Tuesday, April 08, 2008

ஒகேனக்கல் பிரச்சினையும், பார்ப்பனர்கள் கும்மாளமும்!

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் இப்போதெல்லாம் கும்மாளமிடுவது பார்ப்பனர்கள். காவிரி பிரச்சினையாக இருந்தாலும் சரி, பெரியாறு, ஒகேனக்கல் பிரச்சினையாக இருந்தாலும் சரி. பார்ப்பனர்களுக்கு அந்த பிரச்சினை தீரவேண்டுமென்ற அக்கறையெல்லாம் எதுவுமில்லை. அப்பிரச்சினைகளை காரணம் காட்டி கலைஞரை திட்டி தீர்க்கலாமே என்ற மகிழ்ச்சி தான் அதிகமாக தென்படுகிறது. தற்போது இணையத்தில் பார்ப்பனர்கள் எழுதிவரும் கட்டு உரைகளையே இதற்கு நல்ல உதாரணமாக காட்டலாம்.

பிரச்சினை பாஜக ரூபத்தில் தொடங்கியபோது ஒகேனக்கல் குறித்த அக்கறை இல்லாத பார்ப்பனர்கள் அங்கே வெறியாட்டம் நடந்து, தமிழகத்திலும் மானமுள்ள தமிழர்களால் போராட்டம் நடத்தப்பட்டு கலைஞரின் விவேகத்தால் இப்பொழுது கொந்தளிப்பு அடங்கிய நிலையில், கலைஞரை திட்ட காரணம் கிடைக்காதா என்று நாக்கை தொங்கப்போட்டு அலைந்த பார்ப்பனர்களுக்கு திடீரென ஒகேனக்கல் திட்டம் மீது அக்கறை வந்திருக்கிறதாம். இதுபோல எப்போதாவது பார்ப்பனர்களுக்கு தமிழ் மீதும், தமிழன் மீதும் அக்கறை பிறக்கும்.

தில்லையிலே தமிழுக்கு இடம் கேட்டபோதும் வராத அக்கறை, தமிழை கட்டாயப்பாடமாக சேர்க்கும்போது வராத அக்கறை கலைஞரையும், திராவிட இயக்கங்களையும் திட்ட வாய்ப்பு கிடைத்தால் மட்டும் பார்ப்பனர்களுக்கு வந்துவிடும். ஒகேனக்கல் பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறும், இருதரப்பிலும் ரத்தக்களறி ஏற்படும், கலைஞரின் ஆட்சி கலைக்கப்படும், மத்தியில் ஐ.மு. ஆட்சி கலைந்து பாஜக ஆட்சி ஏற்படும் என்றெல்லாம் எதிர்பார்த்த ஒட்டுண்ணி பார்ப்பனர்களுக்கு கலைஞரின் விவேகமான அணுகுமுறை ஏமாற்றத்தை தான் அளித்திருக்கும். அந்த ஏமாற்றம் தந்த ஆற்றாமை தான் அவர்களை இப்படி எழுதவும், பேசவும் வைக்கிறது.

2 comments:

said...

//கும்மாளமிடுவது பார்ப்பனர்கள்//
இது முற்றிலும் குறுகிய பார்வை, பா.ஜ.கவில் இருக்கிறவங்க எல்லாருமே பார்ப்பனர்கள்ன்னு சொல்ற மாதிரி.

Anonymous said...

அதி மேதாவியே, மருத்துவர் ராமதாசும்,நெடுமாறனும்,
ஏன் டி.ராஜேந்தரும் பார்பனர்களா?.
உங்கள் தலைவர் யாரைக் கேட்டு அந்த முடிவை எடுத்தார்.