Saturday, December 15, 2007

நெல்லை திமுக இளைஞரணி மாநாடு - நேரடி ஒளிபரப்பு!

'நெல்லை எங்கள் எல்லை' என்று ஒருமுறை சொன்னார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். அந்த எல்லையில் எழுச்சிக்கோலம் பூண்டு வீறுநடை போடும் வேங்கைகளை நேரடி ஒளிபரப்பாக இணையத்தில் காண கழக துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் மாண்புமிகு பரிதி இளம்வழுதி ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.

கழக இளைஞரணி மாநாட்டினை கண்டுகளிக்க இங்கே அழுத்தி அமுக்குங்கள்.

Thursday, December 13, 2007

மருத்துவர் அய்யாவும், மருந்துக்கும் உதவாத சவடால்களும்!

முன்பெல்லாம் சவடால் பேச்சு என்றாலே வாழப்பாடி ராமமூர்த்தியும், சுப்பிரமணியசாமியும் தான் நினைவுக்கு வருவார்கள். சமீபகாலமாக மருத்துவர் அய்யா நினைவுக்கு வருகிறார். துணைநகரம் திட்டத்தை ஆரம்பித்தபோது மக்களுக்காக அத்திட்டத்தை எதிர்ப்பதாக ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தியவரின் யோக்கியதை இப்போது தான் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

சென்னைக்கு துணைநகரம் அமைக்கப்பட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் மக்களின் நிலங்களோடு சேர்த்து அய்யாவின் நிலங்களும் கையகப்படுத்தப் படுமாம். அது தான் அய்யா திட்டத்துக்கு ஆரம்பத்திலேயே மீட்டர் போட்டு விட்டார். அதிலிருந்தே அய்யா மக்களுக்காக போராடும் போராளி வேடம் பூண ஆரம்பித்துவிட்டார். அவருக்கு இது வசதியாகவும் இருக்கிறது போலும். இதுபோல மதில்மேல் பூனையாக அவ்வப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை, நிர்வாகம் வேலைக்கு ஆகவில்லை, காவல்துறையின் கிட்னி அழுகிப்போனது என்றெல்லாம் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தால் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது அம்மா கட்சியிடம் வலுவான தொகைக்கும் பேரம் பேச வசதியாக இருக்கும் அவருக்கு. நாற்பது கோடியாரின் மதிப்பு தான் இன்னும் கீழிறங்கும். அடுத்த தேர்தலுக்கு அவருக்கு வெறும் நாற்பது ரூபாய் கூட கொடுக்கமாட்டார்கள்.

கடலூரில் துணைமின்நிலையம் அமைக்கக் கூடாது என்று சமீபத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார் மருத்துவர் அய்யா. அங்கே அவருக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறதோ தெரியவில்லை. போராட்டம் நடத்தியவர் அதோடு முடித்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அமைச்சர் ஆற்காட்டாருக்கு சொந்தக்காரர்கள் தான் மின்நிலையம் அமைக்கப் போகிறார்கள் என்று போகிற போக்கில் ஆதாரமில்லாமல் உளறித் தள்ளியிருக்கிறார்.

பதிலுக்கு ஆற்காட்டாரும் 'அதுபோல சொந்தநலனுக்காக திட்டங்களை பயன்படுத்துவதோ, எதிர்ப்பதோ என் வழக்கமல்ல. விளைநிலங்களை அரசுத்திட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லும் ராமதாஸ் 250 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி கல்லூரி நடத்தி வருகிறார்' என்றார்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அரிச்சந்திரனான மருத்துவர் அய்யா பதிலுக்கு 'விளைநிலங்களை கையகப்படுத்தி நான் கல்லூரி கட்டியிருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்' என்று சவால் விட்டார்.

மருத்துவர் அய்யா கட்டியிருக்கும் கல்லூரி எந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதை இதோ ஆற்காட்டார் ஆதாரப்பூர்வமாக பட்டியலிட்டிருக்கிறார். நெல், சவுக்கு, பூஞ்செடி, மேய்ச்சல்நிலம், அணைக்கட்டு, அரசு புறம்போக்கு என்று சகலவகை நிலங்களையும் வளைத்து கட்டி அய்யா கல்லூரி கட்டியிருக்கிறாராம்.

உடனே மருத்துவர் அய்யா அரசியலை விட்டு விலகி தன் சவாலை நிறைவேற்றுவார் என்றெல்லாம் நாம் நினைக்கவில்லை. அந்த அளவுக்கு தன் வாக்குக்கு முக்கியத்துவம் தருபவராக இருந்திருந்தால் மக்களால் நடுத்தெருவில் சட்டையை கழட்டி சாட்டையடி வாங்கியிருப்பார். பா.ம.க.வை தொடங்கும்போதே சொன்னாரே? நினைவிருக்கிறதா? "நானோ, என் குடும்பத்தாரோ அரசியல்ரீதியாக பதவிக்கு வந்தால் சாட்டையால் அடியுங்கள்" என்று. அதையே நாம் மறந்துவிட்டோம். சாதாரண 250 ஏக்கர் நில சவாலை எல்லாமா நினைவில் வைத்திருக்கப் போகிறோம்.

'பிளாக்மெயில் பொலிடிஷியன்ஸ்' என்று டெல்லி அரசியலில் ஒரு பதம் உண்டு. தமிழகத்தில் அந்த வகையில் இதுவரை ஜெயலலிதா மட்டுமே இருந்தார். ஆம்பளை ஜெயலலிதாவாக மருத்துவர் அய்யா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறார். ஜெயலலிதாவை விட ஆபத்தான அரசியல்வாதியாக, பொய்யராக, முதுகில் குத்துபவராக, நயவஞ்சகராக இவர் மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

Monday, December 03, 2007

தமிழர் பிரச்சினை மலேசியப் பிரச்சினையா?

மலேசியாவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதை கண்டித்து உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அதை தொடர்ந்து மலேசிய அமைச்சர் முட்டாள் தனமான அறிக்கை வெளியிட்டிருப்பதும் எல்லோரும் அறிந்தது தான். இத்தகைய பக்குவம் இல்லாத அறிக்கை மூலம் மலேசியா தன் இரட்டை வேடத்தை காட்டியுள்ளது

மலேசியாவில் மலாய் இனத்தவர் அதிகம் சீனர்கள் சிறுபாண்மை அதே நேரம் சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பாண்மையாகவும் மலாய் இனத்தவர் சிறுபாண்மையாக இருக்கிறார்கள். சிங்கப்பூரில் சிறுபாண்மையாக உள்ள மலாய் இனத்தவருக்கு சீனர்களுக்கு இணையான இடம் கொடுப்பது இல்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க மலேசிய ஊடகங்கள் பெரும் சிரத்தை எடுத்து வருகின்றன. ஆனால் இந்த பிரச்சாரத்திற்கு மலாய் மக்கள் மலேசியாவில் இருப்பதை விட சிங்கப்பூரில் நல்ல நிலைமையிலேயே இருக்கிறார்கள் என்ற பதில் சிங்கப்பூர் தரப்பில் இருந்து கொடுக்கப்படும். இப்படி பலமுறை மூக்கு உடைபட்டாலும் தொடர்ந்து சிங்கப்பூருக்கு எதிராரன பிரச்சாரத்தை மலேசிய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கைவிடுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மலேசியர்களை பற்றி கவலைப்படாமல் சிங்கப்பூரர்களை பற்றி போலியாக கவலைப்பட்டு வருகிறார்கள்

இப்போது தமிழர் பிரச்சினை பற்றி உலகத் தமிழர்களின் தலைவர் அறிக்கைவிட்டது மட்டும் அவர்களுக்கு உள்நாட்டு பிரச்சினையாகிவிட்டது. மலேசியப் பிரச்சினை பற்றி அவர்கள் பார்த்துக் கொள்வார்களாம் ஆனால் சிங்கப்பூர் பிரச்சினைகளில் தலையிடுவார்களாம். இவர்கள் உள்நாட்டுப் பிரச்சினை பற்றி அமெரிக்கா அறிக்கைவிடும் அளவிற்கு வந்துவிட்ட பிறகும் அதை உள்நாட்டுப் பிரச்சினை என்று திசை திருப்புவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இந்த பிரச்சினையில் அனைவரும் உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர் அவர்கள் பின்னால் அணிவகுத்து தமிழர் துயர் துடைக்க துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

Sunday, December 02, 2007

கலைஞரின் புதிய ஆத்திச்சூடி

நெல்லையில் நடைபெறும் கழக இளைஞர் அணி மாநில மாநாட்டினையொட்டி இளைஞர் அணியினர்க்கு கலைஞர் வழங்கும் புதிய ஆத்திச்சூடி:-

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம், உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறு போல் வீறு கொள்!
ஐயம் களைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!
கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
"ழ" கரமாய்ச் சிறப்புறு!
நன்றி முரசொலி


Friday, November 09, 2007

தலைவர் கலைஞரின் முதல்வர் பதவி முட்டாள்களுக்கு உறுத்தல்!


ஈழத்தமிழர்கள் குறித்து வெளிப்படையான தன் எண்ணத்தைச் சொல்லி அல்லது ஈழத்தமிழர்களின் நலனுக்காக கலைஞர் பதவி துறப்பாரா? போன்ற அரைவேக்காட்டுத்தானமான கேள்விகள் எழுகின்றன. அதை எழுப்புபவர்கள் ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்டவர்களா? இதற்கு முன்பாக ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்தவர்களா? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர்களந்து நோக்கமென்ன என்பதையும் தமிழர்கள் உணரவேண்டும்.

ராஜிவ் காந்தி கொலையை திமுக தூண்டிவிட்டு நடத்தியதாக வாக்களர்களை நம்ப வைத்து பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்த ஜெயலலிதாவை அடுத்த தேர்தலின் போதே வாக்காளர்கள் உணர்ந்து கொண்டு வீட்டுக்கு அனுப்பினர். தன் வெற்றிக்கு இராஜிவின் மரணம் மூலதனம் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்த ஜெ தன் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக ஒரு கட்டத்தில் அறிவித்து காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தினர்.

ஜெ வின் அரசியலை நன்றாக புரிந்து கொண்ட மக்கள் அடுத்த தேர்தலில் பர்கூரில் அவரை புறமுதுகிட்டு ஓட வைத்தனர். 1996 ல் நடந்த தேர்தலில் கலைஞரின் திமுக ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிபுரிந்து சமத்துவ புரம், ஏழைப்பெண்களுக்கு இலவச திருமணம் போன்று பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தது.

ஜெ ஆட்சியில் கிராமங்களில் கஞ்சி தொட்டி திறந்தது போன்ற அவல நிலை எதுவும் இல்லாவிட்டாலும் 'பணப் புழக்கம் இல்லை' என்ற பொய்பிரச்சாரத்தை ஆதிக்க பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுத்து அதைப்பற்றியே அந்த பத்திரிக்கைகளில் தலையங்கமாக எழுத / பேச வைத்து மக்கள் மனதில் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தினார் ஜெ. இதற்காக அவரது குலக்கொழுந்துகளான சோ வகையறாக்கள் பெரிதும் உதவினர்.

அதுமட்டுமல்ல லெட்டர் பேடு கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்ந்து கொண்டு மாபெரும் கூட்டணி என்ற மாயை ஏற்படுத்தியும், மதிமுக - திமுக கடைசி கட்ட மோதல்களில் தனித் தனியாக பிரிந்ததன் மூலம் குறைந்த வாக்கு வேறுபாட்டில் பல இடங்களிலும், மூப்பனார் தாமாக தந்த தமாகா கூட்டணி (செத்தும் கெடுத்தார் இந்த சீதக்காதி) தயவினாலும் அதிமுக வெற்றி பெற்றது.

இதையெல்லாம் அரசியல் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு என்ற இமேஜ் அவர் பர்கூரில் யானையின் காதில் புகுந்த சிற்றெறும்பான சுகவனத்திடம் தோற்றபோதே உடைந்துவிட்டது. சென்ற தேர்தலில் கூட்டணிக்காக ஜெ எவ்வளவோ முயன்றும் காங்கிரஸ் அதிமுகவை நெருங்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதால் வேறு வழியின்றி தானே விலங்கு மாட்டிய வைகோவிற்கு தன் கையால் பூச்செண்டு கொடுத்து போஸ் கொடுத்தார். அரசியலில் நேர்மையோ, வெட்கமோ எதுவும் இல்லை என்பதற்கு சாட்சியாக இருவரின் புகைப்படமும் வரலாறு படைத்தது. தமிழின வரலாற்றில் எட்டப்பனுக்கு இணையான இடம் வைகோவுக்கும் கிடைத்தது.

கடைசியாக நடந்த தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும் என்றும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வெட்கத்தை விட்டு சோ ராமசாமி போன்றவர்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதினார்கள். ஜெ. விசுவாசம் கொண்ட வடநாட்டு பத்திரிகைகள் அதிமுகவுக்கு ஏதோ பெரிய மக்கள் ஆதரவு இருப்பது போலவும், அவர் தென்னாட்டு மார்க்கெட் தாட்சர் போலவும் சித்தரித்து கட்டுரைகளையும், கருத்துக்கணிப்புகளையும் எழுதினார்கள்.

திமுக - கூட்டணி கட்சிகள் வெற்றிபெரும் என்று ஒரு சிலர் மட்டுமே சொன்னார்கள். அவர்களும் கூட திமுக தனித்து ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொன்னார்கள். ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு எட்டாம் வள்ளலை போல இடங்களை வாரியிறைத்து திமுகவை பலமற்றதாக்கியிருந்தார் கலைஞர்.

என்னன்னவோ முயற்சித்தும் அதிமுக வெற்றி பெறமுடியவில்லை. போதாக்குறைக்கு விஜயகாந்த் ஒருபக்கம் அதிமுக வாக்கு வங்கி வாக்காளர்களில் உள்ள திரை ரசிகர்களை இழுக்க, திரைப்பட ஹீரோவுக்கு ஒட்டுப்போடும் வாக்காளர்களின் பெரும் பகுதியை அதிமுக இழந்தது.


********

தற்போது எந்த விதத்திலும் கலைஞர் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதால் ஈழப்பிரச்சனையில் தங்களுக்கு அக்கறை உள்ளது போல் காட்டிக் கொள்வதற்காக கலைஞரைப் பார்த்து 'ஈழத் தமிழர் நலனுக்காக பதவி விலக தயாரா?' என்று கேட்கிறார்கள், இதன் மூலம் கலைஞர் அக்கறை இல்லாதவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது, ஒரு வேளை கலைஞர் கோபப்பட்டு பதவியை தூக்கி எரிந்தால் தேர்தலில் தில்லுமுல்லு செய்து, சோ ராமசாமி மூலமாக விஜயகாந்தை வளைத்து (வைகோ எப்பவுமே அனாதைதான்) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நப்பாசை ஜெவுக்கும், அவரை ஆதரிக்கும் கோமாளிகளுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவாரா?

இராஜிவ் காந்தி கொலையில் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பது போல் குற்றம் சுமத்திய போது, மறுத்து எதுவும் பேசாமல் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக கிடைத்த தேர்தல் தோல்வியில் துவண்டுவிடாமல் இருந்தது. தன் மீது விழுந்த வீன் பழியை எந்த மேடையிலும் சொல்லிக் காட்டி அனுதாபம் தேடாதது இதெல்லாம் தியாகம் இல்லையா? தான் குற்றமற்றவர், விடுதலை போராட்ட அமைப்புகள் தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர் வெளிப்படையாகவே சொல்லி இருக்க முடியும் தானே?

ஏன் சொல்லவில்லை. தானே அவ்வாறு சொன்னால் தமிழர் எவருமே ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வரமாட்டார்கள் என்ற உயர்ந்த எண்ணமே காரணம். தான் பேசாமல் இருந்துவிட்டால் அவர் கருத்தையே அக்கறை உள்ள பலரும் ஈழத்தமிழர்கள் குறித்த கருத்தாக பேசுவார்கள் என்பதே காரணம். அவர் வெளிப்படையாக பேசினால் அதை மலின அரசியல் ஆக்கி காங்கிரசிடம் ஆதாயம் அடைய முயல்வார்கள். அது தமிழ்நாட்டு நலனுக்கும், ஈழத்தமிழர் நலனுக்கும் கேடாக போய்விடும் என்பதாலேயே மெளனமாக இருந்தார், இருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவரா ?
முட்டாள்களின் எண்ணத்தில் இருப்பது ஈழத்தமிழர்களின் மீதான அக்கறையா? அல்லது கலைஞர் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியா?

இளைஞர்களுக்கு வழிவிடுவோம் - தலைவர் கலைஞர்!

சாதனை அரசு

நாமெல்லாம் சேர்ந்து வளர்த்திடும் கழகம், வலிவும், பொலிவும் கொண்டதாக; "நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக'' எழில் கூடி ஏற்றமுடன் தளர்ச்சியின்றி வளர்ச்சியுற்று வாழ்க என்பார்களே; வயது முதிர்ந்தோர் வாயார மனமார; அது போன்ற வாழ்த்துக்களை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களுக்கான சாதனைகளைச் செய்து இந்த அரசும் பெற்று வருகிறது.

அரசினை நடத்தும் கழகமும் - அரசுக்குத் துணை நிற்கும் தோழமைக் கட்சிகளும் பெற்று வருவதை நாடறியும், நல்லோர் அறிவர் - வளம் பெருகுது; வயலிலே பயிர் தழைக்குது - என்றாலும்கூட; பெருகப் பெருகத்தான் - தழைக்கத் தழைக்கத் தான் - இன்னும் சற்று மேலும் பெருகிட; தழைத்திட வேண்டுமென்ற தணியாத ஆசை உரிமையுடைய உழவனுக்கு ஏற்படுகிறது! அதுபோல எனக்கு ஏற்படும் அவா மிகுதியின் அடையாளமாகவே இந்தக் கடிதம்!

இளைஞர் அணி மாநாடு

இளைஞர் அணியின் செயலாளராகவும் இருக்கிற உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி ஸ்டாலின்; அந்த அணியின் மாநில அமைப்பு, மாவட்ட அமைப்புகள், மற்றுமுள்ள அமைப்புகளை அணிவகுத்திடச் செய்து, ஆக்கபூர்வமானதொரு அருஞ்செயலை இளைஞர் அணி மாநில மாநாடு என்று; டிசம்பர் 15, 16 நாட்களில் நெல்லைச் சீமையில் நடத்திட தலைமைக் கழகத்தின் அனுமதியைப் பெற்றுள்ளார். அதற்கான தொடக்கப் பணிகள் தொடங்கிவிட்ட செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இளைஞர்கள் ஓர் இயக்கத்தின் நாடி நரம்புகளாகவும் - அரிய தியாகங்களைச் செய்து; அனுபவம் பெற்ற அகவை முதிர்ந்தோர் அந்த இயக்கத்தின் இரத்த நாளங்களாகவும் - அமைந்து, அந்த இயக்கத்திற்கு அளிக்கும் உயிரோட்டமே; அந்த இயக்கத்தைக் கொள்கைக் குன்றமாகவும் - என்றும் வற்றாத ஜீவ நதி உருவாகிப் பெருகி வரும் உச்சி முகடாகவும் விளங்க வைக்கக் கூடியதாகும்.

போர்க் குரல்

"கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்'' என்றும் - அத்தகைய இளைஞர் கூட்டத்தைப் பார்த்து; "மக்களிடையே எழுச்சிக்கு மருந்தாகுங் காண்!'' என்று அறிவுறுத்தியும் நமது பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் திருவாரூர் மாணவர், இளைஞர் மாநாட்டுக்கு 1942-ம் ஆண்டு அறிவுரையும் அனல் கக்கும் வாழ்த்துரையும் அனுப்பி வைத்தாரே; அதற்குப் பிறகு அடிக்கடி இளைஞர்கள், மாணவர்கள் அணி வகுப்புகள், கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் நடை பெற்றிருந்தாலுங்கூட; அனைத்துமே மொழிப்போர் வெற்றியைக் கொண்டாடி முடித்து விட்டன.

முழுப் போர் ஒன்று தமிழ்ச் சமுதாயத்துக்குத் தேவைப்படுவதை எண்ணிப் பார்த்து; சமுதாயத் துறையில், அரசியல் துறையில், பொருளாதாரத் துறையில் என எல்லாத் துறைகளிலும் எழுப்பிடும் போர்க்குரல், வெற்றி முரசாக ஒலித்திட "எழுக இளைஞனே!'' என்று அறவழி அழைப்பு விடுத்திடவே நெல்லையில் மாநில இளைஞர் அணி மாநாடு!.

லட்சியங்களை மாற்றி..

இளைஞனாக என் போன்றோர் இருந்தபோது தான் "நெருப்பின் பொறிகளே நீங்கள்தான் தேவை!'' என்று ஈரோட்டுக் குரலும் - காஞ்சியின் முழக்கமும் கேட்டது; எங்களை நோக்கி! - அன்று கிளம்பிய இளைஞர் பட்டாளத்தின் ஒரு துளிதான் நீங்கள் தலைவன் என்று ஏற்றிப் போற்றுகின்ற இந்தக் கருணாநிதி! இந்த உண்மையை நான் ஒருக்கணமும் மறந்து விட மாட்டேன்-மறந்தோர் சிலர் பொது வாழ்விலேயே மதிப்பற்று "புழுக்கை''களாக ஆகிவிட்ட காட்சியை கண்டு கொண்டுதானே இருக்கிறோம்.

அதனால் இன்றைக்கு ஒன்று - நாளைக்கு ஒன்று என இலட்சியங்களை மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டு, அதற்கேற்ப தனது பேச்சாற்றலைப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள், "இலட்சியம்'' என்ற சொல்லை அறிந்தவர்களே தவிர, இலட்சியம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டோரல்லர்! உணர்ந்தால்தானே அதன்படி நடக்கிறோமா? நடக்கவில்லையா? என்பதை பகுத்தறிந்து அதற்கேற்ப நமது வாழ்வை வகுத்துக் கொள்ள முடியும்.

பொது வாழ்க்கை

நாம் யார்? - நமது இனம் யாது? நமது மொழி எது? மொழிக்காக இழப்புகள் பலவற்றை ஏற்றவர்கள்; உயிரையே விட்டவர்கள், மொழியைக் காத்திடும் போருக்கு இளைஞர்களை, மாணவர்களை, மக்களைத் தயாரித்தவர்கள், அதற்காக கடும் அடக்குமுறைகளை ஏற்றுக் கொண்டவர்கள்- அவர்களைப் பற்றியெல்லாம் நினைத்துப் புகழ்ந்துரைத்தால் மட்டும் போதுமா? நாமும் அவர்களைப் போல தியாகச் சிந்தை - உறுதி உள்ளம் பெற வேண்டாமா?

நான் முதன் முதலாகப் பொது வாழ்வில் எப்படி அடியெடுத்து வைத்தேன் என்பதைத் தெரிந்துகொள்வதே; இளைஞர்களுக்கும் - மூத்தவர்களுக்கும் - தேவையானதும் - இன்றியமையாததுமான ஒன்றாகும் - இதற்குப் பொருள் "நான் காட்டிய வழியில் செல்'' என்பதல்ல; காட்டப்பட்ட கடுமையான தியாகிகளின் வழிகளை நான் பின்பற்றியது போல உன் போன்ற இளைஞர்களும், மாணவர்களும் பின்பற்ற வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.

இளைஞர்களுக்கு வழி விடுவோம்

நெல்லை மாநாடு தொடங்கும் வரையில் நிறைய எழுதப் போகிறேன் - இது முதல் கடிதம்தான் - இளைஞர்களே கூடி மாநாடு நடத்தினால்தான் எனக்கு மகிழ்ச்சி! ஏற்புடையதுமாகும்! மூத்தோர் ஆதரவாளர்களாக விளங்கட்டும். மாநாடு தொடக்கத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரிகைகளில் கண்டேன் - இளைஞர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு மாறாக; அகவை முதிர்ந்த அமைச்சர்களே அந்தப் புகைப்படத்தை அடைத்துக் கொண்டு நிற்கின்ற காட்சி; சிறிது ஏமாற்றத்தை எனக்குத் தராமல் இல்லை!

இளைஞர்கள்; மூத்தோர்களாக ஆகாமல் இருக்க முடியாது - ஆக வேண்டும் - அதே சமயம்; இளைஞர்களுக்கு வழி விடாமல் அந்த மூத்தோர் அடைத்துக் கொள்ளவும் கூடாது. அவரவர்க்குரிய பணிகளை - அவரவர்கள் பகிர்ந்து கொண்டு ஆற்றிட வேண்டும்;

Saturday, November 03, 2007

தமிழ்செல்வன் வீரச்சாவு - தலைவர் கலைஞர் இரங்கல்!


எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

Monday, October 29, 2007

வாஜ்பாயி, அத்வானியை நீக்க வேண்டும் - கோவிந்தாச்சார்யா

பா.ஜ.க.வின் முன்னாள் பொதுச்செயலாளரான "உமா பாரதி புகழ்" கோவிந்தாச்சார்யா ராமர் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திர திட்டம் வருவதற்கு பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தான் அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார். இந்த "பாவத்தை" செய்த காரணத்திற்காக வாஜ்பாயி, அத்வானி போன்ற தலைவர்களை பா.ஜ.க.விலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி உள்ளார்

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ராமர் பாலத்தை இடிக்கும் யோசனையை அப்போதைய அமைச்சர் விஜய் கோயல் தான் முன்வைத்ததாகவும், பின்னர் அப்போதைய பா.ஜ.க.வின் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த சத்ருகன் சின்கா இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறி உள்ளார். ஆட்சியில் இருந்த போது ஒப்புதல் அளித்துவிட்டு இப்போது ராமர் பாலத்தை காப்பதற்கு பாடுபடுவடுவது போல் பா.ஜ.க. இரட்டை நாடகம் ஆடுவதாக அவர் கூறி உள்ளார்

தேசிய ஜல்லிகள் இப்போது என்ன சொல்கிறார்கள்?

Thursday, October 18, 2007

மற்றும் ஒரு யுத்தம்!



Tuesday, October 16, 2007

தமிழக அரசின் திட்டத்தால் உயரப் பறக்கும் தலித் பெண்கள்!

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் அருமையான திட்டத்தால் 100 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்கள் விமான பணிப் பெண் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். விரைவில் இவர்களும், நகரத்துப் பெண்களைப் போல விமானப் பணிப்பெண்களாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

ஆதிதிராவிட, பழங்குடி இன மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விமானப் பணிப் பெண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக முதல்வர் கருணாநிதி ரூ. 1 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கினார். அந்தத் திட்டத்தின் கீழ் தற்போது தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 100 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 100 பெண்களுக்கு விமானப் பணிப் பெண் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள ஏ.எச்.ஏ. என்ற நிறுவனம் இந்தப் பயிற்சியை வழங்கி வருகிறது. 6 மாத கால பயிற்சி தற்போது முடிந்துள்ளது. மேலும் 6 மாத கால பயிற்சி நிறைவடைவதற்குள் இந்த மாணவிகளுக்கு விமானத்தில் வேலை கிடைத்து விடும்

தமிழகத்தின் பல் வேறு மாநிலங்களில் இருந்து குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த இந்த மாணவிகள் தமிழைத் தவிர வேறு பாஷை தெரியாமல் இருந்தவர்கள். ஆனால் இன்றோ ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஜெர்மன், இந்தி மொழியிலும் அழகாகப் பேசி அசரடிக்கிறார்கள்.

இவர்களுக்கான உணவு, தங்குமிடம், உடை, பயிற்சி கட்டணம் ஆகிய அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. ஒரு மாணவிக்கு ரூ. 1 லட்சம் செலவிடப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவிகளிடம் பயிற்சி எப்படி இருக்கிறது என்பதைக் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் தமிழரசி கூறுகையில், ஆதிதிராவிட, பழங்குடியின பெண்களுக்கு விமானப் பணிப் பெண் பயிற்சி தமிழகத்தில் தான் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் கலைஞர் கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

தமிழகத்தைப் பார்த்து தற்போது மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. கடந்த ஆண்டு ஒரு கோடி சிறப்பு நிதி ஒதுக்கிய முதல்வர் இந்த ஆண்டு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் கொண்டு வந்த இந்த திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு (2007-08) முதல் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும் 100 மாணவர்களுக்கு இலவசமாக விமான பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் விமானத்தின் கேபினுக்குள் பணியாற்ற வேண்டும்.

இந்த பயிற்சி பெறும் மாணவிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டுக்கான பயிற்சி அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் சேர்க்கை நடைபெறும். மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்த பட்ச கல்வித் தகுதி பிளஸ்-2 ஆகும். இங்கு படிக்கிற மாணவிகள் பெரும் பாலானவர்கள் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். ஆங்கிலம் பேசும் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.

மாணவிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தியும் கற்று கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

விமானப் பெண் பயிற்சி குறித்து திருவாரூர் மாவட்டம் அத்திமேடு கிராமத்தைச் சேர்ந்த இனிஜா தேவி என்ற மாணவி கூறுகையில், எனது தந்தை ராஜராஜன் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். டிப்ளமோ நர்சிங் படித்து இருக்கிறேன்.

ஆதிதிராவிட இன பெண்களுக்கு இது போன்ற பயிற்சி கிடைத்திருப்பது பெரிய விஷயமாகும். வானத்தில் பறக்கும் விமானத்தை சிறு வயதில் பார்க்க ஓடுவேன் ஆனால் இன்று விமானத்தில் பணி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதைவிட பெரிய மகிழ்ச்சி எனக்கு ஒன்றுமில்லை.

ஆங்கிலம் பேசவே தெரியாத எனக்கு இப்போது பல மொழிகளில் பேசத் தெரியும். சிறப்பான பயிற்சி அளிப்பதன் மூலம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறோம்.

தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற மாணவி களுக்கு உயந்த பணியை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என்றார்.

மதுரை மாவட்டம் கலிமங்கலத்தைச் சேர்ந்த செல்வமணி என்ற மாணவி கூறுகையில், நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பி.ஏ படித்துள்ளேன். சிறுவயதில், விமானத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நனவாகியுள்ளது.

ஆங்கிலம் பேச தடுமாறிய நான் எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் இங்கு வந்த சில நாட்களில் பேச தொடங்கி விட்டேன் என்னைப் போன்ற பெண்கள் விமான பணி பயிற்சி பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கிராமத்து பெண்களுக்கு உயர்ந்த பணி கிடைக்க உதவிய இந்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவும் இந்தத் திட்டத்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கிராமத்து பெண்களுக்கு இது போன்ற பயிற்சி கிடைத்தது பெரிய அதிர்ஷ் டம். விமானத்தில் வேலை பார்க்க போகிறேன் என்று என் பெற்றோர் சேதாஷத்துடனும், பெருமையுடனும் உள்ளனர். இங்கு வந்த பிறகு தான் ஆங்கிலம், கற்றுக் கொண்டேன் என்றார்.

பயிற்சி வகுப்பு குறித்து ஏ.எச்.ஏ.மேலாளர் கண்ணன் கூறுகையில்
கிராமப்புற மாணவிகள் இந்த பயிற்சி படிப்பதால் வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இது உதவியாக இருக்கும். விமானத்தில் மட்டுமின்றி நட்சத்திர ஹோட்டல்களிலும் வேலை கிடைக்கும் என்றார்.

ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பு மாணவிகளுக்கு ஏற்றம் தரும் திட்டத்தை அமல்படுத்தியுள்ள தமிழக அரசை எத்தனை பாராட்டினாலும் தகும்


நன்றி: தட்ஸ்தமிழ்


Sunday, September 30, 2007

கடைசி தமிழன் இருக்கும் வரை !!

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று இரவு ரூ.144 கோடியில் மாநகராட்சி குடிநீர் விரிவாக்க திட்டம் உள்பட ரூ.215 கோடியே 81 லட்சத்து 71 ஆயிரத்தில் 314 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழாவும், ரூ.38 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 102 திட்டப்பணிகளின் திறப்புவிழாவும், 18 ஆயிரத்து 124 பயனாளிகளுக்கு 15 கோடியே 80 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.


விழாவில் முதல் -அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும், முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


உள்ளாட்சி துறை அமைச்சர் தம்பி ஸ்டாலின் இந்த விழாவில் நீண்டநேரம் விரிவாக- விளக்கமாக திருச்சி மாவட்டத்திலும், திருச்சி மாநகரிலும் தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுள்ள, நடைபெற இருக்கிற பணிகளை பற்றி எல்லாம் பேசினார். எனவே நான் அதனையே விவரித்து பேச விரும்பவில்லை. நான் பேச நினைத்ததை எல்லாம் ஸ்டாலின் பேசிவிட்டதால் நான் அதனை மீண்டும் தொட்டு பேச விரும்பவில்லை.


தமிழக மக்கள் பெற்று இருக்கிற தெளிவு எங்கள் மீது இருக்கிற நம்பிக்கை காரணமாக நேற்றும் இன்றும் நடைபெறும் விழாக்களில் ஏராளமான பேர் கூடி இருப்பதை பார்க்கிறேன். ஆனால் ஒரு பத்திரிகையில் நான் அந்த பத்திரிகையின் பெயரை சொல்ல விரும்பவில்லை. கருணாநிதிக்கு கூட்டமே இல்லை என்று செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு அந்த பத்திரிகையின் தலைமை நிருபர் வந்து இருந்தால் இந்த கூட்டத்தை பார்த்து எழுதி காட்டவேண்டும். எங்கள் கூட்டம் சிறியதாக இருந்தாலும் நான் எந்த கால கட்டத்திலும் பெரிதாக போடுங்கள் என்று சொன்னது கிடையாது. உள்ளதை உள்ளபடி போடுங்கள் என்று தான் கூறி இருக்கிறேன். நான் பத்திரிகையாளனாக இருந்தாலும் செய்தியை திரித்து போடுங்கள் என்றோ, பெரிதாக போடுங்கள் என்றோ, மிரட்டியது கிடையாது. ஏனென்றால் நான் அண்ணாவின் பாசறையில் அரசியல் பயின்றவன். பெரியாரின் பாசறையில் சமுதாய பாடம் பயின்றவன்.


நேற்றும் ஒரு கூட்டம் இன்றும் ஒரு கூட்டம் நடப்பதால் மக்கள் கூட்டம் வருமா? என்று நேருவிடம் கேட்டேன். அதற்கு அவர் அதுபற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். எனவே ஒரே நாளில் இரண்டு கூட்டங்கள் அல்ல. 3 கூட்டங்கள் போட்டாலும் மக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இந்த கூட்டத்தை பார்த்த பின்னர் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த விழா நடைபெறும் இடம் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானம். தமிழ்நாட்டில் 103 உழவர் சந்தைகளை நாம் ஆரம்பித்தோம். கடந்த ஆட்சியில் அவற்றில் பலவற்றை செயல்பட விடாமல் செய்தாலும் திருச்சி உழவர் சந்தை அவர்களிடம் இருந்து தப்பியதால் இன்று இந்த இடத்தில் மாநாடு போன்று ஆயிரக்கணக்கில் குழுமி இருக்கிறீர்கள்.


