ஒகேனக்கல் குடிநீர் திட்டம். இத்திட்டத்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் வாழும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர்.
இந்த திட்டத்துக்கான மேலான்மை பணிகளை கவனிப்பதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இதுவரை நடைபெற்று வந்தன. பல நிறுவனங்களின் விண்ணப்பத்தில் இருந்து ஆராய்ந்து தற்பொழுது ஜப்பானின் நிப்பான் கோய் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா. அக்டோபர் 4 இதழ்). இந்நிறுவனம் திட்டத்தின் கட்டுமானத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான பணிகளில் கை தேர்ந்தவர்களின் உதவியோடு சிவில் வேலைகளுக்கான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்டம் முடிவடையும்(2012) வரை அதன் நிர்வாகத்தில் ஈடுபடும்.
இந்த பணிகள் எல்லாமே முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள்ளாகவே நடைபெற்று வருகின்றன.
Showing posts with label ஆட்சி. Show all posts
Showing posts with label ஆட்சி. Show all posts
Wednesday, October 08, 2008
Tuesday, October 07, 2008
தமிழக நதிகள் இணைப்பு திட்டம்
தமிழகத்தில் காவிரி ஆற்றை குண்டாற்றுடன் இணைக்கும் திட்டத்துக்கான டென்டர் தமிழக அரசால் கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. அடுத்து பட்ஜட்டிலேயும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் கலைஞர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார். தற்பொழுது டென்டர் கோரப்பட்டு, விரைவில் இணைக்கும் பணிகள் துவங்கப்படவிருக்கிறது.
முதற்கட்டமாக காவிரியையும் வைகை ஆற்றுடனும் குண்டாற்றுனடனும் இணைக்கும் பணிகள் துவங்கப்படும். இணைப்பு நீளம் - 225 கி.மீ.
அடுத்தகட்டமாக தாமிரபரணியையும் கருமேனியாறையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மொத்த நீளம் - 369 கி.மீ.
ஆதாரம்.
முதற்கட்டமாக காவிரியையும் வைகை ஆற்றுடனும் குண்டாற்றுனடனும் இணைக்கும் பணிகள் துவங்கப்படும். இணைப்பு நீளம் - 225 கி.மீ.
அடுத்தகட்டமாக தாமிரபரணியையும் கருமேனியாறையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மொத்த நீளம் - 369 கி.மீ.
ஆதாரம்.
Subscribe to:
Posts (Atom)
