மதுரையில் நடந்த தினகரன் - அழகிரி மோதலால் ஏற்பட்ட வன்முறையும் அதனால் சிலர் மாண்டதும் மிகவும் வருந்தத்தக்கது. முதல்வரும் இது குறித்து சட்டப்பேரவையில் மிகவும் வருத்தம் தெரிவித்தார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கை போல் குற்றவாளிகளை காப்பாற்ற முயலாமல் தன் கட்சியினர் என்றும் பாராமல் சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து இருக்கிறார். கலைஞருக்கு பொன்விழா கொண்டாடும் நேரத்தில் நடந்துள்ள இந்த அசம்பாவிதம், மற்றும் அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் முடிந்த அளவுக்கு ஆதாயம் தேட முயன்ற எதிர்க்கட்சிகள் இவை எல்லாம் அவருக்கு மக்களிடையே அனுதாபத்தை கூட்டி உள்ளது
டாக்டர் கலைஞரின் ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அன்று தேர்தல் அறிக்கையை நையாண்டி செய்தவர்கள் இன்று வாயடைத்து போய் இருக்கிறார்கள். அட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சிறந்த முதல்வர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார் டாக்டர் கலைஞர் அவர்கள். சேது சமுத்திரம் திட்டத்தை முடக்கி கலைஞர் ஆட்சியின் சாதனைகளுக்கு முட்டுக்கட்டை போட முயன்றனர். இந்த திட்டங்கள் எல்லாம் பலன் அளிக்காமல் போகவே கலைஞர் ஆட்சியை குறை கூற வழி தெரியாது விழி பிதுங்கி நின்றார்கள்
அரசியலில் கலைஞருடன் மோதி வெல்வது முடியாது என்று அறிந்த இவர்கள் மதுரையில் நடந்த வன்முறையை பயன்படுத்திக் கொண்டு கலைஞர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றனர். மதுரை பிரச்சினைக்கு முன்பே பொன்விழா என்ற பேச்சு துவங்கிய போதே அதை வேண்டாம் என்று மறுத்தவர் கலைஞர் அவர்கள். மதுரை பிரச்சினையை மையமாக வைத்து பல கற்பனை கதைகளை புனைந்து உலவவிட்டு இருக்கிறார்கள். பொன்விழா நாயகனுக்கு வந்த சோதனையை கண்டு மக்களுக்கு அவர் மீது அனுதாபம் கூடி இருக்கிறது. பொன்விழா காணும் முதல்வரை நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்
Showing posts with label கலைஞர் 50. Show all posts
Showing posts with label கலைஞர் 50. Show all posts
Friday, May 11, 2007
Tuesday, May 08, 2007
''கலைஞர் ஒரு வழிகாட்டி'' - அதிமுக பிரமுகர் பெருமிதம்!
''கலைஞர் ஒரு வழிகாட்டி''
- அ.தி.மு.க. சட்டமன்ற ஆலோசகர் க.சுப்பு பேட்டி!
எதிர்க்கட்சியில் தி.மு.க. இருந்தபோது அதன் உறுப்பினர்களாக இருந்த மூன்று இளைஞர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதுக்கும் வெளியேற்றப்பட்டார்கள்.
அந்த மூவரும் "இடி, மின்னல், மழை' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் வலம் வந்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டைப் பற்றி விவாதித்தார்கள்.
"இடி' என்ற தலைப்பில் ரகுமான்கான், "மின்னல்' என்ற தலைப்பில் துரைமுருகன், இறுதியில் "மழை' என்ற தலைப்பில் க. சுப்பு ஆகியோர் பேசினார்கள்.
அவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்றப் பொன்விழா ஆண்டையொட்டி அவருடைய பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி இங்கே தன்னுடைய கருத்துக்களை ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது உள்ளபடியே பதிவு செய்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்ற ஆலோசகராக இருக்கும் க. சுப்பு!
முதலாவதாக 1957ல் அசெம்பிளியில் நுழைந்ததில் இருந்து கலைஞரின் சட்டமன்றப் பணிகள் சரியாகவே இருக்கின்றன.
ஜனநாயக அமைப்பை மக்களுக்குப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். திராவிட நாடு கொள்கையைக் கைவிட்ட அண்ணா, "நாட்டுப் பிரிவினைக்கான காரணங்கள் தொடருகின்றன' என்றார். அதைத்தான் பிறகு "மாநிலத்தில் சுயாட்சி; மத்தியிலே கூட்டாட்சி' என்று வடிவமைத்தார் கலைஞர். நாட்டைப் பிரிவினை செய்யத் துடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு "மாநில சுயாட்சி' என்ற வடிவில் பதில் கொடுத்தார்.
அதுவே நாளைடைவில் "மத்திய-மாநில உறவுகள்' என்றும், "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்' என்றும் கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. அதே சமயத்தில் அதிக அதிகாரம் என்பதை சட்டத்திற்குட்பட்டு பெறவே ராஜமன்னார் கமிஷனை அமைத்தார்.
இதே போல் குஜராத்தில் இருந்து அப்போது முதல்வராக இருந்த பாபுபாய் பட்டேல், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, கேரள முதல்வராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போன்ற தலைவர்களை எல்லாம் தமிழகத்திற்கு அழைத்து வந்து இதுபற்றிப் பேச கூட்டம் போட்டார்.
அதிகாரப் பகிர்வு குறித்த ராஜமன்னார் கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்திலேயே வைத்து, இது மக்கள் கோரிக்கை என்பதை இந்தியப் பேரரசிற்கு எடுத்துக் காட்டினார். பிறகு மத்திய அரசே இப்படி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது பற்றி சர்க்காரியா கமிஷன் போட்டது. தற்போதுகூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நீதிபதி பூஞ்ச் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆராய கமிஷன் நியமித்துள்ளது.
ஆகவே மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை மாநிலங்களுடன் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதற்கு உருவம் கொடுத்தவர் கலைஞர் என்றால் மிகையாகாது.
இரண்டாவதாக மது விலக்குக் கொள்கை! இதை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும்; அரசுக்கு வருமானமும் போகும் என்பது தெரிந்ததே! ஆட்சிக்கு வந்த கலைஞர், அன்று ராஜாஜி சொன்னதைக்கூட கேட்காமல் மதுவிலக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
அதற்குக் காரணம் சொன்ன அவர், "கொளுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்தின் உள்ளே கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாளைக்குத்தான் தமிழகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்?' என்று கேள்வி எழுப்பினார்.
"தமிழகத்தைச் சுற்றியுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை எப்படிக் கொண்டு வர முடியும்?' என்ற அவரது வாதத்திற்கு அவையில் கொடுத்த இந்த உதாரணம் என்னை மிகவும் கவர்ந்தவை களில் ஒன்று!
மூன்றாவதாக நிலச் சீர்திருத்தம். காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்ட நில உச்சவரம்புச் சட்டத்தில் -ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும், அதுதவிர வேறு சில விதிவிலக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. "உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று கம்யூனிஸ்டுகள் போராடும் போது, "ஏறு பவனுக்கே ரயில் சொந்தமான்னேன்! முடி வெட்டுபவனுக்கே தலை சொந்தமான்னேன்!' என்றெல்லாம் கிண்டலடித்தவர்தான் பெருந்தலைவர் காமராஜர்.
ஆனால் அண்ணாவோ "காங்கிரஸ்காரர்கள் கொண்டு வந்தது நில உச்சவரம்பு சட்டமல்ல. அது மிச்ச வரம்பு சட்டம்' என்றே சாடினார்.
கம்யூனிஸ்டுகளின் போராட்டத்திற்கு மதிப்புக் கொடுத்து நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்த கலைஞர், "ஒரு குடும்பத்திற்கு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர்தான் வைத்துக் கொள்ளளாம்' என்று உத்திரவிட்டார். காங்கிரஸ் கால சட்டத்தில் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகளையும் ரத்து செய்தார்.
ஆனாலும் நிலங்கள் பினாமி பெயர்களில் இருந்ததால் பெருவாரியான நிலங்களை எடுக்க முடியவில்லை. அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த சீனிவாசராவ், எம்.காத்தமுத்து, மணலி கந்தசாமி ஆகியோர் தலைமையில் நிலமீட்புப் போராட்டமே நடத்தினார்கள்.
அதில் பி. சீனிவாசராவுக்குத்தான் (பி.எஸ்.ஆர்.) திருத்துறைப்பூண்டியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் கலைஞர்.
நான்காவதாக பஸ்களைத் தேசியமயமாக்கியது கலைஞர்தான்! முதலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை எல்லாம் தேசியமயமாக்கினார். ஆனால் நீதிமன்றம் போட்ட உத்திரவால் அது தடைப்பட்டது. ஆனாலும் அதை விடவில்லை! அரசு போக்குவரத்துக் கழகங்கள் பலவற்றை உருவாக்கினார்.
இன்று போக்குவரத்து "சீப்பாக' இருக்கிறது என்றால் அவர் உருவாக்கிய பஸ் போக்குவரத்துக் கழகங்கள்தான் காரணம். போக்குவரத்தை நாட்டுடைமையாக்கியது தமிழகத்தில்தான் வெற்றி பெற்றது.
ஐந்தாவதாக தமிழ் மொழிக்காகச் செய்த சாதனை! தமிழை ஆட்சி மொழியாக்கியதில் ஆரம்பித்து, தற்போது நீதிமன்றங்களில் தமிழ் என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். அண்ணா கொண்டு வந்த இரு மொழித்திட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றி, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காகவும் செயல்படுத்தி வருவது மறுக்க முடியாதது. அதில் பல மறு மலர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளார்.
ஆறாவதாக சட்டமன்றத்தில் அனைவரும் உதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய தலைவர் கலைஞர். அவர் மேல்சபையிலும், சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.
அவையில் அவரது பேச்சுக்கள், முன் மாதிரிகளாகவும் மற்றவர்கள் கடைப்பிடிப்பதற்கு ஏற்ற உதாரணங்களாகவுமே திகழ்ந்து கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது அவரது வாதங்கள், சட்டமன்ற உரைகள் போன்றவற்றில் அவைக் குறிப்பில் ஏற்றமுடியாத வார்த்தை ஏதுமிருக்காது.
அமைச்சராக இருக்கும் போது எதிர்க்கட்சி யினரின் கருத்தை மதித்துப் பதில் சொல்லும் பக்குவம் இருக்கும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் இணைந்ததுதான் சட்டமன்ற ஜனநாயகம் என்பது அவரது அவை நடவடிக்கை களில் எதிரொலிக்கும்.
அந்த வகையில் இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு தனிப் பங்களிப்பு கலைஞருக்கு உண்டு. ஏழாவதாக நிர்வாகத் துறையில் திறம்படச் செயல்படுபவர். அரசு நிர்வாக எந்திரத்தை மக்களுடைய சேவைக்குரிய கருவியாக மாற்றி, விரைவான செயல்களுக்கு வித்திட்டவர்.
இவரது திறமையை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அண்ணா மறைவிற்குப் பிறகு "யார் முதல்வர்?' என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர் பெயரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரே முன்மொழிந்தார் என்பதை யாரும் மறக்க முடியாது. கலைஞருடைய உழைப்பு, கூர்ந்த மதி, அடித்தளத்து மக்களிடம் கொண்டிருக்கும் அளவு கடந்த ஈடுபாடு ஆகியவை அவர்தான் முதல்வராக வர வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையே சொல்ல வைத்தது.
எட்டாவதாக "சுரண்டலற்ற சமத்துவம் அமைப்பதே கழகத்தின் குறிக்கோள்' என்று அறிவித்தார் அண்ணா. அதனையே செம்மைப் படுத்தி, "ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' என்று சபதம் ஏற்றார் கலைஞர். "உழைக்கின்ற மக்களே புரட்சியின் முன்னணிப் படையினர் என்றார் மார்க்ஸ்!
அண்ணாவோ, "திராவிட இனமே உழைக்கும் மக்கள்தான்' என்றார். அந்த வகையில் பார்த்தால் கலைஞர் கால ஆட்சியில்தான் அடித்தளத்து மக்கள் கல்வியறிவு பெற்று, ஆட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் அமரும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.
அம்பாசங்கர் கமிஷன் போன்றவற்றை நியமித்து அடித்தட்டு மக்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தவர் கலைஞர் என்று சொல்வதே சாலப்பொருத்தமாக இருக்கும்.
ஒன்பதாவதாக சமூக நீதி! அது தி.மு.க.வின் உயிர் மூச்சான கொள்கை. அதிலும் மற்ற மாநிலங் களுக்கு "லீடிங் எக்ஸாம்பிளாக' திகழ்ந்து கொண்டிருப்பவர் கலைஞர்தான். அதனால்தான் இன்று சமூக நீதிக் கோட்பாட்டை இந்திய நாடே தன்னுடைய கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றி வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு வழிகாட்டியாகத் திகழ்பவர் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
பத்தாவதாக ஜனநாய அமைப்பைப் பயன்படுத்துவது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உருவாக்க ஆயுதமேந்திய புரட்சி தேவையில்லை, ஜனநாயக அமைப்பே போதும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் கலைஞர்.
ஆட்சி இருந்தால் புரட்சி தேவையில்லை! மக்களுக்குத் தேவையான எதையும் ஆட்சியை வைத்தே சாதிக்க முடியும் என்று செய்து காட்டியதால்தான் இன்று பாராளுமன்ற சபாநாயகராக இருக்கும் சோம்நாத் சாட்டர்ஜி போன்றவர்கள் எல்லாம் பாராட்ட வருகிறார்கள்.
அந்த வகையில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து சட்டமன்றப் பொன்விழா ஆண்டில் கால் எடுத்து வைத்துள்ள கலைஞர், வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் என்பதைத்தான் இந்த நேரத்தில் சொல்ல முடியும்.
(நன்றி : தமிழன் எக்ஸ்பிரஸ் )
- அ.தி.மு.க. சட்டமன்ற ஆலோசகர் க.சுப்பு பேட்டி!
எதிர்க்கட்சியில் தி.மு.க. இருந்தபோது அதன் உறுப்பினர்களாக இருந்த மூன்று இளைஞர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதுக்கும் வெளியேற்றப்பட்டார்கள்.
அந்த மூவரும் "இடி, மின்னல், மழை' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் வலம் வந்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டைப் பற்றி விவாதித்தார்கள்.
"இடி' என்ற தலைப்பில் ரகுமான்கான், "மின்னல்' என்ற தலைப்பில் துரைமுருகன், இறுதியில் "மழை' என்ற தலைப்பில் க. சுப்பு ஆகியோர் பேசினார்கள்.
அவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்றப் பொன்விழா ஆண்டையொட்டி அவருடைய பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி இங்கே தன்னுடைய கருத்துக்களை ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது உள்ளபடியே பதிவு செய்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்ற ஆலோசகராக இருக்கும் க. சுப்பு!
முதலாவதாக 1957ல் அசெம்பிளியில் நுழைந்ததில் இருந்து கலைஞரின் சட்டமன்றப் பணிகள் சரியாகவே இருக்கின்றன.
ஜனநாயக அமைப்பை மக்களுக்குப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். திராவிட நாடு கொள்கையைக் கைவிட்ட அண்ணா, "நாட்டுப் பிரிவினைக்கான காரணங்கள் தொடருகின்றன' என்றார். அதைத்தான் பிறகு "மாநிலத்தில் சுயாட்சி; மத்தியிலே கூட்டாட்சி' என்று வடிவமைத்தார் கலைஞர். நாட்டைப் பிரிவினை செய்யத் துடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு "மாநில சுயாட்சி' என்ற வடிவில் பதில் கொடுத்தார்.
அதுவே நாளைடைவில் "மத்திய-மாநில உறவுகள்' என்றும், "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்' என்றும் கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. அதே சமயத்தில் அதிக அதிகாரம் என்பதை சட்டத்திற்குட்பட்டு பெறவே ராஜமன்னார் கமிஷனை அமைத்தார்.
இதே போல் குஜராத்தில் இருந்து அப்போது முதல்வராக இருந்த பாபுபாய் பட்டேல், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, கேரள முதல்வராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போன்ற தலைவர்களை எல்லாம் தமிழகத்திற்கு அழைத்து வந்து இதுபற்றிப் பேச கூட்டம் போட்டார்.
அதிகாரப் பகிர்வு குறித்த ராஜமன்னார் கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்திலேயே வைத்து, இது மக்கள் கோரிக்கை என்பதை இந்தியப் பேரரசிற்கு எடுத்துக் காட்டினார். பிறகு மத்திய அரசே இப்படி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது பற்றி சர்க்காரியா கமிஷன் போட்டது. தற்போதுகூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நீதிபதி பூஞ்ச் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆராய கமிஷன் நியமித்துள்ளது.
ஆகவே மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை மாநிலங்களுடன் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதற்கு உருவம் கொடுத்தவர் கலைஞர் என்றால் மிகையாகாது.
இரண்டாவதாக மது விலக்குக் கொள்கை! இதை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும்; அரசுக்கு வருமானமும் போகும் என்பது தெரிந்ததே! ஆட்சிக்கு வந்த கலைஞர், அன்று ராஜாஜி சொன்னதைக்கூட கேட்காமல் மதுவிலக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
அதற்குக் காரணம் சொன்ன அவர், "கொளுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்தின் உள்ளே கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாளைக்குத்தான் தமிழகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்?' என்று கேள்வி எழுப்பினார்.
"தமிழகத்தைச் சுற்றியுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை எப்படிக் கொண்டு வர முடியும்?' என்ற அவரது வாதத்திற்கு அவையில் கொடுத்த இந்த உதாரணம் என்னை மிகவும் கவர்ந்தவை களில் ஒன்று!
மூன்றாவதாக நிலச் சீர்திருத்தம். காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்ட நில உச்சவரம்புச் சட்டத்தில் -ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும், அதுதவிர வேறு சில விதிவிலக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. "உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று கம்யூனிஸ்டுகள் போராடும் போது, "ஏறு பவனுக்கே ரயில் சொந்தமான்னேன்! முடி வெட்டுபவனுக்கே தலை சொந்தமான்னேன்!' என்றெல்லாம் கிண்டலடித்தவர்தான் பெருந்தலைவர் காமராஜர்.
ஆனால் அண்ணாவோ "காங்கிரஸ்காரர்கள் கொண்டு வந்தது நில உச்சவரம்பு சட்டமல்ல. அது மிச்ச வரம்பு சட்டம்' என்றே சாடினார்.
கம்யூனிஸ்டுகளின் போராட்டத்திற்கு மதிப்புக் கொடுத்து நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்த கலைஞர், "ஒரு குடும்பத்திற்கு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர்தான் வைத்துக் கொள்ளளாம்' என்று உத்திரவிட்டார். காங்கிரஸ் கால சட்டத்தில் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகளையும் ரத்து செய்தார்.
ஆனாலும் நிலங்கள் பினாமி பெயர்களில் இருந்ததால் பெருவாரியான நிலங்களை எடுக்க முடியவில்லை. அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த சீனிவாசராவ், எம்.காத்தமுத்து, மணலி கந்தசாமி ஆகியோர் தலைமையில் நிலமீட்புப் போராட்டமே நடத்தினார்கள்.
அதில் பி. சீனிவாசராவுக்குத்தான் (பி.எஸ்.ஆர்.) திருத்துறைப்பூண்டியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் கலைஞர்.
நான்காவதாக பஸ்களைத் தேசியமயமாக்கியது கலைஞர்தான்! முதலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை எல்லாம் தேசியமயமாக்கினார். ஆனால் நீதிமன்றம் போட்ட உத்திரவால் அது தடைப்பட்டது. ஆனாலும் அதை விடவில்லை! அரசு போக்குவரத்துக் கழகங்கள் பலவற்றை உருவாக்கினார்.
இன்று போக்குவரத்து "சீப்பாக' இருக்கிறது என்றால் அவர் உருவாக்கிய பஸ் போக்குவரத்துக் கழகங்கள்தான் காரணம். போக்குவரத்தை நாட்டுடைமையாக்கியது தமிழகத்தில்தான் வெற்றி பெற்றது.
ஐந்தாவதாக தமிழ் மொழிக்காகச் செய்த சாதனை! தமிழை ஆட்சி மொழியாக்கியதில் ஆரம்பித்து, தற்போது நீதிமன்றங்களில் தமிழ் என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். அண்ணா கொண்டு வந்த இரு மொழித்திட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றி, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காகவும் செயல்படுத்தி வருவது மறுக்க முடியாதது. அதில் பல மறு மலர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளார்.
ஆறாவதாக சட்டமன்றத்தில் அனைவரும் உதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய தலைவர் கலைஞர். அவர் மேல்சபையிலும், சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.
அவையில் அவரது பேச்சுக்கள், முன் மாதிரிகளாகவும் மற்றவர்கள் கடைப்பிடிப்பதற்கு ஏற்ற உதாரணங்களாகவுமே திகழ்ந்து கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது அவரது வாதங்கள், சட்டமன்ற உரைகள் போன்றவற்றில் அவைக் குறிப்பில் ஏற்றமுடியாத வார்த்தை ஏதுமிருக்காது.
அமைச்சராக இருக்கும் போது எதிர்க்கட்சி யினரின் கருத்தை மதித்துப் பதில் சொல்லும் பக்குவம் இருக்கும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் இணைந்ததுதான் சட்டமன்ற ஜனநாயகம் என்பது அவரது அவை நடவடிக்கை களில் எதிரொலிக்கும்.
அந்த வகையில் இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு தனிப் பங்களிப்பு கலைஞருக்கு உண்டு. ஏழாவதாக நிர்வாகத் துறையில் திறம்படச் செயல்படுபவர். அரசு நிர்வாக எந்திரத்தை மக்களுடைய சேவைக்குரிய கருவியாக மாற்றி, விரைவான செயல்களுக்கு வித்திட்டவர்.
இவரது திறமையை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அண்ணா மறைவிற்குப் பிறகு "யார் முதல்வர்?' என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர் பெயரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரே முன்மொழிந்தார் என்பதை யாரும் மறக்க முடியாது. கலைஞருடைய உழைப்பு, கூர்ந்த மதி, அடித்தளத்து மக்களிடம் கொண்டிருக்கும் அளவு கடந்த ஈடுபாடு ஆகியவை அவர்தான் முதல்வராக வர வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையே சொல்ல வைத்தது.
எட்டாவதாக "சுரண்டலற்ற சமத்துவம் அமைப்பதே கழகத்தின் குறிக்கோள்' என்று அறிவித்தார் அண்ணா. அதனையே செம்மைப் படுத்தி, "ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' என்று சபதம் ஏற்றார் கலைஞர். "உழைக்கின்ற மக்களே புரட்சியின் முன்னணிப் படையினர் என்றார் மார்க்ஸ்!
அண்ணாவோ, "திராவிட இனமே உழைக்கும் மக்கள்தான்' என்றார். அந்த வகையில் பார்த்தால் கலைஞர் கால ஆட்சியில்தான் அடித்தளத்து மக்கள் கல்வியறிவு பெற்று, ஆட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் அமரும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.
அம்பாசங்கர் கமிஷன் போன்றவற்றை நியமித்து அடித்தட்டு மக்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தவர் கலைஞர் என்று சொல்வதே சாலப்பொருத்தமாக இருக்கும்.
ஒன்பதாவதாக சமூக நீதி! அது தி.மு.க.வின் உயிர் மூச்சான கொள்கை. அதிலும் மற்ற மாநிலங் களுக்கு "லீடிங் எக்ஸாம்பிளாக' திகழ்ந்து கொண்டிருப்பவர் கலைஞர்தான். அதனால்தான் இன்று சமூக நீதிக் கோட்பாட்டை இந்திய நாடே தன்னுடைய கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றி வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு வழிகாட்டியாகத் திகழ்பவர் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
பத்தாவதாக ஜனநாய அமைப்பைப் பயன்படுத்துவது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உருவாக்க ஆயுதமேந்திய புரட்சி தேவையில்லை, ஜனநாயக அமைப்பே போதும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் கலைஞர்.
ஆட்சி இருந்தால் புரட்சி தேவையில்லை! மக்களுக்குத் தேவையான எதையும் ஆட்சியை வைத்தே சாதிக்க முடியும் என்று செய்து காட்டியதால்தான் இன்று பாராளுமன்ற சபாநாயகராக இருக்கும் சோம்நாத் சாட்டர்ஜி போன்றவர்கள் எல்லாம் பாராட்ட வருகிறார்கள்.
அந்த வகையில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து சட்டமன்றப் பொன்விழா ஆண்டில் கால் எடுத்து வைத்துள்ள கலைஞர், வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் என்பதைத்தான் இந்த நேரத்தில் சொல்ல முடியும்.
(நன்றி : தமிழன் எக்ஸ்பிரஸ் )
Friday, April 20, 2007
டாக்டர் கலைஞர் - சட்டமன்ற பொன்விழா!!!
வாழ்ந்த காலத்தில் புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள் பூமிப்பந்தில் மிகக் குறைவு. அதிலும் வழுக்கு மரமென சறுக்கிவிழும் அரசியல் ஆடுகளத்தில் அதிகாரத்தோடு கோலோச்சியவர்களின் எண்ணிக் கையை விரல்விட்டு எண்ணி விடலாம். வர்க்கமும், சாதியுமாகப் பிரிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் பெரியவர் கருணாநிதியின் அரசியல் தடத்தை எவராலும் புறக்கணிக்க முடியாது.

முதல்வர் கருணாநிதி தமிழக சட்டசபைக்குள் கால் பதித்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1957&ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் தொடங்கிய வெற்றி, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு விழா எடுக்க முடிவாகி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முடிவில் ஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையில் விழா நடக்கப் போகிறது.
பம்பரம் விளையாடும் பதினான்கு வயதில் தமிழ் மாணவர் மன்றத்தைத் தொடங்கி அரசியல் வாழ்க்கைக்கு ‘அ’ போட்டவர் கருணாநிதி. அடிப்படை உறுப்பினராக தி.மு.க&வில் தொடங்கிய கருணாநிதியின் வாழ்க்கையில் பின்னாளில் ஏற்படப் போகும் மாற்றங்களை அவரே கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்.
தள்ளாடும் வயதிலும் நக்கலுக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத மனிதர். இவர் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
‘‘என்னோட தொகுதியான நிலக்கோட்டைக்கு ஒரு காலேஜ் வேணும்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன். ஒரு தடவை கேள்வி நேரத்துல நான் எழுந்து இதைக் கேட்கவும், ‘அக்காவுக்கு இல்லாத கல்லூரியா? உடனே அனுமதி கொடுத்துடறேன்’னு சொல்லிட்டாரு. அதுல இருந்தே எல்லாக் கட்சிக்காரங்களுமே என்னை அக்கான்னுதான் அன்பா கூப்பிடுவாங்க. நானும் கலைஞரை தம்பின்னுதான் கூப்பிடுவேன். ஆனா, இதுல ஒரு விசேஷம் என்ன தெரியுமா... என்னைவிட கலைஞர் மூத்தவர்! ஒரு கிண்டலுக்காக அவரு என்னை அப்படி கூப்பிடப் போய், Ôஅக்காÕன்னே இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு...’’ &இப்படி பழைய நினைவுகளில் நெகிழ்ந்து போகிறார், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ&வான நிலக்கோட்டை பொன்னம்மாள்.
கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜாத்தி அம்மாள் பிரசவத்துக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, மருத்துவமனையில் கணவர் பெயர் கேட்கப்பட... அவரும் Ôகருணாநிதி, தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர்Õ என பதிவு செய்ய... அதன்பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோவை திருமகன் என்ற உறுப்பினர், ‘பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதியை தனது கணவர் என்று ஒரு பெண் பிரசவத்தின்போது குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியோடு இருக்கும் அமைச்சரை இன்னொரு பெண் கணவர் என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்? இதற்கு அமைச்சர் என்ன சொல்கிறார்..?’ என்று கருணாநிதியின் மகள் கனிமொழி பிறந்த சமயத்தில் கேள்வி எழுப்ப, அதற்கு கருணாநிதி எழுந்து, ‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்துகொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம். இப்படி ஒரு பெரிய பிரச்னையைக்கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது. அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..!
‘‘நான் சபாநாயகரா இருந்தப்ப எதிர்க்கட்சி வரிசையில தி.மு.க&காரங்க உட்கார்ந்திருந்தாங்க. துரைமுருகனும் இன்னும் சில தி.மு.க. உறுப்பினர் களும் எழுந்து அவையை நடத்த முடியாத அளவுக்குக் கூச்சல் போட்டாங்க. நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன். யாரும் அடங்கவே இல்ல. ‘எப்படியோ போங்க... இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும்’னு சொல்லிட்டு அமைதியாயிட்டேன். அதுக்குப் பிறகு கருணாநிதி எழுந்து எல்லோரையும் அமைதிப்படுத்தி உட்கார வச்சாரு. அவுங்க எல்லோரும் அமைதியான பின்னாடி கலைஞர், ‘இவுங்களை எல்லாம் ஆண்டவன் தான் காப்பத்த முடியும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா இதுக்கு முன்னாடி ஆண்டவன் நான்தானே’னு சொல்ல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். உட்பட எல்லோ ருமே சிரிச்சிட்டோம்’’ &இப்படி கரகரத்த குரலில் நினைவுகளை அசை போட்டார் முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான க.ராஜாராம்.
கருணாநிதி எம்.எல்.ஏ&வாக ஆன காலத்தில்இருந்தே அவரது பேச்சை ரசிக்க ஒரு கூட்டம் திரளும். சட்டசபையில் எம்.எல்.ஏ. கருணாநிதி பேசுகிறார் என தெரிந்தாலே கேலரியில் கூட்டம் நிரம்பி வழியுமாம். கருணாநிதி பேச்சில் பொரு ளும், சுவையும் இருக்கும் என காமராஜரே வாயார பாராட்டுவாராம்.
‘‘இதேபோல்தான் அப்போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி... இங்கே கலைஞர் எம்.எல்.ஏ&வாக இருந்தார்! அப்போ மின்சார வாரிய நிலத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை ஆதாரத்தோடு சபையில் அம்பலப்படுத்தினார் பேராசிரியர். மறுநாள் ஏதோ காரணத்தினால் பேராசிரியர் சட்டசபைக்கு வரல. காங்கிரஸ் எம்.எல்.ஏ&வான அனந்தநாயகி எழுந்து, ‘நேத்து சபையில மோசடி அது இதுன்னு பேசிய பேராசிரியர் ஏன் இன்னைக்கு சபைக்கு வரல? அவருக்கு முதுகெலும்பு இருந்திருந்தா இன்னைக்கு வந்திருக்கணும்’னு கடுமையா பேசிட்டாங்க. உடனே எழுந்த கலைஞர், ‘பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத்தானே தெரியும். அனந்தநாயகிக்கு எப்படி தெரியும்?’னு போட்டாரே ஒரு போடு. அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஆச்சு..’’ என்று ஃப்ளாஷ்பேக்கை விவரிக்கும்போது தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பலமுறை சட்டமன்ற உறுப்பி னராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். ‘‘1961&ல் நில சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்தவர் கருணாநிதி. அதே தலைவர் 1990&ம் ஆண்டு நில சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தபோது, அவர் 1961&ல் பேசியதை நான் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதற்கு கொஞ்சமும் கோபம் கொள்ளாமல், ‘நான் பேசியதை எனக்கே ஞாபகப்படுத்திய நண்பர் பாலசுப்ரமணி யத்துக்கு நன்றி’ என்று சொல்லியதோடு எனது கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டார்.
ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து தப்பி ஓடியபோது, சட்ட மன்றத்தில் அது பற்றிய விவாதங்கள் நடந்தன. ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து எப்படி தப்பித்தான், அவனுக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்ற ஆதாரங்கள் எனக்குக் கிடைத்தது. அதை சட்ட சபையில் பேசும்போது ஆட்டோ சங்கர் தப்பிக்க அரசு தரப்பில் யாரெல்லாம் காரணம் என்பதை ஆதாரத்தோடு முன்வைத்தேன். அரசாங்கம் மீதே குற்றம் சுமத்தினேன். அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கலைஞர், ‘ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாலசுப்ரமணியம் இலக்கணமாக இருக்கிறார். அவர் சொன்னது அத்தனைக்கும் ஆதாரம் இருக்கிறது. என் கண்ணிலேயே மண்ணைத் தூவி விட்டு இவ்வளவு வேலைகள் நடந்திருப்பது வேதனையாக இருக்கிறது. உடனே இதற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என அறிவித்தார்.
எப்படி ராமாயணத்தில் வரும் வானர அரசன் வாலிக்கு, தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதி போகுமோ அது போலத்தான் கலைஞருக்கும். அதுதான் அவரது வெற்றியின் ரகசியமே’’ என்கிறார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
(நன்றி : ஜூனியர் விகடன்)

முதல்வர் கருணாநிதி தமிழக சட்டசபைக்குள் கால் பதித்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1957&ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் தொடங்கிய வெற்றி, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு விழா எடுக்க முடிவாகி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முடிவில் ஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையில் விழா நடக்கப் போகிறது.
பம்பரம் விளையாடும் பதினான்கு வயதில் தமிழ் மாணவர் மன்றத்தைத் தொடங்கி அரசியல் வாழ்க்கைக்கு ‘அ’ போட்டவர் கருணாநிதி. அடிப்படை உறுப்பினராக தி.மு.க&வில் தொடங்கிய கருணாநிதியின் வாழ்க்கையில் பின்னாளில் ஏற்படப் போகும் மாற்றங்களை அவரே கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்.
தள்ளாடும் வயதிலும் நக்கலுக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத மனிதர். இவர் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
‘‘என்னோட தொகுதியான நிலக்கோட்டைக்கு ஒரு காலேஜ் வேணும்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன். ஒரு தடவை கேள்வி நேரத்துல நான் எழுந்து இதைக் கேட்கவும், ‘அக்காவுக்கு இல்லாத கல்லூரியா? உடனே அனுமதி கொடுத்துடறேன்’னு சொல்லிட்டாரு. அதுல இருந்தே எல்லாக் கட்சிக்காரங்களுமே என்னை அக்கான்னுதான் அன்பா கூப்பிடுவாங்க. நானும் கலைஞரை தம்பின்னுதான் கூப்பிடுவேன். ஆனா, இதுல ஒரு விசேஷம் என்ன தெரியுமா... என்னைவிட கலைஞர் மூத்தவர்! ஒரு கிண்டலுக்காக அவரு என்னை அப்படி கூப்பிடப் போய், Ôஅக்காÕன்னே இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு...’’ &இப்படி பழைய நினைவுகளில் நெகிழ்ந்து போகிறார், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ&வான நிலக்கோட்டை பொன்னம்மாள்.
கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜாத்தி அம்மாள் பிரசவத்துக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, மருத்துவமனையில் கணவர் பெயர் கேட்கப்பட... அவரும் Ôகருணாநிதி, தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர்Õ என பதிவு செய்ய... அதன்பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோவை திருமகன் என்ற உறுப்பினர், ‘பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதியை தனது கணவர் என்று ஒரு பெண் பிரசவத்தின்போது குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியோடு இருக்கும் அமைச்சரை இன்னொரு பெண் கணவர் என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்? இதற்கு அமைச்சர் என்ன சொல்கிறார்..?’ என்று கருணாநிதியின் மகள் கனிமொழி பிறந்த சமயத்தில் கேள்வி எழுப்ப, அதற்கு கருணாநிதி எழுந்து, ‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்துகொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம். இப்படி ஒரு பெரிய பிரச்னையைக்கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது. அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..!
