Saturday, September 22, 2007

கலைஞர் உண்மையான மதவாதியா?பி.ஜே.பி ஆதங்கம்.

மஞ்சள் துண்டு அணிந்ததால் மதவாதியாகி விட்டாரென மனப்பால் குடித்த மடசாம்பிராணிகள் மருண்டு போய் உள்ளனர்.ராமன் என்ன இஞ்சினீயரா?எந்தக் கல்லூரியில் படித்தார்? என்று தலைவர் கலைஞர் கேட்ட நியாயமான கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் குய்யோ முறையோவென கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது எத்தர்கள் கூட்டம்.



அரசியல் செய்ய வேறு விசயங்களே இல்லையா?ராமன் பாலத்துக்காக இவ்வளவு போராடும் இந்த இழிபிறவியினர் ஏழை மக்களுக்கு ஏதாவது போராடியிருக்கிறார்களா?அப்பாவிகளான ஒடுக்கப்பட்ட இந்துக்களின் இடஒதுக்கீட்டிற்காக ஏதாவது போராடியிருக்கிறார்களா?



இந்து மக்களுக்காக கவலைப்படாத கூட்டம் இந்துமதத்துக்காக ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டுவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.



எப்படியோ மஞ்சள் துண்டை வைத்து அவதூறு கிளப்பி சந்தோசப்பட்ட அற்பர்கூட்டம் இனி வேறு எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்.

சூரியனை சின்னமாக வைத்துள்ளார்,அதனால் சூரிய பகவானின் பக்தர் எனலாம்.
தினமும் காற்றை சுவாசிக்கிறார்,அதனால் வாயு பகவானின் பக்தர் எனலாம்.

150 ஆண்டுகளுக்கு முன்பே சூயஸ் கால்வாய் அமைத்து சாதனை புரிந்தனர் வெளிநாட்டினர்.அதைப் போன்ற மகத்தான சாதனையை தமிழன் இப்போது செய்யவிருக்கிறான்.

அருமை மதவாதிகளே உங்களுக்கு இதைப்போன்ற வேலைகள் எல்லாம் செய்யத்தெரியாது.பரவாயில்லை.செய்பவர்களையாவது செய்யவிடுங்கள்.

0 comments: