Thursday, December 13, 2007

மருத்துவர் அய்யாவும், மருந்துக்கும் உதவாத சவடால்களும்!

முன்பெல்லாம் சவடால் பேச்சு என்றாலே வாழப்பாடி ராமமூர்த்தியும், சுப்பிரமணியசாமியும் தான் நினைவுக்கு வருவார்கள். சமீபகாலமாக மருத்துவர் அய்யா நினைவுக்கு வருகிறார். துணைநகரம் திட்டத்தை ஆரம்பித்தபோது மக்களுக்காக அத்திட்டத்தை எதிர்ப்பதாக ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தியவரின் யோக்கியதை இப்போது தான் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

சென்னைக்கு துணைநகரம் அமைக்கப்பட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் மக்களின் நிலங்களோடு சேர்த்து அய்யாவின் நிலங்களும் கையகப்படுத்தப் படுமாம். அது தான் அய்யா திட்டத்துக்கு ஆரம்பத்திலேயே மீட்டர் போட்டு விட்டார். அதிலிருந்தே அய்யா மக்களுக்காக போராடும் போராளி வேடம் பூண ஆரம்பித்துவிட்டார். அவருக்கு இது வசதியாகவும் இருக்கிறது போலும். இதுபோல மதில்மேல் பூனையாக அவ்வப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை, நிர்வாகம் வேலைக்கு ஆகவில்லை, காவல்துறையின் கிட்னி அழுகிப்போனது என்றெல்லாம் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தால் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது அம்மா கட்சியிடம் வலுவான தொகைக்கும் பேரம் பேச வசதியாக இருக்கும் அவருக்கு. நாற்பது கோடியாரின் மதிப்பு தான் இன்னும் கீழிறங்கும். அடுத்த தேர்தலுக்கு அவருக்கு வெறும் நாற்பது ரூபாய் கூட கொடுக்கமாட்டார்கள்.

கடலூரில் துணைமின்நிலையம் அமைக்கக் கூடாது என்று சமீபத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார் மருத்துவர் அய்யா. அங்கே அவருக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறதோ தெரியவில்லை. போராட்டம் நடத்தியவர் அதோடு முடித்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அமைச்சர் ஆற்காட்டாருக்கு சொந்தக்காரர்கள் தான் மின்நிலையம் அமைக்கப் போகிறார்கள் என்று போகிற போக்கில் ஆதாரமில்லாமல் உளறித் தள்ளியிருக்கிறார்.

பதிலுக்கு ஆற்காட்டாரும் 'அதுபோல சொந்தநலனுக்காக திட்டங்களை பயன்படுத்துவதோ, எதிர்ப்பதோ என் வழக்கமல்ல. விளைநிலங்களை அரசுத்திட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லும் ராமதாஸ் 250 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி கல்லூரி நடத்தி வருகிறார்' என்றார்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அரிச்சந்திரனான மருத்துவர் அய்யா பதிலுக்கு 'விளைநிலங்களை கையகப்படுத்தி நான் கல்லூரி கட்டியிருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்' என்று சவால் விட்டார்.

மருத்துவர் அய்யா கட்டியிருக்கும் கல்லூரி எந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதை இதோ ஆற்காட்டார் ஆதாரப்பூர்வமாக பட்டியலிட்டிருக்கிறார். நெல், சவுக்கு, பூஞ்செடி, மேய்ச்சல்நிலம், அணைக்கட்டு, அரசு புறம்போக்கு என்று சகலவகை நிலங்களையும் வளைத்து கட்டி அய்யா கல்லூரி கட்டியிருக்கிறாராம்.

உடனே மருத்துவர் அய்யா அரசியலை விட்டு விலகி தன் சவாலை நிறைவேற்றுவார் என்றெல்லாம் நாம் நினைக்கவில்லை. அந்த அளவுக்கு தன் வாக்குக்கு முக்கியத்துவம் தருபவராக இருந்திருந்தால் மக்களால் நடுத்தெருவில் சட்டையை கழட்டி சாட்டையடி வாங்கியிருப்பார். பா.ம.க.வை தொடங்கும்போதே சொன்னாரே? நினைவிருக்கிறதா? "நானோ, என் குடும்பத்தாரோ அரசியல்ரீதியாக பதவிக்கு வந்தால் சாட்டையால் அடியுங்கள்" என்று. அதையே நாம் மறந்துவிட்டோம். சாதாரண 250 ஏக்கர் நில சவாலை எல்லாமா நினைவில் வைத்திருக்கப் போகிறோம்.