திருச்சி மாநகராட்சியின் குடிநீர் விரிவாக்க திட்டத்திற்காக ரூ. 144 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என ஸ்டாலின் எடுத்துக்கூறினார். 144 என்பது மிரட்டும் எண். எனவே அதிகாரிகளாக இருந்தாலும், அங்கத்தினர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், இந்த திட்டத்தில் தவறு நடக்காமல், ஒழுங்காக , செம்மையாக செயல்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


திருச்சி மாவட்ட கலெக்டர் இளைஞர், மக்கள் நல பணிகள் செய்வதில் கவனமாக செயல்பட்டு வருகிறார். அவர் இங்கு வழங்கிய புத்தகத்தை புரட்டி பார்த்தேன். திருவெறும்பூர் மஞ்சத்திடலில் குளம் அமைத்து இருப்பதை படமாக வெளியிட்டு இருக்கிறார்கள். பள பள என்று இருக்கும் அந்த குளத்தை பார்த்தால் அது திருச்சி மாவட்டத்தை உள்ளது போல் அல்லாமல் சிகாகோ நகர கிராமமா? என்று வியக்கும் அளவிற்கு அழகாக சீரமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக காஞ்சீபுரம் மாவட்டத்திலும் இதுபோன்ற திட்டப்பணிகளை பார்த்தேன். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுடுகாட்டில் கூட உட்கார்ந்து பேச, ஓய்வெடுக்க, சாப்பிடுவதற்கு எல்லாம் வசதி செய்து கொடுத்து இருந்தார்கள். கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று மகாத்மா காந்தி சொன்னார். எனவே கிராமங்களில் எல்லா வசதிகளும் கிடைக்கவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பணிகள் நடந்து வருகிறது. உள்ளபடியே நாம் சுதந்திர நாட்டில் தான் வசிக்கிறோம் என்று கிராம மக்களும் நினைக்கிற அளவிற்கு இந்த அரசு பணியாற்றி வருகிறது.


ஆனால் அந்த பணிகள் நடைபெற விடாமல் சில இடைநறுகள் நடக்கின்றன. அதற்காக நாம் அந்த பணிகளை விட்டுவிடப்போவது இல்லை. வீட்டில் தாய்மார்கள் கோலம் போடுவார்கள். அந்த மாக்கோலம் போடும்போது வீட்டில் உள்ள குழந்தைகள் கோலத்தில் உட்கார்ந்து அதனை அழிக்க பார்க்கும். அதற்காக அந்த தாய் குழந்தையை அடிக்கமாட்டார். குழந்தையை தூக்கி அருகில் வைத்து விட்டு கோலத்தை போட்டு முடிப்பார். தாய் எப்படி குழந்தையையும் அடிக்காமல் கோலத்தையும் நிறுத்திவிடாமல் அதனை போட்டு முடிக்கிறாரோ அதைப்போல் தான் நாமும் சிலர் செய்யும் இடைநறுகளை அவர்கள் கூட்டணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் குழந்தைகள் செய்யும் தவறுகளாக நினைத்து அவற்றை புறந்தள்ளிவிட்டு திட்டப்பணிகளை நிறைவேற்றி கோலத்தை முடிப்போமே அல்லாமல் நாட்டை அலங்கோலமாக்க மாட்டோம்.


இந்த ஆட்சி உடனே விலக்கப்படவேண்டும், கலைக்கப்படவேண்டும் என சிலர் குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியினர் அத்வானி போன்ற நண்பர்கள் மனு கொடுக்க சென்றிருக்கிறார்கள். ஆனால் அதில் கூட வாஜ்பாய் செல்லவில்லை. கழக ஆட்சியை எதற்காக கலைக்கவேண்டும்? தமிழகத்தில் தான் 2 ரூபாய்க்கு அரிசி வழங்கப்படுகிறது அதற்காக கலை என்கிறார்கள். கிராமங்கள்தோறும் குளங்கள் வெட்டப்படுகிறது அதற்காக கலை என்கிறார்கள். இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது அதற்காக கலை என்கிறார்கள். இதையெல்லாம் விட மிக முக்கியமாக ஆதிதிராவிடர்களை கூட கருணாநிதி அர்ச்சகர் ஆக்கிவிட்டார் அதற்காக கலை என்கிறார்கள். இதையெல்லாம் விட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இந்து மதத்தில் அல்ல. முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்து விட்டாரே அதற்காக கலை என்கிறார்கள்.


சேது சமுத்திர திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. அந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அண்ணா குரல் கொடுத்தார். அந்த திட்டம் நிறைவேறினால் தமிழ்நாடு வளரும். உலக அளவில் தமிழகம் வல்லரசாக மாறும். தமிழன் தலை நிமிர்ந்து நடமாட முடியும். ஏழை எளியவர்கள் கூட வளம்பெற்று செல்வ செழிப்பான நாடுகளுடன் போட்டி போடும் ஒரு திட்டம் வரப்பிரசாதமான இந்த திட்டம் நிறைவேறிவிட்டால் தமிழன் தலை நிமிர்ந்து விடுவானே என்ற பொறாமையால் ராமர் பெயரை சொல்லி அதனை அழிக்க பார்க்கிறார்கள். ராமரும், அனுமாரும் கோவில்களில் இருக்கட்டும். ராமர் மீது நமக்கு எந்த கோபமும் இல்லை. பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் அண்ணாவோ பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்கவேண்டாம், பிள்ளையார் சிலையையும் உடைக்க வேண்டாம் என்றார். அண்ணா கூறிய வழியில் தான் நாங்கள் அரசியல் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தான் பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி நடந்து முடிந்திருக்கிறது.


ஆனால், நாங்கள் ராமர் மீது கோபமாக இருப்பதாக கூறிக்கொண்டு சேது சமுத்திர திட்டத்தை கருவிலேயே அழிக்க ஒரு கூட்டம், குள்ளநரி - குடிலர் கூட்டம் துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறி விட்டால் அதனால் கிடைக்கும் நற்பெயர் சோனியா காந்திக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, கருணாநிதிக்கு வந்து விடுமே என்ற நல்ல எண்ணம் காரணமாக காந்தாரி போல் அணை போட முயற்சிக்கிறார்கள். ஆனால் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கடைசி தமிழன் உள்ளவரை வாதாடுவான், போராடுவான் என்ற சூளுரையை இந்த கூட்டத்தின்வாயிலாக வெளியிட்டு அந்த திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

Saturday, September 29, 2007

ராமன் மது, மாமிசம் சாப்பிட்டான் - கலைஞர் காட்டும் ஆதாரம்!

ராம அவதாரம் போலவே வாமன அவதாரமும் நம் மக்களைக் கொல்வதற்காகவே சித்தரிக்கப்பட்டது என்பதையும் ராம அவதாரப் புரட்டு களையும் விளக்கிக் கலைஞர் விடுத்துள்ள மடலின் முக்கிய பகுதிகள்:

கேரளத்தில் மாவலியின் நல்லாட்சிக்குக் கேடு நினைத்தோர், திட்டமிட்டு செயல்பட்டது போலவே - மாவலி மன்னனை வீழ்த்தியது போல; இங்கும் இந்த ஆட்சியைத்தான் ஒழித்துவிடவும், அழித்து விடவும் விஷ்ணுவைத் தேடுவதற்கு மாறாக, விஷ்ணுவைப் போன்று வேறொரு தேவனைத் தேடி அலைகிறார்கள். நேரடியாக அவர்களுக்கு விழி முன்னே விஷ்ணு தென்படாத காரணத்தால் விஷ்ணுவின் அவதாரம் தானே ராமன், அந்த ராமனைப் பயன்படுத்தி இந்த ஆட்சியை விழுங்கி விடுவோம் என்று வில்லை வளைக்கிறார்கள்.

எந்த வித உபாயத்தினால் அந்த மந்த மதியினர்; நம் மீது மோதுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்திடுவதும் - நிதானமாக சிந்திப்பதும் - நமக்கும் நமது பாசறையினருக்கும் மிகத் தேவை எனி னும்; நம்மைப்பற்றி நச்சுக் கருத்துகளைப் பரப்பி நாம் ஏதோ மக்கள் மத்தியிலே நடமாடவே கூடாதவர்கள் என்ற தோர ணையிலே நாக்கறுப்போம் - தலை யறுப்போம் என்கிற வன்முறை மிரட்டல் களை வாரியிறைத்துக் கொண்டு இருக்கி றார்களே; அவர்களின் வஞ்சக சூழ்ச்சியை அறியாமல் அவர்களது பேச்சில், எழுத்தில் மயங்கித் தடுமாறி குழப்பமடைபவர் களைத் திருத்தித் தெளிவடையச் செய்ய வேண்டியது நமது நீங்காக் கடமை யாவதால் இன்றைய இந்த நீட்டோலை தேவைப்பட்டது. அதனால் உனக்கும் உன் வாயிலாக உடன்பிறப்புகளுக்கும், அவர் கள் வாயிலாக, ஆத்திகர், நாத்திகர், பக்த சிரோமணிகள், பகுத்தறிவு வாதிகள் - அனைவருக்கும் ஓர் ஆரோக்கியமான விவாதத்திற்கான அழைப்பை இக்கடித வாயிலாகத் தருகிறேன்.

இராமனைக் கருணாநிதி இழித்துரைத் தார் - இராமன் மது அருந்தியதாகக் கூறுகிறார் - அதனால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் - பதவி துறக்க வேண்டும் - என்று பதறித் துடிக்கிறார்கள். அய்யோ பாவம்; நான் அவர்களுக்கு விளக்கமாகக் கூறிவிட்டேன். வால்மீகி எழுதிய ராமா யணம் என்ன சொல்கிறது? முதறிஞர் ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன் என்ற ராமாயண ஆய்வு நூல் என்ன சொல்கிறது?

அதில் எல்லா பகுதிகளையும் நான் சாட்சியத்துக்காக பயன்படுத்த விரும்ப வில்லை. இதோ . . .

சீதையைத் தேடி வந்த அனுமான், அவளை அசோக வனத்தில் கண்டு, அவ ளைப் பிரிந்த இராமன்படும் துன்பத்தை இதோ: சிறீமத் வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் ஸர்க்கம் 37 வர்ணிக்கிற விதத்தை மாத்திரம் கண்டால் போதும்:-

தேவியாரைப் பிரிந்த நிலையில் இராம ருக்குத் தூக்கமே கிடையாது. எப்போதாவது தேகம் அலுத்துத் தூங்கினாலும் சீதே என்ற மதுரமான வார்த்தையைச் சொல்லிக் கொண்டே விழித்துக் கொள்கிறார். தங்கள் நினைவால் மது, மாமிசம் அருந்துவதை விட்டு விட்டார். வானப் பிரஸ்தருக்கு உகந்த பழம், கிழங்கு களையே சாயங் காலத்தில் புசிக்கிறார்.

உடன்பிறப்பே, தலையும் நாக்கும் வேண்டும் என்று துடியாய்த் துடிப்பவர்கள்; அதைப் பிடித்துக் கொண்டு குதியாய்க் குதிப்பவர்கள் - அம்மையின் விரிவால் அய்யன் துயருற்று அதுவரை அருந்தி வந்த மதுவையும், மாமிசத்தையும் விட்டு விட்டார் என்பதற்குப் பொருள் என்ன கூறுவரோ? யானறியேன்!

உடன்பிறப்பே, ராஜாஜி எழுதிய சக்கர வர்த்தித் திருமகன் நூலில் அவர் எழுதி யுள்ளதை அப்படியே தருகிறேன். ராமனே! தசரத சக்கர வர்த்தியின் புத்திரனாவாய், உத்தம குலத்தில் பிறந்த நீ, பேரும் புகழும் அடைந்த நீ ஏன் இப்படிச் செய்தாய்? உன் நற்குணங்களும் ஒழுக்க மும் உலகம் அறிந்த விஷயம். இப்படியி ருக்க நான் வேறொருவனிடம் யுத்தம் செய்து கொண்டு அதில் மனம் முற்றிலும் செலுத்தி வந்த சமயத்தில் என் கண் களுக்குத் தென்படாமல் மறைந்து நின்று என் மேல் பாணம் விட்டு என்னைக் கொன்றாய். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லும் புகழ் மொழிகளுக்கு இது முற்றிலும் விரோதமா யிருக்கிறதே? தருமம், சத்திய பராக்கிரமம் முதலிய உத்தம குணங்களை எல்லாம் பெற்றவன் என்று கீர்த்தி பெற்றாயே! இப்போது அவையெல்லாம் என்னவாயின? என்னைக் கொன்று நீ என்ன லாபம் பெறுவாய்? யோசிக்காமல் இந்த அதரும காரியம் செய்தாய். என் மனைவி உன்னைப் பற்றி என்னை எச்சரித்தாள்; அவள் பேச்சைத் தட்டி விட்டு வந்தேன். நீ வேஷதாரியென் றும், துன்மார்க்கன் என்றும், புல்லால் மூடப் பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி என்றும் தெரியாமல், மனைவியின் பேச்சைக் கேளாமல், நான் என் தம்பியை எதிர்த்து யுத்தத்துக்கு வந்தேன். உனக்கு நான் என்ன தீமை செய்தேன்? உன்னுடன் யுத்தம் செய்யவா நான் வந்தேன்? அதரு மத்தில் இறங்கி, என்னை மறைந்து நின்று கொன்றாய். நல்ல அரச குலத்தில் பிறந்து பெரும் பாவத்தைச் செய்தாய். நிரபராதி யைக் கொன்றாய். நீ அரச பதவிக்குத் தகுந்தவனல்ல. மோசக்காரனான உன் னைப் பூதேவி மணக்க விரும்பமாட் டாள். நீ எப்படி தசரதனுக்கு மகனாகப் பிறந்தாய்? தருமத்தை விட்டு நீங்கின நீசனால் கொல்லப் பட்டேன். என் கண் ணுக்கு முன் நின்று நீ யுத்தம் செய்திருந் தாயேல் இன்றே நீ செத்திருப்பாய். என்னை நீ வேண்டிக் கொண்டிருந்தால் ஒரே நாளில் சீதையை உன்னிடம் அழைத்து வந்து விட்டிருப்பேனே? பிறந்த வர்கள் இறப்பது விதி. ஆயினும் நீ முறை தவறி என்னைக் கொன்றாய். உன் குற்றம் பெருங்குற்றம். இவ்வாறு தேவேந்திர குமாரனான வாலி மரண அவஸ்தையில் ராமனைக் கண்டித் தான். வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ சொன்னதாகவும் அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டுவிட் டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள். ராமாவதாரத்தில் ஆண்டவனும் தேவியும் சகிக்க வேண்டிய துக்கங்களில் இந்தத் தவறும் பழியும் ஒன்று.

இராமன் தவறு செய்ததாகவே ராஜாஜியும் கருதியதால்; ராமனின் சமாதானம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அதில் சாரம் இல்லை என்று ராஜாஜி விட்டுவிட்டதாக ராஜாஜியே எழுதியுள்ளார்.

உடன்பிறப்பே,

ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் சொல்லவில்லை. யாரைப் பற்றியும் சொல்லவில்லை! உள்ளங்கை நெல்லிக் கனி போன்ற உண்மை என்னவென்றால்; பா.ஜ.க. ஆட்சியில பிரதமர் வாஜ்பாய் அவர்களால் அனுமதிக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம்; அந்த ஆட்சி தொடராத காரணத்தால் இடையில் நின்று போய்; இப்போது இன்றுள்ள மத்திய ஆட்சியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோரின் பெரு முயற்சியினால் தொடரப்பட்டு அப்பணி யில் தம்பி டி.ஆர்.பாலுவின் அயரா முயற்சியால் அத்திட்டம் வளர்ந்து வரும் நிலையில்; திடீரென இராமனையும், இராமர் பாலத்தையும் இடையிலே புகுத்தி திசை திருப்பியவர்கள் யார் என்பதையும் நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள இக் கடிதத்தில் காணப்படும் கருத்துக்களும், எடுத்துக் காட்டுகளும் மெத்தவும் பயன்படும் என்று நம்புகிறேன் - எனவே உடன் பிறப்பே! இதனை நீயும் படி! பிறரும் படித்து உண்மை உணர்ந்திட உதவிடு!

(இதில் நான் குறிப்பிட்டுள்ள சிறீமத் வால்மீகி ராமாயணம் - சுந்தர காண்டம் - சிறீ உ.வே.சி.ஆர். சீனிவாச அய்யங்கார், பி.ஏ., அவர்களால் மொழி பெயர்க்கப் பட்ட நூல் ஆகும்- 1962 ல் தியாகராயநகர் - தி லிட்டில் பிளவர் கம்பெனி பதிப் பித்தது) மது என்றால் கள்ளோ, சாராயமோ அல்ல, தேன் என்று பொருள்படும் என்கிறார் நண்பர் சோ. அப்படியானால் மது விலக்கு சட்டம் என்பதற்கு தேன் விலக்குச் சட்டம் என்று பொருளா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்!

சீதையைப் பிரிந்த வேதனையில் இராமன் தேன் அருந்துவதை நிறுத்தி விட்டான் என்று வால்மீகி எழுதியிருப் பதாக இவர்கள் சொல்கிறார்களா?

அன்புள்ள.
மு.க.

முரசொலி,
28.9.2007

Friday, September 28, 2007

ஒசாமாவை மிஞ்சிய பயங்கரவாதி



இதிகாசம் என்பது ஆதிக்க சக்திகளின் மீடியா வடிவமா?

இன்று நம்மில் பலர் இணையத்திற்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். நாள் முழுவதையும் இணையத்தை உலவியே கழிக்கும் பலர் இருக்கிறார்கள். இதை போலவே நம்மூர் இல்லத்தரசிகள் தொலைக்காட்சியில் மெகா தொடர்கள் கண்டு கழித்தே தங்கள் நாட்களை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இணையும் மற்றும் தொலைக்காட்சி ஆகியவை நம் வீடுகளுக்குள் ஊடுருவும் முன்னர், பலர் நாவல்களில் தங்களை மறந்து இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற மாதிரி நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் மீடியா மிக முக்கியமான இடத்தை பிடித்துவிடுகிறது. ஆனால் என்ன தான் காலம் மாறி நாலும் மனிதனை எப்போதுமே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மதம் தான். மதம் என்னும் மாயையையில் இருந்து மனிதன் என்றுமே விடுபட்டதில்லை. மனிதனை மதத்தின் பிடியில் இருந்து விடுபட்டுவிடாமல் இருக்க வைப்பதில் இதிகாசம் முதலியவை முக்கியமான பங்கு ஆற்றி வருகின்றன

BBC போன்ற முதலான ஆங்கில தொலைக்காட்சியை பார்த்து இருப்பீர்களானால் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய அமைப்புகளை பற்றியே பெரும்பாலான நேரங்களில் காட்டி வருகிறார்கள். ஜிஹாத் பற்றிய நிகழ்ச்சிகள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கிட்டத்தட்ட இஸ்லாமிய சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதைப் போல் மேலை நாட்டு மீடியாக்களில் காட்டி வருகிறார்கள். இதே மேல் நாட்டு மீடியாக்கள் தான் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் தங்கள் பனிப்போருக்காக இஸ்லாமிய அமைப்புகளை ஊட்டி வளர்த்தார்கள். ஜேம்ஸ் பாண்டு படங்களில் கூட எப்போதுமே ரஷ்யா இடம் பெற்று விடும். இப்படி எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனது எதிரியை பற்றி தன்னிடம் உள்ள மீடியா பலத்தால் எதிர் கொள்வது ஒரு யுக்தியாகவே கையாளப்பட்டு வருகிறது. அதுவும் பெரும்பாலான சமயங்களில் மீடியா ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. சோ போன்ற சொத்தைகளும் தலைவர் கலைஞர் பற்றியே கார்ட்டூன் வரைந்து வருவதையும் கவனித்து இருப்பீர்கள். இதே கயவர்கள் அத்வானி, வேதாந்தி போன்ற மடையர்களை பற்றி எந்த கார்ட்டூனும் போட மாட்டார்கள்

இதே யுக்தி தான் திராவிடர்-ஆரியர்களுக்கு இடையே நடந்த போரிலும் கையாளப்பட்டுள்ளது. திராவிட இனத்தை அடிமைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அந்த இனம் காலாகாலத்துக்கும் தலை தூக்கவே முடியாதபடி செய்ய வேண்டும் என்பதற்கு கையாளப்பட்ட யுக்தி தான் இதிகாசம். திராவிட மன்னனான இராவணனை மிகவும் கேவலமானவனாக காட்டி அதன் மூலம் திராவிட இனம் அடிமைப்பட்ட இனம் என்று காட்டவே இதிகாசம் பயன்பட்டுள்ளது. இராவணனும் வலிமை மிக்கவன், தான் கடத்தி வந்த சீதையை அவன் நெருங்கியது கிடையாது என்பது போன்ற விளக்கங்களால் திராவிடர்கள் எந்த அளவிற்கு வலிமை மிக்கவர்களால் இருந்திருப்பார்கள் என்பது புரியும். இத்தகைய வலிமை பொருந்திய ஒரு இனத்தை வீழ்த்த வேண்டுமானால் அது மதம் என்னும் போர்வையால் மூடாமல் முடியாது என்று தெரிந்தே இதிகாசம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மிக நுட்பமான ஒரு யுக்தியில் இருந்து மனிதன் என்று மீண்டு வருகிறானோ அன்று தான் மனித இனம் வேற்றுமை களைந்து முன்னேற முடியும்

Monday, September 24, 2007

கலைஞர் தலை - கவிஞர்கள் உரை - நன்றி : இட்லிவடை

கவிஞர் வைரமுத்து

முதல்வர் கலைஞர் குறித்து ராம்விலாஸ் வேதாந்தியின் வன்முறைப் பேச்சு எங்களை வருத்தத்திலும் கோபத்திலும் தள்ளி இருக்கிறது.

70 ஆண்டுகளாக ஏந்திவந்த பகுத்தறிவு வாதத்தைத் தான் கலைஞர் மீண்டும் முன்வைத்து இருக்கிறார். அப்படி வாதிட வேண்டிய சந்தர்ப்ப வாசலைக் கூட மதவாதம் தான் முதலில் திறந்து விட்டது.

உலக வரைபடத்தையே சற்று மாற்றி எழுதவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மதவாதம் ஊறுவிளைவித்துவிடுமோ என்ற உள்ளார்ந்த தவிப்புதான் முதல்வர் கலைஞரைப் பேச வைத்தது.

கலைஞர் பேசியதும் ஒரு தத்துவ வாதம் தான். இந்து மதத்தின் பெருமையே கடவுள் மறுப்பையும் தனக்குள் ஒரு தத்துவமாய் அங்கீகரித்து வைத்து இருக்கும் பக்குவம் தான்; சாருவாகம் என்ற பிரிவே கடவுள் மறுப்புதான். கடவுள் மறுப்பும் இந்து மதம்தான்.

தத்துவத்தோடு நின்றிருந்தால் தகராறு இல்லை; அது தலைவரின் தலைவரைக்கும் போய்விட்டதால் தான் எங்களைப் போன்றவர்கள் தலையிட வேண்டி இருக்கிறது.

இது எல்லை மீறல். ராம்விலாஸ் வேதாந்தி ஒரு நரபலி சாமியாராய் இருப்பார் என்று நாங்கள் முற்றும் நம்பவில்லை.

ஒரு 80 கிலோ தங்கத்தின் மதிப்புதான் கலைஞரின் தலையும் நாக்கும் என்றால் அதைவிடக் கேவலம் இல்லை. வாராது போல் வந்த எங்கள் மாமணியைத் தோற்றால் நாங்கள் தமிழர்கள் இல்லை. எந்தவிலை கொடுத்தும் கலைஞரையும், சேது சமுத்திரத்தையும் காப்பாற்றுவதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டும்.

ராமர் பாலம் என்பது ஒரு நம்பிக்கைதானே தவிர அறிவியல் பூர்வமாக அதற்கு ஆதாரம் இல்லையென்று உலக ஆவணங்கள் சொல்கின்றன. வானவில்லைப் பலரும் ராமர்வில் என்று அழைக்கிறார்கள்; வானவில்லுக்கும் ராமருக்கும் எவ்வளவு உறவோ அவ்வளவு உறவுதான் பாலத்துக்கும் ராமருக்குமான உறவு.

வன்முறையால் மதவாதம் வென்றுவிடமுடியாது; சேது சமுத்திரம் நின்றுவிடவும் முடியாது.

கலைஞர் என்பவர் தனிமனிதர் அல்லர்; தமிழினத்தின் மாபெரும் அடையாளம். அந்த அடையாளத்தை அழிக்க நினைக்கும் செயல்கண்டும், தமிழ் உணர்வாளர்கள் போலிப் பொறுமையோடு பூப்பறித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

* * * * * *

கவிஞர் மு.மேத்தா


தமிழினத்தின் தலையாய்-தலைமையாய்த் திகழும் கலைஞரின், தலைக்கே விலைவைத்த தருக்கரின் ஆணவத்தை நொறுக்க வேண்டும்.

தமிழ்த்தாயின் வாக்காய்த் திகழும் தலைவரின், நாக்கையே துணிக்கச் சொன்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனத்தை அடக்கி ஒடுக்கி முடக்க வேண்டும்.

இந்து மதத்துக்கே களங்கம் உண்டாக்கிய கயவனை ராம்விலாஸ் வேதாந்தியை-சமாதான சகவாழ்வை விரும்பும் இந்து மக்கள் அனைவரும் சேர்ந்தே எதிர்க்க வேண்டும். வேதாந்தியின் பேச்சு பாரத தேசத்தையே பதைபதைக்க வைத்துவிட்டது.

பண்பாடு என்றால் அர்த்தம் தெரியாத அந்த மத வெறியனை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்தது போல், இந்துமத தீவிரவாத இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ்.போன்ற தேச விரோத சக்திகளை-விலாசமே இல்லாமல் வேரறுக்க வேண்டும். அந்த அராஜக அமைப்புகளின் முகமூடியாக விளங்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

காற்றுக்கூட-எங்கள் காவலை மீறி கலைஞரின் தோளில் கிடக்கும் துண்டின் நுனியைக் கூடத் தொடமுடியாது. ஆனாலும், உத்தரபிரதேச அரசும், மத்திய அரசும் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் வரலாறு ஒரு நாளும் மன்னிக்காது. களம்புகத் தயாராவோம் காளையரே! மதவெறிக் களைநீக்கத் துணியாதோர் கோழையரே!

பிரதமரும், சோனியாகாந்தியும், உத்தரபிரதேச முதல்வரும் தாமதம் இன்றி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலைஞரின் தலைக்கு விலையா?

உலகமகா கட்டுக்கதையாம் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டியதற்காக மூத்த திராவிட தலைவர் கலைஞர் தலைக்கும், நாக்குக்கும் சனாதனவாதிகள் எடைக்கு எடை தங்கம் அறிவித்திருக்கிறார்கள். கலைஞரின் தலையும், நாக்குக்கும் விலை மதிப்பிடும் முட்டாள் தனத்தை ஒரு வடநாட்டு பண்டாரம் செய்திருக்கிறது. தன் தலையும், நாக்கும் வெட்டப்படும்.. அதனால் தமிழனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்றால் குமணனை போல தன் தலையையும் இழக்க துணிவார் தலைவர் கலைஞர். தண்டவாளத்துக்கு தலையை கொடுத்த வரலாறு அவருக்குண்டு.

கலைஞருக்கு பகுத்தறிவு ஊட்டிய தந்தை பெரியாரும், அரசியல் ஆசான் அறிஞர் அண்ணாவும் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதுகுறித்து மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். எப்போதெல்லாம் சனாதனவாதிகள் இதுபோல வெறியாட்டம் ஆடுகிறார்களோ, அப்போதெல்லாம் திராவிட இயக்கத்தினர் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவே பொருள்.

கருத்து சுதந்திரத்துக்கு பாடுபடுவதாக வேடம் போட்டு, பல விவகாரமான பிரச்சினைகளிலும் கருத்து சுதந்திரத்துக்கு குரல் கொடுத்ததாக கூறிக்கொண்டவர்களின் சாயம் இப்போது கலையத் தொடங்கியிருக்கிறது. ராமனை குடிகாரன் என்று கலைஞர் சொன்னது தேவையற்றதாம். பார்ப்பன நவீன வாத்தியார் ஞானி விகடன் ஏட்டில் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஏன்? குஷ்புவுக்கு இருந்த கருத்து சுதந்திரம் ஒரு மாநில முதல்வருக்கு இல்லையா? 'சோமபானம் அருந்தியவனை' குடிகாரன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது? 'சோமபானம் அருந்தினான்' என்று இராமாயணத்தில் சொன்னதை திருப்பிச் சொன்னால் குடுமிகள் ஆடுவதேன்?

நல்லவேளையாக வழக்கம்போல திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு பூணூல் அறுக்கப் போகாமல் அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு வருகிறார்கள். பகுத்தறிவுப் பூமியாம் தமிழகத்தில் தெரிந்தோ, தெரியாமலேயோ வேர்பிடித்து வரும் மதவாத, சனாதன வெறியர்களின் ஆணிவேரை வெந்நீர் ஊற்றி அழிக்க சரியான தருணம் இதுவே.

இப்பிரச்சினை தொடர்பான மருத்துவர் அய்யாவின் அறிக்கைகளும், தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியரின் கருத்துக்களும், தோழர் தொல்.திருமா அவர்களின் போராட்டமும் பிரச்சினையை திராவிட உணர்வு கொண்டவர்கள் தந்தை பெரியார் காட்டிய பகுத்தறிவு வழியில், சரியான முறையில் அணுகுவதையே காட்டுகிறது.

இரு நாட்களாக இணையத்தை மேய்ந்து பார்த்தபோது இவ்விவகாரத்தில் தலைவர் கலைஞர் மீது ஈழத்தமிழருக்கு இருந்த பாசத்தை உணரமுடிகிறது. தமிழ்நாட்டு தமிழர்களை விட மிக அதிகமாக இந்த விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டிருப்பது ஈழத்தமிழர்களே. பல விவகாரங்களில் கலைஞரை அவர்கள் கருத்தியல் ரீதியாக எதிர்த்தாலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் என்றதுமே அவர்களது ஆழ்மனதில் புதைந்திருந்த பாசம் வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாறாக தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியை சனாதானவாதிகள் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

Saturday, September 22, 2007

கலைஞர் உண்மையான மதவாதியா?பி.ஜே.பி ஆதங்கம்.

மஞ்சள் துண்டு அணிந்ததால் மதவாதியாகி விட்டாரென மனப்பால் குடித்த மடசாம்பிராணிகள் மருண்டு போய் உள்ளனர்.ராமன் என்ன இஞ்சினீயரா?எந்தக் கல்லூரியில் படித்தார்? என்று தலைவர் கலைஞர் கேட்ட நியாயமான கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் குய்யோ முறையோவென கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது எத்தர்கள் கூட்டம்.



அரசியல் செய்ய வேறு விசயங்களே இல்லையா?ராமன் பாலத்துக்காக இவ்வளவு போராடும் இந்த இழிபிறவியினர் ஏழை மக்களுக்கு ஏதாவது போராடியிருக்கிறார்களா?அப்பாவிகளான ஒடுக்கப்பட்ட இந்துக்களின் இடஒதுக்கீட்டிற்காக ஏதாவது போராடியிருக்கிறார்களா?



இந்து மக்களுக்காக கவலைப்படாத கூட்டம் இந்துமதத்துக்காக ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டுவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.



எப்படியோ மஞ்சள் துண்டை வைத்து அவதூறு கிளப்பி சந்தோசப்பட்ட அற்பர்கூட்டம் இனி வேறு எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்.

சூரியனை சின்னமாக வைத்துள்ளார்,அதனால் சூரிய பகவானின் பக்தர் எனலாம்.
தினமும் காற்றை சுவாசிக்கிறார்,அதனால் வாயு பகவானின் பக்தர் எனலாம்.

150 ஆண்டுகளுக்கு முன்பே சூயஸ் கால்வாய் அமைத்து சாதனை புரிந்தனர் வெளிநாட்டினர்.அதைப் போன்ற மகத்தான சாதனையை தமிழன் இப்போது செய்யவிருக்கிறான்.

அருமை மதவாதிகளே உங்களுக்கு இதைப்போன்ற வேலைகள் எல்லாம் செய்யத்தெரியாது.பரவாயில்லை.செய்பவர்களையாவது செய்யவிடுங்கள்.

Thursday, September 20, 2007

ஜெ.வுக்கு கின்னஸ் விருது - கலைஞர் கோரிக்கை!

கேள்வி: கடந்த ஓராண்டில் 227 அறிக்கைகளை ஜெயலலிதா வெளியிட்டிருப்பதாகவும், மக்கள் பணிக்காக அவர் தன்னை அர்ப்பணித்தவர் என்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறாரே

கலைஞர்: இதனை அடிப்படையாக வைத்து, அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி ஒன்றை நடத்தி, அதன் முடிவாக ஜெயலலிதாவுக்கு அறிக்கை அரசி என்ற வீர விருதினையும் வழங்கி, அதனை கின்னஸ் சாதனைக்காக அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

அத்துடன் அம்மாவின் அறிக்கைகளை எண்ணி புள்ளி விவரத்தை வெளியிட்ட அந்த முன்னாள் அமைச்சருக்கு புள்ளி விவர சிகரம் என்ற சிறு பட்டத்தையும் அந்த விழாவிலேயே அம்மையார் அனுமதித்தால் வைத்துக் கொள்ளலாம். நல்ல கட்சி, நல்ல தலைவர், நல்ல தொண்டர்.

* - * - * - *

கேள்வி : எதிர்க்கட்சித் தலைவர், பினாமி கட்சியின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூரிலிருந்து செங்கம் செல்லும் 50 கிலோ மீட்டர் தூரம் சாலை மோசமாக இருப்பதாகவும் அதற்காக அதிமுக சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறாரே

கலைஞர்:: ஜெயலலிதா முன்னாள் முதல்வர். தற்போது எதிர்க்கட்சித் தலைவர். திமுக ஆட்சி நடைபெறும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிக்கை விடக்கிடைத்த பிரச்சனை இதுதான் என்ற ஒன்றே ஆட்சி சிறப்பாக நடைபெறுகின்றது என்பதற்கான சான்றாகும்.

போளூர் சாலை மோசமாக உள்ளது என்பதை ஜெயலலிதா போய் பார்த்தாரா. அந்த சாலை மோசமாக இருக்கின்றது என்பது இவருக்கு எப்படி தெரியும். யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு அறிக்கை விடுகிறாரே. இவர் என்ன கேட்பார் கைப்பிள்ளாயா. இவருக்காக ஒன்றும் தெரியாதா.

இவர் ஆட்சியில் இருந்தபோது எப்போதாவது சாலையில் சென்ற அனுபவம் இவருக்கு உண்டா. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கே ஹெலிகாப்டரில் பயணம் செய்வது தானே வழக்கம். இவரது ஆட்சியில் எந்தச் சாலைகளைப் பற்றியாவது இவர் கவலைப்பட்டதுண்டா. தற்போது சாலை சரியில்லை என்று இவருக்கு அறிக்கை விட ஏதாவது தகுதி இருக்கிறதா.

ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள போளூர்-செங்கம் சாலை 45 கிமீ நீளம் உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டிலிருந்து தூத்துக்குடி வரை 11 மாவட்டங்களை இணைக்கும் பணியானது உலக வங்கியின் கடன் உதவி திட்டத்தின் மூலம் சுமார் 742 கிமீ தூரத்திற்கு சாலை மற்றும் பாலப்பணிகள் சுமார் 2118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் திட்டத்தின் ஒரு பிரிவாகும்.

இந்தத் திட்டத்தை நான் கடந்த முறை ஆட்சியிலே இருந்தபோதே உலக வங்கி நிதியுதவித் திட்டத்தில் சேர்க்க முயற்சி எடுத்து, திட்டம் இறுதி வடிவம் பெறும் கூட்டத்தில் 2001ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின்பு ஆட்சிக்கு வந்த அதிமுக இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால் ஜெயலலிதா தனது அறிக்கையில் 2002ல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகளும் வேகமாக நடைபெற்றதாக தெரிவித்திருக்கிறார். அது உண்மையாக இருக்குமேயானால், 2006ம் ஆண்டிற்குள், அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இந்தப் பணிகள் முடிந்திருக்க வேண்டுமல்லவா. ஏன் முடியவில்லை.

சாலைப்பணிகள் ஏதும் அவர்கள் ஆட்சியில் நடக்கவில்லை என்பது அவருடைய அறிக்கையில் இருந்தே தெளிவாகிறதா இல்லையா. அவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பணிகள் துவங்கப்படாத காரணத்தினால், இந்தத் திட்டத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று உலக வங்கி அதிமுக அரசுக்கு கடிதம் எழுதியது உண்மையா இல்லையா

2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாலை அமைக்கத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி, குடிநீர் குழாய்களையும் மின் கம்பங்களையும் அகற்றி வேறு இடங்களிலே அமைத்தல் போன்ற பணிகள் விரைவாக நடைபெற்று, பணியைத் தொடர சாலை ஒப்பந்தகாரரிடம் ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது.

இந்தப் பணிகள் முடிவதற்காக ஒப்பந்தகாலம் 30-11-2008 வரை உள்ளது. பணிகள் தொடங்கப்பட்டு தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த உண்மைகள் எதையும் தெரிந்து கொள்ளாமல், மந்திரி, மாதம் மும்மாரி பொழிகிறதா என்று அரண்மனையில் இருந்து கொண்டு மன்னர் கேட்பதைப் போல, சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் விரோதமாக கட்டப்பட்டுள்ள கொடநாடு அரண்மனையில் ஓய்வு எடுத்துக் கொணடிருக்கும் ஜெயலலிதா அறிக்கை விடுவதில் எந்த அர்த்தமும் கிடையாது.

* - * - * - *

கேள்வி: சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள ஒரு மாளிகையில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்குவதை பற்றி...

கலைஞர் : முதலில் அந்த இடமே தனக்கு சொந்தமானது அல்ல என்று சொன்னவர் தான் ஜெயலலிதா. பின்னர் அதற்கான ஆதாரங்களையெல்லாம் நான் வெளிப்படுத்திய பிறகு உண்மை நாட்டுக்குத் தெரிந்தது. தற்போது அந்தக் கட்டடத்தை சட்டப் பூர்வமாக இடிப்பதற்கான முயற்சிகள் முறையாக நடைபெற்று வரும்போது, அங்கே சென்று வேண்டுமென்றே தங்கிக் கொண்டு நீதிமன்றத்திலும் முறையிட்டு எப்படியாவது அந்த இடத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியிலே அவர் ஈடுபட்டு வருகிறார்.

அவருடைய இந்த செயல்களையெல்லாம் தமிழநாட்டு மக்கள் நன்றாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் தலைவியின் தகாப் போக்கினை எண்ணி தொண்டர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள். பாவம்.

* - * - * - *

கேள்வி: அம்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்திருக்கிறாரே

கலைஞர் : நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைப்பதாக தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் பினாமி தலைவி ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட்டில் 10 நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அறிக்கை வாயிலாக தனது பெயர் அன்றாடம் நாளேடுகளில் வெளிவரவேண்டும் என்பதற்காக அம்பத்தூர் நகராட்சி பற்றி ஏதேதோ எழுதியிருக்கிறார்.

Thursday, September 13, 2007

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு! கலைஞர் அறிவிப்பு!!

தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை மற்றும் 2006-07ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனை செயல்படுத்துவதன் முதல் கட்டமாக இதுகுறித்து விரிவான ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு பரிந்துரைக்குமாறு நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான தமிழக அரசின் பிற்பட்டோர் நல ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் 99ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வருகிற 15ம் தேதி முதல் இந்த தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது என்று முதல்வர் கலைஞர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

செய்திக்கு நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

Friday, September 07, 2007

முரசொலி அதிர "கலைஞர் தொலைக்காட்சி" வருகை!



Thursday, August 23, 2007

பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.

திமுக ஆட்சிக்கு வருவது போல தெரிந்தால் திமுக கூட்டணியிலும், அதிமுக ஆட்சிக்கு வருவது போல தெரிந்தால் அதிமுக கூட்டணிக்கும் மாறுவது பா.ம.க.வின் பச்சோந்தி அரசியல். எதிர்காலத்தில் விஜயகாந்த் ஆட்சிக்கு வருவதாக தெரிந்தால் அவரோடும் கூட்டு சேர வெட்கம் கெட்ட பா.ம.க. தலைமைக்கு எந்த தயக்கமும் இருக்காது. கொள்கை, தமிழ் என்றெல்லாம் வீம்புக்கு முழங்கும் பாமக தேர்தல் நேரத்தில் மட்டும் கோவணத்தை கூட காற்றில் பறக்க விட்டு விடுவது தான் கடந்த கால வரலாறு.

திமுக ஆட்சிக்கு வந்தால் எதிர்ப்பு அரசியல் நடத்தி தங்கள் இயக்கம் தமிழனுக்காக குரல் கொடுப்பது போல காட்டிக் கொள்வதும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மரவட்டை போல சூடு, சுரணையற்று சுருங்கிக் கொள்வதையும் பாமக தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக கொண்டிருப்பதை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள்.

நேற்று வந்த விஜயகாந்த் கூட கூட்டணி விவகாரத்தில் சொரணையோடு நடந்துகொள்வதை காணமுடிகிறது. 1998 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக, 1999 பாராளுமன்றத் தேர்தலில் திமுக, 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, 2004 பாராளுமன்றத் தேர்தலில் திமுக என்று எந்தவித இலக்கோ, அரசியல் நாணயமோ இன்றி இன்னமும் கிளைக்கு கிளை தாவும் அய்யாவை அரசியல் கட்சித் தலைவர்கள் வரிசையில் எங்கே வைப்பது என்றே புரியவில்லை. வைகோவாவது பரவாயில்லை. தோற்றுப் போனாலும் கூட்டணித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்.

98லும், 2001லும் குடும்ப அரசியல் என்று விமர்சித்தவர் சத்தமில்லாமல் தன் மகனை 2004ல் கொல்லைப்புற வழியாக பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து அமைச்சராக்கி அழகு பார்த்தார். அதற்கு மட்டும் திமுகவின் தயவு தேவைப்பட்டது. நானோ, என் குடும்பத்தாரோ கோட்டைக்கு வரமாட்டோம் என்று சொன்ன வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார்.

திமுக வன்முறை அரசியல் நடத்துகிறது என்று நாள்தோறும் செய்தியாளர்களை அழைத்து புலம்பும் டாக்டர் அய்யாவின் இயக்கத்தில் காடுவெட்டி குரு ஒரு சட்டமன்ற உறுப்பினர். காடுவெட்டி குரு, காந்திஜியின் அகிம்சா வழியில் அரசியல் நடத்துபவராக அய்யாவின் கண்களுக்கு தெரிகிறாரோ? வெட்டுவேன், குத்துவேன் என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி பா.ம.க. மேடைகளில் கேட்க முடியும்.

பா.ம.க. நடத்தும் போராட்டங்கள் மக்களுக்கான போராட்டங்கள் என்று பா.ம.க.வினரே சொல்லிக் கொள்வது வழக்கம். ஆனால் மக்களோ அவை பொட்டி வாங்க நடத்தப்படும் போராட்டங்கள் என்று நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகளை மூடக்கோடி போர்க்குணத்துடன் பா.ம.க. நடத்திய போராட்டம் என்னவாயிற்று என்று மக்கள் கேட்கிறார்கள். ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகளை எல்லாம் மூடிவிட்டார்களா? பொட்டி கை மாறிவிட்டதா என்று தமிழகத்தின் தெருமுனை டீக்கடைகளில் கூட சத்தமாக பேசிக்கொள்கிறார்கள்.

டாடா மினரல் ஆலை வேண்டுமா என்று மக்களிடம் கருத்து கேட்க குழு அனுப்புகிறார். அதிமுக ஆட்சியின் போது இதுபோல குழு அமைத்தாரா? அமைத்திருந்தால் அம்மா சும்மா இருந்திருப்பாரா?

சினிமாவில் ரஜினியை எதிர்த்து அறிக்கை விட்டால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்பார்கள். அதுபோல அரசியலில் ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தினால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பார்கள். இரண்டுமே மாயை. ரஜினியை எதிர்த்த மன்சூரலிகானும், மனோரமாவும் சினிமாவில் எப்படி காணாமல் போனார்களோ, அதுபோலவே அய்யாவும் வெகுவிரைவில் அரசியலில் இருந்து காணாமல் போகப்போவது உறுதி.

இரு திராவிடக் கட்சிகளும் கைவிட்டால் அரசியல் நடுத்தெருவில் அனாதை ஆனந்தனாக நிற்க வேண்டிய நிலைமையே டாக்டர் அய்யாவுக்கு வரும். இந்த நிலையை வைகோ புரிந்து கொண்டிருக்கிறார். அய்யாவும் புரிந்துகொள்ள வேண்டும்.

Wednesday, August 15, 2007

சொக்கத்தங்கம் சோ.

வாலி எழுதியுள்ள கலைஞர்காவியம் நூலிற்கு சோ அவர்களின் முன்னுரை.

இவ்வருடத்திய பிப்ரவரி மாத துக்ளக் இதழ் ஒன்றில் ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்வி இது:

கேள்வி:கருணாநிதியைப் போல் அறிவு,ஆற்றல்,திறமை,உழைப்பு ஆகிய திறன்களைக் கொண்ட தலைவர்கள் தி.மு.க வில் மட்டுமல்ல,மற்ற கட்சிகளிலும் கூட உருவாகாமல் போய்விட்டார்களே!ஏன்?

இந்தக் கேள்விக்கு நான் அளித்திருந்த பதில் இது.

பதில்: கலைஞரைப் போல் பல திறமைகள் ஒருங்கே கொண்டவர்கள் பலர் இருந்து விட்டால்,அப்புறம் அவரைப் போன்றவர்களின் விசேஷம் என்று எதுவுமே இருக்காதே!அவருடைய திறமைகள் ஒன்றுசேர எல்லோருக்கும் வரக்கூடியவை அல்ல.

இத்தனை திறமைகளையும் பெற்றவர்கள் வேறு பலர் இருந்தால்,வாலியின் இந்தப் புஸ்தகமே உருவாகியிருக்காதே!இத்தனை சாதனைகளைப் புரிந்துள்ள மனிதர் அபூர்வமானவர் என்பதால் தான்,வாலி தன் அபூர்வமான கவிதைத் திறனைக் கொண்டு,அந்த மனிதனின் வாழ்க்கையை,ஒரு அபூர்வமான கவிதைத் தொகுப்பாக்கியிருக்கிறார்.

கலைஞரைப் பாராட்ட பல விஷயங்கள் உண்டு.நானும் கலைஞரைப் பாராட்டியிருக்கிறேன்.எட்டு முறைகள் திமுக தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், அது ஏதோ அதிர்ஷ்டத்தினால் கிடைத்த உயர்வு அல்ல.அண்ணாதுரை அவர்களால் பல தலைவர்கள் வளர்க்கப்பட்டார்கள்;ஐம்பெரும் தலைவர்கள் என்றும் போற்றப்பட்டார்கள்.அப்போது அவர்களில் ஒருவராக இடம்பெறாத கலைஞர், பிற்காலத்தில் திமுகவின் ஒரே தலைவர் என்று உருவெடுத்தது அவருடைய திறமைகளின் காரணமாகத்தான்.

சிறந்த பேச்சாற்றல்,ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களிருந்து,அடுக்குமொழியில் அள்ளி வீசப்படுகின்ற அரசியல் வாதங்கள் வரை,கூர்மையான கிண்டலும்,நயமான நகைச்சுவையும் உட்பட,பல சுவைகள் அவருடைய பேச்சில் கொட்டிக்கிடக்கும்.இதற்கெல்லாம் ஏற்ற ஒரு குரலையும் இறைவன் அவருக்குத் தந்திருக்கிறான். கம்பீரம், எகத்தாளம், கண்டிப்பு, கேலி, கிண்டல், தெளிவு என்று பலவகைப்பட்ட அம்சங்களைக் கேட்போரிடம் கொண்டு செல்லக்கூடிய குரல் அது.இத்துடன் அபார ஞாபக சக்தியும் சேர்ந்திருப்பதால் அவருடைய பேச்சு ஒரு ஆயுதமாகவே திகழ்கிறது.

அவருடைய உழைப்பைப் பற்றியோ,கேட்கவே வேண்டாம்.ஒரு மனிதனால் தொடர்ந்து,இத்தனை வருட காலம் இவ்வாறு உழைக்க முடியுமா?என்ற மலைப்பை ஏற்படுத்துகிற உழைப்பு.இவருடைய உழைப்பின் முன்னால்,மற்ற பலரின் உழைப்பு,வெறும் பொழுதுபோக்கே.உழைப்பு பொதுவாக எல்லோருக்கும் ஒரு கடமை;கலைஞருக்கோ அதுதான் உயிர்மூச்சு.

இப்படி ஒரு உழைப்பு இருந்ததால் தான், சுமார் பதின்மூன்று வருடகாலம் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த போதும்,தன்னுடைய உழைப்பையே நம்பி, இவரால் அரசியல் நடத்த முடிந்தது.வேறு ஒருவரால் அந்த நிலையில் ஒரு கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது சந்தேகமே.இரண்டு முறை டிஸ்மிஸ் ஆகியும் கூட, மீண்டும் ஒரு கூட்டத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்கு இந்த உழைப்புத் தான் காரணம்.

என்று 19.4.2000 துக்ளக் இதழில் நான் எழுதியிருந்தேன். இந்த தனிமனித சாதனை ஒரு அசுர சாதனை.

வாலியும் , போலி அல்ல.மனதில் எழுந்த எண்ணங்களைத் தான் அவர் எழுத்தில் வடித்திருக்கிறார்.உயிருடன் உள்ள வேறு எந்த ஒரு அரசியல்வாதியையும்-அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்-வாலி இப்படி வியந்து பாராட்டியது இல்லை.

வாலி ஆன்மீகவாதி,கடவுள் நம்பிக்கை உடையவர்.கலைஞர் நாத்திகவாதி,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.அப்படியிருக்க இவர்களிடையே எப்படி ஒரு அசாதரணமான நட்பு நிலவுகிறது? தமிழ் தான் காரணம்.தமிழ்ப்பற்று தான் காரணம்.தமிழால் இணைந்தவர்கள் இவர்கள்.அதன் விளைவாக இந்த நூல் பிறந்திருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த நூலுக்கு என்னை அணிந்துரை எழுதுமாறு வாலி பணித்துள்ளதும்,பொருத்தமானது தான்.குறைகளைக் காண்பதையே தொழிலாக மேற்கொண்டவன்,நிறைகளையும் நினைத்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் அளிப்போம் என்று-வாலி தீர்மானித்திருக்கிறார்.

பிரமிக்கத்தக்க வகையில் செயலாற்றி வருகிற ஒரு மனிதனைப் பற்றி,வியக்கத்தக்க எழுத்துத்திறன் கொண்ட ஒரு மனிதர் எழுதியுள்ள நூலிற்கு,விலக்கத்தக்கதென்று பலர் நினைக்கின்ற கருத்துக்களைக் கூறுகிற விமர்சகன்,அணிந்துரை எழுத முன்வருவதற்கு,கொஞ்சம் துணிவு தேவை.ஆகையால் இது அணிந்துரை அல்ல;துணிந்துரை.கலைஞரின் சாதனைகளையும்,அதைச் சொல்லியிருக்கிற வாலியின் சொல்லழகையும் நினைத்துப் பார்த்தால்,இதைப் பணிந்துரை என்றும் சொல்லலாம்.

அப்படிப் பணிந்தே உரைக்கின்றேன்-கருத்து மாறுபாடுகள் கொண்டவன் என்றாலும்,அரசியலில் கலைஞரின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுபவன் அல்ல நான் என்பதால்,துணிந்தே உரைக்கின்றேன் -வாலியின் எழுத்துக்களால் கவரப்பட்டவன் என்கிற முறையில்,அவருடைய இந்தப் புஸ்தகம்,பலரையும் சென்றடைய அணிந்து உரைக்கின்றேன்.

