வாலி எழுதியுள்ள கலைஞர்காவியம் நூலிற்கு சோ அவர்களின் முன்னுரை.
இவ்வருடத்திய பிப்ரவரி மாத துக்ளக் இதழ் ஒன்றில் ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்வி இது:
கேள்வி:கருணாநிதியைப் போல் அறிவு,ஆற்றல்,திறமை,உழைப்பு ஆகிய திறன்களைக் கொண்ட தலைவர்கள் தி.மு.க வில் மட்டுமல்ல,மற்ற கட்சிகளிலும் கூட உருவாகாமல் போய்விட்டார்களே!ஏன்?
இந்தக் கேள்விக்கு நான் அளித்திருந்த பதில் இது.
பதில்: கலைஞரைப் போல் பல திறமைகள் ஒருங்கே கொண்டவர்கள் பலர் இருந்து விட்டால்,அப்புறம் அவரைப் போன்றவர்களின் விசேஷம் என்று எதுவுமே இருக்காதே!அவருடைய திறமைகள் ஒன்றுசேர எல்லோருக்கும் வரக்கூடியவை அல்ல.
இத்தனை திறமைகளையும் பெற்றவர்கள் வேறு பலர் இருந்தால்,வாலியின் இந்தப் புஸ்தகமே உருவாகியிருக்காதே!இத்தனை சாதனைகளைப் புரிந்துள்ள மனிதர் அபூர்வமானவர் என்பதால் தான்,வாலி தன் அபூர்வமான கவிதைத் திறனைக் கொண்டு,அந்த மனிதனின் வாழ்க்கையை,ஒரு அபூர்வமான கவிதைத் தொகுப்பாக்கியிருக்கிறார்.
கலைஞரைப் பாராட்ட பல விஷயங்கள் உண்டு.நானும் கலைஞரைப் பாராட்டியிருக்கிறேன்.எட்டு முறைகள் திமுக தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், அது ஏதோ அதிர்ஷ்டத்தினால் கிடைத்த உயர்வு அல்ல.அண்ணாதுரை அவர்களால் பல தலைவர்கள் வளர்க்கப்பட்டார்கள்;ஐம்பெரும் தலைவர்கள் என்றும் போற்றப்பட்டார்கள்.அப்போது அவர்களில் ஒருவராக இடம்பெறாத கலைஞர், பிற்காலத்தில் திமுகவின் ஒரே தலைவர் என்று உருவெடுத்தது அவருடைய திறமைகளின் காரணமாகத்தான்.
சிறந்த பேச்சாற்றல்,ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களிருந்து,அடுக்குமொழியில் அள்ளி வீசப்படுகின்ற அரசியல் வாதங்கள் வரை,கூர்மையான கிண்டலும்,நயமான நகைச்சுவையும் உட்பட,பல சுவைகள் அவருடைய பேச்சில் கொட்டிக்கிடக்கும்.இதற்கெல்லாம் ஏற்ற ஒரு குரலையும் இறைவன் அவருக்குத் தந்திருக்கிறான். கம்பீரம், எகத்தாளம், கண்டிப்பு, கேலி, கிண்டல், தெளிவு என்று பலவகைப்பட்ட அம்சங்களைக் கேட்போரிடம் கொண்டு செல்லக்கூடிய குரல் அது.இத்துடன் அபார ஞாபக சக்தியும் சேர்ந்திருப்பதால் அவருடைய பேச்சு ஒரு ஆயுதமாகவே திகழ்கிறது.
அவருடைய உழைப்பைப் பற்றியோ,கேட்கவே வேண்டாம்.ஒரு மனிதனால் தொடர்ந்து,இத்தனை வருட காலம் இவ்வாறு உழைக்க முடியுமா?என்ற மலைப்பை ஏற்படுத்துகிற உழைப்பு.இவருடைய உழைப்பின் முன்னால்,மற்ற பலரின் உழைப்பு,வெறும் பொழுதுபோக்கே.உழைப்பு பொதுவாக எல்லோருக்கும் ஒரு கடமை;கலைஞருக்கோ அதுதான் உயிர்மூச்சு.
இப்படி ஒரு உழைப்பு இருந்ததால் தான், சுமார் பதின்மூன்று வருடகாலம் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த போதும்,தன்னுடைய உழைப்பையே நம்பி, இவரால் அரசியல் நடத்த முடிந்தது.வேறு ஒருவரால் அந்த நிலையில் ஒரு கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது சந்தேகமே.இரண்டு முறை டிஸ்மிஸ் ஆகியும் கூட, மீண்டும் ஒரு கூட்டத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்கு இந்த உழைப்புத் தான் காரணம்.
என்று 19.4.2000 துக்ளக் இதழில் நான் எழுதியிருந்தேன். இந்த தனிமனித சாதனை ஒரு அசுர சாதனை.
வாலியும் , போலி அல்ல.மனதில் எழுந்த எண்ணங்களைத் தான் அவர் எழுத்தில் வடித்திருக்கிறார்.உயிருடன் உள்ள வேறு எந்த ஒரு அரசியல்வாதியையும்-அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்-வாலி இப்படி வியந்து பாராட்டியது இல்லை.
வாலி ஆன்மீகவாதி,கடவுள் நம்பிக்கை உடையவர்.கலைஞர் நாத்திகவாதி,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.அப்படியிருக்க இவர்களிடையே எப்படி ஒரு அசாதரணமான நட்பு நிலவுகிறது? தமிழ் தான் காரணம்.தமிழ்ப்பற்று தான் காரணம்.தமிழால் இணைந்தவர்கள் இவர்கள்.அதன் விளைவாக இந்த நூல் பிறந்திருக்கிறது.
அப்படிப்பட்ட இந்த நூலுக்கு என்னை அணிந்துரை எழுதுமாறு வாலி பணித்துள்ளதும்,பொருத்தமானது தான்.குறைகளைக் காண்பதையே தொழிலாக மேற்கொண்டவன்,நிறைகளையும் நினைத்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் அளிப்போம் என்று-வாலி தீர்மானித்திருக்கிறார்.
பிரமிக்கத்தக்க வகையில் செயலாற்றி வருகிற ஒரு மனிதனைப் பற்றி,வியக்கத்தக்க எழுத்துத்திறன் கொண்ட ஒரு மனிதர் எழுதியுள்ள நூலிற்கு,விலக்கத்தக்கதென்று பலர் நினைக்கின்ற கருத்துக்களைக் கூறுகிற விமர்சகன்,அணிந்துரை எழுத முன்வருவதற்கு,கொஞ்சம் துணிவு தேவை.ஆகையால் இது அணிந்துரை அல்ல;துணிந்துரை.கலைஞரின் சாதனைகளையும்,அதைச் சொல்லியிருக்கிற வாலியின் சொல்லழகையும் நினைத்துப் பார்த்தால்,இதைப் பணிந்துரை என்றும் சொல்லலாம்.
அப்படிப் பணிந்தே உரைக்கின்றேன்-கருத்து மாறுபாடுகள் கொண்டவன் என்றாலும்,அரசியலில் கலைஞரின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுபவன் அல்ல நான் என்பதால்,துணிந்தே உரைக்கின்றேன் -வாலியின் எழுத்துக்களால் கவரப்பட்டவன் என்கிற முறையில்,அவருடைய இந்தப் புஸ்தகம்,பலரையும் சென்றடைய அணிந்து உரைக்கின்றேன்.
வாலியின் நூலிற்கு ஜாலியின் விமர்சனம்.
அமிழ்தினும் இனிய தீந்தமிழ்ச்சொற்கள் வாலியின் விரலசைவுக்கு குத்தாட்டம் போடுவது கொள்ளை அழகு.நீண்ட நாட்களாக புத்தகங்கள் வாங்கும் பழக்கம் தடைபட்டுப் போயிருந்த நிலையில் சமீபத்தில் புத்தகநிலையத்திற்கு சென்று பார்த்த போது ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது.தமிழ்ப்புத்தகங்களின் கட்டமைப்பும்,அச்சு நேர்த்தியும் அட்டகாசமாக உயர்ந்துள்ளது.வளவளப்பான காகிதத்தில் அருமையாக அமையப்பெற்றுள்ள இப்புத்தகம் கழகக்காளைகள் அனைவரின் கையிலும் தவழ வேண்டியது அவசியம்.
கலைஞர் காவியத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கவிதை,இங்கே
Showing posts with label Cho about Kalaignar. Show all posts
Showing posts with label Cho about Kalaignar. Show all posts
Wednesday, August 15, 2007
Subscribe to:
Posts (Atom)
