Thursday, August 28, 2008

ஜெயாவுக்கு செல்வகணபதி எழுதிய கடிதம்!

அன்புள்ள அம்மா அவர்களுக்கு!

உங்களின் பாசத்திற்குரிய செல்வம் எழுதுவது. நீங்கள் டெல்-யில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபொழுது அப்பொழுது டெல்லியில் எல்.எல்.பி. படித் துக்கொண்டிருந்த மாணவனான என்னை சேலம் முன்னாள் எம்.பி. கண்ணன் உங்களது உதவி யாளராக நியமித்தார். அன்று முதல் செல்வம் என பாசமாக நீங்கள் அழைத்த போதெல்லாம் நாய்க்குட்டிபோல ஓடிவந்த என்னை இன்று நட்டாற்றில் விட்டுவிட்டீர்கள்.

98-ம் ஆண்டு திருநெல்வேல்யில் கட்சி மாநாடு நடத்த 3 கோடி ரூபாய் சசிகலா கேட்டார். கடன் வாங்கி கொடுத்தேன். அதை திருப்பிக்கேட்டேன். அன்று முதல் சசிகலா என்மீது கோபம் கொண்டார். அன்று முதல் எனக்கு இறங்கு முகம்தான். அதேநேரம் வாழப் பாடியாரை எதிர்த்து என்னை நிற்கவைத்தீர்கள். நான் அந்தத் தேர்தலில் ஜெயித்தேன். அந்த வெற்றியும் உழைப்பும் சசிகலா மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன். நடக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் பேச்சைக் கேட்டு செயல்படும் நீங்கள் அவர்களின் கைப்பாவையாகவே மாறிவிட்டீர்கள்.

2001-2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான வழக்குகளை எல்லாம் சரி செய்துகொண்டீர்கள். என் மீதான சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கை அப்படியே விட்டுவிட்டீர்கள். நீங்களும் நானும் குற்றவாளிகளாக இருந்த ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கை அதிகாரிகளைப் பயன்படுத்தி விடுவித்துக்கொண்ட நீங்கள் சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் என்னை விடுவித்துக்கொள்ள, நான் அதிகாரிகளைச் சந்திக்க எடுத்த முயற்சிகளை எல்லாம் தடுத்துவிட்டீர்கள்.

கடந்தவாரம் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 150 சாட்சிகளுக்கும் வாரண்ட் பிறப்பித்து ஆஜராக உத்தர விட்டுவிட்டார். அந்த வழக்கு வேகம் பெறப்போகிறது. இப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உங்களுடன் பேச பல முறை முயற்சி செய்தேன். சசி கலாவின் ஆட்கள் விடவில் லை. அதன்பிறகு என் மனைவிக்கு கேன்சர் என நான் சசிகலாவின் உறவினர் மூலம் சொல்லி அனுப்பியதால் தான் நீங்கள் என்னிடம் தொலை பேசியில் சில நிமிடங்கள் பேசினீர்கள். அப்பொழுது உங்களிடம் இந்த வழக்கு விபரங்களை சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

ஒருசில மாதங்களுக்கு முன்பு தலைமைக் கழகத்தில் நீங்கள் தி.மு.க.வுக்கு போகப் போகிறீர்களா? அதற்காக வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? என கேள்வி கேட்டீர்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்பொழுது எங்களைப்போன்ற கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எதுவும் செய்யாமல் நடுத்தெருவில் நிற்கவைத்தீர்கள். அதனால் தி.மு.க. அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே நீங்கள் தி.மு.க.வுக்குப் போகப்போகிறீர்களா? என விசாரணை நடத்துகிறீர்கள்.

ப்ளசண்ட் ஸ்டே, கலர் டி.வி., சுடுகாட்டு கூரை ஊழல் போன்ற வழக்குகளின் காரணமாக செல்வகணபதியால்தான் நான் ஜெயிலுக்குப் போனேன் என கட்சிக்காரர்களிடம் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள்.

நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

அன்று ஊழல் செய்து ஒவ்வொரு மந்திரியும் இவ்வளவு கப்பம் கட்டுங்கள் என உத்தரவிட்டது யார்? நீங்கள்தானே! அத னால்தானே நாங்கள் தவறு செய்தோம். ஊழல் வழக்குகளை சந்திக்கிறோம். இன்னமும் ஊழல் வழக்குகள் பல பாக்கியுள்ளது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

நன்றி!

இப்படிக்கு,

செல்வம் (எ)
டி.எம்.செல்வகணபதி

(அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மாஜி அமைச்சரும் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளருமான செல்வகணபதி எழுதிய கடிதம்தான் இது. இக்கடிதத்தைப் படித்துவிட்டுத்தான் ஜெயலலிதா, செல்வகணபதியை கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.)

Tuesday, August 26, 2008

அவாள் நமக்கு சவால் - (சோ) ராமசாமியுடன் ஒரு பேட்டி

இங்கே பல அம்பிகள் கலைஞரிடம் பேட்டி காண்கிறார்கள் அதே மாதிரி ஒரு உடன்பிறப்பு அம்பிகளின் குருநாதரான சோ ராமசாமியிடம் பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை

உடன்பிறப்பு: கலைஞருக்கு வயது ஆகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
(சோ) ராமசாமி: அம்பி! வாஜ்பேயியை பார் ஏற்கனவே ரிடையர் ஆகி கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறார், அத்வானி பிரதமர் ஆவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். அது போல் கலைஞரும் அத்வானி போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்

உடன்பிறப்பு: கலைஞர் ஏதாவது சொன்னால் உடன் கார்டூன் போடும் நீங்கள் ரஜினி மன்னிப்பு விஷயம் பற்றி இன்னும் எனக்கு தெரியாது என்று சொல்கிறீர்களே
(சோ) ராமசாமி: உண்மை தான் அம்பி! நான் எப்போதும் முரசொலி மட்டும் தான் வெளிவந்த உடனேயே படித்துவிடுவேன். மற்ற தினசரிகளை எல்லாம் பழைய பேப்பர் கடையில் தான் வாங்குவேன்

உடன்பிறப்பு: ஸ்டாலின் லண்டன் போனது மற்றும் ஜெயலலிதா கொடநாடு போய் ஓய்வு எடுத்தது பற்றி உங்கள் கருத்து
(சோ) ராமசாமி: அம்பி! ஸ்டாலின் லண்டனுக்கு என்னையும் அழைத்தால் கூட போயிருக்கமாட்டேன் ஏனென்றால் எனக்கு பஸ்போர்ட் எல்லாம் கிடையாது. ஆனால் ஜெயலலிதா உள்ளூர் கொடநாட்டுக்கு கூட என்னை அழைக்காததில் கொஞ்சம் வருத்தமே. அப்படி என்ன குறை கண்டுவிட்டார் என் ஜால்ராவில் என்று தெரியவில்லை

உடன்பிறப்பு: உங்களை போன்ற ஒத்த கருத்து உடைய ஞாநி மற்றும் மதன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
(சோ) ராமசாமி: அம்பி! நீ என்ன கேட்க வருகிறாய் என்பது எனக்கு புரிகிறது. ஞாநி ஒரு பொழைக்க தெரியாத மனிதர் அவர் இப்படி குமுதத்தில் மாங்கு மாங்கு என்று எழுதுவதற்கு பதில் அம்மாவிடம் சரணடைந்தால் அவர் காலத்துக்கும் செட்டில் ஆகிவிடலாம். என்னை தொடர்பு கொண்டால் நல்ல டீலாக முடித்து கொடுப்பேன் அதில் எனக்கு ஒரு கட்டிங் கொடுத்து விட வேண்டும். மதனை பற்றி நினைக்கும் போது எனக்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல அம்பி இருக்கிறான் என்று பெருமிதமாக இருக்கிறது

உடன்பிறப்பு: ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: அது பற்றி கணிக்க நான் ஆருடம் சொல்பவன் அல்ல

உடன்பிறப்பு: மோடி பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: இது ஜனநாயக நாடு அவர் பிரதமாராக வரும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது

உடன்பிறப்பு: கலைஞர் அவாள் நமக்கு சவால் என்று கவிதை பாடி இருக்கிறாரே
(சோ) ராமசாமி: பாவம் அவரால் கவிதை தான் எழுத முடியும் என்னை போல் கேணை தனமாக கார்ட்டூன் போட முடியுமா?

உடன்பிறப்பு: அப்போ அவர் செஞ்சா நீங்களும் செவீங்களா?
(சோ) ராமசாமி: வேற வழி இல்லை அம்பி, அவர் கவிதை எழுத அதை நக்கல் நையாண்டி பண்ணி தான் பொழப்பு ஓடுது அவர் முரசொலியில் எழுதவில்லை என்றால் துக்ளக்கை இழுத்து மூடிவிட்டு அம்மா சரணம் பாட போக வேண்டியது தான்

உடன்பிறப்புக்கு இப்போது லேசாக கண்ணை கட்ட ராம்ஸ் மாமியிடம் சாரி சோ ராமசாமியிடம் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார்