Tuesday, October 28, 2008

ஜெயலலிதா முதல்வராய் இருந்திருந்தால்....

இந்த பதிவிற்கு தலைப்பு முதல்வராய் என்பதற்கு பதில் சாதியை பறைசாற்றும் விதமாக அமைத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் அளவுக்கு கீழே இறங்கி போக விரும்பவில்லை. நாம் ஏற்கனவே போலி பற்றிய பதிவில் சொன்னது போல் நாம் யாரும் பார்ப்பனீயத்தை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டால் அவர்களுக்கு பிழைப்பு ஓடாது. அதை அவர்களே கிளறிவிட்டுக் கொண்டு இருப்பார்கள். நாம் போலி பதிவில் சொன்னதை நூற்றுக்கு நூறு நிரூபித்து இருக்கிறார்கள் தங்கள் செயல் மூலம்

இலங்கை பிரச்சினை மூலம் அதிக கொள்ளை இலாபம் அடைந்தவர்கள் அவர்களே என்றால் மிகையாகாது. தமிழர்கள் என்றும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பது தான் அவர்கள் எண்ணம். அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டது இலங்கை பிரச்சினை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்று சேர்வதை கண்டதும் அதற்கு முதலில் முட்டுக்கட்டை போட்டது அவர்கள் தான். இந்திய இறையாண்மை என்ற அஸ்திரத்தை ஏவினார்கள். அந்தோ பரிதாபம்! இப்போது யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு கூட அஞ்சுகிறார்கள். அவர்களின் முதல் திட்டம் நிறைவேறிவிட்டது

பேசினாலே சட்டம் பாயும் நிலை ஏற்படுத்திவிட்ட பின்பு கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இவர்கள். அவர் தனது ஆட்சியை இழக்க வேண்டுமாம். அவர் ஆட்சியில் இருக்கும் போதே இந்த ஆட்டம் போடுகிறீர்களே அவர் ஆட்சியையும் பறித்துவிட்டால் நீங்கள் என்னென்ன செய்வீர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ. இவர்கள் வடிப்பது ஈழத்தமிழர்களுக்கான நீலிக் கண்ணீர் அல்ல. கலைஞர் ஆட்சியை காவு வாங்க காத்திருந்து காய்ந்த கண்களின் கண்ணீர்

சரி, நம் கேள்விக்கு வருவோம் "ஜெயலலிதா முதல்வராய் இருந்திருந்தால்.... " என்ன செய்து இருப்பார். கலைஞர் எடுத்த முயற்சியில் எந்த ஒரு துளியும் எடுக்காமல் கொடநாட்டில் ஓய்வு எடுக்க போயிருப்பார். அப்போது இவர்கள் வேறு மாதிரி எழுதிக் கொண்டு இருப்பார்கள்

Friday, October 24, 2008

நன்றி வைகோ

பல வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகி இருந்தது. ஈழத்
தமிழர்களுக்கு ஆதரவாக பல தரப்பில் இருந்தும் ஆதரவுக் கரங்கள் நீண்டன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
கலைஞர் அவர்களும் களம் இறங்கினார். இப்படிப்பட்ட சூழலில் ஆயுதம் ஏந்தி போராடுவேன் என்று பேசும்
அளவுக்கு வைகோவுக்கு என்ன அவசியம் வந்தது

உணர்ச்சி வசப்படுவதற்கு பெயர் போன வைகோ ஈழப் பிரச்சினையில் அதீத உணர்ச்சி வசப்படுவதில் எந்த வித
ஆச்சர்யமும் இல்லை. இன்று வரை கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்ததை அவர் மறுத்ததாக
தெரியவில்லை. அப்படிப்பட்டவர் உணர்ச்சி வசப்பட்டு தீவிரவாதத்தை தூண்டும் வரை போனது மிகப் பெரிய
முட்டாள் தனம். தலைவர் பாதையை விட்டு விலகாத கண்ணப்பணும் தன் பங்குக்கு ஏதேதோ உளறிக் கொட்டி
இருக்கிறார்

வைகோ உணர்ச்சி மேலிடும் போது எந்த அளவுக்கும் செல்வார் என்பதை உலகுக்கு காட்டிவிட்டார். இங்கே
ஒன்றை நினைவுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். வைகோவை கழகம் நீக்கிய போது வைகோவால் தலைவர்
உயிருக்கு ஆபத்து என்ற உளவுத் துறையின் செய்தி ஆதாரமாக சொல்லப்பட்டது. ஆனால் வைகோவோ
ஸ்டாலினை கட்சியில் முன்னிலைப்படுத்துவதற்காக தன் மீது அபாண்ட பழி சுமத்தப்படுவதாக ஒப்பாரி
வைத்தார். அவர் உணர்ச்சி மேலிடும் போது தான் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் செயல்படுவார்
என்பதை அவருடைய சமீபத்திய பேச்சுக்கள் மீண்டும் நிரூபித்து இருக்கின்றன.
உங்கள் உண்மை முகத்தை உலகுக்கு வெளிக் காட்டி கொண்டதற்கு நன்றி வைகோ

Thursday, October 16, 2008

அம்மாவின் கபட நாடகம் பாரீர்.

அம்மாவின் கபட நாடகம் பாரீர்.

அட, இந்த அம்மா கூட இலங்கை தமிழருக்கு ஆதரவா பேசுதேனு ஒரு ஆச்சரியம்.. அதெல்லாம் ஒரு மன்னும் இல்லனு தெளிவு படுத்திய அம்மாவுக்கு நன்றி..

தந்தி அடியுங்கள் என்ற சொன்னவுடன் , என்ன தந்தி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்ல வேண்டியது தானேனு அம்மா கத்துச்சி.. இப்போ அதுவே தீர்மானமாக அனைத்து கட்சிக்கூட்டத்துல வந்தப்ப, மொதல்ல, நான் சொன்னதுக்காத்தான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்தார்னு ஒரு அறிக்கை விட்டுச்சு.. அந்த பப்பு வேகல.. கலைஞர் எடுத்த இந்த முடிவுக்கு எல்லோரும் , ஆதரவு தந்தத பார்த்து அதுக்கு உள்ளே ஒரு உதறல்..

இப்பொ என்னடானா, அயிரெத்துட்டு கேள்வி கேட்குது.. அமைச்சர் பதவி விலகுவாங்களா.. அது இதுனு,

அட லூசே.. அனைத்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்னு தெளிவா சொல்லிட்டாங்களே அப்புறம் ஏன் ஒப்பாரி உனக்கு?? வக்கிருந்து உங்க கட்சி சார்ப்பா அனைத்து கட்சி கூட்டத்து போய் இருக்கனும்.. அத விட்டுட்டு லூசு முன்டம் மாதிரி அறிக்கை விடற... அதுக்கு அந்த வைக்கோல்சாமி வேற ஒத்து...

யம்மா.. நீ வழக்கம் போல, தாம்பரம் 2 வது முட்டுசந்துல அ தி மு க போராட்டம் , கிழக்கு சைதாப்பேட்டைல மூனாவது மூத்திர சந்துல ஆர்ப்பாட்டம்னு அறிக்கைவிட்ட்கிட்டு வேலைய பாரு.. லூசுத்தனமா, உனக்கு சம்பந்தமே இல்லாத தமிழர் பிரச்சனைக்கு தலைய விடாதே.. சரியா..

இது நீலிக்கண்ணீர் விடுது.. இலங்கை பிரச்சனை பற்றிய உன் மூஞ்சி லட்சணம் என்னனு ஊருக்கே தெரியும், இப்போ திடிர்னு நீ வந்து சும்மா ஆதரவு அறிக்கை விடுறீயா??

இதுல ரெண்டு பக்கம் இருக்கு , ஒரு பக்கத்தை ஆதரிக்கிறேன், இன்னொரு பக்கத்தை கடுமையா எதிர்க்கிறேன்னு அறிக்கை விட்டுது இந்த லூசு இரண்டு நாளைக்கு முன்னாடி.. இப்போ வந்திருக்க கடைசி அறிக்கைய பாருங்க.. என்ன நாடகம் ஆடுது இந்த புண்ணாக்கு.

லூசே, இப்போ சொல்றீயே.. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை நு , அட முன்டமே. அப்புறம் என்னத்துக்கு இங்கே இருந்து எதுக்கு அறிக்கை விட்டே?? மத்திய அரசில் இருக்கும் கருணாநிதி இதை பற்றி ஏன் பேசலனு..

லூசு அம்மாவின் பதில் - அட , கருனாநிதி இலங்கையோட அமைச்சரையில் இடம்பெற்றிருக்காருன்னா நெனைச்சுன்டிருக்கேன்... அவா கூட இல்லையா....

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிட வாய்ப்பு ஏற்படும். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்' என்பது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னை

லூசு அம்மா, இந்தியா தலையிடவும் கேட்கக்கூடாது, தாக்குதல்களும் நிக்கனும் . என்ன கணக்கு இது? அப்புறம் ஏன் இங்கே இருந்து அறிக்கை விடற அதுவும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரா..?

