Thursday, June 12, 2008

கடலூரில் விழாக்கோலம்



தி மு க வின் இளைஞர் அணி மாநாட்டை தொடர்ந்து இதோ தி மு க வின் மகளிர் அணி முதல் மாநாடு கடலூரில் சனிக்கிழை நடைப்பெற உள்ளது.


கடலூரே விழாக்கோலம் பூண்டுள்ளது. சனிக்கிழமை மாலை நடைபெறும் மகளிர் பேரணியை தனி மேடையில் இருந்து தலைவர் பார்வையிடுகிறார்.
தலைவர் கலைஞரின் வருகையை மகளிரணியினருடன் , கடலூர் மாவட்டமே வழி மேல் விழி வைத்து காத்த்திருக்கிறது.


இந்த மாநாடு, அனைத்து வகையிலும் மாபெரும் வெற்றிபெற்று, தி மு க வரலாற்றில் மேலும் ஒரு சாதனை படைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மாநாடு குறித்து தலைவரின் அறிக்கையில் ஒரு பகுதி


மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற காடு மணக்க வரும் கற்பூரப்பெட்டகமே, வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய் துலக்கும் பெருமாட்டி புண்ணிற் சரம் விடுக்கும், பொய்மதத்தின், கூட்டத்தை க்ண்ணிற் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவனே என்ற புரட்சிக்கவிஞரின் பாடலை ஓங்கி ஒலித்து மாதர் கூட்டத்தை அழைக்கிறேன் வா ! வா! மகளிர் மாநாட்டுக்கு
அரசியல் அறிவு மட்டுமல்ல, சமுதாய உணர்வும் பெற்றிட இந்த மாநாடு மலை முகட்டில் ஏற்றி வைக்கும் விளக்கென அமையட்டும்.

என் தங்கைகள் கடலென கூடும் கழக மங்கையர் மாநாடு, வாரீர் , வாரீர்.

மாநாடு முடிந்தவுடன் வழக்கம் போல, சில சோமாறி பத்திரிக்கையாளர்கள் வயிற்றெரிசலில் புலம்பித்தள்ளுவார்கள். சில வலைப்பதிவர்களும் தங்கள் பங்குக்கு குமுறுவார்கள், அங்கலாயத்து போய், அது இது என்று தங்கள் வலைப்பூவில் பதிவாகவும், மற்றும் பின்னூட்டங்களாகவும் கொட்டித்தீர்ப்பார்கள்..

உங்கள் அனைவருக்கும் ஒன்றே ஒன்று.. இப்போதே மருந்துக்கடைகளில் அனுகி ஜெலூசில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மாத்திரையை விட பாட்டிலில் வரும் ஜெலுசில் மருந்து நன்றாக உள்ளது என்று கேள்வி..

மாநாட்டு வெற்றிச்செய்தியுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்..

நன்றி


2 comments:

said...

கடலூரில் நடைபெற உள்ள மகளிர் மாநாடு அமோக வெற்றி பெற இந்த உடன்பிறப்பின் வாழ்த்துக்கள்.

said...

விழா வெற்றி பெற வாழ்த்துகள்