‘‘நான் சபாநாயகரா இருந்தப்ப எதிர்க்கட்சி வரிசையில தி.மு.க&காரங்க உட்கார்ந்திருந்தாங்க. துரைமுருகனும் இன்னும் சில தி.மு.க. உறுப்பினர் களும் எழுந்து அவையை நடத்த முடியாத அளவுக்குக் கூச்சல் போட்டாங்க. நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன். யாரும் அடங்கவே இல்ல. ‘எப்படியோ போங்க... இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும்’னு சொல்லிட்டு அமைதியாயிட்டேன். அதுக்குப் பிறகு கருணாநிதி எழுந்து எல்லோரையும் அமைதிப்படுத்தி உட்கார வச்சாரு. அவுங்க எல்லோரும் அமைதியான பின்னாடி கலைஞர், ‘இவுங்களை எல்லாம் ஆண்டவன் தான் காப்பத்த முடியும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா இதுக்கு முன்னாடி ஆண்டவன் நான்தானே’னு சொல்ல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். உட்பட எல்லோ ருமே சிரிச்சிட்டோம்’’ &இப்படி கரகரத்த குரலில் நினைவுகளை அசை போட்டார் முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான க.ராஜாராம்.
கருணாநிதி எம்.எல்.ஏ&வாக ஆன காலத்தில்இருந்தே அவரது பேச்சை ரசிக்க ஒரு கூட்டம் திரளும். சட்டசபையில் எம்.எல்.ஏ. கருணாநிதி பேசுகிறார் என தெரிந்தாலே கேலரியில் கூட்டம் நிரம்பி வழியுமாம். கருணாநிதி பேச்சில் பொரு ளும், சுவையும் இருக்கும் என காமராஜரே வாயார பாராட்டுவாராம்.
‘‘இதேபோல்தான் அப்போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி... இங்கே கலைஞர் எம்.எல்.ஏ&வாக இருந்தார்! அப்போ மின்சார வாரிய நிலத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை ஆதாரத்தோடு சபையில் அம்பலப்படுத்தினார் பேராசிரியர். மறுநாள் ஏதோ காரணத்தினால் பேராசிரியர் சட்டசபைக்கு வரல. காங்கிரஸ் எம்.எல்.ஏ&வான அனந்தநாயகி எழுந்து, ‘நேத்து சபையில மோசடி அது இதுன்னு பேசிய பேராசிரியர் ஏன் இன்னைக்கு சபைக்கு வரல? அவருக்கு முதுகெலும்பு இருந்திருந்தா இன்னைக்கு வந்திருக்கணும்’னு கடுமையா பேசிட்டாங்க. உடனே எழுந்த கலைஞர், ‘பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத்தானே தெரியும். அனந்தநாயகிக்கு எப்படி தெரியும்?’னு போட்டாரே ஒரு போடு. அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஆச்சு..’’ என்று ஃப்ளாஷ்பேக்கை விவரிக்கும்போது தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பலமுறை சட்டமன்ற உறுப்பி னராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். ‘‘1961&ல் நில சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்தவர் கருணாநிதி. அதே தலைவர் 1990&ம் ஆண்டு நில சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தபோது, அவர் 1961&ல் பேசியதை நான் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதற்கு கொஞ்சமும் கோபம் கொள்ளாமல், ‘நான் பேசியதை எனக்கே ஞாபகப்படுத்திய நண்பர் பாலசுப்ரமணி யத்துக்கு நன்றி’ என்று சொல்லியதோடு எனது கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டார்.
ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து தப்பி ஓடியபோது, சட்ட மன்றத்தில் அது பற்றிய விவாதங்கள் நடந்தன. ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து எப்படி தப்பித்தான், அவனுக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்ற ஆதாரங்கள் எனக்குக் கிடைத்தது. அதை சட்ட சபையில் பேசும்போது ஆட்டோ சங்கர் தப்பிக்க அரசு தரப்பில் யாரெல்லாம் காரணம் என்பதை ஆதாரத்தோடு முன்வைத்தேன். அரசாங்கம் மீதே குற்றம் சுமத்தினேன். அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கலைஞர், ‘ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாலசுப்ரமணியம் இலக்கணமாக இருக்கிறார். அவர் சொன்னது அத்தனைக்கும் ஆதாரம் இருக்கிறது. என் கண்ணிலேயே மண்ணைத் தூவி விட்டு இவ்வளவு வேலைகள் நடந்திருப்பது வேதனையாக இருக்கிறது. உடனே இதற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என அறிவித்தார்.
எப்படி ராமாயணத்தில் வரும் வானர அரசன் வாலிக்கு, தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதி போகுமோ அது போலத்தான் கலைஞருக்கும். அதுதான் அவரது வெற்றியின் ரகசியமே’’ என்கிறார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
(நன்றி : ஜூனியர் விகடன்)
Subscribe to:
Posts (Atom)