'பிளாக்மெயில் பொலிடிஷியன்ஸ்' என்று டெல்லி அரசியலில் ஒரு பதம் உண்டு. தமிழகத்தில் அந்த வகையில் இதுவரை ஜெயலலிதா மட்டுமே இருந்தார். ஆம்பளை ஜெயலலிதாவாக மருத்துவர் அய்யா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறார். ஜெயலலிதாவை விட ஆபத்தான அரசியல்வாதியாக, பொய்யராக, முதுகில் குத்துபவராக, நயவஞ்சகராக இவர் மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

12 comments:

Anonymous said...

//'பிளாக்மெயில் பொலிடிஷியன்ஸ்' என்று டெல்லி அரசியலில் ஒரு பதம் உண்டு.//
ஒகோ டெல்லி அரசியல் கத்துக்கத் தான் டெல்லி போனீங்களோ.. புரிஞ்சிடிச்சி..

//
தமிழகத்தில் அந்த வகையில் இதுவரை ஜெயலலிதா மட்டுமே இருந்தார். ஆம்பளை ஜெயலலிதாவாக மருத்துவர் அய்யா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறார். ஜெயலலிதாவை விட ஆபத்தான அரசியல்வாதியாக, பொய்யராக, முதுகில் குத்துபவராக, நயவஞ்சகராக இவர் மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.//
ஆகா இது ஜோக்.... அவர் அப்படி ஒண்ணும் மாற வேண்டியதில்லை. ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் இருக்கிறார்.

Anonymous said...

For your reference..

1) http://tamilarangam.blogspot.com/2007/09/blog-post_22.html

2) http://poarmurasu.blogspot.com/2007/11/blog-post_28.html

said...

வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே
வஞ்சனை செய்வாரடி.

said...

அட்டகாசமான கட்டுரை! எது எதுக்கோ கூட்டு வச்சிராங்க, ஒரே ஒரு தடவை திமுகவும் அதிமுகவும் கூட்டு சேர்ந்து பாமக எங்க கூட்டணில இல்லன்னு கழுத்த அறுக்கனும். பின்ன தெரியும்!!!

said...

//ஒகோ டெல்லி அரசியல் கத்துக்கத் தான் டெல்லி போனீங்களோ.. புரிஞ்சிடிச்சி..//

பயலலிதா அம்மா! டெல்லி போனது நானு. தொண்டன் சென்னை அண்ணாநகரில் ஒரு பிரவுசிங் செண்டர் வைத்து குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார். :-((((

said...

இங்க பாருங்கப்பா அபி அப்பா கேப்புல கெடா வெட்டறாரு. ஒரு ராமதாஸை எதிர்க்கரத்துக்காக ஜெயலலிதாவும் கருனானிதியும் ஒன்னா சேர்ந்தா அப்ப நீங்களே பெரிய ஆளா ஆக்குற மாதிரி இல்ல இருக்கும்.மேலும் இப்படி ஒன்னு நடந்த தமிழ் நாட்டுகாரன்னு சொன்னாலே குறிப்பா கர்னாடகா காரன் குமார சாமியவிட மன்னிக்கவும் செறுப்பவிட கேவலமா பார்ப்பார்கள்

said...

அபி அப்பா said...
அட்டகாசமான கட்டுரை! எது எதுக்கோ கூட்டு வச்சிராங்க, ஒரே ஒரு தடவை திமுகவும் அதிமுகவும் கூட்டு சேர்ந்து பாமக எங்க கூட்டணில இல்லன்னு கழுத்த அறுக்கனும். பின்ன தெரியும்!!!

ர்ரிப்பீட்டேய்..rrepeatey..ர்ரிப்பீட்டேய்

said...

இல்லப்பா புரட்சி த்மிழா! சத்தியமா நான் அனுபவிச்சு சொல்றேன்! பாமகவுக்கு வாக்கு வங்கி இல்ல! நல்லா சொல்லுப்பா விசயகந்து எப்படி கெலிச்சாரு??? கலைஞர்க்கு போற ரிப்போர்ட் தப்பா இருக்கு அது மாத்திரம் சத்தியம்!!!!!

said...

//சட்டம் ஒழுங்கு சரியில்லை, நிர்வாகம் வேலைக்கு ஆகவில்லை, காவல்துறையின் கிட்னி அழுகிப்போனது//

காவல் துறைக்கு ஈரலே இல்லை என பேசினார்... காரணம் அவருடைய சாதிகாரர் பங்க் குமாரை என்கவுண்டர் செய்ததால் வந்த கோபம்தான் இது... உண்மையில் இந்த மருத்துவருக்குதான் ஈரலே இல்லையோ...

said...

//அபி அப்பா said...
இல்லப்பா புரட்சி த்மிழா! சத்தியமா நான் அனுபவிச்சு சொல்றேன்! பாமகவுக்கு வாக்கு வங்கி இல்ல! நல்லா சொல்லுப்பா விசயகந்து எப்படி கெலிச்சாரு??? கலைஞர்க்கு போற ரிப்போர்ட் தப்பா இருக்கு அது மாத்திரம் சத்தியம்!!!!!//
கலைஞர் க்கு மட்டும் இல்ல ஜெயலலிதாவுக்கும் போற ரிப்போர்ட் தவறாதான் போகுது எல்லா தலைவர்கலும் கொஞ்சம் தெருவுலவந்து பாக்கனும் என்ன நெலைமைனு சொந்த உளவுத்துரைய மட்டும் நம்பினால் போதாது அதிலும் கருப்பு ஆடு இருந்தால் அப்படிதான் ஒரு தலை சார்பாக நடக்கும்

Anonymous said...

thamizh naattil 2 jokergall onru
vadakkae irundhu pulam peyarndhu
thamizh naattil kudieriya subraman-
ya sami aduthavaru savadaal veeraru
gopalsami ivanga endu perumae enak-
ku eedaagamaattaargall enru ekkaalamittuppurappattirukkiraar
raamadaasu (padayachi/kavundaru)
etharku? kollai adippatharku nalla
tharunamadaa-ithai nazhuva vidaat-
hae-pazhuththa maraththin meethu
kallerivathuthaan puththisaalikka-
zhagu enra thaththuvaththai mika
nanraaga payanpaduththi varukiraar
indha irpaththioraam nootrandu bhu-
dhar ivarappoanra pagal kollaikkaa-
rargall arasiyalil nilava vazhi va-
guththu vittaarkall ippoathu varun-
thippayanillai thi mu ka koattaiyil
oattai vizhkirathu enraal atharku
veerasami poanravargalum oru vaga-
yil kaaranamaanavargallthaan aethoa
kalaignarukku vayathaagi vittathu
matravarkalaavathu ushaaraga iruk-
kattum aanaal onru thamizh maani-
lathil vaazhum makkallil perumabaalaanoar ilichavaayargall
enbathai thellaththelivaaga ulagam
25 aandugalaagave nangu arinthull-
athu verum sinimaa paattukku utha-
dugalai asaippavargalai miga uyara-
ththil aetri vaippavargall enra
perumai padaiththavargalallavaa
ivargall? varunm kaala thamizh nenjangalae neengalaavathu vizhith-
ezhungall ungall sanththigaalaava-
thu pazhi inri vaazha vazhi kaanun-
gall! VANAKKAM THAMIZH NAATTIL
ALLAL PATTUKKONDIRUKKUM ORU APPAVI
KIZHAVANIN ANBAANA VAENDUKOAL ITHU

Anonymous said...

நெத்தியடி கட்டுரை, வாழ்த்துக்கள் தொண்டரே.