முந்தைய படத்துக்கும் மறுபட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்போது எல்லாம் தென்படாத கொலைவெறி குருவி படத்துக்கு மட்டும் இவர்களுக்கு வந்து இருக்கிறது என்பதே இது ஒரு சதிவலை என்பதற்கான ஆதாரம். குருவி படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே சிலர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்து இருந்தார்கள். இந்த விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில் இவர்கள் எந்த பேதமும் இல்லாத சினிமா ரசிகர்கள். ஆனால் இப்போது இணையம் மற்றும் மின்னஞ்சல் பிரச்சாரம் நிச்சயம் ஒரு சதி வலை.

இதற்கு எல்லாம் காரணம் என்ன என்று விளக்க தேவை இல்லை. தலைவர் கலைஞர் அவர்களின் குடும்பத்தில் இருந்து மேகும் ஒருவர் கலைத் துறையில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று இவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரமிட் சாய்மீரா நினைத்தால் முடியும். தசாவதாரம் படத்தின் வசூல் 100 கோடி என்று தங்கள் வலைப்பூவில் செய்தி வெளியிட்ட பிரமிட் சாய்மீரா குருவி படத்தின் வசூல் பற்றியும் செய்தி வெளியிட்டால் இந்த கொலைவெறி கூட்டத்தின் பிரச்சாரத்துக்கு சாவு மணி அடிக்கப்படும்

Thursday, June 19, 2008

தினமலரில் “கலைஞர்”

தினமலர் பத்திரிகை எப்போதுமே திராவிட தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை என்றுதான் செய்திகளில் பெயர்களை வெளியிடும். பெரியார் என்றோ, அறிஞர் என்றோ சொன்னால் தினமலருக்கு தீட்டு விழுந்துவிடுமாம். ஆனால் இராஜகோபாலாச்சாரியை இராஜாஜி என்றும், சங்கராச்சாரியாரை பெரியவர் என்றும் எழுதும். தினமலரின் ஐம்பதாண்டு வரலாற்றில் கருணாநிதி என்ற சொல் இல்லாமல் தினமலர் வந்ததாக வரலாறே இல்லை. கலைஞர் என்ற சொல்லை தினமலரில் தடையே செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

இன்று தினமலர் இணையத்தை மேய்ந்தபோது ஒரு அதிசயம், அவர்களுக்கே தெரியாமல் “முதல்வர் கலைஞர்” என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள். அது தொடர்புடைய ஸ்க்ரீன் ஷாட் கீழே.



Wednesday, June 18, 2008

கூட்டிக்கொடுக்கும் கலைஞர்

"அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்தொகையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
காவலர்களின் அரை டவுசரை முழு டவுசராக கூட்டிக்கொடுத்த கலைஞர்.
சத்துணவில் முட்டையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
இந்திய அரசில் அமைச்சர் எண்ணிக்கையை கூட்டிக்கொடுத்த கலைஞர்."

இப்படித்தான் கூட்டிக்கொடுக்கும், அள்ளிக்கொடுக்கும் கலைஞரை எங்களுக்குத் தெரியும்.கூட்டிக்கொடுத்த கருணாநிதி, மாமா வேலை பார்க்கும் கருணாநிதி என்று வாய்க்கு வந்த படி பேசும் மக இக தோழய்ங்களா, உங்கள் இயக்கத்தில் இருக்கும் மூன்று கோடி உறுப்பினர்களும் சேர்ந்து ஜெயலலிதாவின் சுண்டு விரலையாவது அசைக்க முடியுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.நீங்கள் கனவு மட்டுமே காணும் பல விசயங்களை நனவாக்கிக்காட்டுபவர் கலைஞர் மட்டுமே என்பது ஏன் உங்கள் மரமண்டைக்குப் புரிய மாட்டேன் என்கிறது?.ஓட்டுப்பொறுக்கி அரசியல் என்று எல்லோரையும் சகட்டுமேனிக்கு திட்டும் மக இக தோழய்ங்களா, இந்தியாவை ஆயுதப்புரட்சியின் மூலம் கைப்பற்ற முடியும் என்று நிஜமாகவே எண்ணுகி்றீர்களா?.மலையில் முட்டினால் மண்டை தான் உடையும். இந்திய அரசை ஆயுதப்புரட்சின் மூலம் அகற்றி விட்டு அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டு்மே மக்களுக்கு உங்களால் சேவை செய்ய முடியுமா?

உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளே பார்த்து வியக்கும் வண்ணம் தானே இந்தியாவும் இருக்கிறது.இதை விட அமைதியான , பாதுகாப்பான சூழல் வேறெங்கும் இல்லை. ஒடுக்கப்பட்ட, ஏழைமக்களின் முன்னேற்றத்திற்கு இப்போது இருக்கும் சூழலே மிக நன்றாக உள்ளது.(இலங்கைத்தமிழர்களின் நிலையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்). இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதை விட்டுவிட்டு பகல்கனவு காண்பதால் என்ன நன்மை?

முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் என்று மூன்றே வார்த்தைகளில் விளக்கம் சொன்னார் லெனின். கலைஞருக்கு மேலாகவா நீங்கள் ஒரு மனிதாபிமானியைக் கண்டு விடப்போகிறீர்கள். முற்போக்கு சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கும் கலைஞருக்கு ஆதரவு தர மனமில்லையென்றாலும் வாரி விடாமலாவது இருங்கள்.

மாமா வேலை பார்க்கும் அரசு என்றால் என்ன? பெரு முதலாளிகள் சம்பாதிப்பதற்கு சாதாரண மக்களின் நலன்களை பலிகொடுத்து முதலாளிகளின் ஏஜெண்டாக , மாமாவாக வேலை பார்ப்பது என்பது தான். ஆனால் அசுரரே, நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் உலகில் மாற்றங்கள் வெகுவேகமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. மாற்றங்களுக்கேற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் காணாமலே போய்விடுவோம்.

சோசலிச சமூகத்திற்கு அவசிய முன்தேவையாக முதலாளித்துவ வளர்ச்சி இருக்கிறது என்று மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இப்போது நிலவி வரும் சூழலை ஏழை,எளிய மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிந்தித்து பாடுபடுவதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.

உடன்பிறப்பே, நல்ல செய்தி வந்தேவிட்டது.. !

அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது கழக மகளிர் அணி மாநாடு. கடலூரையே கலக்கிய மாநாட்டின் வெற்றி செய்தி வந்துவுடன் அடுத்த நல்ல இனிய செய்தி கழகத்தினர் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.

அது தான் பா ம க கூட்டணியில் இருந்து நீக்கப்பட்டது.

கழக உயர்நிலைக்குழு கூடி பா ம க வை தமிழக கூட்டணியில் இருந்து விலக்கி உள்ளது, உள்ளபடியே நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

நட்பு, கூட்டணி என்று சொல்லிகொண்டே, கழக உடன்பிறப்புக்களுக்கு எதிராக செயல்பட்டதும், கழக அரசை அனைத்து விஷயங்களிலும் குறை சொல்லிக்கொண்டும், தலைவரின் அனைத்து அரசியல் முடிவுகளுக்கும் நக்கல் செய்துக்கொண்டும், நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டும் மலிவான அரசியல் நடத்தி விளம்பரம் தேடிக்கொண்ட டாக்டர் கொய்யா.. அய்யா வின் பா ம க எப்போதோ விலக்கப்பட்டிருக்க வேண்டிய கட்சி.. லேட்டான முடிவு என்றாலும் தலைவர் லேட்டஸ்ட்டான முடிவு எடுத்துள்ளார். நிச்சயம் மருத்துவர் ஆடித்தான் இருப்பார்.


அவருக்கு என்ன 3 வருடத்துக்கு ஒரு கூட்டணியில் இருப்பார்.. அடுத்து ஓடிப்போய் அம்மாவுடன் சேருவார்... உடனடியாக இருக்காது. ஏனெனில் அன்புமனியின் பதவி போய்விடுமே.. 2009 பாராளுமன்ற தேர்தலில் ஓடிவிடுவார்.. ஓடட்டும்..

.... வலம் போனால் என்ன., இடம் போனால் என்ன, மேலே விழுந்து புடுங்காமல் இருந்தா சரி..



Thursday, June 12, 2008

டாக்டர் கலைஞர்: கடலூரில் விழாக்கோலம்

டாக்டர் கலைஞர்: கடலூரில் விழாக்கோலம்

கடலூரில் விழாக்கோலம்



தி மு க வின் இளைஞர் அணி மாநாட்டை தொடர்ந்து இதோ தி மு க வின் மகளிர் அணி முதல் மாநாடு கடலூரில் சனிக்கிழை நடைப்பெற உள்ளது.


கடலூரே விழாக்கோலம் பூண்டுள்ளது. சனிக்கிழமை மாலை நடைபெறும் மகளிர் பேரணியை தனி மேடையில் இருந்து தலைவர் பார்வையிடுகிறார்.
தலைவர் கலைஞரின் வருகையை மகளிரணியினருடன் , கடலூர் மாவட்டமே வழி மேல் விழி வைத்து காத்த்திருக்கிறது.


இந்த மாநாடு, அனைத்து வகையிலும் மாபெரும் வெற்றிபெற்று, தி மு க வரலாற்றில் மேலும் ஒரு சாதனை படைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மாநாடு குறித்து தலைவரின் அறிக்கையில் ஒரு பகுதி


மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற காடு மணக்க வரும் கற்பூரப்பெட்டகமே, வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய் துலக்கும் பெருமாட்டி புண்ணிற் சரம் விடுக்கும், பொய்மதத்தின், கூட்டத்தை க்ண்ணிற் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவனே என்ற புரட்சிக்கவிஞரின் பாடலை ஓங்கி ஒலித்து மாதர் கூட்டத்தை அழைக்கிறேன் வா ! வா! மகளிர் மாநாட்டுக்கு
அரசியல் அறிவு மட்டுமல்ல, சமுதாய உணர்வும் பெற்றிட இந்த மாநாடு மலை முகட்டில் ஏற்றி வைக்கும் விளக்கென அமையட்டும்.

என் தங்கைகள் கடலென கூடும் கழக மங்கையர் மாநாடு, வாரீர் , வாரீர்.

மாநாடு முடிந்தவுடன் வழக்கம் போல, சில சோமாறி பத்திரிக்கையாளர்கள் வயிற்றெரிசலில் புலம்பித்தள்ளுவார்கள். சில வலைப்பதிவர்களும் தங்கள் பங்குக்கு குமுறுவார்கள், அங்கலாயத்து போய், அது இது என்று தங்கள் வலைப்பூவில் பதிவாகவும், மற்றும் பின்னூட்டங்களாகவும் கொட்டித்தீர்ப்பார்கள்..

உங்கள் அனைவருக்கும் ஒன்றே ஒன்று.. இப்போதே மருந்துக்கடைகளில் அனுகி ஜெலூசில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மாத்திரையை விட பாட்டிலில் வரும் ஜெலுசில் மருந்து நன்றாக உள்ளது என்று கேள்வி..

மாநாட்டு வெற்றிச்செய்தியுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்..

நன்றி


Tuesday, June 03, 2008

ரஜினி சொன்ன குட்டிக்கதை!

இந்த கதை நடந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் இருக்கலாம். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. கூடவே சரிக்கு சமமாக ஓடுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பாதியிலேயே ஓடமுடியாமல் நின்றுவிடுபவர்கள் பாவம். சில பேர் மட்டும் காலத்தின் கால் சக்கர வேகத்தையும் கடந்து ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வரலாறு இவர்களை தான் தன் செல்லப்பிள்ளையாய் தத்தெடுத்துக் கொள்கிறது.

அந்த இரு இளைஞர்களும் இருபதுகளில் இருக்கிறார்கள். எளிமையான தோற்றம். கிராமத்து வாசனை கிஞ்சித்தும் மாறவில்லை. கண்களில் மட்டும் எதிர்காலம் குறித்த ஒரு லட்சம் வாட்ஸ் ஒளி. மெரினா கடற்கரை சாலையில் மகிழ்வாக பேசியபடியே நடக்கிறார்கள். அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அவர்களிருவருமே மறந்திருக்க முடியாத மாலை அது. நம்பிக்கையை தவிர்த்து வேறெந்த சொத்து, சுகமும் இல்லாதவர்கள் இருவரும்.

“நண்பா! நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் ஒரு நாள் இந்த கடற்கரையே என்னை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளருவேன்!”

“நிச்சயமாக நண்பா. நம் சாதனை சாமானியர்களுக்கும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!”

“இதே கடற்கரைச் சாலையில் எனக்கு ஒரு சிலை வைக்கப்படும் அளவுக்கு நான் முன்னேற வேண்டும்”

“அந்த சிலையை வைக்கும் அதிகாரத்தில் நான் அமரவேண்டும்”

அந்த நண்பர்களின் வேடிக்கை பேச்சு அரைநூற்றாண்டு கழித்து நனவாகியது. சென்னை கடற்கரை சாலையில் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. சிலையை வைத்தவர் தமிழாய் வாழும் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். இந்த கதையை சிவாஜி சிலை திறப்பு விழாவில் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் திலகத்தின் ஆசையை நிறைவேற்றியது மட்டுமல்ல, இன்னும் பல கோடி தமிழர்களின் ஆசைகளையும் தலைவர் கலைஞர் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் செய்ய இன்னும் கூட ஒரு நூறாண்டு போதாது. தமிழ் போல காலமெல்லாம் வாழ்ந்து இயற்கையை வென்று தமிழர்களுக்காக கலைஞர் உழைக்க, வாழும் தமிழ் பிறந்த தினமான இன்று தமிழன்னையை வேண்டுவோம்.

Monday, May 26, 2008

சென்னையில் ‘கலைஞர் 85' கொண்டாட்டம்!

31.5.2008 அன்று, சென்னை-சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு, “கலைஞர் 85 கொண்டாட்டம்” பல்வேறு சிறப்பு நிகழ்ச்கிகளாக நடைபெறுகிறது.

மாலை 4.00 மணிக்கு - ராம்ஜி குழுவினர் வழங்கும் ”கலைஞர் வாழியவே” என்ற நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு உலகப் புகழ் ட்ரம்ஸ் சிவமணி வழங்கும் “கலைஞர் -மக்கள் இசையே” நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு - பேராசிரியர் திரு பெரியார்தாசன் அவர்கள் வழங்கும், “கலைஞருக்கு நிகர் கலைஞரே” என்ற நிகழ்ச்சியும், இரவு 8.00 மணிக்கு - கலைஞர் டிவி ”எல்லாமே சிரிப்புதான்” குழுவினர் வழங்கும் ”சாதித்தது யாரு? சாதிக்கப்போவது யாரு?” என்ற நிகழ்ச்சியும், இரவு 9.00 மணிக்கு - “கலைஞர் - சாதனை ஆட்சியே” என்ற குறுந்தகடு வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு பரிதி இளம்வழுதி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. மாண்புமிகு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் திரு வி.பி.துரைசாமி வரவேற்புரையாற்றுகிறார். மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ.தமிழரசி, மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு கே.பி.பி.சாமி, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு உ.மதிவாணன், செயலாளர் திமுக விவசாயிகள் அணி திரு கே.பி.ராமலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் திரு எல்.பலராமன், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு ஜெ.அன்பழகன், சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் திரு சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாண்புமிகு நிதி அமைச்சர் திருமிகு பேராசிரியர் அவர்கள் விழா துவக்க உரையாற்றுகின்றார். மாண்புமிகு மின் துறை அமைச்சர் திருமிகு ஆற்காட்டார் அவர்கள் விழா சிறப்புரையாற்றுகின்றார். விழா இறுதியில், முன்னாள் அமைச்சரும், திமுக ஆதி திராவிடர் நலக் குழு செயலாளருமான திரு ச.தங்கவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மீனவர் அணி செயலாளருமான திரு இரா. பெர்ணார்ட், திமுக விவசாய அணி செயலாளர் போடி திரு முத்து மனோகரன், மீனவர் அணி செயலாளர் இராயபுரம் திரு நற்குணம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக ஆதி திராவிடர் நலக் குழு செயலாளருமான திரு வி.பி.ராஜன், விவசாய தொழிலாளர் அணி திரு நன்னிலம் மணிமாறன் ஆகியோர் நன்றியுரையாற்றுகின்றார்கள்.

நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தி.மு.கழக ஆதி திராவிட நலக் குழு, மீனவர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணிகள் செய்து வருகிறது. மேற்கண்ட “கலைஞர் 85 கொண்டாட்டம்” நிகழ்ச்சிக்கு, தி.மு.க.வின் அனைத்து அணியினரும், பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் வருகைபுரிந்து, நிகழ்ச்சியினை சிறப்பித்துத் தருமாறு, திமுகவின் துணை பொதுச்செயலாளரும், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சருமான திரு பரிதி இளம்வழுதி அவர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்.

Friday, May 23, 2008

துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புகளை?

முத்தமிழ் வித்தகராம் நல்லோர்க்கும்
முதுபெரும் புலமையில் வல்லோர்க்கும்
முரசு கொட்டி மொழிப்போரில் அணிவகுத்தோர் அனைவர்க்கும்
அரசொன்று வருமென்று கருதிடாமல் அறப்போர்களிலே
ஆவிதனை அர்ப்பணித்தோர்க்கும்; அகவை எண்பத்தி ஐந்தில்
அன்பு குழைத்து; அய்யன்மீர்! வீர வணக்கம் செலுத்துகின்றேன்.
வழித்தோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்
கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக் குவிக்கின்றேன்.
அலை அலையாய்ப் பெருகி அணி வகுத்துத் திராவிட இயக்க
அரண் காத்திட ஆர்த்தெழாமல் அன்றைக்கு அயர்ந்திருப்பின்
தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்
ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!

போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும் அழைத்தபோது
வேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்கு;
வெகுண்டெழுந்து வந்தவரில் ஒருவன் நான்!
பகுத்துணர்ந்து பல்லாண்டுகளாக இனமுழக்கம் செய்கின்ற
பண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர்
பழகு தமிழில் ஆணையிட்டு அழைத்த பிறகும்
பகுத்தறிவுப் பாசறையாம் பழைய தாய்க் கழகத்து வீர
மணிக்குரலும் விரிவானமாய் மனம் தோய்த்து
பல்லாயிரம், பல லட்சம் உடன் பிறப்பாளர்
பாசத்தை வெள்ளமாய்ப் பாய விட்டுப்
"பணிந்திடுக எம் அன்புக்கு!'' என ஆணையிட்ட பின்னும்
துணிந்து நான் துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;
அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல
"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்!
உன் வாழ்த்தினையேற்று
என் வணக்கமும் வாழ்த்தும் வட்டியும் முதலுமாய் வழங்குதற்கே!

(தலைவர் கலைஞர் கவிதை)

Monday, May 19, 2008

கலைஞரை சந்தித்த சோ!

கலைஞரின் இருப்பு - பலருக்கு
அடி வயிற்றில் நெருப்பு!

உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலைவர் கலைஞர் பூரணநலம் பெற்று இல்லம் திரும்பினார். ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்கச்சொல்லி மருத்துவர்கள் அறிவித்தும் இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த விழா ஒன்றுக்காக கலைஞர் கிளம்பிவிட்டார். காலை ஒன்பது நாற்பத்தி ஐந்து மணியளவில் கலைஞரை நந்தனம் சிக்னலில் காணநேர்ந்தது. உடல்நலம் தேறி இல்லம் திரும்பிய கலைஞரை நேற்று துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி அவரது இல்லத்தில் சந்தித்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார். விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இந்தச் சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இருந்துவிடக்கூடாது என்று நம்புவோமாக.

Saturday, May 17, 2008

தலைவர் கலைஞரின் ஆத்திச்சூடி!

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம், உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறு போல் வீறு கொள்!
ஐயம் களைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!
கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
“ழ” கரமாய்ச் சிறப்புறு!

Wednesday, April 30, 2008

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்ஸி! - கலைஞர் ஒப்புதல்!!

கேள்வி :- வரும் சூன் திங்கள் முதல் ரேஷன் கடைகளில் தள்ளுபடி விலையில் சமையல் எண்ணெய் விற்கப்படும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- உயர்ந்துள்ள விலைவாசியைக் குறைக்க வேண்டு மென்று எதிர்க்கட்சிகள் எல்லாம் அகில இந்திய அளவில் போர்க் குரல் கொடுத்துக் கொண்டுள்ளன. மத்திய அரசும் சரி, தமிழக அரசும் சரி விலைவாசியைக் குறைக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றன. அந்த வரிசையில் தான் இன்றையதினம் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதே சலுகையை தமிழக அரசு சார்பில் 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு, தமிழகத்திலே உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக சமையல் எண்ணெய் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை போன்ற பொருள்களையும், குறிப்பாக கிலோ அரிசி இரண்டு ரூபாய் விலைக்கும் கொடுத்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் நிதித் துறை, உணவுத் துறை சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரி களையெல்லாம் அழைத்து வைத்து நீண்ட நேரம் பேசி சில அறிவிப்புகளையும் விலைவாசியைக் குறைப்பதற்காக அரசின் சார்பில் செய்திருக்கிறோம்.

* - * - * - *

கேள்வி :- நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக "துக்ளக்" இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறதே?

கலைஞர் :- "துக்ளக்" இதழுக்கு, இன்றைய "தினமணி" இதழ் புகைப்படத்தோடு பொருத்தமான விடை அளித்திருக்கின்றதே?

திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் நீலோத் பலாம்பாள் அம்மனுக்கு ரூ. 30 லட்சத்தில் புதிதாக செய்யப்பட்ட தேர் 27-4-2008 அன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மனுக்கு என தனியாக தேர் இல்லை என்றும், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை புதிய தேர் கட்டுமானத் திருப்பணிக்கு ரூ. பத்து லட்சம் ஒதுக்கீடு செய்தது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

இது மாத்திரமல்ல, கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் தி.மு. கழக அரசின் சார்பில் 2190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
திருக்கோயில்களில் திருப்பணி செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை 75 லட்சம் ரூபாயாக இருந்தது, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

கிராம கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப் பட்டு, இதுவரை 15 ஆயிரம் பூசாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளார்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க 48 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துவதற்காக புராதன சின்னங்கள் புனரமைப்புத் திட்டத் தின் கீழ் 9.87 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டது.

240 திருக்கோயில்களுக்குச் சொந்தமான தேர்கள் புதுப்பிக்கப் படும் திட்டம் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் சார்பில் செய்யப்படுபவைகளில் சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

நேற்றைய தினமணி நாளிதழில் வந்துள்ள மற்றுமோர் செய்தி - சிதம்பரம் அருகே 13 லட்ச ரூபாய் செலவில் முஸ்லீம் பிரமுகர் ஒருவர் மாரியம்மன் கோவில் கட்டி, நேற்றைய தினம் அங்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இவற்றிலிருந்து துக்ளக் எழுதியிருப்பதைப் போல - இந்து கடவுள்கள் இழிவுபடுத்தச் சொல்லி நான் யாருக்கும் தைரியமளிக்கவில்லை என்பதையும் துக்ளக் ஆசிரியரைப் போல மறைமுகமாக யாரையும் தூண்டி விடவும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

* - * - * - *

கேள்வி :- தமிழ்நாட்டில் "மினி எமர்ஜன்சி" ஆட்சி நடைபெறு வதாக ம.தி.மு.க. தலைவர் வைகோ சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- ஆமாம், "பொடா" சட்டத்தைக் கொண்டுவந்து - அவரை வெளியே வரவிடாமல் சிறையிலே அடைத்து வைக்கப் பட்டுள்ளது அல்லவா! காவல் துறையினர் கைது செய்து வைத்திருப் பவரைக் கூட, இவர் இப்போது நேரிலே சென்று பார்க்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது அல்லவா! அதனால் "மினி எமர்ஜன்சி" ஆட்சி என்று சொல்லத் தான் செய்வார். இது இருக்கட்டும், சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையிலே பிரதமருக்கு நான் கடிதம் எழுதியதை நிரூபித்தால் என்று சவால் விட்டாரே, நான் ஒன்றுக்கு இரண்டு கடிதங்களை எடுத்துக் காட்டினேனே, அதற்கு என்ன பதில் என்று முதலில் சொல்லச் சொல்லுங்கள். பிறகு மெகா எமர்ஜன்சி, மினி எமர்ஜன்சி பற்றியெல்லாம் பேசலாம்!

* - * - * - *

கேள்வி :- திருவாரூர், அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் உ.வே.சா நினைவில்லம் நேற்று திறந்து வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி?

கலைஞர் :- இன்று உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் நினைவு நாள். அதை யொட்டித் தான் நேற்றே நினைவில்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தனி மனிதராக இருந்தும் கூட, ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணியை நிறைவாக ஆற்றியவர் உ.வே.சா. உ.வே.சா. முயற்சி செய்யாமல் இருந்திருப்பாரேயானால் சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமலே போயிருக்கக் கூடும். அந்த வகையில் உ.வே.சா. அவர்களின் நினைவை நாம் என்றென்றும் போற்றுவோமாக. இந்த அரசைப் பொறுத்தவரையில் ஒரு பெருமகன் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல், அவர் செய்த காரியங்களைப் போற்றக் கூடியது என்பதற்கு இது ஒரு தக்க உதாரணமாகும்.

* - * - * - *

கேள்வி :- செங்கோட்டையன் யார்?

கலைஞர் :- சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் கோவைத் தங்கம் பேசும்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எடுத்துப் பேசி கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்கள் எந்த அளவிற்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அவரது கேள்விக்கு அவையிலோ - அறிக்கையிலோ விளக்கமளிக்க வேண்டிய அ.தி.மு.க. வைச் சேர்ந்த செங்கோட்டையன் என்னைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்திருக்கிறார். அவருக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

அவர் யார் என்பதைப் பற்றி 96ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி சிவப்பா அவர்கள் தெரிவித்த ஒரு கருத்தைக் குறிப்பிட்டாலே தெரிந்து கொள்ளலாம்.
ஊழல் குற்றச்சாட்டுகளின் வரிசையில் அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்த அமைச்சர்கள் மீது வழக்குகள் குவிந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மீது போடப்பட்டிருந்த வழக்கில் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதி சிவப்பா முன்பாக வந்த போது - அவர் அளித்த தீர்ப்பில் - பொது நலனைக் காக்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட் டையனின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டுமே தவிர கடல் கொள்ளையர் போல இருந்திருக்கக் கூடாது. செங்கோட்டையன் பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல் செய்து பெருமளவு சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

அவர் வாங்கிய சொத்துக்களுக்காக முத்திரைக் கட்டணம் மட்டும் ரூ. 2.5 கோடிக்குச் செலுத்தியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. கடல் கொள்ளையர் போல இல்லாமல் பொது நலனைக் காக்க மற்றவர்களுக்கு முன்னோடியாக அவர் இருந்திருக்க வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்கள் செய்யும் ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. இதனால் சமூக முன்னேற்றம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையை நீதி மன்றங்கள் தடுக்கக் கூடாது. அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் உள்ள செங்கோட்டையனைக் கைது செய்தால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கான தேர்தல் பணி பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினார்.

அதன் பின்னர் அந்த வழக்குகள் எல்லாம் அவர்களது ஆட்சிக் காலத்தில் முறையாக நடைபெறாமல் தீர்ப்புகள் வேறு விதமாக வந்தன என்ற போதிலும், உயர் நீதி மன்ற நீதிபதி சிவப்பா அவர்களின் பாராட்டினை இந்த அளவிற்குப் பெற்றவர் தான் இன்றையதினம் நான் ஏதோ எஸ்டேட் வாங்கியிருப்பதைப் போல அறிக்கை விடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை நான் முதல்வராக வருவதற்கு முன்பு எந்த வீட்டில் வாழ்ந்தேனோ, அதே வீட்டில் தான் இன்றளவும் வசிக்கிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை.

* - * - * - *

28.04.2008

Monday, April 28, 2008

வியக்கவைத்த கலைஞர்!

இன்று கலைஞர் தொலைக்காட்சியில் தசாவதாரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். விழாவிற்கு சிறப்பு விருந்தனராக ஜாக்கி சான் அவர்கள் வந்திருந்தார்கள். அந்த மேடையிலே இருந்த அனைவரும் வரவேற்ப்புரை, வாழ்த்துரை, ஏற்புரை என்று பேசினார்கள். ஆனால் தமிழன தலைவர் கலைஞர் அவர்கள் பேசிய போது அனைவரும் வாயடைத்து போய்விட்டார்கள். மற்றவர்கள் பேசும் போது சும்மா பேச வேண்டுமே என்பதற்காக பேசினார்கள். ஆனால் தலைவர் அவர்கள் பேசிய போது தான் அவர் இந்த விழாவிற்கு வருவதற்கு முன்பு எவ்வளவு தயார் செய்து கொண்டு வந்திருந்திருக்கிறார் என்று தெரிந்தது.

அவர் ஜாக்கி சானையும் கமலையும் பற்றி ஒப்பிட்டு பேசியது. ஜாக்கி சான் பற்றி அவரை அழைத்து வந்தவர்களுக்கே தெரியாத பல விஷயங்களை பற்றி பேசியது. அப்படியே புல்லரித்து விட்டது எனக்கு. இதற்காக அவர் எவ்வளவு நேரம் செலவு செய்திருக்க வேண்டும். தலைவரிடம் இருந்து இந்த நல்ல பழக்கத்தை நாம் அனைவரும் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற்று விடலாம்.

இந்த விழாவில் ஒரு சின்ன குறை ஜாக்கி சானுக்கு ஒரு மொழி பெயற்பாளரை அமர்த்தியிருக்கலாம்.

