Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, June 25, 2008

குருவி பதிவு பற்றி அறிவு"சீவி" காமெடி

ஒரு முறை பேருந்து பயணத்தின் போது நிகழ்ந்த சம்பவம். பேருந்து ஓட்டுனருக்கும் சட்டை பையில் பேனா சொருகி இருந்த பயணி ஒருவருக்கும் வாக்குவாதம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருவரும் வாக்குவாதம் செய்துவிட்டு சோர்வடைந்த நேரம் பேனா ஆசாமி ஓட்டுனரை பார்த்து, சிலருக்கு ஸ்டியரிங்கை பிடித்துவிட்டா என்னவோ ஏரோபிளேன் ஓட்டுவதாக நினைப்பு என்றார். உடனே ஓட்டுனர் பதிலுக்கு சிலருக்கு சட்டை பையில் பேனா வைத்துவிட்டால் மேதாவின்னு நினைப்பு என்று பதிலடி கொடுத்தார். சட்டை பையில் பேனா வைத்து இருப்பவர்கள் படித்தவர்கள் என்பது பொதுவான கணிப்பு. அல்லது படித்தவர் போல் காட்டிக் கொள்ள சட்டை பையில் பேனா வைத்து இருப்பார்கள் சிலர். இந்த மனோபாவம் சில வலைப்பதிவர்களுக்கும் இருக்கிறது போலும்

நமது குருவி (குருவி படத்தின் மீது ஏன் இந்த கொலைவெறி - பிரமிட் சாய்மீராவுக்கு வேண்டுகோள்)
பதிவு பற்றிய சில அறிவு"சீவி" பதிவர்களின் கருத்தை பார்க்கும் போது அப்படி தான் எண்ண தோன்றுகிறது. ஒரு வலைப்பூ ஆரம்பித்து பதிவுகள் எழுதிவிட்டா என்னவோ தாங்கள் மேதாவி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் மற்றவர்களும் அவர்களை போல் மட்டும் தான் சிந்திக்க வேண்டுமாம். உடன்பிறப்புகளை விசிலடிச்சான் குஞ்சுகள், பிரியாணி பொட்டல குஞ்சுகள் என்று விமர்சிக்கும் இவர்கள் தங்கள் வலைப்பூவுக்கு வரும் பின்னூட்டங்களை பிரியாணி பொட்டலமாக கருதும் இவர்கள் தங்களுக்கு ஜிங்ஜாங் அடிக்கும் சக பதிவர்களின் வலைப்பூவில் சென்று விசிலடித்து பின்னூட்டம் இடும் இவர்கள் எந்த வகையில் வேறுபட்டவர்கள் என்று தெரியவில்லை. பொதுவாக உடன்பிறப்புகள் தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் இவர்கள் அறிவு"சீவி" தனம் என்று பண்ணும் காமெடி தாங்க முடியவில்லை

அய்யா மேதாவிகளே உங்களுக்கு தான் அறிவு"சீவி" என்று இமேஜ் எல்லாம் இருக்கு. அதனால் உங்களால் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வந்து எழுத முடியாது ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எங்களுக்கு தோன்றுவதை எழுதாமல் இருக்க முடியாது. இறுதியாக நம்ம சாத்தான்குளத்து அண்ணாச்சி சொன்னதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். "ஊருல நாலு பேரு உடுக்கு உடுக்குன்னு பேசுனா மீதி நாலு பேரு *டுக்கு *டுக்குன்னு புலம்பத்தான் செய்வான". இதில் யார் எந்த நால்வர் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

Friday, June 20, 2008

குருவி படத்தின் மீது ஏன் இந்த கொலைவெறி - பிரமிட் சாய்மீராவுக்கு வேண்டுகோள்

சமீபத்தில் வெளியான குருவி படம் பற்றி ஒரு மோசமான மனோபாவம் குறிப்பிட்ட சில ரசிகர்களிடமும், சில வலைப்பதிவர்களிடம் நிலவுகிறது. குருவி படம் என்னவோ இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களிலேயே மட்டமான படம் என்பது போல் ஒரு தோற்றத்தை நிறுவ ஒரு கூட்டம் இரவு பகலாக கண் விழித்து ரூம் போட்டு யோசித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் துக்ளக் கார்ட்டூன் வராதது தான் பாக்கி

குருவி படம் கில்லி அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பை ஏற்றுக் கொள்ள சிலருக்கு மனம் இடம் கொடுக்க. அதனால் அவர்கள் திட்டமிட்டு குருவி படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். குருவி படத்துக்கு முன் வெளிவந்த இளைய தளபதியின் முந்தைய படத்துக்கும் மறுபட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்போது எல்லாம் தென்படாத கொலைவெறி குருவி படத்துக்கு மட்டும் இவர்களுக்கு வந்து இருக்கிறது என்பதே இது ஒரு சதிவலை என்பதற்கான ஆதாரம். குருவி படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே சிலர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்து இருந்தார்கள். இந்த விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில் இவர்கள் எந்த பேதமும் இல்லாத சினிமா ரசிகர்கள். ஆனால் இப்போது இணையம் மற்றும் மின்னஞ்சல் பிரச்சாரம் நிச்சயம் ஒரு சதி வலை.

இதற்கு எல்லாம் காரணம் என்ன என்று விளக்க தேவை இல்லை. தலைவர் கலைஞர் அவர்களின் குடும்பத்தில் இருந்து மேகும் ஒருவர் கலைத் துறையில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று இவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரமிட் சாய்மீரா நினைத்தால் முடியும். தசாவதாரம் படத்தின் வசூல் 100 கோடி என்று தங்கள் வலைப்பூவில் செய்தி வெளியிட்ட பிரமிட் சாய்மீரா குருவி படத்தின் வசூல் பற்றியும் செய்தி வெளியிட்டால் இந்த கொலைவெறி கூட்டத்தின் பிரச்சாரத்துக்கு சாவு மணி அடிக்கப்படும்