Wednesday, June 25, 2008

குருவி பதிவு பற்றி அறிவு"சீவி" காமெடி

ஒரு முறை பேருந்து பயணத்தின் போது நிகழ்ந்த சம்பவம். பேருந்து ஓட்டுனருக்கும் சட்டை பையில் பேனா சொருகி இருந்த பயணி ஒருவருக்கும் வாக்குவாதம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருவரும் வாக்குவாதம் செய்துவிட்டு சோர்வடைந்த நேரம் பேனா ஆசாமி ஓட்டுனரை பார்த்து, சிலருக்கு ஸ்டியரிங்கை பிடித்துவிட்டா என்னவோ ஏரோபிளேன் ஓட்டுவதாக நினைப்பு என்றார். உடனே ஓட்டுனர் பதிலுக்கு சிலருக்கு சட்டை பையில் பேனா வைத்துவிட்டால் மேதாவின்னு நினைப்பு என்று பதிலடி கொடுத்தார். சட்டை பையில் பேனா வைத்து இருப்பவர்கள் படித்தவர்கள் என்பது பொதுவான கணிப்பு. அல்லது படித்தவர் போல் காட்டிக் கொள்ள சட்டை பையில் பேனா வைத்து இருப்பார்கள் சிலர். இந்த மனோபாவம் சில வலைப்பதிவர்களுக்கும் இருக்கிறது போலும்

நமது குருவி (குருவி படத்தின் மீது ஏன் இந்த கொலைவெறி - பிரமிட் சாய்மீராவுக்கு வேண்டுகோள்)
பதிவு பற்றிய சில அறிவு"சீவி" பதிவர்களின் கருத்தை பார்க்கும் போது அப்படி தான் எண்ண தோன்றுகிறது. ஒரு வலைப்பூ ஆரம்பித்து பதிவுகள் எழுதிவிட்டா என்னவோ தாங்கள் மேதாவி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் மற்றவர்களும் அவர்களை போல் மட்டும் தான் சிந்திக்க வேண்டுமாம். உடன்பிறப்புகளை விசிலடிச்சான் குஞ்சுகள், பிரியாணி பொட்டல குஞ்சுகள் என்று விமர்சிக்கும் இவர்கள் தங்கள் வலைப்பூவுக்கு வரும் பின்னூட்டங்களை பிரியாணி பொட்டலமாக கருதும் இவர்கள் தங்களுக்கு ஜிங்ஜாங் அடிக்கும் சக பதிவர்களின் வலைப்பூவில் சென்று விசிலடித்து பின்னூட்டம் இடும் இவர்கள் எந்த வகையில் வேறுபட்டவர்கள் என்று தெரியவில்லை. பொதுவாக உடன்பிறப்புகள் தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் இவர்கள் அறிவு"சீவி" தனம் என்று பண்ணும் காமெடி தாங்க முடியவில்லை

அய்யா மேதாவிகளே உங்களுக்கு தான் அறிவு"சீவி" என்று இமேஜ் எல்லாம் இருக்கு. அதனால் உங்களால் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வந்து எழுத முடியாது ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எங்களுக்கு தோன்றுவதை எழுதாமல் இருக்க முடியாது. இறுதியாக நம்ம சாத்தான்குளத்து அண்ணாச்சி சொன்னதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். "ஊருல நாலு பேரு உடுக்கு உடுக்குன்னு பேசுனா மீதி நாலு பேரு *டுக்கு *டுக்குன்னு புலம்பத்தான் செய்வான". இதில் யார் எந்த நால்வர் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

7 comments:

Anonymous said...

//உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எங்களுக்கு தோன்றுவதை எழுதாமல் இருக்க முடியாது. //

கரக்ட். குருவிக்கு ஏன் ஆஸ்கார் குடுக்க கூடாதுனு அடுத்த பதிவுல எழுதுங்க உ.பி.

said...

நல்ல பதிவு உடன்பிறப்பு :-)

உங்களுடைய உடன்பிறப்பு மின்னஞ்சலுக்கு ஒரு மடல் அனுப்பி இருக்கிறேன். கமல்ரசிகன் வலைப்பூவில் இணைவதற்காக, விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளவும்!

Anonymous said...

உடன்பிறப்பே!
உன் விசுவாசம் கண்டு மலைத்தேன். எதிரிகளை கண்டு நகைத்தேன்.

தமிழ் மூன்றேழ்த்து
விஜய் மூன்றேழ்த்து
த்ரிஷா மூன்றேழ்த்து
தரணி மூன்றேழ்த்து
குருவி மூன்றேழ்த்து
தம்பி மூன்றேழ்த்து

தளராதே! தடைகள் உடை.
நம்மை எதிர்ப்பவன் ஒரு சடை!

குருவி ஒரு திரைகாவியம் மட்டுமல்ல, தமிழர்களின் சரித்திரம். எதிரிகள் எம்மாத்திரம்?

said...

ரொம்ப சரி. குருவி ஆஸ்கார் விருது வாங்கி இவர்கள் மூஞ்சில் கரியை பூசனும்.

இவர்களுக்கு குருவி பார்ட் 2 தான் சரியான பதிலடி

யேய்...கு..கு..குருவி குருவி குருவி அடிச்சா....

Anonymous said...

ரொம்ப சரி. குருவி ஆஸ்கார் விருது வாங்கி இவர்கள் மூஞ்சில் கரியை பூசனும்.

இவர்களுக்கு குருவி பார்ட் 2 தான் சரியான பதிலடி

Repeattu !!!!!
Dr. Vijay vaaluha !!!!!!

Anonymous said...

//"ஊருல நாலு பேரு உடுக்கு உடுக்குன்னு பேசுனா மீதி நாலு பேரு *டுக்கு *டுக்குன்னு புலம்பத்தான் செய்வான".///

Super Udan Pirappu

said...

கருணாநிதியின் பேரன் தயாரித்தார் என்ற ஒரே காரணுத்துக்காக இப்படியா?
நல்லா பாடுபடுறீங்க கருணாநிதியின் குடும்பத்துக்கு. வாழ்க தமிழனின் மாண்பு.