லூசு அம்மா பதில் - அட ஆமா, சரி சரி.. அப்போ , இந்தியால இருக்கு எல்லா எல் கே ஜி, யூ கே ஜி க்கும் 2 நாள் லீவு விட்டுடலாம், இலங்கை அரசு பயந்துடும்.. அப்படியும் பயப்படலனா... போயஸ் தோட்டம் பக்கத்துல இருக்க மூத்திர சந்துல ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி நடுநடுங்க வெக்கலாம்..

இது ஓக்கே வாம் , அது ஓக்கே இல்லையாம்.. சரி இந்தியா தலையிட்டு பேசலாம்னா , அது கூடாதாம், அது இந்திய இறையான்மையை பாதிக்குமாம்..

அட லூசே , என்னத்தான் நிலை நு தெளிவா சொல்லு... நீ அரசியல் குளிர் காயறதுக்கு, நடுவுல பூந்து குளிர்காயாதே.. ஓடு உன் கொட நாடு எஸ்ட்டேட்டுக்கு,குளிர் காயனும்னா..

இந்தியா எதுவும் செய்ய முடியாதுனு பேசுற நீ மத்திய , மாநில அரசுக்கு எதிரா வாய் சவடால் அறிக்கை விடாம எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இரு.. சரியா.. இல்லைனா ராஜபக்சேக்கு எதிரா அறிக்கை விடு.. அத விட மாட்டே, ஏன்னா வைக்கோல்புலி ஏற்கனவே சொன்ன மாதிரி நீ சந்திரிக்காவின் ஊது குழல் தானே.. . வைக்கோல் புலி அதை இப்போ மறந்திருக்கலம்..

லூசு அம்மா - மத்திய மாநில அரசு இந்தியாவுலயா இருக்கு?? இது தெரியாம போச்சே...

Thursday, October 09, 2008

ஓரணியில் திரளக் கூடாதோ?

சரித்திரம் படைத்த தமிழர்
சாகிறார் என்ற செய்தி
செவியினில் எட்டியவுடன்
கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம்
கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க
கரமும் நீட்டியது.

நாடு கடந்து வாழ்கின்ற
நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்;
நம்பிக்கை துளிர்த்திடக் கடிதம் எழுதி
நன்றி தெரிவிக்கின்றார்! இலண்டன்
நாடாளு மன்றத் தமிழ் உறுப்பினர் குழுவின்
நற்றமிழர் சார்பில் நமது முயற்சியைப் பாராட்டி
வீரேந்திர சர்மா வெளியிடுகிறார்,
விடியல் தோன்றுமென்று!
வெந்த புண்ணுக்கு மருந்தாக வன்றோ
வெளிநாட்டில் வாழ்கின்ற இன உறவுத்
தமிழர்களின் இதயம் துடிக்கிறது!
அமெரிக்க மருத்துவர் பஞ்சாட்சரம் என்பார்
அடைந்திடும் மகிழ்ச்சிக்கு அளவு தான் ஏது?

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சேனாதிராஜா, எம்.பி.,
இதயம் மலர இனிய வாழ்த்துக் கூறி இன்புறுகின்றார் -
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் -
வாழ்த்துக்களை வாரியன்றோ இறைக்கின்றார்
வற்றாத அன்பைப் பொழிந்து இலங்கையில்
பொற்றாமரை போல் அமைதி பூத்திட தவமிருக்கின்றார் -
உலகத் தமிழ்ச் சாதி ஒன்று திரண்டு ஓர் உளம் கொண்டு
உதயமாகட்டும் ஈழத்தில் அமைதியென்று இறைஞ்சி நிற்கும்போது;
இங்குள்ள தமிழரிடை ஆயிரம் அரசியல் வேறுபாடு உண்டெனினும்
மூட்டை கட்டி அவற்றையெல்லாம் வைத்து விட்டு -
ஒன்றுபட்டு இலங்கைத் தமிழர் கேட்டை நீக்கிட
ஓரணியில் தான் திரளக் கூடாதோ?

- தலைவர் கலைஞர்

Wednesday, October 08, 2008

ஒகேனக்கல் திட்டம்

ஒகேனக்கல் குடிநீர் திட்டம். இத்திட்டத்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் வாழும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர்.

இந்த திட்டத்துக்கான மேலான்மை பணிகளை கவனிப்பதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இதுவரை நடைபெற்று வந்தன. பல நிறுவனங்களின் விண்ணப்பத்தில் இருந்து ஆராய்ந்து தற்பொழுது ஜப்பானின் நிப்பான் கோய் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா. அக்டோபர் 4 இதழ்). இந்நிறுவனம் திட்டத்தின் கட்டுமானத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான பணிகளில் கை தேர்ந்தவர்களின் உதவியோடு சிவில் வேலைகளுக்கான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்டம் முடிவடையும்(2012) வரை அதன் நிர்வாகத்தில் ஈடுபடும்.

இந்த பணிகள் எல்லாமே முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள்ளாகவே நடைபெற்று வருகின்றன.

Tuesday, October 07, 2008

தமிழக நதிகள் இணைப்பு திட்டம்

தமிழகத்தில் காவிரி ஆற்றை குண்டாற்றுடன் இணைக்கும் திட்டத்துக்கான டென்டர் தமிழக அரசால் கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. அடுத்து பட்ஜட்டிலேயும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் கலைஞர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார். தற்பொழுது டென்டர் கோரப்பட்டு, விரைவில் இணைக்கும் பணிகள் துவங்கப்படவிருக்கிறது.

முதற்கட்டமாக காவிரியையும் வைகை ஆற்றுடனும் குண்டாற்றுனடனும் இணைக்கும் பணிகள் துவங்கப்படும். இணைப்பு நீளம் - 225 கி.மீ.

அடுத்தகட்டமாக தாமிரபரணியையும் கருமேனியாறையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மொத்த நீளம் - 369 கி.மீ.

ஆதாரம்.

கொக்கரித்த கூட்டமே... இங்கே பார்

இதோ, கலைஞரின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு, இலங்கை தூதரை அழைத்து, இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது. மேலும் தலைவர் கலைஞர் அவர்களால் வைக்கப்பட்ட மற்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்..

இது நிச்சயம் கலைஞருக்கு வெற்றி.

அடேங்கப்பா.. ஓரிரு நாளில் எத்தனை நக்கல் பதிவுகள்.. தந்தி அனுப்புவது பற்றி நக்கலடித்து, எள்ளி நகையாடி.. , இதனால் நிகழப்போவது, தபால் அலுவலகத்துக்கு கூடுதல் வருமானம் மட்டுமே என்றெல்லாம் நக்கல் வேறு.
அதே போல, அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்ற செய்தியை படித்துவிட்டு எத்துனை எள்ளல் , சிறுபிள்ளைத்தனமான பதிவுகள்.. 90 காசு கொடுத்து தொலைபேசியில் கூட பேசாமல், 25 பைசாவில் முடித்துவிட்டார் என்று எக்காளமிட்டது ஒரு கூட்டம்.. கலைஞர் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் அந்த கூட்டத்துக்கு.. என்ன செய்ய.. அவர் எது செய்தாலும் எதிர்க்கும் கூட்டம்..

இனிமேலாவது செய்தி தாள்களில் வரும் செய்திகளை அரைகுறையாக படித்துவிட்டு, குறை சொல்லவேண்டுமே என்று பதிவு போடாதீர்கள் நல்லவர்களே...

இன்று செய்திகள் தெளிவாகியுள்ளது. தந்தி அனுப்ப சொல்லிய கலைஞர், கடிதமும் கொடுத்தனுப்பி, தொலைபேசியிலும் பேசி, குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.. தந்தி என்பதும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும்., இது ஓட்டு மொத்த (சோ, ஜெ, சுவாமி போன்ற வகையறாக்கள் தவிர்த்து) தமிழினத்தின் ஏக்கம் என்பதை மத்திய அரசின் மனதில் பதிய வைக்கவுமே.. மற்றபடி, கலைஞர் கடிதம், தொலைப்பேசி மூலம் பேசியதன் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேவையே இல்லாமல், அனைத்திலும் கலைஞரை திட்டுவதற்கென்றே அலைகின்ற கூட்டமே, இப்போதாவது திருந்துங்கள்..

தலைவர் கலைஞர் அவர்களே, மீன்டும் ஒரு முறை நீங்கள் ஒரு தமிழினத்தலைவர் என்பதை நிரூபித்துள்ளீர்..வாழ்க கலைஞரே..

Friday, October 03, 2008

கலைஞரின் எண்ணி பார்க்க முடியாத சாதனைகள்


ஆயிரம் விளக்கு மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளில் மானிய விலையில் மளிகைப் பொருட்களை வழங்கி மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது :-

உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அற்புத திட்டமான மானிய விலையில் 10 மளிகை பொருட்களை வழங்கும் விழாவில் கலந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்று சென்னை மாநகரில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளிலும், மேலும், தமிழகம் எங்கும் உள்ள நகரம், ஒன்றியம், கிராமம் தோறும் இந்நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 5 ஆம் முறையாக தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக எத்தனையோ திட்டங்கள், எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகள் இந்த ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது.

2006 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதி மொழிகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். கிலோ அரிசி ரூ. 2 க்கு வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம். அப்போது, எதிர்கட்சியினர் இது முடியுமா ? நடக்குமா ? சாத்தியமா ? என்றனர், மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக நாம் சொன்னதாக விமர்சனம் செய்தனர். ஆனால், எதிர்கட்சியினர் பொய் பிரச்சாரத்தை, நீங்கள் நம்பவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதிமொழியை நம்பினீர்கள், வாக்களித்தீர்கள்.

வெற்றிபெற்ற தலைவர் கலைஞர் கோட்டைக்கு செல்லவில்லை, கோப்பை வரவழைத்து கிலோ அரிசி ரூ. 2 க்கான கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பித்தார். இப்போது, செப்டம்பர் 15 அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகின்ற திட்டத்தினை கலைஞர் அவர்கள் தொடங்கியுள்ளார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினால் போதுமா ? சாம்பார், குழம்பு சமைக்க முடியுமா ? என்று எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா போன்றவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தற்போது, தலைவர் கலைஞர் அவர்கள் மளிகை பொருட்களின் விலையை குறைத்து மானிய விலையில் வழங்குகின்ற சிறப்பான திட்டத்தினை தொடங்கியுள்ளார்கள். மஞ்சள் தூள் 50 கிராம் ரூ. 2 க்கும், மல்லித்தூள் 250 கிராம் ரூ.18 க்கும், மிளகாய்த்தூள் 250 கிராம் ரூ. 14 க்கும், கடலை பருப்பு 75 கிராம் ரூ. 2 க்கும், வெந்தியம் 25 கிராம் ரூ. 1 க்கும், கடுகு 25 கிராம் ரூ. 1 க்கும், சோம்பு 25 கிராம் ரூ. 1.50 க்கும், மிளகு 25 கிராம் ரூ. 3 க்கும், சீரகம் 50 கிராம் ரூ. 5.50 க்கும், பட்டை மற்றும் கிராம்பு 10 கிராம் ரூ. 2 க்கும் ஆக மொத்தம் 10 பொருட்கள் ரூ. 50 க்கு ஒரே பொட்டலமாக வழங்கப்படுகிறது.

மளிகை பொருட்கள் சிலருக்கு தனித்தனியாக தேவைப்பட்டாலும், குறிப்பிட்ட பொருட்களை குறித்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இவை மட்டும் இல்லாமல் நியாய விலைக்கடைகளில் தாய்மார்கள் குடும்பத்தை நடத்துவதற்கு வசதியாக துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.32 க்கும், உளுத்தம்பருப்பு ஒரு கிலோ ரூ. 36 க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.40 க்கும், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஒரு கிலோ ரூ. 11 க்கும், ரவா ஒரு கிலோ ரூ. 17 க்கும், மைதா ஒரு கிலோ ரூ.16 க்கும் மேற்கண்ட அத்தியாவசிய பொருட்களை அரசே மானியம் வழங்கி மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கிவருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரை 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெறுவார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள 21 லட்சத்து 52 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களில் 18 லட்சத்து 14 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள், மானிய விலையில் மளிகை பொருட்கள் திட்டத்தில் பயன்பெறுவார்கள். குறிப்பாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களில் 72 ஆயிரத்து 168 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைய உள்ளனர். அதேபோல் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 271 குடும்ப அட்டை தாரர்களில் 78 ஆயிரத்து 716 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்கள்.

தலைவர் கலைஞரின்அரசில் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக திட்டங்கள் மற்றும் சாதனைகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஏற்றம் பெற பல்வேறு திட்டங்களைஇந்த அரசு செயல்படுத்திவருகிறது. தலைவர் கலைஞர் ஆட்சியில் சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததும் நடக்கிறது. ஒரு கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்குவோம் என்றோம், ஆனால் தற்போது கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகின்றோம்.

சத்துணவில் வாரம் 2 முட்டை வழங்குவோம் என்றோம், ஆனால் தற்போது வாரம் 3 முட்டைகள் வழங்குகின்றோம் அதுமட்டும் அல்ல முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்குகின்றோம். மகளிருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்குவோம் என்றோம், ஆனால் ரூ. 20 ஆயிரம் வழங்கிவருகிறோம். இப்படி பல்வேறு சாதனைகள் ! எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகள் ! கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகத்திலேயே தமிழகத்தை தவிர வேறு எங்கும் இல்லை. இப்படி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் உன்னத ஆட்சி, இந்த நல்ல அரசிற்கு தொடர்ந்து உங்கள் நல்லாதரவினை வழங்கிட வேண்டும். என்று மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. மு.க..ஸ்டாலின் அவர்கள் பேசினார்கள்.