Monday, October 29, 2007

வாஜ்பாயி, அத்வானியை நீக்க வேண்டும் - கோவிந்தாச்சார்யா

பா.ஜ.க.வின் முன்னாள் பொதுச்செயலாளரான "உமா பாரதி புகழ்" கோவிந்தாச்சார்யா ராமர் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திர திட்டம் வருவதற்கு பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தான் அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார். இந்த "பாவத்தை" செய்த காரணத்திற்காக வாஜ்பாயி, அத்வானி போன்ற தலைவர்களை பா.ஜ.க.விலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி உள்ளார்

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ராமர் பாலத்தை இடிக்கும் யோசனையை அப்போதைய அமைச்சர் விஜய் கோயல் தான் முன்வைத்ததாகவும், பின்னர் அப்போதைய பா.ஜ.க.வின் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த சத்ருகன் சின்கா இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறி உள்ளார். ஆட்சியில் இருந்த போது ஒப்புதல் அளித்துவிட்டு இப்போது ராமர் பாலத்தை காப்பதற்கு பாடுபடுவடுவது போல் பா.ஜ.க. இரட்டை நாடகம் ஆடுவதாக அவர் கூறி உள்ளார்

தேசிய ஜல்லிகள் இப்போது என்ன சொல்கிறார்கள்?

0 comments: