Monday, August 13, 2007

"திருவாரூர் தேர் ஓடும்"

/*
வலைப்பதிவர் உலகில் இது எனது முதல் பதிவு, இதை எம் தலைவருக்கே காணிக்கையாக்குகிறேன்.

ஓய்வரியா சூரியனாக என்றென்றும் தமிழருக்காகவும் தமிழ் நாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஜன நாயகத்தின் வழி நின்று போராடிக்கொண்டிருக்கும் ஒரே தமிழர் நம் தலைவர் என்பதில் பெருமைகொள்கிறேன். அவரைப்பற்றி "சோலை" என்பவர் "திருவாரூர் தேர் ஓடும்" என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டரில் எழுதியதை பிரதி எடுத்து இங்கே வெளியிட்டுள்ளேன்.
*/
வீட்டுமனைப் பட்டா கோரி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை மார்க்சிச்ட் கட்சியின்விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அறிவித்தன. மிரண்டு போனோம்.

அப்படி ஒரு போராட்டம் நடந்திருத்தால், ஒரு சில இடங்களிலாவது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டிருக்கும். அத்துமீறி தங்கள் அலுவலகங்களுக்குள் பிறர் நுழைவதை கலெக்டர் அலுவலக ஊழியர்களோ, தாசில்தார் அலுவலகப் பணியாளர்களோ அனுமதிக்க மாட்டார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே வேண்டாத மோதல்கள் வெடித்திருக்கும்.

எனவே, இத்தகைய போராட்டங்கள் வேண்டாம் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 'அல்லி மலரைக் கொய்ய, அரிவாள் எதற்கு?' என்றார். அதனை மார்க்சிச்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. 'ஆக்கிரமிப்பு இயக்கம் ஆர்ப்பாட்ட அறப்போராட்டமாக இருக்கும்' என்று அறிவித்தது. இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.

வீட்டுமனைப் பட்டா கொடுப்பதற்கு தமிழக அரசு தடையாக இருக்கிறதா? இல்லை. ஆனால், வீட்டுமனைப் பட்ட தருவதற்கு மட்டுமல்ல, நிலவிநியோகத்திற்கே வெள்ளைகார அரசு சில விதிமுறைகளை வகுத்து வைத்தது. அந்த விதிகள் இரும்புச் சுவர்களாகக் குறுக்கே எழுத்து நிற்கின்றன. அவற்றைத் தகர்க்க தமிழக அரசு உளப்பூர்வமாக முயற்சிக்கிறது. நிர்வாகக் கோளாறுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

ஆந்திராவிலோ, பீகாரிலோ, பஞ்சாபிலோ இன்றும் நிலக்குவியல்கள் உடைபடவில்லை. அரசுப் புறம்போக்கு நிலங்களை நிலப்புரபுக்களும் அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்குவங்கம், கேரளாவிற்கு அப்பால் தமிழகத்தில்தான் நிலக் குவியல்கள் உடைக்கப்பட்டன. அதனை அன்று அமரர் ஜீவா, சீனிவாச ராவ் போன்ற தேசத் தலைவர்கள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் தொடங்கி வைத்தன.

ஒன்றுபட்டிருந்த கம்யூனிச்ட் கட்சி தொடங்கிய போராட்டங்களின் காரணமாக, நில உச்சவரம்புச் சட்டங்கள் வந்தன. குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டங்கள் வந்தன. வேறு வழியின்றி காங்கிரசு அரசு கொண்டு வந்த இந்தச் சீர்திருத்தங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வேகம் பெற்றன.

ஒரு குடும்பத்த்ற்க்கு முப்பது ஏக்கர் என்று இருந்த நில உச்சவரம்பை இனி 15 ஏக்கர்தான் என்று பாதிக்குப் பாதிக்யாகக் குறைத்தது, அதன் மோலம் உபரியாக வந்த நிலத்தை ஒரு லட்சத்து முப்பதிரண்டாயிரம் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளித்தது அன்றைய கலைஞர் அரசு.

அது மட்டுமல்ல; அவர் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற மறு நாளே பிறப்பித்த முதல் அவசரச் சட்டம் என்ன தெரியுமா? 'தஞ்சை மாவட்டதில் எங்கெல்லாம் விவசாயத் தொழிலாளர்கள் குடிசைகளில் வாழ்கிறார்களோ, அந்த அடிமனை இனி அவர்களுக்கே சொந்தம்' என்று பிரகடனம் செய்தார். நிலப் புரபுக்கள் அரண்டு போனார்கள். காரணம், அந்த லட்சோப லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்தது அவர்களுடைய நிலங்களில்தான்.

ஆலயத்திற்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வலிவலம் தேசிகர் அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கே அவை சொந்தமாக வேண்டும் என்று ஜெகந் நாதன் - கிருஷ்ணம்மாள் தலைமையில் 'சர்வோதய இயக்கம்' போராட்டம் நடத்தியது.அதிகாரவர்க்கம் அந்தப் போராட்டத்திற்கு எதிராக நின்றது. ஆனால், அன்றைய முதல்வர் கலைஞர் , போராட்டத்திற்கு ஆதரவாக நின்றார். ஆலய நிலங்கள் உழுதவர்களுக்கே உரிமையானது.

ஆரூரான் சர்க்கரை ஆலை மூடப்பட்ட போது, அதன் நிலங்கள் ஊழியர்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சர்வோதயத் தலைவர் ஜெகந் நாதன் உண்ணாவிரதம் இருந்தார். அந்த ஆலை நிலங்களையும் பகிர்ந்தளித்தவர், அன்றைய முதல்வர் கலைஞர் தான்.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் வீட்டுமனையும், பட்டாவும் கோரி மார்க்சிச்ட் கட்சியின் விவசாய சங்க அமைப்புகள் போராடின. நாலரை ஆண்டுகளுக்குப் பின்னர்தான், அன்றைய அரசு சோம்பல் முறித்து, கண் திறந்து பார்த்தது. இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா என்று அறிவித்தது. சட்டமன்றத் தேர்தல் கதவைத் தட்டியது. இல்லை, இல்லை. எட்டு லட்சம் குடும்பங்களுக்கு குடிமனைப்பட்ட என்று தண்டோரா போட்டது. ஆனால், எவருக்குமே எந்தப் பட்டாவும் வழங்காமல், ஆட்சியை முடித்துக் கொண்டு சிறுதாவூருக்கு ஓய்வெடுக்கப் போய்விட்டது. கலெக்டர் அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்திலும் குடியிருக்கும் போராட்டத்தை அன்றைக்கு மார்க்சிச்ட் அமைப்புகள் தொடங்கி இருந்தால் என்ன நடைபெற்றிருக்கும்? அன்றைய ஆட்சியின் இரும்புக்கரம் நீண்டிருக்கும்.

ஐம்பது லட்சம் ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலம் இருப்பதாகவும் அதனைத் தொழிலதிபர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் போவதாகவும் சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு கம்யூனிச்ட் கட்சித் தலைவர்களும் அவரைச் சந்தித்தனர். 'அந்த நிலங்களை நிலமில்லாத விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க வெண்டும்' என்றனர்.

'அவர்களுக்குக் கொடுத்து என்ன பலன்? செல்வந்தர்களுக்கும் சீமான்களுக்கும் கொடுத்தால் அவர்கள் பழத்தோட்டங்கள் பொட்டு, பண்ணைகள் அமைத்து உற்பத்தியைப் பெருக்குவார்கள்' என்று அம்மணி சொன்னார்.

அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்த்தை அப்போது அறிவித்திருந்தால் மிகச் சரியாக இருந்திருக்கும். ஏனெனில், வல்லோறுகளுக்குத்தான் வாழ்வு. ஏழை விவசாயிகள் மடிய வேண்டிய ஈசல்கள் என்பதனை கம்யூனிச்ட் தலைவர்களுக்கே அம்மணி கற்றுத் தந்தார்.

தேர்தலில் பொது அறிவித்த 177 உறுதிமொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு விட்டன என்று இன்றைய அரசு பட்டியல் போட்டுக் காட்டுகிறது. மறுப்பாரில்லை.

மேற்கு வங்கம், கேரளாவிற்கு அடுத்து இன்றைக்கு இந்தியாவில் இடதுசாரித் திசை வழியை நாடுகின்ற ஒரே அரசு, தமிழக அரசுதான். அதனால்தான் உறுதிமொழிகள் உயிர் பெறுகின்றன. மக்களுக்கு நல்லதே செய்வதில் இந்த மூன்று அரசுகளுக்கு இடையே சகோதரப் போட்டி வரவேண்டும்.

இந்த திருவாரூர் தேர் என்னவோ, சிவப்புச் சிந்தனையோடுதான் வலம் வருகிறது. ஒருவேளை அந்தச் சிந்தனை அந்த பூமி தந்த சீதனமாக இருக்கலாம். அந்தத் தேரின் வேகத்தை வேகப்படுத்துவது நியாயமாக இருக்கும். வேகத்தடை வேண்டுமா என்ன?

1996-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், ஐம்பத்திரண்டாயிரத்திற்க்கும் அதிகமான விவசாயிகளுக்கு முப்பத்தைந்தாயிரதிற்கும் அதிகமான ஏக்கர் நிலங்களுக்கு பட்ட வழங்கப்பட்டன.

கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, இதுவரை 91 ஆயிரத்து 576 விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

2000வது ஆண்டில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழும் ஒரு லட்சத்து ஆறாயிரம் குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஆரு மாதங்களில் மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த சாதனைகளுக்கு முற்றுப்புள்ளீ வைக்கப்படவில்லை. அதாவது, திருவாரூர் தேர் நகர்ந்து கொண்டே இருக்கிரது. பயணம் தொடர்கிறது.

பல தலைமுறைகளாகக் குடியிருக்கும் பத்து லட்சம் குடும்பங்களுக்கு இன்னும் நிலப்பட்டா தரப்பட வேண்டும் என்று ஒரு கணக்குச் சொல்கிறார்கள். அதனோடு ஒப்பிடும்போது, ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு நிலப்பட்டா என்பது சாதரணமாகத் தெரியலாம். அடுத்து வரும் மார்ச் மாதத்திற்குள் இன்னும் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு பட்ட அளிப்பதென மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மூன்ரு லட்சம் என்ற எல்லை ஐந்து லட்சமாக உயர வேண்டும் என்று கெட்கப்படுமானால், அதில் நிரம்ப நியாயம் இருக்கிறது.

அரசுப் புறம்போக்கு நிலங்களில் எவ்வளவு பேர்தான் வாழ்கிறார்கள்? ஆலயங்கள், மாத கோயில்கள், மசூதி வக்பு வாரிய நிலங்களில் பத்து லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. 'அந்த நிலங்களை அரசே விலை கொடுத்து வாஙி, அவர்களுக்குப் பட்டாப் போட்டு கொடுக்கவேண்டும்' என்றார். மார்க்சிச்ட் விவசாய சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன்.

இந்தக் கோரிக்கை செயல் படுத்தப்பட்டால், எத்தகைய கொந்தளிப்பு ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை.

எனவே, மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் எந்த அடிப்படையில் குடிமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன? எந்த அடிப்படையில்னிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்ற தகவல்களை தமிழக அரசு திரட்ட வேண்டும். இந்தத் துறையில் இன்னும் ஒரு சாதனை செய்வதற்கு கலைஞருக்கு அவை கை கொடுக்கும்.

- சோலை ( நன்றி குமுதம் ரிப்போர்டர் )




6 comments:

said...

நன்றி ஜெயகணபதி!

முதல் பதிவே முத்தான பதிவு!!

said...

மிக்க நன்றி லக்கியாரே..!!! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்...!!! எனது முதல் பதிவே தமிழ் நாட்டின் தலைமகனைப் பற்றி அமைத்ததில் பெருமகிழ்ச்சி. இதற்கு காரணம் தாங்கள் தான்..!!

said...

"குண்டேந்தும் பீரங்கி வந்தாலும் கொள்கையில் மாறாத கலைஞர் வாழ்க"

said...

கலைஞரையும் கண்டவர்களையும் ஒப்புமைப்படுத்தும் நடுநிலைவியாதிகள் படித்து தெரிந்து கொள்ளட்டும்

said...

பொதுவுடைமைக் கொள்கைகளை கலைஞருக்குக் கற்றுத்தர நினைக்கும்
புரட்சியாளர்கள் இப்பதிவைப் படித்தாவது திருந்தட்டும்.

Anonymous said...

அருமையான பதிவு ஜெயகணபதி. வாழ்த்துக்கள்.