Sunday, January 30, 2011

மருதமலை மாமணியே முருகய்யா.....

கோடி கட்சிகளிலே நல்ல கட்சி எந்த கட்சி ?
கொங்குமணி தமிழ்நாட்டினிலே புனித கட்சி எந்த கட்சி ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் கட்சி எந்த கட்சி ?
தலையாய தலைவரெல்லாம் இருந்த கட்சி தி.மு.க கட்சி....
திருக்குவளை மாமணியே கலைஞரைய்யா
தொண்டர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா
(தி.மு.க)

தேர்தல் நந்நாளில் மைக்குடன் எந்நாளும்
தொண்டர்களை கொண்டாடும் எங்கய்யா
(தி.மு.க)

கோடிகள் கொடுத்தாலும் தலைவனை நான் மறவேன்
நாடியென் வினை தீர நீ உடனே வருவாயே
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த ஆறுமுகன் நீயே
எழுபிறப்பிலும் எங்க தலைவன் நீயே ஆ..
(தி.மு.க)

சக்தித் திருமகன் எங்கள் தலைவரை மறவேன் நான் மறவேன்
மக்கள் பிரச்சனை தீர்த்திட முதல்வராய் வருவாய் மீண்டும் வருவாய்ய்
தமிழ்நாட்டின் தலைமகனே அழகிய தமிழ்மகனே
தொண்டரெல்லாம் உனதுபலம் அதுவே உனது வெற்றிபலம்
காலமெல்லாம் முதல்வராக இருப்பாய் தலைவராக
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் முதல்வராய் கலைஞரய்யா

Friday, January 14, 2011

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்



Thursday, July 15, 2010

கார்ட்டூன்



முதல்வரை தாஜா பண்ணும் பச்சோந்தி பா.ம.க.




Thursday, June 03, 2010

கலைஞர் பிறந்த நாள் - குழந்தைகளுக்கு தங்க மோதிரம், செயின்



நன்றி - http://www.tutyonline.net/view/31_4483/20100603160617.html

Thursday, October 08, 2009

கார்ட்டூன்



Monday, July 20, 2009

குஜராத் கள்ளச்சாராயம் - "சோ" அய்யா கார்ட்டூன் போடுவாரா



தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும். சென்ற வாரம் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 150 வரை மாண்டதாக செய்தி வந்ததை பற்றி அவர் ஏதும் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. இதுவே தமிழ்நாட்டில் நடந்து இருந்தால் உருப்படியாக கருத்து எதுவும் சொல்ல தெரியாவிட்டாலும் தன்னுடைய நக்கல் பேச்சால் தமிழக அரசை காய்ச்சி எடுத்து இருப்பார். இன்னும் சில மாதங்களுக்கு இன்றே காட்டூன் வரைந்து ஓயாமல் வெளியிட்டு வருவார்.

குஜராத் கள்ளச்சாராயம் பற்றி அவர் ஏதும் கார்ட்டூன் வரைந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் சோ ஆதரவு தளம் என்று அறியப்பட்ட தளம் ஒன்றில் தான் இங்கே இணைக்கப்பட்டுள்ள படம் இடம் பெற்று இருந்தது. இந்த கார்ட்டூன் துக்ளக் இதழில் இடம் பெற்றதா என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் ஆதரவு கார்ட்டூன் என்பது மட்டும் கார்ட்டூனை பார்த்தாலே தெரிகிறது. இதே சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்று இத்தனை பேர் மாண்டு இருந்தால் இவர்கள் எல்லாம் மாண்டுவிட்ட அப்பாவிகளுக்கு போராடும் போராளிகளாக மாறி இருப்பார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்றதோ சோ ராமசாமி அவர்கள் ராம் ராஜ்ஜியமாக நினைக்கும் குஜராத்தில் அல்லவா. அதனால் 150 பேர் உயிரை குடித்த கள்ளச்சாராயத்தை குட்டி பிசாசு என்று அலட்சியமாக கருதுகிறார்கள். இங்கே இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கள்ளச்சாராய மார்க்கெட் குஜராத்தில் கொடிகட்டி பறக்கிறதாம் அந்த மார்க்கெட்டுக்கு ஆளும் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் அது இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. சோ அய்யாவுக்கு இது கூட தெரியாமல இருக்கும்

Friday, July 10, 2009

பா.ம.க. இனி மெல்ல அழியும்

சில தினங்களுக்கு முன் பா.ம.க. மீண்டும் சாதியை கையில் எடுக்கிறது என்ற செய்தியை மீள் பதிவிட்டு இருந்தோம். இப்போது கலைஞர் அவர்களும் அவ்வாறே ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி மாறி பச்சோந்தி தனத்தை பச்சையாக கடைப்பிடித்து வந்த பா.ம.க. வுக்கு தேர்தல் தோல்வி செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது. ஆனால் தோல்விகான பொறுப்பை ஏற்கும் பக்குவம் இன்னும் அதற்கு இல்லாததையே தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகள் காட்டுகின்றன

முதலில் பணம் வென்றது என்றார்கள் அப்புறம் அதிகாரம் வென்றது என்றார்கள். பின்னர் ஓட்டு இயந்திரத்தை குறை சொன்னார்கள். வெற்றி பெறும் போது நன்றாக இயங்கும் ஓட்டு இயந்திரம் தோல்வி அடைந்துவிட்ட போது மட்டும் கோளாறாக தெரிகிறது. திடீரென்று இனி வரும் தேர்தல்களில் கூட்டணி இல்லை என்று அறிக்கை வந்தது. இப்படி எந்த வழியில் செல்வது என்ற குழப்ப நிலையில் தான் இன்று பா.ம.க. இருக்கிறது

வேறு வழி எதுவும் தெரியாததால் இறுதியில் பா.ஜ.க. நிலைமைக்கே வந்துவிட்டது பா.ம.க. பா.ஜ.க. ஒவ்வொரு தேர்தலின் போதும் மத வெறியை கிளப்பும். தேர்தலில் தோல்வி அடைந்தால் மத வெறியை இன்னும் அதிக ஆவேசத்துடன் வெளிப்படுத்தும். மதத்தை கைவிட்டதால் தான் ராமர் தேர்தலில் கைவிட்டுவிட்டதாக சொல்லி மதவெறியை ஊதி ஊதி பெரிதாக்கும் அதே மாதிரி தேர்தலில் தோல்வி அடைந்த பின் பா.ம.கவுக்கும் ஞானோதயம் வந்துவிட்டது போல் இருக்கிறது. மீண்டும் வன்னிய எழுச்சி என்று ஜாதியை தூக்க ஆரம்பித்துவிட்டது.

தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் சாதி சாதி என்று வெறி பிடித்து அலைந்தால் பா.ம.க. இனி மெல்ல அழியும்