Friday, April 18, 2008

கனிமொழி கானா ராக்

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம், கர்னாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம் தான் சிறந்தது என தமிழ்நாட்டில் நிலவிவரும் ஒரு கற்பிதம். மற்ற கலை வடிவங்களான நாட்டுப்பாடல்கள், கரகம், ஒயிலாட்டம் மற்றும் கானா பாடல்கள் தாழ்ந்தவை என்றும் அதை நடத்துபவர்களும்,ரசிப்பவர்களும் ரசனை குறைவானவர்கள் என்றும் ஒரு நுண்ணிய பிரச்சாரம் ஊடகங்களால் செய்யப்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகளிலும் இம்மாதிரி பிரிவுகள் உண்டு ஆனால் ஏற்ற தாழ்வு இல்லை. நாம் ரசிக்கும் மேற்கத்திய சங்கீதம் எல்லாமே பல பிரிவுகளை சேர்ந்ததுதான். மேற்கத்திய கிளாசிகல் சங்கீதம் எதையும் நாம் ரசிப்பதில்லை ஏனைய வடிவங்களான ராக்,பாப் போன்றவற்றையே ரசிக்கிறோம். அந்த இசை அமைப்பாளர்களை கொண்டாடுகிறோம். ஆனால் இங்குள்ள மற்ற இசை வடிவங்களை ஏளனம் செய்கிறோம்.

தமிழுக்கும் தமிழ் கலைகளுக்கும் தாழ்வு வரும் போதெல்லாம் அதை தாங்கிப்பிடிக்கும் தூணான கலைஞர் அவர்களின் புதல்வி இவ்விசயத்தில் தந்தையையே மிஞ்சினார். சென்னை சங்கமம் என்னும் நிகழ்ச்சிக்கு தோள் கொடுத்தார். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு மரியாதை பெற்றுத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இனிவரும் தலைமுறையாவது எல்லா கலைகளையும் சமமாக மதிக்கட்டும்.

Thursday, April 17, 2008

கலைஞர் கமல்ஹாசன் அம்பானி

சாமி கும்பிடவில்லையென்றால் ஒரு முன்னேற்றமும் கிடைக்காது என்று காலம் காலமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆன்மீகத்தை திணிப்பதால்தான் தலைமுறை தலைமுறையாக அது தொடருகிறது. இதை உடைக்க முக்கிய ஆயுதம் நாத்திகர்களாக இருந்து வெற்றி அடைந்தவர்களை முன் நிறுத்துவதே. அப்படிப்பட்டவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளும் பதின்ம வயதினர் பகுத்தறிவு பாதைக்கு பெருமளவில் திரும்பும் வாய்ப்புள்ளது. முன் காலத்தில் கூட அரசன் பின்பற்றிய மதங்களையே மக்கள் அதிக அளவில் பின்பற்றினர்.(உதாரணம் :அசோகர் - புத்த மதம் மற்றும் பாண்டிய மன்னர் சமன மதத்தை பின்பற்றுவதால் அனல்வாதம் புனல்வாதம் செய்து சைவ சமயத்திற்கு அவரை மாற்றியது). எனவே வெற்றி பெற்று நான் நாத்திகன் என்று அறிவிப்பவராலேயே பகுத்தறிவு இயக்கம் வலுப்பெறும்.


இதற்கு நம் கண் முன்னே உதாரணமாய் இருப்பவர்கள் கலைஞர் மற்றும் கமல்ஹாசன். எனவே வரும் தலைமுறைக்கு இவர்களை உதாரணமாய் காட்டி பகுத்தறிவை வளர்ப்போம். இதில் கலைஞர் அடைந்த வெற்றி மத நம்பிக்கைகள் உள்ளவர்களை எதிர்த்து போராடி பெற்ற வெற்றி. கலைஞர் பகுத்தறிவு இயக்கத்துக்கு செய்த மிகப்பெரும் உதவி இதுவே. அம்பானி, பில்கேட்ஸ்,மிட்டல் மற்றும் நடிகர்கள் நாங்கள் நாத்திகர் என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

மைதானத்தை தாண்டி விழுந்த மகா சிக்சர்

இன்று இடஒதுக்கீட்டில் ஒரு முக்கியமான நாள். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்த பணிகளில் இது முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த ஆட்சியில் கல்வித்துறை இரண்டாக பிரிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது, நுழைவுத்தேர்வு ஒழிப்பு என அடுத்து அடுத்து அடிக்கப்படும் சிக்சர்களில் இது மைதானத்தை தாண்டி விழுந்த மகா சிக்சர்.
மேலும் ஐ ஐ டி களில் இந்த ஆண்டு 9% இடங்களை பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்போவதகவும் வரும் ஆண்டுகளில் இதை அதிகரித்து மூண்று ஆண்டுகளுக்குள் 27% ஒதுக்கீடு செய்யப்போவதகவும் ஐ ஐ டி இயக்குனர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கபட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நமக்கு மேலும் ஒரு வெற்றி