Friday, April 18, 2008

கனிமொழி கானா ராக்

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம், கர்னாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம் தான் சிறந்தது என தமிழ்நாட்டில் நிலவிவரும் ஒரு கற்பிதம். மற்ற கலை வடிவங்களான நாட்டுப்பாடல்கள், கரகம், ஒயிலாட்டம் மற்றும் கானா பாடல்கள் தாழ்ந்தவை என்றும் அதை நடத்துபவர்களும்,ரசிப்பவர்களும் ரசனை குறைவானவர்கள் என்றும் ஒரு நுண்ணிய பிரச்சாரம் ஊடகங்களால் செய்யப்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகளிலும் இம்மாதிரி பிரிவுகள் உண்டு ஆனால் ஏற்ற தாழ்வு இல்லை. நாம் ரசிக்கும் மேற்கத்திய சங்கீதம் எல்லாமே பல பிரிவுகளை சேர்ந்ததுதான். மேற்கத்திய கிளாசிகல் சங்கீதம் எதையும் நாம் ரசிப்பதில்லை ஏனைய வடிவங்களான ராக்,பாப் போன்றவற்றையே ரசிக்கிறோம். அந்த இசை அமைப்பாளர்களை கொண்டாடுகிறோம். ஆனால் இங்குள்ள மற்ற இசை வடிவங்களை ஏளனம் செய்கிறோம்.

தமிழுக்கும் தமிழ் கலைகளுக்கும் தாழ்வு வரும் போதெல்லாம் அதை தாங்கிப்பிடிக்கும் தூணான கலைஞர் அவர்களின் புதல்வி இவ்விசயத்தில் தந்தையையே மிஞ்சினார். சென்னை சங்கமம் என்னும் நிகழ்ச்சிக்கு தோள் கொடுத்தார். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு மரியாதை பெற்றுத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இனிவரும் தலைமுறையாவது எல்லா கலைகளையும் சமமாக மதிக்கட்டும்.

0 comments: