Friday, July 10, 2009

பா.ம.க. இனி மெல்ல அழியும்

சில தினங்களுக்கு முன் பா.ம.க. மீண்டும் சாதியை கையில் எடுக்கிறது என்ற செய்தியை மீள் பதிவிட்டு இருந்தோம். இப்போது கலைஞர் அவர்களும் அவ்வாறே ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி மாறி பச்சோந்தி தனத்தை பச்சையாக கடைப்பிடித்து வந்த பா.ம.க. வுக்கு தேர்தல் தோல்வி செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது. ஆனால் தோல்விகான பொறுப்பை ஏற்கும் பக்குவம் இன்னும் அதற்கு இல்லாததையே தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகள் காட்டுகின்றன

முதலில் பணம் வென்றது என்றார்கள் அப்புறம் அதிகாரம் வென்றது என்றார்கள். பின்னர் ஓட்டு இயந்திரத்தை குறை சொன்னார்கள். வெற்றி பெறும் போது நன்றாக இயங்கும் ஓட்டு இயந்திரம் தோல்வி அடைந்துவிட்ட போது மட்டும் கோளாறாக தெரிகிறது. திடீரென்று இனி வரும் தேர்தல்களில் கூட்டணி இல்லை என்று அறிக்கை வந்தது. இப்படி எந்த வழியில் செல்வது என்ற குழப்ப நிலையில் தான் இன்று பா.ம.க. இருக்கிறது

வேறு வழி எதுவும் தெரியாததால் இறுதியில் பா.ஜ.க. நிலைமைக்கே வந்துவிட்டது பா.ம.க. பா.ஜ.க. ஒவ்வொரு தேர்தலின் போதும் மத வெறியை கிளப்பும். தேர்தலில் தோல்வி அடைந்தால் மத வெறியை இன்னும் அதிக ஆவேசத்துடன் வெளிப்படுத்தும். மதத்தை கைவிட்டதால் தான் ராமர் தேர்தலில் கைவிட்டுவிட்டதாக சொல்லி மதவெறியை ஊதி ஊதி பெரிதாக்கும் அதே மாதிரி தேர்தலில் தோல்வி அடைந்த பின் பா.ம.கவுக்கும் ஞானோதயம் வந்துவிட்டது போல் இருக்கிறது. மீண்டும் வன்னிய எழுச்சி என்று ஜாதியை தூக்க ஆரம்பித்துவிட்டது.

தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் சாதி சாதி என்று வெறி பிடித்து அலைந்தால் பா.ம.க. இனி மெல்ல அழியும்

3 comments:

said...

வன்னிய சாதி வெறியர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு விழா கமிட்டி கேட்டு கொள்கிறது

said...

என்னது மெல்லவா?

said...

வருங்கால முதல்வர் said...

என்னது மெல்லவா?
//

எப்படியோ ஒழிந்தால் சரி தான்