Monday, April 28, 2008

வியக்கவைத்த கலைஞர்!

இன்று கலைஞர் தொலைக்காட்சியில் தசாவதாரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். விழாவிற்கு சிறப்பு விருந்தனராக ஜாக்கி சான் அவர்கள் வந்திருந்தார்கள். அந்த மேடையிலே இருந்த அனைவரும் வரவேற்ப்புரை, வாழ்த்துரை, ஏற்புரை என்று பேசினார்கள். ஆனால் தமிழன தலைவர் கலைஞர் அவர்கள் பேசிய போது அனைவரும் வாயடைத்து போய்விட்டார்கள். மற்றவர்கள் பேசும் போது சும்மா பேச வேண்டுமே என்பதற்காக பேசினார்கள். ஆனால் தலைவர் அவர்கள் பேசிய போது தான் அவர் இந்த விழாவிற்கு வருவதற்கு முன்பு எவ்வளவு தயார் செய்து கொண்டு வந்திருந்திருக்கிறார் என்று தெரிந்தது.

அவர் ஜாக்கி சானையும் கமலையும் பற்றி ஒப்பிட்டு பேசியது. ஜாக்கி சான் பற்றி அவரை அழைத்து வந்தவர்களுக்கே தெரியாத பல விஷயங்களை பற்றி பேசியது. அப்படியே புல்லரித்து விட்டது எனக்கு. இதற்காக அவர் எவ்வளவு நேரம் செலவு செய்திருக்க வேண்டும். தலைவரிடம் இருந்து இந்த நல்ல பழக்கத்தை நாம் அனைவரும் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற்று விடலாம்.

இந்த விழாவில் ஒரு சின்ன குறை ஜாக்கி சானுக்கு ஒரு மொழி பெயற்பாளரை அமர்த்தியிருக்கலாம்.

2 comments:

Anonymous said...

உடன் பிறப்பு மாவீரர்களே,

உலகத்திலேயே வேலை எதுவும் எல்லாத முண்டம் நம்ம சோ ராமசாமி அய்யா தான்; இந்த விஷயத்துக்காக இருள்நீக்கி அபிமான குஞ்சுகள் பெருமை கொண்டு ஆர்கஸம் அடையலாம். தசாவதாரம் இசை வெளியீட்டுக்கு ஓசி பாஸ் கிடைக்குமா என்று நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைந்தார் சோ அய்யா. ஒருத்தணும் அந்த ஆளை சீண்டலை. இந்த மாதிரி ஜாதி மதவெறி நாய்களை செருப்பால் அடிக்கணும்.

பாலா

said...

"ஒரு சின்ன குறை ஜாக்கி சானுக்கு ஒரு மொழி பெயற்பாளரை அமர்த்தியிருக்கலாம்."

நிகழ்ச்சியை பார்க்கும்பொழுது எனக்கும் இந்த வருத்தம் இருந்தது.

ஆனால் தலைவர் இந்த அளவிற்கு ஆயத்தமாக வருவார் என விழா அமைப்பாளர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

தலைவர் அள்ளி வீசிய புள்ளி விவரங்களைக் கண்டு சாக்கிசானே மிரண்டிருப்பார்.

ஒரு குழந்தையைப் போன்று உற்சாகமும் ஆர்வமுமாக இருந்த சாக்கிசானை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.