வாலியின் நூலிற்கு ஜாலியின் விமர்சனம்.

அமிழ்தினும் இனிய தீந்தமிழ்ச்சொற்கள் வாலியின் விரலசைவுக்கு குத்தாட்டம் போடுவது கொள்ளை அழகு.நீண்ட நாட்களாக புத்தகங்கள் வாங்கும் பழக்கம் தடைபட்டுப் போயிருந்த நிலையில் சமீபத்தில் புத்தகநிலையத்திற்கு சென்று பார்த்த போது ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது.தமிழ்ப்புத்தகங்களின் கட்டமைப்பும்,அச்சு நேர்த்தியும் அட்டகாசமாக உயர்ந்துள்ளது.வளவளப்பான காகிதத்தில் அருமையாக அமையப்பெற்றுள்ள இப்புத்தகம் கழகக்காளைகள் அனைவரின் கையிலும் தவழ வேண்டியது அவசியம்.

கலைஞர் காவியத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கவிதை,இங்கே


Monday, August 13, 2007

"திருவாரூர் தேர் ஓடும்"

/*
வலைப்பதிவர் உலகில் இது எனது முதல் பதிவு, இதை எம் தலைவருக்கே காணிக்கையாக்குகிறேன்.

ஓய்வரியா சூரியனாக என்றென்றும் தமிழருக்காகவும் தமிழ் நாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஜன நாயகத்தின் வழி நின்று போராடிக்கொண்டிருக்கும் ஒரே தமிழர் நம் தலைவர் என்பதில் பெருமைகொள்கிறேன். அவரைப்பற்றி "சோலை" என்பவர் "திருவாரூர் தேர் ஓடும்" என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டரில் எழுதியதை பிரதி எடுத்து இங்கே வெளியிட்டுள்ளேன்.
*/
வீட்டுமனைப் பட்டா கோரி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை மார்க்சிச்ட் கட்சியின்விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அறிவித்தன. மிரண்டு போனோம்.

அப்படி ஒரு போராட்டம் நடந்திருத்தால், ஒரு சில இடங்களிலாவது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டிருக்கும். அத்துமீறி தங்கள் அலுவலகங்களுக்குள் பிறர் நுழைவதை கலெக்டர் அலுவலக ஊழியர்களோ, தாசில்தார் அலுவலகப் பணியாளர்களோ அனுமதிக்க மாட்டார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே வேண்டாத மோதல்கள் வெடித்திருக்கும்.

எனவே, இத்தகைய போராட்டங்கள் வேண்டாம் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 'அல்லி மலரைக் கொய்ய, அரிவாள் எதற்கு?' என்றார். அதனை மார்க்சிச்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. 'ஆக்கிரமிப்பு இயக்கம் ஆர்ப்பாட்ட அறப்போராட்டமாக இருக்கும்' என்று அறிவித்தது. இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.

வீட்டுமனைப் பட்டா கொடுப்பதற்கு தமிழக அரசு தடையாக இருக்கிறதா? இல்லை. ஆனால், வீட்டுமனைப் பட்ட தருவதற்கு மட்டுமல்ல, நிலவிநியோகத்திற்கே வெள்ளைகார அரசு சில விதிமுறைகளை வகுத்து வைத்தது. அந்த விதிகள் இரும்புச் சுவர்களாகக் குறுக்கே எழுத்து நிற்கின்றன. அவற்றைத் தகர்க்க தமிழக அரசு உளப்பூர்வமாக முயற்சிக்கிறது. நிர்வாகக் கோளாறுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

ஆந்திராவிலோ, பீகாரிலோ, பஞ்சாபிலோ இன்றும் நிலக்குவியல்கள் உடைபடவில்லை. அரசுப் புறம்போக்கு நிலங்களை நிலப்புரபுக்களும் அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்குவங்கம், கேரளாவிற்கு அப்பால் தமிழகத்தில்தான் நிலக் குவியல்கள் உடைக்கப்பட்டன. அதனை அன்று அமரர் ஜீவா, சீனிவாச ராவ் போன்ற தேசத் தலைவர்கள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் தொடங்கி வைத்தன.

ஒன்றுபட்டிருந்த கம்யூனிச்ட் கட்சி தொடங்கிய போராட்டங்களின் காரணமாக, நில உச்சவரம்புச் சட்டங்கள் வந்தன. குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டங்கள் வந்தன. வேறு வழியின்றி காங்கிரசு அரசு கொண்டு வந்த இந்தச் சீர்திருத்தங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வேகம் பெற்றன.

ஒரு குடும்பத்த்ற்க்கு முப்பது ஏக்கர் என்று இருந்த நில உச்சவரம்பை இனி 15 ஏக்கர்தான் என்று பாதிக்குப் பாதிக்யாகக் குறைத்தது, அதன் மோலம் உபரியாக வந்த நிலத்தை ஒரு லட்சத்து முப்பதிரண்டாயிரம் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளித்தது அன்றைய கலைஞர் அரசு.

அது மட்டுமல்ல; அவர் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற மறு நாளே பிறப்பித்த முதல் அவசரச் சட்டம் என்ன தெரியுமா? 'தஞ்சை மாவட்டதில் எங்கெல்லாம் விவசாயத் தொழிலாளர்கள் குடிசைகளில் வாழ்கிறார்களோ, அந்த அடிமனை இனி அவர்களுக்கே சொந்தம்' என்று பிரகடனம் செய்தார். நிலப் புரபுக்கள் அரண்டு போனார்கள். காரணம், அந்த லட்சோப லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்தது அவர்களுடைய நிலங்களில்தான்.

ஆலயத்திற்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வலிவலம் தேசிகர் அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கே அவை சொந்தமாக வேண்டும் என்று ஜெகந் நாதன் - கிருஷ்ணம்மாள் தலைமையில் 'சர்வோதய இயக்கம்' போராட்டம் நடத்தியது.அதிகாரவர்க்கம் அந்தப் போராட்டத்திற்கு எதிராக நின்றது. ஆனால், அன்றைய முதல்வர் கலைஞர் , போராட்டத்திற்கு ஆதரவாக நின்றார். ஆலய நிலங்கள் உழுதவர்களுக்கே உரிமையானது.

ஆரூரான் சர்க்கரை ஆலை மூடப்பட்ட போது, அதன் நிலங்கள் ஊழியர்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சர்வோதயத் தலைவர் ஜெகந் நாதன் உண்ணாவிரதம் இருந்தார். அந்த ஆலை நிலங்களையும் பகிர்ந்தளித்தவர், அன்றைய முதல்வர் கலைஞர் தான்.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் வீட்டுமனையும், பட்டாவும் கோரி மார்க்சிச்ட் கட்சியின் விவசாய சங்க அமைப்புகள் போராடின. நாலரை ஆண்டுகளுக்குப் பின்னர்தான், அன்றைய அரசு சோம்பல் முறித்து, கண் திறந்து பார்த்தது. இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா என்று அறிவித்தது. சட்டமன்றத் தேர்தல் கதவைத் தட்டியது. இல்லை, இல்லை. எட்டு லட்சம் குடும்பங்களுக்கு குடிமனைப்பட்ட என்று தண்டோரா போட்டது. ஆனால், எவருக்குமே எந்தப் பட்டாவும் வழங்காமல், ஆட்சியை முடித்துக் கொண்டு சிறுதாவூருக்கு ஓய்வெடுக்கப் போய்விட்டது. கலெக்டர் அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்திலும் குடியிருக்கும் போராட்டத்தை அன்றைக்கு மார்க்சிச்ட் அமைப்புகள் தொடங்கி இருந்தால் என்ன நடைபெற்றிருக்கும்? அன்றைய ஆட்சியின் இரும்புக்கரம் நீண்டிருக்கும்.

ஐம்பது லட்சம் ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலம் இருப்பதாகவும் அதனைத் தொழிலதிபர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் போவதாகவும் சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு கம்யூனிச்ட் கட்சித் தலைவர்களும் அவரைச் சந்தித்தனர். 'அந்த நிலங்களை நிலமில்லாத விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க வெண்டும்' என்றனர்.

'அவர்களுக்குக் கொடுத்து என்ன பலன்? செல்வந்தர்களுக்கும் சீமான்களுக்கும் கொடுத்தால் அவர்கள் பழத்தோட்டங்கள் பொட்டு, பண்ணைகள் அமைத்து உற்பத்தியைப் பெருக்குவார்கள்' என்று அம்மணி சொன்னார்.

அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்த்தை அப்போது அறிவித்திருந்தால் மிகச் சரியாக இருந்திருக்கும். ஏனெனில், வல்லோறுகளுக்குத்தான் வாழ்வு. ஏழை விவசாயிகள் மடிய வேண்டிய ஈசல்கள் என்பதனை கம்யூனிச்ட் தலைவர்களுக்கே அம்மணி கற்றுத் தந்தார்.

தேர்தலில் பொது அறிவித்த 177 உறுதிமொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு விட்டன என்று இன்றைய அரசு பட்டியல் போட்டுக் காட்டுகிறது. மறுப்பாரில்லை.

மேற்கு வங்கம், கேரளாவிற்கு அடுத்து இன்றைக்கு இந்தியாவில் இடதுசாரித் திசை வழியை நாடுகின்ற ஒரே அரசு, தமிழக அரசுதான். அதனால்தான் உறுதிமொழிகள் உயிர் பெறுகின்றன. மக்களுக்கு நல்லதே செய்வதில் இந்த மூன்று அரசுகளுக்கு இடையே சகோதரப் போட்டி வரவேண்டும்.

இந்த திருவாரூர் தேர் என்னவோ, சிவப்புச் சிந்தனையோடுதான் வலம் வருகிறது. ஒருவேளை அந்தச் சிந்தனை அந்த பூமி தந்த சீதனமாக இருக்கலாம். அந்தத் தேரின் வேகத்தை வேகப்படுத்துவது நியாயமாக இருக்கும். வேகத்தடை வேண்டுமா என்ன?

1996-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், ஐம்பத்திரண்டாயிரத்திற்க்கும் அதிகமான விவசாயிகளுக்கு முப்பத்தைந்தாயிரதிற்கும் அதிகமான ஏக்கர் நிலங்களுக்கு பட்ட வழங்கப்பட்டன.

கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, இதுவரை 91 ஆயிரத்து 576 விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

2000வது ஆண்டில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழும் ஒரு லட்சத்து ஆறாயிரம் குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஆரு மாதங்களில் மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த சாதனைகளுக்கு முற்றுப்புள்ளீ வைக்கப்படவில்லை. அதாவது, திருவாரூர் தேர் நகர்ந்து கொண்டே இருக்கிரது. பயணம் தொடர்கிறது.

பல தலைமுறைகளாகக் குடியிருக்கும் பத்து லட்சம் குடும்பங்களுக்கு இன்னும் நிலப்பட்டா தரப்பட வேண்டும் என்று ஒரு கணக்குச் சொல்கிறார்கள். அதனோடு ஒப்பிடும்போது, ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு நிலப்பட்டா என்பது சாதரணமாகத் தெரியலாம். அடுத்து வரும் மார்ச் மாதத்திற்குள் இன்னும் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு பட்ட அளிப்பதென மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மூன்ரு லட்சம் என்ற எல்லை ஐந்து லட்சமாக உயர வேண்டும் என்று கெட்கப்படுமானால், அதில் நிரம்ப நியாயம் இருக்கிறது.

அரசுப் புறம்போக்கு நிலங்களில் எவ்வளவு பேர்தான் வாழ்கிறார்கள்? ஆலயங்கள், மாத கோயில்கள், மசூதி வக்பு வாரிய நிலங்களில் பத்து லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. 'அந்த நிலங்களை அரசே விலை கொடுத்து வாஙி, அவர்களுக்குப் பட்டாப் போட்டு கொடுக்கவேண்டும்' என்றார். மார்க்சிச்ட் விவசாய சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன்.

இந்தக் கோரிக்கை செயல் படுத்தப்பட்டால், எத்தகைய கொந்தளிப்பு ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை.

எனவே, மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் எந்த அடிப்படையில் குடிமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன? எந்த அடிப்படையில்னிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்ற தகவல்களை தமிழக அரசு திரட்ட வேண்டும். இந்தத் துறையில் இன்னும் ஒரு சாதனை செய்வதற்கு கலைஞருக்கு அவை கை கொடுக்கும்.

- சோலை ( நன்றி குமுதம் ரிப்போர்டர் )




Friday, August 10, 2007

ஜெயா டிவியில் கலைஞர்!

மூச்சுக்கு முன்னூறு தடவை கருணாநிதி, உதவிப் பேராசிரியர் அன்பழகன், மைனாரிட்டி திமுக அரசு என்று செய்திகளில் மட்டு மரியாதையில்லாமல் உளறிக் கொட்டுவது ஜெயா டிவியின் வாடிக்கை. ஜெயா டிவி செய்திகளை நகைச்சுவைக்காக உடன்பிறப்புகளும் பார்ப்பதுண்டு.

நேற்று இரவு ஜெயா செய்திகளில் கலைஞர் என்ற வார்த்தை கேட்டது. முதன்முறையாக அந்த வார்த்தையை கேட்டதுமே பார்த்துக் கொண்டிருப்பது ராஜ் டிவியா அல்லது ஜெயா டிவியா என்று குழம்பி விட்டேன். ஜெயா டிவிதான். காண்பது கனவா என்று தலையில் குட்டி பார்த்துக் கொண்டேன் வலித்தது.

மேட்டர் ஒன்றுமில்லை. தலைவர் கலைஞரின் ராஜதந்திரம் இங்கே தான் தூள் கிளப்புகிறது. தலைவர் புதியதாக ஆரம்பிக்க இருக்கும் டிவி சேனலுக்கு "கலைஞர் டிவி" என்று பெயர் வைத்திருக்கிறார். தொலைக்காட்சியின் பெயரே கலைஞர் என்று வைத்து விட்டதால் இந்த லூசு டிவிக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது. கலைஞர் டிவி தொடர்பான அவதூறு செய்திகளை சொல்லும்போது "கலைஞர்" என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டியதாகிறது.

உளறலில் உலகசாதனை படைத்த ஜெயலலிதாவும் கூட வேறு வழியில்லாமல் இவ்வகையில் கலைஞர் என்ற பெயரை உச்சரிக்க வேண்டிய நிலையை தலைவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

பனைமரத்துலே வவ்வாலா? கலைஞருக்கே சவாலா?

Wednesday, August 08, 2007

கலைஞரின் ராஜதந்திரம்...

நேற்று குமுதம்.காமில் வெற்றிகொண்டான் அவர்களின் பேட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது அவர் கலைஞர் பற்றி கூறிய ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பானைக்கு சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், தலைவர் அவர்களின் சாதுரியம், ராஜதந்திரம் பற்றி அறிந்து கொள்ள இது ஒன்றே போதும்.

அந்த சம்பவம் இது தான்:
ஒரு முறை தலைவர் தஞ்சையில் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பரிசுத்த நாடார் அவர்கள், பரிசுத்த நாடார் அவர்கள் தஞ்சையில் மிக பெரிய கோடீஸ்வரர், அண்ணா அவர்களே எப்படி கலைஞர் அவரை எதிர்துது ஜெயிக்க போகிறார் என்று அச்சம் கொண்டிருந்திருக்கிறார், அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அண்ணாவிடம் தஞ்சைக்கு நான் சென்று பிரச்சாரம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார், அதற்கு அண்ணா அவர்கள் அதெல்லாம் வேண்டாம் கலைஞரே பார்த்துக் கொள்வார் என்று கூறியிருக்கிறார். பரிசுத்த நாடார் அவர்களை ஆதரித்து அய்யா பெரியார் அவர்கள் பொதுக் கூடத்தில் பேச வந்திருக்கிறார். அப்போது கலைஞர் அவர்கள் அய்யா அவர்களின் தொடக்க உரையை போய் பதிவு செய்து கொண்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த கூட்டத்தில் அய்யா அவர்கள் பேசியது: இந்த தொகுதியில் நம் அய்யா பரிசுத்த நாடார் அவர்கள் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து தி.மு.கவினுடைய பொருளாளர் கருணாநிதி போட்டியிடுகிறார், அவரை பற்றி உங்களுக்கு தெரியாது அவர் பெரிய திறமைசாலி, ரொம்ப கெட்டிக்காரர், பெரிய ராஜதந்திரி, அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று யாரலும் கண்டுபிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய ஆற்றல் உள்ளவர், அவரை எதிர்த்து இவர் (பரிசுத்த நாடார்) நிற்கிறார், என்று கூறி முடித்தவுடன் அதை பதிவு செய்து கலைஞரிடம் போய் போட்டு காட்டியிருக்கிறார்கள், அதை கேட்டவுடன் தலைவர் உடனே “கருணாநிதிக்கு அய்யா பெரியார் சர்டிபிக்கேட் “என்று அய்யாவின் துவக்க உரையை ஒரு நோட்டீசாக அச்சடித்து அந்த கூட்டம் முடிவதற்குள்ளாகவே அங்கே விநியோகித்திருக்கிறார்கள், அதை பெரியார் வாங்கி பார்த்த உடனே, பாருங்கள் இப்போது தான் அவர் பற்றி கூறினேன் அதற்குள்ளே அவர் யார் என்று நிருபித்துவிட்டார், என்று கூறியிருக்கிறார். அந்த தேர்தலில் கலைஞர் அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். கலைஞர் அவர்கள் எவ்வளவு பெரிய ராஜதந்திரி என்பது இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளளாம்.

Saturday, July 21, 2007

நாட்டுத் தேர்தலும் நாலாறு கோடியும்!

ஆட்டுக்கார அலமு முழங்குகிறாள்;
நாட்டுக்கொடி பறக்கும் கம்பத்தின் கீழ் நின்று!
அணியன்று பெரிதாக அமைத்திடுவோம் -அய்ந்தாறு பேர் போதும் ஆரம்பக் கட்டத்தில்!
அத்தனையும் நத்தைகளாய், சொத்தைகளாய்
அதுவே பழரசக் கிண்ணத்தில் பளபளக்கும் முத்துக்களாய்!
அவை தவிர நம்மிடம் அடிமை ஆட்டுக்குட்டிகள் தான்
தலையசைத்துத் தண்டனிட தாராளமாக உண்டே!
நானின்று நானிலத்தில் எதுவும் நடக்காது என்பேன்; என்
நா வசைந்தால் இந்த நாடே நடுங்கி ஆடுமென்பேன்.
அடிப்பதற்கு சாட்டை எடுத்தால் - அரசின்
அதிகாரிகள் கூட அடங்க வேண்டும்
அடியற்றிக் கை கூப்பிக் கிடக்க வேண்டும்
அல்லி ராணிக்கும் இல்லாத அதிகாரம் பெற்றவள் நான்;
அவை நடுவே ஆத்திரம் கொப்பளிக்க அன்றொருநாள்,
ஆவேச நடனம் ஆடியதை மறந்தீரோ அப்போதே!
இருந்தாலும் கூட;நான் அசையாமலே நான் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகள்நாட்டுத் தலைவர் தேர்தலில் அசைந்ததாக நானொரு பொய்யை
நாத் தழும்பேற நம்பும்படி சொல்லிவிட்டேன்
நம்புவோர் நம்பட்டும்; நம்பாதோர் நாசமாகப் போகட்டும்!
நமது நாட்டு வாக்காளர் நாலு காசு பார்க்கும் நேரம்
நல்ல தேர்தல் தினம்தானே?
நாட்டுத் தலைவர் தேர்தலிலே நான்
நாலாறு கோடி திரட்டியதும் அந்த விதம்தானே?

- தலைவர் கலைஞர்

Friday, July 20, 2007

அறிவியல் விஞ்ஞானி கலாம், அரசியல் விஞ்ஞானி கலைஞர்

செல்வி ஜெயலலிதா தலைமையில் மூன்றாவது அணி ஆரம்பிக்கப்பட்ட உடன் டாக்டர் கலைஞர் அவர்களிடம் மூன்றாவது அணி பற்றி நிருபர்கள் கேட்டபோது டாகடர் கலைஞர் அவர்கள் மிகச் சிறப்பாக "ஜோக்கர் அணி" ஒரே வரியில் பதில் சொன்னார். அவர் தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் சொல்லி இருந்தாலும் தற்போது நடந்து வருவதை பார்த்தால் கலைஞர் அவர்கள் அரசியலில் ஒரு விஞ்ஞானி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் புரியும்

அறிவியல் விஞ்ஞானியாகிய திரு.அப்துல் கலாம் அவர்களை தான் ஒரு வருடத்துக்கு முன்பு சந்தித்த போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுவீர்களா என்று தான் கேட்டதாகவும் அதற்கு கலாம் அவர்கள் அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்ததாகவும் கலைஞர் அவர்கள் சொல்லி இருந்தார். இந்த காரணத்தினாலேயே தான் கலாம் அவர்களின் பெயரை ஜனாதிபதி தேர்தலில் முன்மொழியவில்லை என்றும் கலைஞர் அவர்கள் தெரிவித்தார். இதன் மூலம் கலாம் அவர்கள் இரண்டாம் முறையாக ஜனாதிபதி ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆரிய வாலாக்களை விட தமிழின தலைவருக்கு தான் முதலில் தோன்றி உள்ளது என்பது தெரியும். கலாம் அவர்கள் தனக்கு மிகவும் பிடித்த கல்வி சம்மந்தப் பட்ட துறைக்கே செல்ல விரும்புவதாக பல முறை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தும் இருக்கிறார்

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க ஆரிய வாலாக்கள் தமிழன் மானம் காக்க புறப்படுகிறேன் பேர்வழி என்று வரிந்து கட்டிக் கொண்டு அவரை கேட்காமலேயே கலாம் என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டார்கள். கலாம் அவர்கள் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக மூன்றாவது அணித் தலைவர்கள் சென்ற போது கூட அரிய வாலா செல்லவில்லை என்பதி இருந்தே அவரின் இரட்டை வேடம் வெளிப்பட்டுவிட்டது. செகாவத்தின் மதவாத பின்புலத்தை அறிந்த மூன்றாவது அணி கட்சியினர் பலரும் செகாவத்தை கண்டு பயந்து ஓட ஆரிய வாலாக்கள் அமைதி காத்து வந்தனர். ஆனால் டெல்லியில் இருந்து ஏஜெண்ட் ஜஸ்வந்த் சிங் வந்து பேரம் படிந்தவுடன் இப்போது ஆரிய வாலாக்களின் அரிதாரம் கலைந்துவிட்டது. தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே அது போல் தான் என்ன தான் சமூக நீதி காத்த வீராங்கனை என்று வேடம் போட்டாலும் உள்ளே இருக்கும் ஆரிய உணர்வு அழிந்து போகுமா என்ன

கூட்டணி கட்சிகள் எல்லாம் சொன்னபடி வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க ஆரிய பாசமோ கூட்டணி தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது. சிவசேனா போல் முதலிலேயே தங்கள் ஆதரவு இவருக்கு தான் என்று சொல்லும் துணிவு துளி அளவும் இல்லை, ஏனேன்றால் எப்போதுமே அடுத்தவர் முகத்தில் கரி பூசித்தானே பழக்கம். மொத்ததில் மூன்றாம் அணி தலைவர்கள் எல்லாம் ஜோக்கர்கள் ஆக தலைவி மட்டும் அடுத்த தேர்தலுக்கு இப்போதே அஸ்திவாரம் போட்டுவிட்டார்

தமிழகத்தின் தலைமகன்

உடன்பிறப்பு ஜெயகணபதி நல்ல தகவல் ஒன்றை கடத்தியுள்ளார்.வரும் 27-07-2007 அன்று கலைஞர் அவர்கள் 15 ஆண்டுகளாக முதலமைச்சராக ஆட்சி புரிந்த சாதனையை நிறைவேற்றுகிறார்.

கலைஞருக்கு அடுத்த படியாக எம்ஜிஆர் 10 ஆண்டுகளும்,ஜெ 10 ஆண்டுகளும் முதல்வராக இருந்துள்ளனர்.காமராஜர் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார்.

அதிகமுறை முதல்வராக இருந்த பெருமையும் கலைஞருக்கே சொந்தம்.ஐந்தாவது முறையாக இப்போது அவர் முதல்வராக இருக்கிறார்.

கலைஞர் முதல்வர் பதவியில் இருந்த காலம்:


S.NO FROM TO DAYS
1 2/10/69 1/4/71 693
2 15/3/71 31/1/76 1783
3 27/1/89 30/1/91 733
4 13/5/96 13/5/01 1826
5 13/5/06 27/7/07 440
TOTAL 5475 DAYS/365 15 YEARS

மாபெரும் சாதனையை நிறைவேற்றப் போகும் கலைஞர் அவர்களுக்கு கலைஞரின் அன்புத்தம்பிகளின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது கலைஞராக இருக்கட்டும்.

வாழ்க கலைஞர்.

Thursday, July 19, 2007

கலைஞரிடம் ஐம்பது கேள்விகள்!

1.கேள்வி : சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?

கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.


2.கேள்வி : பேசிய முதல் பேச்சு?

கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.


3.கேள்வி : அதிக நேரம் பேசிய நாள்?

கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.


4.கேள்வி : உங்களுக்கு பிடித்த சட்டமன்றப் பேச்சு?

கலைஞர் : அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்: எதிர்கட்சித் தலைவராக நானிருந்த போது, “பூம்புகார்” நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட இருந்த “பல்கேரியா பால்டிகா” என்ற கப்பல் பேர ஊழல் குறித்து இருபது ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவைத்துக் குற்றம் சாட்டிப்பேசியதால், அந்த இரு கப்பல்களுமே வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பது சட்டப் பேரவையின் பரபரப்பான வரலாறு.


5.கேள்வி : உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?

கலைஞர் : எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்.


6.கேள்வி : பிடித்த சபாநாயகர்?

கலைஞர் : ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-அண்மைக் காலத்தில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.


7.கேள்வி : உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில்?

கலைஞர் : 24.03.1960 அன்று சட்டப் பேரவையில், ஓவியர் வேணுகோபால்சர்மா அவர்களால் “தபால் தலைகளுக்கு என்று வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்திற்கு உண்டா?” என்று நான் கேட்டதற்கு பெரியவர் மாண்புமிகு பக்தவத்சலனார் அவர்கள் எழுந்து, “சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பார்கள்” என்று கூறிய பதில் தான் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில் என்று சொல்வேன். ஏனென்றால் அந்தப் பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றையக் குடியரசுத் தலைவர் மேதகு ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்கள் என்று தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வானுயர் வள்ளுவர் சிலை என ஆயிற்று!


8. கேள்வி : நீங்கள் சொன்ன மறக்க முடியாத பதில்?

கலைஞர் : திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்ற கொலைக்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கை மீது விசாரணை நடத்தாதது குறித்தும், திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் களவாடப்பட்டதைக் கண்டித்தும் நான் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது திருச்செந்தூர் நடைபயணம் சென்றேன். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே நான் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்று நான் கூறியதும் அவை சிரிப்பிலே ஆழ்ந்தது. நான் சொன்ன மறக்க முடியாத பதில்களில் இதுவும் ஒன்று.


9.கேள்வி : சட்டமன்றத்தில் சிறப்பான முதல்வர் யார்?

கலைஞர் : பெருந்தலைவர் காமராஜர், அவையிலே பேசாமலேயே அமர்ந்திருந்து, ஆனால் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தியவர்.


10.கேள்வி:சட்டமன்றப் பேச்சுக்கும்- பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?

கலைஞர் : மனக்கணக்குக்கும்-வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.


11. கேள்வி : 1957இல் முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது மனைவி, குழந்தைகளைச் சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றதுண்டா?

கலைஞர் : அழைத்துச் சென்றதில்லை. அவர்களாகவே வந்து நான் உரையாற்றும் நாட்களில் சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கண்டதுண்டு.


12. கேள்வி : சட்ட மன்றத்தில் உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு யாரால்?

கலைஞர் : எனது முதல் கன்னிப் பேச்சில், எனது முதல் தொகுதியான குளித்தலையில் இருந்த, “கையேரு வாரம், மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினை குறித்து நான் வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த மேதகு யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதிச் செயலாளர் மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பினார். சட்டமன்றத்தில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அது தான்.


13. கேள்வி : மறக்கமுடியாத சம்பவம்?

கலைஞர் : தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்களே, “நான் மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்வேன், அனைவரும் வாழ்க! என்று சொல்ல வேண்டுமென்று கூறிவிட்டு அவ்வாறே முழக்கமிட்ட அந்தச் சம்பவம் என்னால் மறக்க முடியாத சம்பவமாகும்.


14. கேள்வி : வருத்தப்பட வைத்த சம்பவம்?

கலைஞர் : 1976ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு, அதன் பின்னர் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து, மீண்டும் 1989இல் பதவிப் பொறுப்புக்கு வந்து முதல் நிதிநிலை அறிக்கையை நான் படிக்க முனைந்தபோது, ஏற்கனவே அவர்கள் வீட்டிலே நடத்திய ஒத்திகைப்படி என் கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பறிக்க முயற்சித்து, முகத்திலும் கட்சிக்காரர்களை விட்டுக் குத்துமாறு ஏவிவிட்டு, அதன் பின்னர், தன்னை ஆளுங்கட்சிக்காரர்கள் தாக்கிவிட்டதாகத் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, செய்தியாளர்கள் முன் வதந்திகளைப் பரப்பிய நிகழ்ச்சிதான் என்னை வருத்தமடையச் செய்த சம்பவமாகும்.


15. கேள்வி : மகிழ்ச்சிக்குரிய சம்பவம்?

கலைஞர் : நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் திறக்கப்பட விருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?


16.கேள்வி : கோபப்படவைத்த சம்பவம்?

கலைஞர்:எதிர்க்கட்சித் தலைவராக நான் இருந்தபோது, ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் என்னைப் பற்றி ஒரு குற்றச்சாட்டினைக் கூறினார். தேனியில் நான் இடைத் தேர்தலுக்காகச் சென்ற போது, முத்துத்தேவன்பட்டி என்ற ஊரில் தங்கியிருந்த இடத்தை என் மகன் மு.க.அழகிரி விலைக்கு வாங்கியதாகக் கூறி, அதனை மறுக்கத் தயாரா என்று சவால் விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.
அமைச்சராக இருந்த துரைமுருகன் எழுந்து அதை மறுத்துக் கூறினார். எனினும் அந்த அமைச்சர் எழுந்து பிடிவாதமாக அந்தக் குற்றச்சாட்டை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அமைதியாக இருப்பதிலிருந்தே குற்றச்சாட்டு உண்மையாகிறது என்று கூறிய போது தான் நான் எழுந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். இல்லாவிட்டால் அவர் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமென்று கூறினேன்.
அதற்குப் பிறகும் மறுநாள் அவர் போலியாக ஒரு பத்திரமே தயாரித்து, அதிலே போலியாக மு.க. அழகிரியின் iகாயழுத்தையும் போட்டு, பேரவைத் தலைவரிடம் அதைக் கொண்டு வந்து நிரூபிக்க முயன்றபோது, நான் உண்மையில் கோபப்பட்டேன். பேரவைத் தலைவராக இருந்த திரு.கே.ராஜாராம் அவையிலேயே வந்து அந்த அமைச்சர் செய்தது பெருந்தவறு என்பதை அறிவித்தார். ஆனால், அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அந்தப் பிரச்சினையை நீட்டிக்காமல் பெருந்தன்மையாக மன்னித்துவிட்டேன்.


17.கேள்வி:என்னுடைய வளர்ச்சிக்குச் சட்ட மன்றத்தில் இந்த உறுப்பினர் உதவியாக இருந்தார் என்று யாரையாவது சொல்வீர்களா?

கலைஞர்:குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது.


18. கேள்வி:உங்களைத் தொடர்ந்து பாராட்டும் உறுப்பினர் யார்?

கலைஞர்:ஒருவரல்ல, பலர்.


19. கேள்வி:உங்களை கிண்டல் செய்யும் உறுப்பினர் யார்?

கலைஞர்:என்னை யாரும் கிண்டல் செய்தது கிடையாது, முடியாது.


20. கேள்வி:இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?

கலைஞர்:”சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்”என்ற குறள் வழி நடக்கின்ற எனக்கு இந்த நிலை ஏற்பட்டதில்லை.


21. கேள்வி: ‘இந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய்விட்டோமே!’ என்று நினைத்த சம்பவம் உண்டா?

கலைஞர்:தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருக்கின்ற நேரத்தில் எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நான் இல்லாத நேரத்தில் ஏதாவது பிரச் சினைகள் ஏற்பட்டுவிட்டதாகப் பின்னர் அறியும்போது, அந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய் விட்டோமே என்று நான் நினைத்த சம்பவங்கள் ஒன்றிரண்டு உண்டு.


22. கேள்வி: “இந்த நேரத்தில் இல்லாமல் இருந் திருக்கலாமே!” என்று நினைக்கும் சம்பவம்?

கலைஞர் : அளவுக்கு மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னைப் புகழ்ந்து பேசும்போது நானே ஒருமுறை சபாநாயகர் பழனிவேல்ராஜன் அவர்களிடம், “இந்தப் புகழுரைகளை நிறுத்தச் சொல்கிறீர்களா? அல்லது நான் வெளியே போகட்டுமா?” என்று கோரியதுதான் என் நினைவுக்கு வருகிறது.


23. கேள்வி: சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது என்ன நினைப்பீர்கள்?

கலைஞர் : கற்றுக்கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.


24. கேள்வி : முதன்முதலாகச் சென்றபோது உட்கார்ந்த இருக்கை எண் நினைவிருக்கிறதா?

கலைஞர் : 170.


25. கேள்வி : சட்டமன்றத்தில் இவர்கள் எப்படி?

கலைஞர் : 1. காமராஜர்-எளிமையானவர்.2.பக்தவச்சலம்-நிர்வாகத்தில் திறமையானவர்.3.அண்ணா-எதிர்க்கட்சியினரையும், உரையினால் ஈர்ப்பவர்.4.எம்.ஜி.ஆர்.-நாகரிகமாகப் பழகக் கூடியவர்.5.ஜெயலலிதா-பிடிவாத குணத்தினர்.


26. கேள்வி : திரு.கருத்திருமன் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நீங்களும், அவரும் அடிக்கடி அவையிலே விவாதத்தில் ஈடுபடுவதுண்டு. அதில் நினைவில் உள்ள ஒன்றைக் கூறுங்களேன்?

கலைஞர் : ஒருமுறை திரு.கருத்திருமன் அவர்கள், “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு என்றீர்கள், இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “சுடுகாட்டில் இல்லை, உங்களோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்!” என்று கூறினேன். அவையினரோடு சேர்ந்து அவரும் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.


27. கேள்வி : இந்த அய்ம்பதாண்டுகளில் உங்களுக்குப் பிடித்தமான 5 சட்டமன்றப் பேச்சாளர்கள் யார்?

கலைஞர் : 1.பேராசிரியர் அன்பழகனார்2. கே.டி.கே.தங்கமணி3. குமரி அனந்தன்4. அப்துல் லத்தீப்5. திருமதி.பாப்பா உமாநாத்


28. கேள்வி : நீங்கள் திக்குமுக்காடிய சம்பவம் ஏதாவது உண்டா?

கலைஞர்: அப்படி எதுவும் இல்லை.


29. கேள்வி : எதிராளியைத் திணற வைத்த ஏதாவது ஒரு சம்பவம்?

கலைஞர் : சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே அவர்கள் தி.மு.கழக அரசைப் பற்றி விமர்சிக்கும் போது, “இது மூன்றாம் தர சர்க்கார்” என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் கையமர்த்திவிட்டு, “டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!” என்று குறிப்பிட்டேன்.


30. கேள்வி : மறக்க முடியாத சட்டமன்றக் கலவரக் காட்சி?

கலைஞர் : எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, “ஜெயலலிதா” அணியினரும், “ஜானகி” அணியினரும் பேரவைக்குள் மோதிக்கொண்டு காவல் துறையினரும் உள்ளே புகுந்து மன்ற உறுப்பினர்கள் ஒலிபெருக்கியைப் பிடுங்கிக்கொண்டு சண்டையிட்ட காட்சி மறக்க முடியாத ஒன்றாகும்.


31. கேள்வி : சட்ட மன்றப் பேச்சில் எது இருக்கக்கூடாது?

கலைஞர் : மீண்டும் ஒரு நாள் இருவரும் சந்திக்க நேரிடும் போது பர°பரம் பேசிக்கொள்ள முடியாத அளவிற்கு விரோதம் காட்டிக்கொள்ளும் உணர்வு இருக்கக்கூடாது.


32. கேள்வி : விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்கவேண்டும்?

கலைஞர் : விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும்.வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும்.விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.


33. கேள்வி:நீங்கள் கொண்டு வந்ததில் மகிழத்தக்க சட்டம்?

கலைஞர் : பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை-குடியிருப்புமனைச் சட்டம்-நில உச்ச வரம்புச் சட்டம்-அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆணை.


34. கேள்வி : சட்டமன்றப் பதவியை 1984, 1991 இரண்டு முறை ராஜினாமா செய்தது ஏன்?

கலைஞர் : 1984ஆம் ஆண்டு நான் இலங்கைத் தமிழர்களுக்காகச் சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்தேன். 1991இல் நான் ஒருவன் மட்டுமே வெற்றிபெற்று மற்ற எல்லா இடங்களிலும் கழகம் தோற்றதால், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன்.


35.கேள்வி:நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன்-ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?

கலைஞர் : நினைவாற்றலுடன் கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப் பினருக்கும் முக்கியம்.


36. கேள்வி : சட்டமன்றத்தை அரசியல் விவாத மேடையாக்கலாமா?

கலைஞர் : விவாத மேடையாக ஆக்கலாம்-விரோத மேடையாகத்தான் ஆக்கக்கூடாது.


37. கேள்வி : 2001-2006 சட்டமன்றப் பணிகளில் உங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளாதது ஏன்?

கலைஞர் : யாரையும் மதிக்க விரும்பாத அன்றைய ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள்.


38. கேள்வி : நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று நினைத்ததே இல்லையா?

கலைஞர் : தொடக்கம் முதலே தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் என்ற அளவில் என்னை அய்க்கியப்படுத்திக்கொண்டு விட்டேன்.


39. கேள்வி : நீங்கள் கொண்டு வந்ததிலேயே விருப்பமான மக்கள் நலத்திட்டம்-முதன்மை இடத்தைப் பிடிப்பது எது?

கலைஞர் : சாதிமத பேதமின்றி ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். அதே நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சமத்துவபுரத் திட்டம்.


40. கேள்வி : சட்டமன்ற மரபு மீறப்பட்ட செயல் என்று எந்த நிகழ்வைச் சொல்வீர்கள்?

கலைஞர் : முரசொலிப் பத்திரிகை ஆசிரியரைச் சட்டமன்றத்திற்கு அழைத்துக் கூண்டிலே ஏற்றிக் கண்டனம் தெரிவித்த செயல்.


41. கேள்வி : சட்டமன்ற நிகழ்வுகளில் உங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று எதைச் சொல்வீர்கள்?

கலைஞர் : சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் வரக்கூடாது என்று முயற்சிசெய்து, அது நடக்காத நேரத்தில், மேலவையையே தமிழ் நாட்டில் என் ஒருவனுக்காகக் கலைத்த செயல் எனக்கு துரோகம் செய்வதாக நினைத்துச் செய்யப்பட்ட காரியமாகும்.


42. கேள்வி : உங்களைக் கவர்ந்த பெண் சட்ட மன்ற உறுப்பினர் யார்?

கலைஞர் : திருமதி.ஜோதியம்மாள்.


43. காமெடியாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர் யார்?

கலைஞர் : ஈரோடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திரு.தெட்சணாமூர்த்திக் கவுண்டர்.


44. கேள்வி : கேள்வி கேட்பது எளிதா? பதில் சொல்வது எளிதா?

கலைஞர் : பதில் சொல்லமுடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.


45. பொன்னான நாள் என்று எதைச் சொல்வீர்கள்?

கலைஞர் : மண்டல் கமிஷன் பரிந்துரையையொட்டி, மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட நாளைப் பொன்னான நாள் என்று கூறலாம்.


46. கேள்வி : தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டிஸ்மிஸ் ஆனபோது என்ன நினைத்தீர்கள்?

கலைஞர் : பதவியைத் தோளில் போட்டுக் கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக்கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.


47. கேள்வி : உங்கள் பேச்சைக் கேட்க அஞ்சுகம் அம்மையார் சட்டமன்றம் வந்திருக்கிறாரா?

கலைஞர் : வந்ததில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் சட்டமன்றத்திற்குச் சென்று வந்தவுடன், சட்ட மன்றத்தில் அன்று நடந்ததைப் பற்றி என்னைக் கேட்கத் தவறுவதில்லை.


48. கேள்வி : அஞ்சுகத் தாய் உங்கள் சட்டமன்றப் பேச்சை பத்திரிக்கையில் படித்துவிட்டுப் பாராட்டியது உண்டா?

கலைஞர் : அவர் உயிரோடு இருந்தவரை என்னுடைய பேச்சு ஒவ்வொன்றையும் பாராட்டியிருக்கிறார்.


49.கேள்வி : அண்ணா அவர்கள் பாராட்டிய சட்ட மன்றப் பேச்சு எது?

கலைஞர் : பெரும்பாலும் சட்டமன்றத்தில் நான் பேசிய அத்தனை பேச்சுகளையுமே அண்ணா அவர்கள் பாராட்டியிருக்கிறார்.


50. கேள்வி : உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர் களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப் படுத்துங்களேன்?

கலைஞர் : மனதிலே இடம் பெற்ற பிறகு தானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மந்திரிசபையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.

(நன்றி : ராணி வார இதழ் - கலைஞர் சட்டமன்ற பொன்விழா வாரத்தின் போது வெளியான பேட்டி)

Wednesday, July 04, 2007

கலைஞரின் மேதமை

நான் ஒரு இந்து என்று நினைத்துக் கொள்ளவோ,வெளியில் சொல்லிக்கொள்ளவோ மனதின் ஓரத்தில் உறுத்தல் இருந்தாலும் இன்னும் இந்து என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.இந்த இந்து என்ற சொல்லைத் தவிர்த்து வேறு என்ன சொல்லலாம் என்று இதுவரை நினைத்துக் கூட பார்த்தது இல்லை.


ஆனால் நம் தலைவர் கலைஞர் தனது 20ஆம் வயதுகளிலேயே தன் மதம் என்ன என்பதில் எவ்வளவு தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை அறியும் போது அவரது அறிவுத்திறனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.


1946இல் அவர் ஒரு வங்கியில் பங்கு வாங்குவதற்காக விண்ணப்பித்த விண்ணப்பம்.(மேலே படத்தில் உள்ளது).அதில் மதம் என்னும் இடத்தில் தமிழ் என தன் கைப்பட எழுதி இருக்கிறார்.


இந்த அரிய ஆவணம் எதிர்க்கட்சியினரால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.வெறும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்த கலைஞர் கோடிகோடியாய் சம்பாதித்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


அந்த ஆயிரம் ரூபாயே இந்த 60 ஆண்டுகளில் கோடி ரூபாயாக பெருகியிருக்கும்.திரையுலகத்துக்கு நேற்று வந்த வடிவேலே கார்,பங்களா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது 60 வருடங்களாக திரைத்துறையிலும்,பத்திரிக்கைத் துறையிலும் ஈடுபட்டு வரும் கலைஞர் கோடிகோடியாய் வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?


உடன்பிறப்புகளே மதம் என்று குறிப்பிட நேரும் இடங்களில் இனி தமிழ் என்றே தயங்காமல் சொல்லி தலைவன் வழி செல்வோம்.


Monday, July 02, 2007

தமிழிசை பாடும் தலித் ஓதுவார்!

நம் தோழர்கள் சொல்லும் மாமா வேலைகளுக்கு இடையேயும் மக்களுக்கான சில வேலைகளை திராவிட இயக்கங்கள் செய்துகொண்டுதானிருக்கின்றன. சென்ற வார ஆனந்த விகடனில் வந்த செய்தி ஒன்று கீழே :

"உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள் மழலை முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!"

ருத்ரதாண்டவம் ஆடும் ரௌத்ரசாமிக்கு தன் கசிந்துருகும் குறலால் தேவாரத் தாலாட்டுப் பாடுகிறார். அங்கயற்கண்ணி, பெண்ணாகிய பெருமானை ஆராதிக்கும் அங்கயற்கண்ணி, தமிழகத்தின் முதல் தலித் பெண் ஓதுவார். திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோயிலில் தமிழிசை பாடும் இவர். தமிழகக் கோயில்களில் தேவாரம் இசைக்கிறார்.

"திருச்சியின் ஒதுக்குப்புறமான செம்பட்டுதான் என் சொந்த ஊர். அப்பாவுக்குத் தோல் பதனிடுகிற தொழிற்சாலையில் கூலி வேலை. கிடைக்கிற வருமானத்தில் அண்ணன், தம்பி, அக்காள் என எங்கள் ஆறு பேரையும் வளர்ப்பது சிரமமா இருந்ததால, அம்மாவும் கூலி வேலைக்குப் போனாங்க. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எங்களை நல்லாப் படிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா, வருகிற வருமானம் வீட்டுச் செலவுக்கே போதுமானதா இல்லை. பத்தாம் வகுப்பு முடிச்ச கையோட நாமளும் வேலைக்குப் போனா என்னன்னு தோணுச்சு. அப்பா, வேணாம்மா! நீ மேல படி நாங்க கஷ்டப்பட்டாவது உன்னைப் படிக்க வைக்கிறோம்னாரு. நான் படிச்ச ஸ்கூலில் பாட்டுப் போட்டி நடத்துவாங்க. எனக்கு இயல்பாவே நல்லா பாட வரும்கிறதால, நான் பேர் கொடுத்துப் பாடுவேன். ஒரு வழியா தத்தித் தத்தி ப்ளஸ் டூ முடிச்சேன். மேலே படிக்க வைக்க அப்பாவால முடியலை.

நான் போய் தமிழக அரசு நடத்தும் இசைப் பள்ளியில் சேர்ந்து தமிழிசை படிக்க ஆரம்பிச்சேன். அப்போ, திருச்சி ஊர்க்காவல் படைக்கு ஆள் எடுத்தாங்க. அதில் போய்ச் சேர்ந்தேன். அதில் கொஞ்சம் பணம் கிடைச்சது. அதை வீட்டுச் செலவுக்குக் கொடுத்தேன். மூணு வருஷம் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்துக்கிட்டே இசைப் பள்ளியில் படிச்சேன். ஊர்க்காவல் படைங்கிறது முழு நேர போலீஸ் வேலை அல்ல. சமூக சேவையில் ஆர்வம் உள்ளவங்கள்ல தகுதியானவங்களைத் தேர்ந்தெடுத்து ஊக்கத்தொகை கொடுத்துப் பொதுச் சேவைக்குப் பயன்படுத்திக்கவாங்க. அது எனக்கு வசதியாகவும் திருப்தியாகவும் இருந்தது.

இசைப் பள்ளியல் எனக்கு ஆசிரியராக வந்தவர் சரவண மாணிக்கம். இசையோடு தமிழுணர்வையும் சேர்த்தே போதித்தார் அவர். இசையை, அதன் லாகவத்தை குறிப்பா தமிழிசையின் நுணுக்கங்களை எனக்கு அவர்தான் கத்துக் கொடுத்தார். தேவாரம், திருவாசகம் இவற்றில் எனக்கு ரசனையை ஏற்படுத்தி மூன்று ஆண்டுகளில் என்னை தமிழிசையின் பால் ஈர்ப்பும் ஆர்வமும் உள்ளவனாக மாற்றினார். அதன்பின் என் கையில் பலமாகப் பற்றிப் பிடிக்க இசையும், பாடகிதான் ஆக வேண்டும் என்கிற ஆர்வமும் தெளிவும் இருந்தது. ஊர்க்காவல் படை வேலையை விட்டேன். இதோ தமிழக அரசு என்னை தமிழிசை ஓதுவாராக நியமித்திருக்கிறது. திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோயிலில் தேவாரம் பாடிக்கொண்டு இருக்கிறேன். முதன் முதலாக ஒரு பெண்ணை அதுவும் ஒரு தலித் பெண்ணை ஓதுவாராக நியமிச்சதுக்காக தமிழக முதல்வர் கலைஞருக்கு என் நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன் என்று நெகிழ்கிறார் அங்கயற்கண்ணி.

எந்த இசையுமே சாமான்ய மக்களிடம் இருந்துதான் உருவாகுது. வயல்வெளிகளில் உடலுழைப்பில் ஈடுபடும் மக்களிடம் அழகான இசை இருக்கு. அவர்கள் எந்த இசைப் பள்ளியில் போய்ப் படித்தவர்கள்? தங்கள் குழந்தையை தொட்டிலில் போட்டுத் தாலாட்டுப் பாடுகிற ஒவ்வொரு கிராமத்துத் தாயும் ஒரு பாடகிதானே! என்னைப் போல தமிழகம் முழுக்கப் பல நுõறு பேர் தமிழிசை கற்க முன்வர வேண்டும் என்பது என் ஆசை. சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்ட என்னாலேயே இந்த இடத்துக்கு வர முடிஞ்சுதுன்னா, ஆரோக்கியமான சூழலில் வளரும் பெண்கள் சிகரமே தொடலாம்.

திருமறைகள்னு அழைக்கப்படும் தமிழிசைப் பண்கள் தமிழர்களின் இசைக் கருவூலம் தமிழிசையில் பண்டைக்காலத்தில் 103 பண்கள் இருந்திருக்கு. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழனின் முயற்சியால் இன்னிக்கு 23 பண்களில் திருமறையை ஓதிக்கொண்டு இருக்கிறோம். சில பேர் இந்தத் தமிழிசையை பஜனைப் பாடல்கள், அர்ச்சனைப் பாடல்கள்னு குறைச்சு மதிப்பிடறாங்க. ஆனா, இவை இறைவனைப் பாடுகிற பக்திப் பாடல்கள். சபாவில் பாடுகிற பாடல்களும் சரி, வயலோரத்தில் பாடுகிற பாடல்களும் சரி, தமிழிசையும் சரி... எல்லாமே சமம்தான். இசையில் ஏது உயர்வு, தாழ்வு?

ஓதுவாராக நான் என் கடமையைக் கவனத்துடனும் திருப்தியுடனும் செய்துட்டிருக்கேன். பக்தர்களும் என்னை அன்போடு ஏற்றுக் கொண்டு இருக்காங்க. இசையைத் தவிர என் வாழ்க்கையில் இனி வேறொரு விஷயத்துக்கு இடமில்லை. இந்தப் பிறவி முழுவதும் நான் ஆசை தீர தமிழிசை பாடிக் கொண்டு இருப்பேன். என்னிக்காவது ஒரு நாள், சிதம்பரம் நடராஜர் கோயிலில் போய்ப் பாடணும்கிறது என் ஆசை. நான் கற்றுக் கொண்ட இசையைப் பலருக்கும் கத்துக் கொடுக்கணும்கிற ஆசையும் உண்டு. அதுக்கு நான் என்னை முழுமையா தயார்படுத்திக்கணும். அதுக்கான முயற்சியில் தான் இப்போ நான் இருக்கேன்.

அம்மாவும் அப்பாவும் பட்ட கஷ்டமெல்லாம் போதும், வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிவிட்டேன். இப்ப அவங்க என்னோடதான் இருக்காங்க. குடும்ப சூழல் இப்பவும் கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனாலும் முன்பைவிட மனசு முழுக்க நம்பிக்கை நிறைஞ்சிருக்கு. தைரியம் பிறந்திருக்கு. கூடுதலாக இசை தரும் சந்தோஷம் மனசில் ரீங்காரம் பண்ணிக்கிட்டே இருக்கு என்றபடி கையில் உள்ள வெண்கலக் குழுட தானளக் கருவியில் தாளமிட்டபடி தேவாரம் பாடத் தொடங்குகிறார் அங்கயற்கண்ணி.