Monday, May 26, 2008

சென்னையில் ‘கலைஞர் 85' கொண்டாட்டம்!

31.5.2008 அன்று, சென்னை-சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு, “கலைஞர் 85 கொண்டாட்டம்” பல்வேறு சிறப்பு நிகழ்ச்கிகளாக நடைபெறுகிறது.

மாலை 4.00 மணிக்கு - ராம்ஜி குழுவினர் வழங்கும் ”கலைஞர் வாழியவே” என்ற நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு உலகப் புகழ் ட்ரம்ஸ் சிவமணி வழங்கும் “கலைஞர் -மக்கள் இசையே” நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு - பேராசிரியர் திரு பெரியார்தாசன் அவர்கள் வழங்கும், “கலைஞருக்கு நிகர் கலைஞரே” என்ற நிகழ்ச்சியும், இரவு 8.00 மணிக்கு - கலைஞர் டிவி ”எல்லாமே சிரிப்புதான்” குழுவினர் வழங்கும் ”சாதித்தது யாரு? சாதிக்கப்போவது யாரு?” என்ற நிகழ்ச்சியும், இரவு 9.00 மணிக்கு - “கலைஞர் - சாதனை ஆட்சியே” என்ற குறுந்தகடு வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு பரிதி இளம்வழுதி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. மாண்புமிகு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் திரு வி.பி.துரைசாமி வரவேற்புரையாற்றுகிறார். மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ.தமிழரசி, மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு கே.பி.பி.சாமி, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு உ.மதிவாணன், செயலாளர் திமுக விவசாயிகள் அணி திரு கே.பி.ராமலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் திரு எல்.பலராமன், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு ஜெ.அன்பழகன், சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் திரு சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாண்புமிகு நிதி அமைச்சர் திருமிகு பேராசிரியர் அவர்கள் விழா துவக்க உரையாற்றுகின்றார். மாண்புமிகு மின் துறை அமைச்சர் திருமிகு ஆற்காட்டார் அவர்கள் விழா சிறப்புரையாற்றுகின்றார். விழா இறுதியில், முன்னாள் அமைச்சரும், திமுக ஆதி திராவிடர் நலக் குழு செயலாளருமான திரு ச.தங்கவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மீனவர் அணி செயலாளருமான திரு இரா. பெர்ணார்ட், திமுக விவசாய அணி செயலாளர் போடி திரு முத்து மனோகரன், மீனவர் அணி செயலாளர் இராயபுரம் திரு நற்குணம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக ஆதி திராவிடர் நலக் குழு செயலாளருமான திரு வி.பி.ராஜன், விவசாய தொழிலாளர் அணி திரு நன்னிலம் மணிமாறன் ஆகியோர் நன்றியுரையாற்றுகின்றார்கள்.

நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தி.மு.கழக ஆதி திராவிட நலக் குழு, மீனவர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணிகள் செய்து வருகிறது. மேற்கண்ட “கலைஞர் 85 கொண்டாட்டம்” நிகழ்ச்சிக்கு, தி.மு.க.வின் அனைத்து அணியினரும், பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் வருகைபுரிந்து, நிகழ்ச்சியினை சிறப்பித்துத் தருமாறு, திமுகவின் துணை பொதுச்செயலாளரும், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சருமான திரு பரிதி இளம்வழுதி அவர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்.

0 comments: