Wednesday, October 08, 2008

ஒகேனக்கல் திட்டம்

ஒகேனக்கல் குடிநீர் திட்டம். இத்திட்டத்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் வாழும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர்.

இந்த திட்டத்துக்கான மேலான்மை பணிகளை கவனிப்பதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இதுவரை நடைபெற்று வந்தன. பல நிறுவனங்களின் விண்ணப்பத்தில் இருந்து ஆராய்ந்து தற்பொழுது ஜப்பானின் நிப்பான் கோய் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா. அக்டோபர் 4 இதழ்). இந்நிறுவனம் திட்டத்தின் கட்டுமானத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான பணிகளில் கை தேர்ந்தவர்களின் உதவியோடு சிவில் வேலைகளுக்கான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்டம் முடிவடையும்(2012) வரை அதன் நிர்வாகத்தில் ஈடுபடும்.

இந்த பணிகள் எல்லாமே முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள்ளாகவே நடைபெற்று வருகின்றன.

0 comments: