Sunday, January 30, 2011

மருதமலை மாமணியே முருகய்யா.....

கோடி கட்சிகளிலே நல்ல கட்சி எந்த கட்சி ?
கொங்குமணி தமிழ்நாட்டினிலே புனித கட்சி எந்த கட்சி ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் கட்சி எந்த கட்சி ?
தலையாய தலைவரெல்லாம் இருந்த கட்சி தி.மு.க கட்சி....
திருக்குவளை மாமணியே கலைஞரைய்யா
தொண்டர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா
(தி.மு.க)

தேர்தல் நந்நாளில் மைக்குடன் எந்நாளும்
தொண்டர்களை கொண்டாடும் எங்கய்யா
(தி.மு.க)

கோடிகள் கொடுத்தாலும் தலைவனை நான் மறவேன்
நாடியென் வினை தீர நீ உடனே வருவாயே
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த ஆறுமுகன் நீயே
எழுபிறப்பிலும் எங்க தலைவன் நீயே ஆ..
(தி.மு.க)

சக்தித் திருமகன் எங்கள் தலைவரை மறவேன் நான் மறவேன்
மக்கள் பிரச்சனை தீர்த்திட முதல்வராய் வருவாய் மீண்டும் வருவாய்ய்
தமிழ்நாட்டின் தலைமகனே அழகிய தமிழ்மகனே
தொண்டரெல்லாம் உனதுபலம் அதுவே உனது வெற்றிபலம்
காலமெல்லாம் முதல்வராக இருப்பாய் தலைவராக
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் முதல்வராய் கலைஞரய்யா

Friday, January 14, 2011

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்