
Thursday, January 22, 2009
வில்லு - விஜய்க்கு நன்றி
குருவி படத்தை பார்த்துவிட்டு வந்து வாய்க்கு வந்தபடி எல்லாம் வசைமாறி பழித்தவர்களுக்கு தனது வில்லு திரைப்படம் மூலம் சரியான பதிலடி கொடுத்த விஜய்க்கு நன்றிகள் பல. வில்லு படத்தை பார்த்து விட்டு நொந்து போனவர்கள் எல்லாம் குருவி படத்தை போற்றுகிறார்கள்


Friday, December 05, 2008
கலைஞருக்கு 'செம்மொழிச் செம்மல்' விருது!

முதல்வர் கலைஞருக்கு டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் செம்மொழிச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இதற்கான விழா டெல்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்தது. இதே நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சிலை நாட்டுவிழா, முத்தமிழ் தோரண வாயில் கால்கோள் விழா ஆகியவையும் நடந்தன. முதல்வர் கலைஞர் திருவள்ளுவர் சிலையை நாட்டி சிறப்புரை ஆற்றுகிறார்.
இதில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். சங்கத் தலைவர் கிருஷ்ணமணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சங்கப் பொதுச் செயலாளர் முகுந்தன் வரவேற்புரை ஆற்றுகிறார், இணைச் செயலாளர் ராகவன் நாயுடு நன்றி கூறினார்.
செய்தி உதவி : கோவி கண்ணன் & தட்ஸ் தமிழ்
Wednesday, December 03, 2008
ஜெ.ஜெ. பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் "இம்சை அரசி"
தயாரிப்பு: செல்வி ஜெயலலிதா
கூட்டு தயாரிப்பு: தோழி சசிகலா
பட்ஜெட்: எந்திரன் 100 கோடி எல்லாம் ஒரு பட்ஜெட்டா இந்த படத்தில் ஒரு கல்யாண சீனுக்கே பல நூறு கோடிகள் செலவழித்துள்ளார்கள்
கதை: உலகமகா மேதாவி 'சோ'ராமசாமி
திரைக்கதை: மூத்த பதிவர் T.V.Radhakrishnan
இயக்கம்: செல்வி ஜெயலலிதா
வசனம்: வைகோ
மொழிபெயர்ப்பு: டோண்டு ராகவையங்கார்
பாடலகள்: 'மானாட மார்பாட' ஞாநி
வில்லன்: சுதாகரன்
வில்லி: சந்திரலேகா
அறிமுக வில்லன்: சங்கராச்சாரியார்
காமெடி: சுப்பிரமணிய சுவாமி
சண்டை பயிற்சி: வால்டர் தேவாரம்
உதவி இயக்குநர்கள்:
மதுசூதனன் ராமானுஜம்
வீ தெ பீப்பிள்
மாயவரத்து 'ஜெ' அடிவருடி மற்றும் பல பதிவுலக மேதாவிகள்
கதைச் சுருக்கம்: இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். 'சோ'ராமசாமியும் டீமில் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமே கிடையாது. மதமாற்ற தடைச் சட்டம் பின்னர் வாபஸ், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் பின்னர் வாபஸ் போன்று ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம்
பாடல் காட்சிகள்களுக்கு வெளிநாடு செல்லாமல் உள்ளூர் கொடாநாட்டிலேயே படம் பிடித்து இருப்பது மிகப் பெரிய ஆறுதல்
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒரு பேரூந்தை தீ வைப்பது போன்ற மயிர் கூசச் செய்யும் காட்சிகளும் உண்டு
பின் குறிப்பு: சிங்கப்பூர் விநியோகஸ்தருக்கு ஒரு நல்ல ஆளாக தேடிக் கொண்டு இருப்பதாக கேள்வி. ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்
கூட்டு தயாரிப்பு: தோழி சசிகலா
பட்ஜெட்: எந்திரன் 100 கோடி எல்லாம் ஒரு பட்ஜெட்டா இந்த படத்தில் ஒரு கல்யாண சீனுக்கே பல நூறு கோடிகள் செலவழித்துள்ளார்கள்
கதை: உலகமகா மேதாவி 'சோ'ராமசாமி
திரைக்கதை: மூத்த பதிவர் T.V.Radhakrishnan
இயக்கம்: செல்வி ஜெயலலிதா
வசனம்: வைகோ
மொழிபெயர்ப்பு: டோண்டு ராகவையங்கார்
பாடலகள்: 'மானாட மார்பாட' ஞாநி
வில்லன்: சுதாகரன்
வில்லி: சந்திரலேகா
அறிமுக வில்லன்: சங்கராச்சாரியார்
காமெடி: சுப்பிரமணிய சுவாமி
சண்டை பயிற்சி: வால்டர் தேவாரம்
உதவி இயக்குநர்கள்:
மதுசூதனன் ராமானுஜம்
வீ தெ பீப்பிள்
மாயவரத்து 'ஜெ' அடிவருடி மற்றும் பல பதிவுலக மேதாவிகள்
கதைச் சுருக்கம்: இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். 'சோ'ராமசாமியும் டீமில் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமே கிடையாது. மதமாற்ற தடைச் சட்டம் பின்னர் வாபஸ், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் பின்னர் வாபஸ் போன்று ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம்
பாடல் காட்சிகள்களுக்கு வெளிநாடு செல்லாமல் உள்ளூர் கொடாநாட்டிலேயே படம் பிடித்து இருப்பது மிகப் பெரிய ஆறுதல்
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒரு பேரூந்தை தீ வைப்பது போன்ற மயிர் கூசச் செய்யும் காட்சிகளும் உண்டு
பின் குறிப்பு: சிங்கப்பூர் விநியோகஸ்தருக்கு ஒரு நல்ல ஆளாக தேடிக் கொண்டு இருப்பதாக கேள்வி. ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்
Tuesday, October 28, 2008
ஜெயலலிதா முதல்வராய் இருந்திருந்தால்....
இந்த பதிவிற்கு தலைப்பு முதல்வராய் என்பதற்கு பதில் சாதியை பறைசாற்றும் விதமாக அமைத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் அளவுக்கு கீழே இறங்கி போக விரும்பவில்லை. நாம் ஏற்கனவே போலி பற்றிய பதிவில் சொன்னது போல் நாம் யாரும் பார்ப்பனீயத்தை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டால் அவர்களுக்கு பிழைப்பு ஓடாது. அதை அவர்களே கிளறிவிட்டுக் கொண்டு இருப்பார்கள். நாம் போலி பதிவில் சொன்னதை நூற்றுக்கு நூறு நிரூபித்து இருக்கிறார்கள் தங்கள் செயல் மூலம்
இலங்கை பிரச்சினை மூலம் அதிக கொள்ளை இலாபம் அடைந்தவர்கள் அவர்களே என்றால் மிகையாகாது. தமிழர்கள் என்றும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பது தான் அவர்கள் எண்ணம். அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டது இலங்கை பிரச்சினை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்று சேர்வதை கண்டதும் அதற்கு முதலில் முட்டுக்கட்டை போட்டது அவர்கள் தான். இந்திய இறையாண்மை என்ற அஸ்திரத்தை ஏவினார்கள். அந்தோ பரிதாபம்! இப்போது யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு கூட அஞ்சுகிறார்கள். அவர்களின் முதல் திட்டம் நிறைவேறிவிட்டது
பேசினாலே சட்டம் பாயும் நிலை ஏற்படுத்திவிட்ட பின்பு கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இவர்கள். அவர் தனது ஆட்சியை இழக்க வேண்டுமாம். அவர் ஆட்சியில் இருக்கும் போதே இந்த ஆட்டம் போடுகிறீர்களே அவர் ஆட்சியையும் பறித்துவிட்டால் நீங்கள் என்னென்ன செய்வீர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ. இவர்கள் வடிப்பது ஈழத்தமிழர்களுக்கான நீலிக் கண்ணீர் அல்ல. கலைஞர் ஆட்சியை காவு வாங்க காத்திருந்து காய்ந்த கண்களின் கண்ணீர்
சரி, நம் கேள்விக்கு வருவோம் "ஜெயலலிதா முதல்வராய் இருந்திருந்தால்.... " என்ன செய்து இருப்பார். கலைஞர் எடுத்த முயற்சியில் எந்த ஒரு துளியும் எடுக்காமல் கொடநாட்டில் ஓய்வு எடுக்க போயிருப்பார். அப்போது இவர்கள் வேறு மாதிரி எழுதிக் கொண்டு இருப்பார்கள்
இலங்கை பிரச்சினை மூலம் அதிக கொள்ளை இலாபம் அடைந்தவர்கள் அவர்களே என்றால் மிகையாகாது. தமிழர்கள் என்றும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பது தான் அவர்கள் எண்ணம். அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டது இலங்கை பிரச்சினை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்று சேர்வதை கண்டதும் அதற்கு முதலில் முட்டுக்கட்டை போட்டது அவர்கள் தான். இந்திய இறையாண்மை என்ற அஸ்திரத்தை ஏவினார்கள். அந்தோ பரிதாபம்! இப்போது யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு கூட அஞ்சுகிறார்கள். அவர்களின் முதல் திட்டம் நிறைவேறிவிட்டது
பேசினாலே சட்டம் பாயும் நிலை ஏற்படுத்திவிட்ட பின்பு கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இவர்கள். அவர் தனது ஆட்சியை இழக்க வேண்டுமாம். அவர் ஆட்சியில் இருக்கும் போதே இந்த ஆட்டம் போடுகிறீர்களே அவர் ஆட்சியையும் பறித்துவிட்டால் நீங்கள் என்னென்ன செய்வீர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ. இவர்கள் வடிப்பது ஈழத்தமிழர்களுக்கான நீலிக் கண்ணீர் அல்ல. கலைஞர் ஆட்சியை காவு வாங்க காத்திருந்து காய்ந்த கண்களின் கண்ணீர்
சரி, நம் கேள்விக்கு வருவோம் "ஜெயலலிதா முதல்வராய் இருந்திருந்தால்.... " என்ன செய்து இருப்பார். கலைஞர் எடுத்த முயற்சியில் எந்த ஒரு துளியும் எடுக்காமல் கொடநாட்டில் ஓய்வு எடுக்க போயிருப்பார். அப்போது இவர்கள் வேறு மாதிரி எழுதிக் கொண்டு இருப்பார்கள்
Friday, October 24, 2008
நன்றி வைகோ
பல வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகி இருந்தது. ஈழத்
தமிழர்களுக்கு ஆதரவாக பல தரப்பில் இருந்தும் ஆதரவுக் கரங்கள் நீண்டன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
கலைஞர் அவர்களும் களம் இறங்கினார். இப்படிப்பட்ட சூழலில் ஆயுதம் ஏந்தி போராடுவேன் என்று பேசும்
அளவுக்கு வைகோவுக்கு என்ன அவசியம் வந்தது
உணர்ச்சி வசப்படுவதற்கு பெயர் போன வைகோ ஈழப் பிரச்சினையில் அதீத உணர்ச்சி வசப்படுவதில் எந்த வித
ஆச்சர்யமும் இல்லை. இன்று வரை கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்ததை அவர் மறுத்ததாக
தெரியவில்லை. அப்படிப்பட்டவர் உணர்ச்சி வசப்பட்டு தீவிரவாதத்தை தூண்டும் வரை போனது மிகப் பெரிய
முட்டாள் தனம். தலைவர் பாதையை விட்டு விலகாத கண்ணப்பணும் தன் பங்குக்கு ஏதேதோ உளறிக் கொட்டி
இருக்கிறார்
வைகோ உணர்ச்சி மேலிடும் போது எந்த அளவுக்கும் செல்வார் என்பதை உலகுக்கு காட்டிவிட்டார். இங்கே
ஒன்றை நினைவுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். வைகோவை கழகம் நீக்கிய போது வைகோவால் தலைவர்
உயிருக்கு ஆபத்து என்ற உளவுத் துறையின் செய்தி ஆதாரமாக சொல்லப்பட்டது. ஆனால் வைகோவோ
ஸ்டாலினை கட்சியில் முன்னிலைப்படுத்துவதற்காக தன் மீது அபாண்ட பழி சுமத்தப்படுவதாக ஒப்பாரி
வைத்தார். அவர் உணர்ச்சி மேலிடும் போது தான் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் செயல்படுவார்
என்பதை அவருடைய சமீபத்திய பேச்சுக்கள் மீண்டும் நிரூபித்து இருக்கின்றன.
உங்கள் உண்மை முகத்தை உலகுக்கு வெளிக் காட்டி கொண்டதற்கு நன்றி வைகோ
தமிழர்களுக்கு ஆதரவாக பல தரப்பில் இருந்தும் ஆதரவுக் கரங்கள் நீண்டன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
கலைஞர் அவர்களும் களம் இறங்கினார். இப்படிப்பட்ட சூழலில் ஆயுதம் ஏந்தி போராடுவேன் என்று பேசும்
அளவுக்கு வைகோவுக்கு என்ன அவசியம் வந்தது
உணர்ச்சி வசப்படுவதற்கு பெயர் போன வைகோ ஈழப் பிரச்சினையில் அதீத உணர்ச்சி வசப்படுவதில் எந்த வித
ஆச்சர்யமும் இல்லை. இன்று வரை கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்ததை அவர் மறுத்ததாக
தெரியவில்லை. அப்படிப்பட்டவர் உணர்ச்சி வசப்பட்டு தீவிரவாதத்தை தூண்டும் வரை போனது மிகப் பெரிய
முட்டாள் தனம். தலைவர் பாதையை விட்டு விலகாத கண்ணப்பணும் தன் பங்குக்கு ஏதேதோ உளறிக் கொட்டி
இருக்கிறார்
வைகோ உணர்ச்சி மேலிடும் போது எந்த அளவுக்கும் செல்வார் என்பதை உலகுக்கு காட்டிவிட்டார். இங்கே
ஒன்றை நினைவுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். வைகோவை கழகம் நீக்கிய போது வைகோவால் தலைவர்
உயிருக்கு ஆபத்து என்ற உளவுத் துறையின் செய்தி ஆதாரமாக சொல்லப்பட்டது. ஆனால் வைகோவோ
ஸ்டாலினை கட்சியில் முன்னிலைப்படுத்துவதற்காக தன் மீது அபாண்ட பழி சுமத்தப்படுவதாக ஒப்பாரி
வைத்தார். அவர் உணர்ச்சி மேலிடும் போது தான் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் செயல்படுவார்
என்பதை அவருடைய சமீபத்திய பேச்சுக்கள் மீண்டும் நிரூபித்து இருக்கின்றன.
உங்கள் உண்மை முகத்தை உலகுக்கு வெளிக் காட்டி கொண்டதற்கு நன்றி வைகோ
Thursday, October 16, 2008
அம்மாவின் கபட நாடகம் பாரீர்.
அம்மாவின் கபட நாடகம் பாரீர்.
அட, இந்த அம்மா கூட இலங்கை தமிழருக்கு ஆதரவா பேசுதேனு ஒரு ஆச்சரியம்.. அதெல்லாம் ஒரு மன்னும் இல்லனு தெளிவு படுத்திய அம்மாவுக்கு நன்றி..
தந்தி அடியுங்கள் என்ற சொன்னவுடன் , என்ன தந்தி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்ல வேண்டியது தானேனு அம்மா கத்துச்சி.. இப்போ அதுவே தீர்மானமாக அனைத்து கட்சிக்கூட்டத்துல வந்தப்ப, மொதல்ல, நான் சொன்னதுக்காத்தான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்தார்னு ஒரு அறிக்கை விட்டுச்சு.. அந்த பப்பு வேகல.. கலைஞர் எடுத்த இந்த முடிவுக்கு எல்லோரும் , ஆதரவு தந்தத பார்த்து அதுக்கு உள்ளே ஒரு உதறல்..
இப்பொ என்னடானா, அயிரெத்துட்டு கேள்வி கேட்குது.. அமைச்சர் பதவி விலகுவாங்களா.. அது இதுனு,
அட லூசே.. அனைத்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்னு தெளிவா சொல்லிட்டாங்களே அப்புறம் ஏன் ஒப்பாரி உனக்கு?? வக்கிருந்து உங்க கட்சி சார்ப்பா அனைத்து கட்சி கூட்டத்து போய் இருக்கனும்.. அத விட்டுட்டு லூசு முன்டம் மாதிரி அறிக்கை விடற... அதுக்கு அந்த வைக்கோல்சாமி வேற ஒத்து...
யம்மா.. நீ வழக்கம் போல, தாம்பரம் 2 வது முட்டுசந்துல அ தி மு க போராட்டம் , கிழக்கு சைதாப்பேட்டைல மூனாவது மூத்திர சந்துல ஆர்ப்பாட்டம்னு அறிக்கைவிட்ட்கிட்டு வேலைய பாரு.. லூசுத்தனமா, உனக்கு சம்பந்தமே இல்லாத தமிழர் பிரச்சனைக்கு தலைய விடாதே.. சரியா..
இது நீலிக்கண்ணீர் விடுது.. இலங்கை பிரச்சனை பற்றிய உன் மூஞ்சி லட்சணம் என்னனு ஊருக்கே தெரியும், இப்போ திடிர்னு நீ வந்து சும்மா ஆதரவு அறிக்கை விடுறீயா??
இதுல ரெண்டு பக்கம் இருக்கு , ஒரு பக்கத்தை ஆதரிக்கிறேன், இன்னொரு பக்கத்தை கடுமையா எதிர்க்கிறேன்னு அறிக்கை விட்டுது இந்த லூசு இரண்டு நாளைக்கு முன்னாடி.. இப்போ வந்திருக்க கடைசி அறிக்கைய பாருங்க.. என்ன நாடகம் ஆடுது இந்த புண்ணாக்கு.
லூசே, இப்போ சொல்றீயே.. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை நு , அட முன்டமே. அப்புறம் என்னத்துக்கு இங்கே இருந்து எதுக்கு அறிக்கை விட்டே?? மத்திய அரசில் இருக்கும் கருணாநிதி இதை பற்றி ஏன் பேசலனு..
லூசு அம்மாவின் பதில் - அட , கருனாநிதி இலங்கையோட அமைச்சரையில் இடம்பெற்றிருக்காருன்னா நெனைச்சுன்டிருக்கேன்... அவா கூட இல்லையா....
இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிட வாய்ப்பு ஏற்படும். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்' என்பது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னை
லூசு அம்மா, இந்தியா தலையிடவும் கேட்கக்கூடாது, தாக்குதல்களும் நிக்கனும் . என்ன கணக்கு இது? அப்புறம் ஏன் இங்கே இருந்து அறிக்கை விடற அதுவும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரா..?
லூசு அம்மா பதில் - அட ஆமா, சரி சரி.. அப்போ , இந்தியால இருக்கு எல்லா எல் கே ஜி, யூ கே ஜி க்கும் 2 நாள் லீவு விட்டுடலாம், இலங்கை அரசு பயந்துடும்.. அப்படியும் பயப்படலனா... போயஸ் தோட்டம் பக்கத்துல இருக்க மூத்திர சந்துல ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி நடுநடுங்க வெக்கலாம்..
இது ஓக்கே வாம் , அது ஓக்கே இல்லையாம்.. சரி இந்தியா தலையிட்டு பேசலாம்னா , அது கூடாதாம், அது இந்திய இறையான்மையை பாதிக்குமாம்..
அட லூசே , என்னத்தான் நிலை நு தெளிவா சொல்லு... நீ அரசியல் குளிர் காயறதுக்கு, நடுவுல பூந்து குளிர்காயாதே.. ஓடு உன் கொட நாடு எஸ்ட்டேட்டுக்கு,குளிர் காயனும்னா..
இந்தியா எதுவும் செய்ய முடியாதுனு பேசுற நீ மத்திய , மாநில அரசுக்கு எதிரா வாய் சவடால் அறிக்கை விடாம எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இரு.. சரியா.. இல்லைனா ராஜபக்சேக்கு எதிரா அறிக்கை விடு.. அத விட மாட்டே, ஏன்னா வைக்கோல்புலி ஏற்கனவே சொன்ன மாதிரி நீ சந்திரிக்காவின் ஊது குழல் தானே.. . வைக்கோல் புலி அதை இப்போ மறந்திருக்கலம்..
லூசு அம்மா - மத்திய மாநில அரசு இந்தியாவுலயா இருக்கு?? இது தெரியாம போச்சே...
அட, இந்த அம்மா கூட இலங்கை தமிழருக்கு ஆதரவா பேசுதேனு ஒரு ஆச்சரியம்.. அதெல்லாம் ஒரு மன்னும் இல்லனு தெளிவு படுத்திய அம்மாவுக்கு நன்றி..
தந்தி அடியுங்கள் என்ற சொன்னவுடன் , என்ன தந்தி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்ல வேண்டியது தானேனு அம்மா கத்துச்சி.. இப்போ அதுவே தீர்மானமாக அனைத்து கட்சிக்கூட்டத்துல வந்தப்ப, மொதல்ல, நான் சொன்னதுக்காத்தான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்தார்னு ஒரு அறிக்கை விட்டுச்சு.. அந்த பப்பு வேகல.. கலைஞர் எடுத்த இந்த முடிவுக்கு எல்லோரும் , ஆதரவு தந்தத பார்த்து அதுக்கு உள்ளே ஒரு உதறல்..
இப்பொ என்னடானா, அயிரெத்துட்டு கேள்வி கேட்குது.. அமைச்சர் பதவி விலகுவாங்களா.. அது இதுனு,
அட லூசே.. அனைத்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்னு தெளிவா சொல்லிட்டாங்களே அப்புறம் ஏன் ஒப்பாரி உனக்கு?? வக்கிருந்து உங்க கட்சி சார்ப்பா அனைத்து கட்சி கூட்டத்து போய் இருக்கனும்.. அத விட்டுட்டு லூசு முன்டம் மாதிரி அறிக்கை விடற... அதுக்கு அந்த வைக்கோல்சாமி வேற ஒத்து...
யம்மா.. நீ வழக்கம் போல, தாம்பரம் 2 வது முட்டுசந்துல அ தி மு க போராட்டம் , கிழக்கு சைதாப்பேட்டைல மூனாவது மூத்திர சந்துல ஆர்ப்பாட்டம்னு அறிக்கைவிட்ட்கிட்டு வேலைய பாரு.. லூசுத்தனமா, உனக்கு சம்பந்தமே இல்லாத தமிழர் பிரச்சனைக்கு தலைய விடாதே.. சரியா..
இது நீலிக்கண்ணீர் விடுது.. இலங்கை பிரச்சனை பற்றிய உன் மூஞ்சி லட்சணம் என்னனு ஊருக்கே தெரியும், இப்போ திடிர்னு நீ வந்து சும்மா ஆதரவு அறிக்கை விடுறீயா??
இதுல ரெண்டு பக்கம் இருக்கு , ஒரு பக்கத்தை ஆதரிக்கிறேன், இன்னொரு பக்கத்தை கடுமையா எதிர்க்கிறேன்னு அறிக்கை விட்டுது இந்த லூசு இரண்டு நாளைக்கு முன்னாடி.. இப்போ வந்திருக்க கடைசி அறிக்கைய பாருங்க.. என்ன நாடகம் ஆடுது இந்த புண்ணாக்கு.
லூசே, இப்போ சொல்றீயே.. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை நு , அட முன்டமே. அப்புறம் என்னத்துக்கு இங்கே இருந்து எதுக்கு அறிக்கை விட்டே?? மத்திய அரசில் இருக்கும் கருணாநிதி இதை பற்றி ஏன் பேசலனு..
லூசு அம்மாவின் பதில் - அட , கருனாநிதி இலங்கையோட அமைச்சரையில் இடம்பெற்றிருக்காருன்னா நெனைச்சுன்டிருக்கேன்... அவா கூட இல்லையா....
இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிட வாய்ப்பு ஏற்படும். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்' என்பது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னை
லூசு அம்மா, இந்தியா தலையிடவும் கேட்கக்கூடாது, தாக்குதல்களும் நிக்கனும் . என்ன கணக்கு இது? அப்புறம் ஏன் இங்கே இருந்து அறிக்கை விடற அதுவும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரா..?
லூசு அம்மா பதில் - அட ஆமா, சரி சரி.. அப்போ , இந்தியால இருக்கு எல்லா எல் கே ஜி, யூ கே ஜி க்கும் 2 நாள் லீவு விட்டுடலாம், இலங்கை அரசு பயந்துடும்.. அப்படியும் பயப்படலனா... போயஸ் தோட்டம் பக்கத்துல இருக்க மூத்திர சந்துல ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி நடுநடுங்க வெக்கலாம்..
இது ஓக்கே வாம் , அது ஓக்கே இல்லையாம்.. சரி இந்தியா தலையிட்டு பேசலாம்னா , அது கூடாதாம், அது இந்திய இறையான்மையை பாதிக்குமாம்..
அட லூசே , என்னத்தான் நிலை நு தெளிவா சொல்லு... நீ அரசியல் குளிர் காயறதுக்கு, நடுவுல பூந்து குளிர்காயாதே.. ஓடு உன் கொட நாடு எஸ்ட்டேட்டுக்கு,குளிர் காயனும்னா..
இந்தியா எதுவும் செய்ய முடியாதுனு பேசுற நீ மத்திய , மாநில அரசுக்கு எதிரா வாய் சவடால் அறிக்கை விடாம எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இரு.. சரியா.. இல்லைனா ராஜபக்சேக்கு எதிரா அறிக்கை விடு.. அத விட மாட்டே, ஏன்னா வைக்கோல்புலி ஏற்கனவே சொன்ன மாதிரி நீ சந்திரிக்காவின் ஊது குழல் தானே.. . வைக்கோல் புலி அதை இப்போ மறந்திருக்கலம்..
லூசு அம்மா - மத்திய மாநில அரசு இந்தியாவுலயா இருக்கு?? இது தெரியாம போச்சே...
Thursday, October 09, 2008
ஓரணியில் திரளக் கூடாதோ?
சரித்திரம் படைத்த தமிழர்
சாகிறார் என்ற செய்தி
செவியினில் எட்டியவுடன்
கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம்
கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க
கரமும் நீட்டியது.
நாடு கடந்து வாழ்கின்ற
நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்;
நம்பிக்கை துளிர்த்திடக் கடிதம் எழுதி
நன்றி தெரிவிக்கின்றார்! இலண்டன்
நாடாளு மன்றத் தமிழ் உறுப்பினர் குழுவின்
நற்றமிழர் சார்பில் நமது முயற்சியைப் பாராட்டி
வீரேந்திர சர்மா வெளியிடுகிறார்,
விடியல் தோன்றுமென்று!
வெந்த புண்ணுக்கு மருந்தாக வன்றோ
வெளிநாட்டில் வாழ்கின்ற இன உறவுத்
தமிழர்களின் இதயம் துடிக்கிறது!
அமெரிக்க மருத்துவர் பஞ்சாட்சரம் என்பார்
அடைந்திடும் மகிழ்ச்சிக்கு அளவு தான் ஏது?
இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சேனாதிராஜா, எம்.பி.,
இதயம் மலர இனிய வாழ்த்துக் கூறி இன்புறுகின்றார் -
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் -
வாழ்த்துக்களை வாரியன்றோ இறைக்கின்றார்
வற்றாத அன்பைப் பொழிந்து இலங்கையில்
பொற்றாமரை போல் அமைதி பூத்திட தவமிருக்கின்றார் -
உலகத் தமிழ்ச் சாதி ஒன்று திரண்டு ஓர் உளம் கொண்டு
உதயமாகட்டும் ஈழத்தில் அமைதியென்று இறைஞ்சி நிற்கும்போது;
இங்குள்ள தமிழரிடை ஆயிரம் அரசியல் வேறுபாடு உண்டெனினும்
மூட்டை கட்டி அவற்றையெல்லாம் வைத்து விட்டு -
ஒன்றுபட்டு இலங்கைத் தமிழர் கேட்டை நீக்கிட
ஓரணியில் தான் திரளக் கூடாதோ?
- தலைவர் கலைஞர்
சாகிறார் என்ற செய்தி
செவியினில் எட்டியவுடன்
கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம்
கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க
கரமும் நீட்டியது.
நாடு கடந்து வாழ்கின்ற
நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்;
நம்பிக்கை துளிர்த்திடக் கடிதம் எழுதி
நன்றி தெரிவிக்கின்றார்! இலண்டன்
நாடாளு மன்றத் தமிழ் உறுப்பினர் குழுவின்
நற்றமிழர் சார்பில் நமது முயற்சியைப் பாராட்டி
வீரேந்திர சர்மா வெளியிடுகிறார்,
விடியல் தோன்றுமென்று!
வெந்த புண்ணுக்கு மருந்தாக வன்றோ
வெளிநாட்டில் வாழ்கின்ற இன உறவுத்
தமிழர்களின் இதயம் துடிக்கிறது!
அமெரிக்க மருத்துவர் பஞ்சாட்சரம் என்பார்
அடைந்திடும் மகிழ்ச்சிக்கு அளவு தான் ஏது?
இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சேனாதிராஜா, எம்.பி.,
இதயம் மலர இனிய வாழ்த்துக் கூறி இன்புறுகின்றார் -
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் -
வாழ்த்துக்களை வாரியன்றோ இறைக்கின்றார்
வற்றாத அன்பைப் பொழிந்து இலங்கையில்
பொற்றாமரை போல் அமைதி பூத்திட தவமிருக்கின்றார் -
உலகத் தமிழ்ச் சாதி ஒன்று திரண்டு ஓர் உளம் கொண்டு
உதயமாகட்டும் ஈழத்தில் அமைதியென்று இறைஞ்சி நிற்கும்போது;
இங்குள்ள தமிழரிடை ஆயிரம் அரசியல் வேறுபாடு உண்டெனினும்
மூட்டை கட்டி அவற்றையெல்லாம் வைத்து விட்டு -
ஒன்றுபட்டு இலங்கைத் தமிழர் கேட்டை நீக்கிட
ஓரணியில் தான் திரளக் கூடாதோ?
- தலைவர் கலைஞர்
Wednesday, October 08, 2008
ஒகேனக்கல் திட்டம்
ஒகேனக்கல் குடிநீர் திட்டம். இத்திட்டத்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் வாழும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர்.
இந்த திட்டத்துக்கான மேலான்மை பணிகளை கவனிப்பதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இதுவரை நடைபெற்று வந்தன. பல நிறுவனங்களின் விண்ணப்பத்தில் இருந்து ஆராய்ந்து தற்பொழுது ஜப்பானின் நிப்பான் கோய் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா. அக்டோபர் 4 இதழ்). இந்நிறுவனம் திட்டத்தின் கட்டுமானத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான பணிகளில் கை தேர்ந்தவர்களின் உதவியோடு சிவில் வேலைகளுக்கான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்டம் முடிவடையும்(2012) வரை அதன் நிர்வாகத்தில் ஈடுபடும்.
இந்த பணிகள் எல்லாமே முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள்ளாகவே நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்துக்கான மேலான்மை பணிகளை கவனிப்பதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இதுவரை நடைபெற்று வந்தன. பல நிறுவனங்களின் விண்ணப்பத்தில் இருந்து ஆராய்ந்து தற்பொழுது ஜப்பானின் நிப்பான் கோய் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா. அக்டோபர் 4 இதழ்). இந்நிறுவனம் திட்டத்தின் கட்டுமானத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான பணிகளில் கை தேர்ந்தவர்களின் உதவியோடு சிவில் வேலைகளுக்கான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்டம் முடிவடையும்(2012) வரை அதன் நிர்வாகத்தில் ஈடுபடும்.
இந்த பணிகள் எல்லாமே முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள்ளாகவே நடைபெற்று வருகின்றன.
Tuesday, October 07, 2008
தமிழக நதிகள் இணைப்பு திட்டம்
தமிழகத்தில் காவிரி ஆற்றை குண்டாற்றுடன் இணைக்கும் திட்டத்துக்கான டென்டர் தமிழக அரசால் கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. அடுத்து பட்ஜட்டிலேயும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் கலைஞர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார். தற்பொழுது டென்டர் கோரப்பட்டு, விரைவில் இணைக்கும் பணிகள் துவங்கப்படவிருக்கிறது.
முதற்கட்டமாக காவிரியையும் வைகை ஆற்றுடனும் குண்டாற்றுனடனும் இணைக்கும் பணிகள் துவங்கப்படும். இணைப்பு நீளம் - 225 கி.மீ.
அடுத்தகட்டமாக தாமிரபரணியையும் கருமேனியாறையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மொத்த நீளம் - 369 கி.மீ.
ஆதாரம்.
முதற்கட்டமாக காவிரியையும் வைகை ஆற்றுடனும் குண்டாற்றுனடனும் இணைக்கும் பணிகள் துவங்கப்படும். இணைப்பு நீளம் - 225 கி.மீ.
அடுத்தகட்டமாக தாமிரபரணியையும் கருமேனியாறையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மொத்த நீளம் - 369 கி.மீ.
ஆதாரம்.
கொக்கரித்த கூட்டமே... இங்கே பார்
இதோ, கலைஞரின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு, இலங்கை தூதரை அழைத்து, இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது. மேலும் தலைவர் கலைஞர் அவர்களால் வைக்கப்பட்ட மற்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்..
இது நிச்சயம் கலைஞருக்கு வெற்றி.
அடேங்கப்பா.. ஓரிரு நாளில் எத்தனை நக்கல் பதிவுகள்.. தந்தி அனுப்புவது பற்றி நக்கலடித்து, எள்ளி நகையாடி.. , இதனால் நிகழப்போவது, தபால் அலுவலகத்துக்கு கூடுதல் வருமானம் மட்டுமே என்றெல்லாம் நக்கல் வேறு.
அதே போல, அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்ற செய்தியை படித்துவிட்டு எத்துனை எள்ளல் , சிறுபிள்ளைத்தனமான பதிவுகள்.. 90 காசு கொடுத்து தொலைபேசியில் கூட பேசாமல், 25 பைசாவில் முடித்துவிட்டார் என்று எக்காளமிட்டது ஒரு கூட்டம்.. கலைஞர் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் அந்த கூட்டத்துக்கு.. என்ன செய்ய.. அவர் எது செய்தாலும் எதிர்க்கும் கூட்டம்..
இனிமேலாவது செய்தி தாள்களில் வரும் செய்திகளை அரைகுறையாக படித்துவிட்டு, குறை சொல்லவேண்டுமே என்று பதிவு போடாதீர்கள் நல்லவர்களே...
இன்று செய்திகள் தெளிவாகியுள்ளது. தந்தி அனுப்ப சொல்லிய கலைஞர், கடிதமும் கொடுத்தனுப்பி, தொலைபேசியிலும் பேசி, குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.. தந்தி என்பதும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும்., இது ஓட்டு மொத்த (சோ, ஜெ, சுவாமி போன்ற வகையறாக்கள் தவிர்த்து) தமிழினத்தின் ஏக்கம் என்பதை மத்திய அரசின் மனதில் பதிய வைக்கவுமே.. மற்றபடி, கலைஞர் கடிதம், தொலைப்பேசி மூலம் பேசியதன் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தேவையே இல்லாமல், அனைத்திலும் கலைஞரை திட்டுவதற்கென்றே அலைகின்ற கூட்டமே, இப்போதாவது திருந்துங்கள்..
தலைவர் கலைஞர் அவர்களே, மீன்டும் ஒரு முறை நீங்கள் ஒரு தமிழினத்தலைவர் என்பதை நிரூபித்துள்ளீர்..வாழ்க கலைஞரே..
இது நிச்சயம் கலைஞருக்கு வெற்றி.
அடேங்கப்பா.. ஓரிரு நாளில் எத்தனை நக்கல் பதிவுகள்.. தந்தி அனுப்புவது பற்றி நக்கலடித்து, எள்ளி நகையாடி.. , இதனால் நிகழப்போவது, தபால் அலுவலகத்துக்கு கூடுதல் வருமானம் மட்டுமே என்றெல்லாம் நக்கல் வேறு.
அதே போல, அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்ற செய்தியை படித்துவிட்டு எத்துனை எள்ளல் , சிறுபிள்ளைத்தனமான பதிவுகள்.. 90 காசு கொடுத்து தொலைபேசியில் கூட பேசாமல், 25 பைசாவில் முடித்துவிட்டார் என்று எக்காளமிட்டது ஒரு கூட்டம்.. கலைஞர் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் அந்த கூட்டத்துக்கு.. என்ன செய்ய.. அவர் எது செய்தாலும் எதிர்க்கும் கூட்டம்..
இனிமேலாவது செய்தி தாள்களில் வரும் செய்திகளை அரைகுறையாக படித்துவிட்டு, குறை சொல்லவேண்டுமே என்று பதிவு போடாதீர்கள் நல்லவர்களே...
இன்று செய்திகள் தெளிவாகியுள்ளது. தந்தி அனுப்ப சொல்லிய கலைஞர், கடிதமும் கொடுத்தனுப்பி, தொலைபேசியிலும் பேசி, குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.. தந்தி என்பதும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும்., இது ஓட்டு மொத்த (சோ, ஜெ, சுவாமி போன்ற வகையறாக்கள் தவிர்த்து) தமிழினத்தின் ஏக்கம் என்பதை மத்திய அரசின் மனதில் பதிய வைக்கவுமே.. மற்றபடி, கலைஞர் கடிதம், தொலைப்பேசி மூலம் பேசியதன் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தேவையே இல்லாமல், அனைத்திலும் கலைஞரை திட்டுவதற்கென்றே அலைகின்ற கூட்டமே, இப்போதாவது திருந்துங்கள்..
தலைவர் கலைஞர் அவர்களே, மீன்டும் ஒரு முறை நீங்கள் ஒரு தமிழினத்தலைவர் என்பதை நிரூபித்துள்ளீர்..வாழ்க கலைஞரே..
Friday, October 03, 2008
கலைஞரின் எண்ணி பார்க்க முடியாத சாதனைகள்
ஆயிரம் விளக்கு மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளில் மானிய விலையில் மளிகைப் பொருட்களை வழங்கி மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது :-
உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அற்புத திட்டமான மானிய விலையில் 10 மளிகை பொருட்களை வழங்கும் விழாவில் கலந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்று சென்னை மாநகரில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளிலும், மேலும், தமிழகம் எங்கும் உள்ள நகரம், ஒன்றியம், கிராமம் தோறும் இந்நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 5 ஆம் முறையாக தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக எத்தனையோ திட்டங்கள், எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகள் இந்த ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது.
2006 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதி மொழிகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். கிலோ அரிசி ரூ. 2 க்கு வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம். அப்போது, எதிர்கட்சியினர் இது முடியுமா ? நடக்குமா ? சாத்தியமா ? என்றனர், மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக நாம் சொன்னதாக விமர்சனம் செய்தனர். ஆனால், எதிர்கட்சியினர் பொய் பிரச்சாரத்தை, நீங்கள் நம்பவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதிமொழியை நம்பினீர்கள், வாக்களித்தீர்கள்.
வெற்றிபெற்ற தலைவர் கலைஞர் கோட்டைக்கு செல்லவில்லை, கோப்பை வரவழைத்து கிலோ அரிசி ரூ. 2 க்கான கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பித்தார். இப்போது, செப்டம்பர் 15 அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகின்ற திட்டத்தினை கலைஞர் அவர்கள் தொடங்கியுள்ளார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினால் போதுமா ? சாம்பார், குழம்பு சமைக்க முடியுமா ? என்று எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா போன்றவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
தற்போது, தலைவர் கலைஞர் அவர்கள் மளிகை பொருட்களின் விலையை குறைத்து மானிய விலையில் வழங்குகின்ற சிறப்பான திட்டத்தினை தொடங்கியுள்ளார்கள். மஞ்சள் தூள் 50 கிராம் ரூ. 2 க்கும், மல்லித்தூள் 250 கிராம் ரூ.18 க்கும், மிளகாய்த்தூள் 250 கிராம் ரூ. 14 க்கும், கடலை பருப்பு 75 கிராம் ரூ. 2 க்கும், வெந்தியம் 25 கிராம் ரூ. 1 க்கும், கடுகு 25 கிராம் ரூ. 1 க்கும், சோம்பு 25 கிராம் ரூ. 1.50 க்கும், மிளகு 25 கிராம் ரூ. 3 க்கும், சீரகம் 50 கிராம் ரூ. 5.50 க்கும், பட்டை மற்றும் கிராம்பு 10 கிராம் ரூ. 2 க்கும் ஆக மொத்தம் 10 பொருட்கள் ரூ. 50 க்கு ஒரே பொட்டலமாக வழங்கப்படுகிறது.
மளிகை பொருட்கள் சிலருக்கு தனித்தனியாக தேவைப்பட்டாலும், குறிப்பிட்ட பொருட்களை குறித்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இவை மட்டும் இல்லாமல் நியாய விலைக்கடைகளில் தாய்மார்கள் குடும்பத்தை நடத்துவதற்கு வசதியாக துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.32 க்கும், உளுத்தம்பருப்பு ஒரு கிலோ ரூ. 36 க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.40 க்கும், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஒரு கிலோ ரூ. 11 க்கும், ரவா ஒரு கிலோ ரூ. 17 க்கும், மைதா ஒரு கிலோ ரூ.16 க்கும் மேற்கண்ட அத்தியாவசிய பொருட்களை அரசே மானியம் வழங்கி மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கிவருகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெறுவார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள 21 லட்சத்து 52 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களில் 18 லட்சத்து 14 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள், மானிய விலையில் மளிகை பொருட்கள் திட்டத்தில் பயன்பெறுவார்கள். குறிப்பாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களில் 72 ஆயிரத்து 168 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைய உள்ளனர். அதேபோல் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 271 குடும்ப அட்டை தாரர்களில் 78 ஆயிரத்து 716 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்கள்.
தலைவர் கலைஞரின்அரசில் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக திட்டங்கள் மற்றும் சாதனைகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஏற்றம் பெற பல்வேறு திட்டங்களைஇந்த அரசு செயல்படுத்திவருகிறது. தலைவர் கலைஞர் ஆட்சியில் சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததும் நடக்கிறது. ஒரு கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்குவோம் என்றோம், ஆனால் தற்போது கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகின்றோம்.
சத்துணவில் வாரம் 2 முட்டை வழங்குவோம் என்றோம், ஆனால் தற்போது வாரம் 3 முட்டைகள் வழங்குகின்றோம் அதுமட்டும் அல்ல முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்குகின்றோம். மகளிருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்குவோம் என்றோம், ஆனால் ரூ. 20 ஆயிரம் வழங்கிவருகிறோம். இப்படி பல்வேறு சாதனைகள் ! எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகள் ! கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகத்திலேயே தமிழகத்தை தவிர வேறு எங்கும் இல்லை. இப்படி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் உன்னத ஆட்சி, இந்த நல்ல அரசிற்கு தொடர்ந்து உங்கள் நல்லாதரவினை வழங்கிட வேண்டும். என்று மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. மு.க..ஸ்டாலின் அவர்கள் பேசினார்கள்.
Friday, September 26, 2008
தந்தையின் மரணத்தை கொண்டாடியவர்களுக்கு கூஜா தூக்கும் சன் டிவி
மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்கள் கலைஞரின் அரசியல் வாழ்வில் நெடுங்காலம் அவருக்கு உறுதுணையாக இருந்தவர். கழகத்தில் தலைவருக்கு அடுத்தபடியாக உடன்பிறப்புகள் அதிக மரியாதை வைத்து இருந்த தலைவர் அவர். கலைஞர் எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் திரு.முரசொலி மாறன் அவர்களை கலந்து எடுப்பது வழக்கம். நள்ளிரவில் தலைவர் வீட்டுக்குள் புகுந்து அவரை கைது செய்ய போலீஸ் வந்த போது தலைவர் முதலில் வரச் சொன்னது திரு.முரசொலி மாறன் அவர்களை தான். உடல்நிலை சரியில்லாமல் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு இருந்த திரு.முரசொலி மாறன் அவர்களை போலீஸ் எப்படி கையாண்டது என்பதை நாம் எல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்று இதை எல்லாம் ஒளிபரப்பிய அதே சன் தொலைக்காட்சி இன்று...
மேலும் வாசிக்க கலைஞரும் கலாநிதி மாறனும்
முரசொலிமாறன் இறந்த பொழுது தங்கள் கட்சி அலுவலகத்திலே பட்டாசு வெடித்து கொண்டாடிய ஜெயலலிதாவின் அறிக்கைகள் தினந்தோறும் சன் டிவி
செய்திகளில் ............
மேலும் வாசிக்க கலைஞரும் கலாநிதி மாறனும்
Friday, September 19, 2008
ஒருவனுக்கு ஒருத்தி எனும் டுபாக்கூர் கலாச்சாரம் !
நம்ம பசங்களுக்கு ஏதோ கொஞ்சம் படிச்சு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்த உடனேயே வெள்ளைக்கார துரை ஃபேமிலி என்ற நினைப்பு வந்துவிடுகிறது போல் இருக்கிறது. அதனால் தான் கேட்குறாங்க கேள்வி. பல தார மணம் புரிவது தான் பகுத்தறிவா என்று. இப்படி கேட்பவர்கள் தங்கள் பாட்டன் முப்பாட்டன் வரலாறு எல்லாம் தெரியாதவர்கள் அல்ல அதை குழி தோண்டு புதைத்து மூடி மறைக்க நினைப்பவர்கள். என்னமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்துக்கு காப்பிரைட் வாங்கி வைத்து இருப்பவர்கள் போல் பீற்றிக் கொண்டு திரிவார்கள்
அவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட நம்ம உண்மை திராவிடர் கோவியார் சொன்ன பதிலை சொன்னாலாவது புரியும் என்று நினைக்கிறேன். அவர் "ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !" என்று தலைப்பு வைத்து பதிவு ஒன்றை எழுதி இருந்தார். அந்த தலைப்பில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இப்படி தலைப்பு வைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று தலைப்பு வைத்தேன்
கோவியார் சொன்னதின் சாரம் இது தான். நம் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது எந்த அளவு கடைப்பிடிக்கப்பட்டது என்பது பற்றி கூறி இருந்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்னவர்கள் தான் தேவதாசி முறையின் கன்ஸ்யூமர்களாக இருந்தார்கள். காலையில் வீட்டில் பூஜை அறையில் நுழைந்து பல தார கடவுள்களை வரிசையாக வணங்குபவர்கள் தான் இந்த வெள்ளைக்கார துரை வீட்டு பிள்ளைகள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் கிறுத்துவர்களான ஆங்கிலேயர்களிடம் இருந்து வந்தது தான் என்பது தான் அவர் பதிவின் சாரம். பூஜை முடிந்து வெளியே வந்ததும் கலைஞர் பல தார மணம் புரிந்தது சரியா என்று கரித்து கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள்
ஆங்கிலேயர்கள் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் திருமணத்துக்கு முன்னர் அவர்கள் எல்லாம் சில பல துணைகளையாவது டிரை செய்துவிடுகிறார்கள். அப்புறம் போதும்டா இதுக்கு மேல தாங்காது என்ற நிலை வந்தவுடன் மணம் புரிந்து கொள்கிறார்கள். மணம் புரிந்த பின்னும் அடங்காதவர்கள் மணவிலக்கு பெற்றுக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் சட்டத்தின் ஒட்டையை பயன்படுத்துவது மாதிரி தான் இருக்கிறது. இப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கி வாழ்வதை விட நெஞ்சுரத்துடன் உண்மையாக வாழ்ந்தால் சிலருக்கு ஏனோ ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை
கோவியாரின் பதிவு இங்கே ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !
அவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட நம்ம உண்மை திராவிடர் கோவியார் சொன்ன பதிலை சொன்னாலாவது புரியும் என்று நினைக்கிறேன். அவர் "ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !" என்று தலைப்பு வைத்து பதிவு ஒன்றை எழுதி இருந்தார். அந்த தலைப்பில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இப்படி தலைப்பு வைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று தலைப்பு வைத்தேன்
கோவியார் சொன்னதின் சாரம் இது தான். நம் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது எந்த அளவு கடைப்பிடிக்கப்பட்டது என்பது பற்றி கூறி இருந்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்னவர்கள் தான் தேவதாசி முறையின் கன்ஸ்யூமர்களாக இருந்தார்கள். காலையில் வீட்டில் பூஜை அறையில் நுழைந்து பல தார கடவுள்களை வரிசையாக வணங்குபவர்கள் தான் இந்த வெள்ளைக்கார துரை வீட்டு பிள்ளைகள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் கிறுத்துவர்களான ஆங்கிலேயர்களிடம் இருந்து வந்தது தான் என்பது தான் அவர் பதிவின் சாரம். பூஜை முடிந்து வெளியே வந்ததும் கலைஞர் பல தார மணம் புரிந்தது சரியா என்று கரித்து கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள்
ஆங்கிலேயர்கள் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் திருமணத்துக்கு முன்னர் அவர்கள் எல்லாம் சில பல துணைகளையாவது டிரை செய்துவிடுகிறார்கள். அப்புறம் போதும்டா இதுக்கு மேல தாங்காது என்ற நிலை வந்தவுடன் மணம் புரிந்து கொள்கிறார்கள். மணம் புரிந்த பின்னும் அடங்காதவர்கள் மணவிலக்கு பெற்றுக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் சட்டத்தின் ஒட்டையை பயன்படுத்துவது மாதிரி தான் இருக்கிறது. இப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கி வாழ்வதை விட நெஞ்சுரத்துடன் உண்மையாக வாழ்ந்தால் சிலருக்கு ஏனோ ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை
கோவியாரின் பதிவு இங்கே ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !
Wednesday, September 17, 2008
பேரறிஞர் அண்ணா!

வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும் தங்கத் தலைவனின் நூற்றாண்டு விழா இன்று.
“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்தியா என்ற பெயரில் இக்கண்டம் தனியொரு நாடாக இருக்கிறது. ஆரிய ஆதிக்கம் மற்ற இனத்தவரின் நல்வாழ்வை நசுக்கியிருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் கட்டாயமாக ஒரே நாடாக வாழவேண்டுமென்று திணிக்கப்படுகிறார்கள். இதனால் புரட்சிகளையும், குழப்பங்களையும் தவிர்க்க இயலாது.
குழப்பங்களையும், போராட்டங்களையும் தவிர்க்க வேண்டுமானால் இனவாரியாக இக்கண்டம் தனித்தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும். அசோகர், கனிஷ்கர், சமுத்திரகுப்தர் போன்ற பேரரசர்களின் காலத்தில் கூட ‘இந்தியா' என்ற பெயரில் ஒரே நாடாக இக்கண்டம் இருந்ததில்லை. இந்திய துணைக்கண்டம் பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு நாடும் தனக்கிருக்கும் வளங்களை கொண்டு பொருளாதாரரீதியாக இலகுவாக முன்னேற முடியும். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு தனி நாடிருந்தால் எல்லா இனமுமே சமமான முன்னேற்றத்தை பெற இயலும். சமத்துவம் மலரும். ஒரு இனத்தின் ஆதிக்கத்தில் இன்னொரு இனம் வாழவேண்டிய நிலை இருந்தால் வன்முறை தான் மிஞ்சும். வன்முறைகளிலிருந்து மக்களை காக்க பிரிவினை அவசியப்படுகிறது.”
1940ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேரறிஞர் அண்ணா துரை பேசியதின் சாராம்சம் இது. விருப்பு வெறுப்பின்றி இதை வாசித்துப் பார்த்தோமானால் 68 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவுக்கு இருந்த தீர்க்கதரிசனத்தை உணரலாம்.
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே ஒரு கீழ்நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருக்கு அபார புலமை இருந்தது. நவயுவன், பாலபாரதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் என்ற நாளிதழின் துணையாசிரியாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்குண்டு. தந்தை பெரியாரின் விடுதலை பத்திரிகையில் பட்டை தீட்டப்பட்டப் போது தான் வைரமாய் மின்னினார் பேரறிஞர் அண்ணா.அண்ணாதுரைக்கு திருப்புமுனை தந்தது திருப்பூர். 1934ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அவர் சந்தித்தது இங்கே தான். பெரியாரை சந்தித்தபின் தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் அனைத்தையும் சுயமரியாதை இயக்கத்திற்கு காணிக்கையாக்கினார். நூல்கள் வாசிப்பிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா, வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமென தமிழர்களை வற்புறுத்தினார். தமிழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவு என்று குறைபட்டுக் கொண்டவர் எழுதியதைப் பாருங்கள்.
“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால். மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார். ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”
அறிஞர் அண்ணாவின் எழுத்துலக ஆளுமை அப்போது சினிமாவுக்கு பரவியது. திராவிட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க அச்சாரம் போட்டவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவுக்கு முன்பான தமிழ் சினிமாவில் “அவா வருவா, இவா ஊதுவா” என்ற அளவிலேயே தமிழ் இருந்தது. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி கண்டன. மேடைத்தமிழை சினிமாவுக்கும் கொண்டு சென்ற பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இவரைப் பின் தொடர்ந்து நுழைந்த திராவிட சிந்தனையாளர்கள் இயல்புத்தமிழையும் பிற்பாடு சினிமாவுக்கு கொண்டு வந்தார்கள்.எழுத்து, பேச்சு என்று அலுவலக அறைக்குள் மட்டுமே தமிழர்களுக்கான அண்ணாவின் சேவை நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டம், மும்முனைப் போராட்டம், கட்டாய இந்தி பதினேழாவது மொழிப் பிரிவு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் அண்ணா.
1949ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக தி.மு.கழகத்தை தொடங்கினார். கழகம் தொடங்கி பதினெட்டாவது ஆண்டில் 1967ல் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தை அலங்கரித்தது. அப்போது இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளாத மாநிலமாக தமிழகம் தான் இருந்தது. உலகளவில் ஒரு பிராந்திய கட்சி பொன்விழா கொண்டாடியும் மக்கள் மத்தியில் வலுவாக, செல்வாக்காக இருக்கிறதென்றால் அது அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.
1967ஆம் ஆண்டிலிருந்து 69ஆம் ஆண்டுவரை மிகக்குறுகிய காலம் மட்டுமே முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார். இதற்குள்ளாகவே மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அழகுத்தமிழை அரசாட்சி ஏற்றினார். இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை உலகம் வியக்குமளவுக்கு சிறப்பாக சென்னையில் நடத்திக் காட்டினார். கலப்புத் திருமணத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சட்ட அங்கீகாரம் அளித்தார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்று பேராசிரியர் கல்கியால் புகழப்பட்டார்.
பிப்ரவரி 2, 1969ல் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள். உலகளவில் ஒருவரின் மறைவுக்கு மிக அதிகமான பேர் கூடியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் பதிவாகியிருக்கிறது. தமிழ் வளர, தமிழர் தம் வாழ்வுயர காலமெல்லாம் பாடுபட்ட தலைவனின் இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேர் திரண்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?
அகில இந்திய வானொலியில் தலைவர் கலைஞர் கதறிய உலகப்புகழ் பெற்ற “அண்ணா, எம் இதய மன்னா” கவிதாஞ்சலியை இங்கே கேட்கவும்.
பேரறிஞர் அண்ணா சுமாராக ஓவியமும் வரைவார். அவரது ஓவியங்கள் கீழே :




Monday, September 08, 2008
சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா?
ஒரு பதிவர் உன்டன்பிறப்புகளுக்கு ஒரு கேள்வி என்று ஒரு பதிவு போட்டு சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இத்தகைய பதிவுகளையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம். கேள்வி கேட்பது தானே பகுத்தறிவின் அடிப்படை. ஆனால் நாம் முன்பே சொல்லியது போல் எல்லோரிடமும் போய் கேளுங்கள். எல்லோரிடமும் இருந்து பதில் வருமா என்பது வேறு விஷயம். கேள்வி கேட்டால் கஞ்சா வழக்கு போடுவதற்கு இங்கே சர்வாதிகார ஆட்சியும் நடக்கவில்லை, கைது செய்தால் சுனாமி வரும் என்று பயம் காட்டுவதற்கு இங்கே மடமும் நடத்தவில்லை
முதலில் சாய்பாபா பற்றிய கேள்வியை பார்ப்போம். சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா? என்பது கேள்வி
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். ஒரு முறை இந்து முன்னணி தலைவர் திரு.இராமகோபாலன் அவர்கள் கலைஞர் அவர்களுடன் நடந்த சந்திப்பின் போது பகவத் கீதையை அன்பளிப்பாக கொடுத்தார் பதிலுக்கு கலைஞர் அவர்களோ திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை பரிசளித்தார். தன்னை ஒருவர் எப்படி அனுகுகிறார்களோ அதே முறையில் தான் தலைவரும் அவர்களை அனுகுவார்
சாய்பாபா கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவர். அவரை தரிசனம் செய்வதற்கு எல்லோரும் தவம் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட சந்திரமுகி பட விழாவில் சொன்னார், என்னைப் போன்ற பக்தர்களை எல்லாம் தேடி வராத சாய்பாபா கலைஞர் அவர்களை வீடு தேடி போய் இருக்கிறார் என்று. அப்படி வீடு தேடு வந்தவரை அதுவும் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவருக்கு எப்படி பதில் உபகாரம் செய்ய வேன்டும் என்பது தலைவருக்கு நன்றாகவே தெரியும். மேலே சொன்ன இராமகோபாலனும் ஆன்மீகவாதி தான் சாய்பாபாவும் ஆன்மீகவாதி தான் ஆனால் அவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் கலைஞருக்கு தெரியும். கலைஞர் எதிர்ப்பது ஆன்மீகத்தை அல்ல அதை அவர்கள் கடைபிடிக்கும் விதத்தை. இந்த விஷயத்தில் உடன்பிறப்புகளுக்கும் நிலையும் இது தான். நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல
கலைஞர் பகுத்தறிவு வேஷம் போடுபவர் என்றால் சாய்பாபா காலை தன் மனைவியார் தொட்டு வணங்குவதை இப்படி ஊரறிய பத்திரிக்கைக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த படத்தை அவர் வெளிவராமல் தடுத்து இருக்கக் கூடும். ஆனால் பதில் மரியாதை செய்வது தான் அவர் பண்பு. இங்கே தன் கூட்டணி கட்சியில் இருந்த வைக்கோவை சிறையில் அடைத்ததையும், சமயப் பெரியவர் என்று மதிக்கப்பட்ட சங்கராச்சாரியாரை ஆந்திராவரை துரத்தி சென்று சிறையில் அடைத்ததையும், கூட்டணி கட்சியின் ஜார்ஜ் பெனாண்டஸை வீட்டு வாசலிலேயே காக்க வைத்த அரிய செயல்களோடு கலைஞரின் ஒப்பற்ற பண்பை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
கீழே உள்ள படங்களை பார்த்தால் உங்களுக்கே எது சரி எது தவறு என்று தெரியும்


மேலும் பதில்கள் தொடரும்...
முதலில் சாய்பாபா பற்றிய கேள்வியை பார்ப்போம். சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா? என்பது கேள்வி
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். ஒரு முறை இந்து முன்னணி தலைவர் திரு.இராமகோபாலன் அவர்கள் கலைஞர் அவர்களுடன் நடந்த சந்திப்பின் போது பகவத் கீதையை அன்பளிப்பாக கொடுத்தார் பதிலுக்கு கலைஞர் அவர்களோ திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை பரிசளித்தார். தன்னை ஒருவர் எப்படி அனுகுகிறார்களோ அதே முறையில் தான் தலைவரும் அவர்களை அனுகுவார்
சாய்பாபா கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவர். அவரை தரிசனம் செய்வதற்கு எல்லோரும் தவம் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட சந்திரமுகி பட விழாவில் சொன்னார், என்னைப் போன்ற பக்தர்களை எல்லாம் தேடி வராத சாய்பாபா கலைஞர் அவர்களை வீடு தேடி போய் இருக்கிறார் என்று. அப்படி வீடு தேடு வந்தவரை அதுவும் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவருக்கு எப்படி பதில் உபகாரம் செய்ய வேன்டும் என்பது தலைவருக்கு நன்றாகவே தெரியும். மேலே சொன்ன இராமகோபாலனும் ஆன்மீகவாதி தான் சாய்பாபாவும் ஆன்மீகவாதி தான் ஆனால் அவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் கலைஞருக்கு தெரியும். கலைஞர் எதிர்ப்பது ஆன்மீகத்தை அல்ல அதை அவர்கள் கடைபிடிக்கும் விதத்தை. இந்த விஷயத்தில் உடன்பிறப்புகளுக்கும் நிலையும் இது தான். நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல
கலைஞர் பகுத்தறிவு வேஷம் போடுபவர் என்றால் சாய்பாபா காலை தன் மனைவியார் தொட்டு வணங்குவதை இப்படி ஊரறிய பத்திரிக்கைக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த படத்தை அவர் வெளிவராமல் தடுத்து இருக்கக் கூடும். ஆனால் பதில் மரியாதை செய்வது தான் அவர் பண்பு. இங்கே தன் கூட்டணி கட்சியில் இருந்த வைக்கோவை சிறையில் அடைத்ததையும், சமயப் பெரியவர் என்று மதிக்கப்பட்ட சங்கராச்சாரியாரை ஆந்திராவரை துரத்தி சென்று சிறையில் அடைத்ததையும், கூட்டணி கட்சியின் ஜார்ஜ் பெனாண்டஸை வீட்டு வாசலிலேயே காக்க வைத்த அரிய செயல்களோடு கலைஞரின் ஒப்பற்ற பண்பை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
கீழே உள்ள படங்களை பார்த்தால் உங்களுக்கே எது சரி எது தவறு என்று தெரியும்


மேலும் பதில்கள் தொடரும்...
Thursday, September 04, 2008
நேற்று எதற்கு விடுமுறை - ஆன்மீக பகலவன்களுக்கு பதில்
கலைஞர் தொலைக்காட்சியில் நேற்றைய சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரம் பார்த்து பல ஆன்மீக பகலவன்களுக்கும் ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்கிவிட்டது. அது என்ன விடுமுறை. வருடத்தில் ஒருமுறை தான் விடுமுறையா என்று எல்லாம் கேள்வி எழுப்பி தங்களுக்கு ஆறு அறிவு இருப்பதை கோடிட்டு காட்டிவிட்டனர். இந்த பகலவன்கள் இந்த கேள்விகளை எல்லாம் கடவுளின் பெயரை சொல்லி கொள்ளை அடிக்கும் போலிச் சாமியார்களிடம் போய் கேட்டு இருந்தால் இன்று உடன்பிறப்புகளுக்கு நிறைய வேலை மிச்சமாகி இருக்கும். அவர்கள் அப்படி கேட்க வேண்டிய கேள்விகளை கேட்க வேண்டியவர்களிடம் கேட்காததால் தான் இன்றைக்கு உடன்பிறப்புகள் இரவு பகலாக வேலை செய்ய வேண்டி இருக்கிறது
நேற்றைக்கு விநாயகர் சதூர்த்தி அதனால் அரசு விடுமுறை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்துக்களுக்கு அது விநாயகர் சதூர்த்தி மற்ற மதத்தினருக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் அது விடுமுறை. வருடத்தில் பல விடுமுறைகள் வந்தாலும் அதை கொண்டாடுபவர்களுக்கு தான் பண்டிகை கொண்டாடாதவர்களுக்கு அது விடுமுறை தானே. இதில் என்ன சந்தேகம் வந்தது இந்த பகலவன்களுக்கு
கொண்டாடாதவர்கள் ஏன் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி கல்லா கட்ட வேண்டும் என்று இவர்களின் கேள்வி நகைப்புக்குரியது. உதாரணத்துக்கு நேற்று விடுமுறை என்பதால் பீச்சில் கூட்டம் அலைமோதி இருக்கும். பீச்சில் பல மதத்தினரும் கடை வைத்து இருக்கிறார்கள் மற்ற மதத்தினரும் இதில் உண்டு. பண்டிகை கொண்டாடவில்லை என்பதற்காக மற்ற மதத்தினர் தங்கள் கடைகளை மூடிவிட்டா சென்றுவிட்டனர். கூட்டம் அதிகம் வரும் என்று மேலும் ஆர்வத்துடன் தங்கள் கடைகளை திறந்து வைத்து இருப்பார்கள். அது போல் தான் இதுவும்
பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு பதிவர் வர்ணித்துள்ளார். பகுத்தறிவு இயக்கத்துக்கு பரிணம வளர்ச்சி உண்டு என்று ஒத்துக் கொண்டுள்ள பகலவன்களே எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உங்களுக்கு மட்டும் வளர்ச்சியே கிடையாதா
Thursday, August 28, 2008
ஜெயாவுக்கு செல்வகணபதி எழுதிய கடிதம்!
அன்புள்ள அம்மா அவர்களுக்கு!
உங்களின் பாசத்திற்குரிய செல்வம் எழுதுவது. நீங்கள் டெல்-யில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபொழுது அப்பொழுது டெல்லியில் எல்.எல்.பி. படித் துக்கொண்டிருந்த மாணவனான என்னை சேலம் முன்னாள் எம்.பி. கண்ணன் உங்களது உதவி யாளராக நியமித்தார். அன்று முதல் செல்வம் என பாசமாக நீங்கள் அழைத்த போதெல்லாம் நாய்க்குட்டிபோல ஓடிவந்த என்னை இன்று நட்டாற்றில் விட்டுவிட்டீர்கள்.
98-ம் ஆண்டு திருநெல்வேல்யில் கட்சி மாநாடு நடத்த 3 கோடி ரூபாய் சசிகலா கேட்டார். கடன் வாங்கி கொடுத்தேன். அதை திருப்பிக்கேட்டேன். அன்று முதல் சசிகலா என்மீது கோபம் கொண்டார். அன்று முதல் எனக்கு இறங்கு முகம்தான். அதேநேரம் வாழப் பாடியாரை எதிர்த்து என்னை நிற்கவைத்தீர்கள். நான் அந்தத் தேர்தலில் ஜெயித்தேன். அந்த வெற்றியும் உழைப்பும் சசிகலா மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன். நடக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் பேச்சைக் கேட்டு செயல்படும் நீங்கள் அவர்களின் கைப்பாவையாகவே மாறிவிட்டீர்கள்.
2001-2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான வழக்குகளை எல்லாம் சரி செய்துகொண்டீர்கள். என் மீதான சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கை அப்படியே விட்டுவிட்டீர்கள். நீங்களும் நானும் குற்றவாளிகளாக இருந்த ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கை அதிகாரிகளைப் பயன்படுத்தி விடுவித்துக்கொண்ட நீங்கள் சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் என்னை விடுவித்துக்கொள்ள, நான் அதிகாரிகளைச் சந்திக்க எடுத்த முயற்சிகளை எல்லாம் தடுத்துவிட்டீர்கள்.
கடந்தவாரம் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 150 சாட்சிகளுக்கும் வாரண்ட் பிறப்பித்து ஆஜராக உத்தர விட்டுவிட்டார். அந்த வழக்கு வேகம் பெறப்போகிறது. இப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உங்களுடன் பேச பல முறை முயற்சி செய்தேன். சசி கலாவின் ஆட்கள் விடவில் லை. அதன்பிறகு என் மனைவிக்கு கேன்சர் என நான் சசிகலாவின் உறவினர் மூலம் சொல்லி அனுப்பியதால் தான் நீங்கள் என்னிடம் தொலை பேசியில் சில நிமிடங்கள் பேசினீர்கள். அப்பொழுது உங்களிடம் இந்த வழக்கு விபரங்களை சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
ஒருசில மாதங்களுக்கு முன்பு தலைமைக் கழகத்தில் நீங்கள் தி.மு.க.வுக்கு போகப் போகிறீர்களா? அதற்காக வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? என கேள்வி கேட்டீர்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்பொழுது எங்களைப்போன்ற கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எதுவும் செய்யாமல் நடுத்தெருவில் நிற்கவைத்தீர்கள். அதனால் தி.மு.க. அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே நீங்கள் தி.மு.க.வுக்குப் போகப்போகிறீர்களா? என விசாரணை நடத்துகிறீர்கள்.
ப்ளசண்ட் ஸ்டே, கலர் டி.வி., சுடுகாட்டு கூரை ஊழல் போன்ற வழக்குகளின் காரணமாக செல்வகணபதியால்தான் நான் ஜெயிலுக்குப் போனேன் என கட்சிக்காரர்களிடம் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள்.
நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
அன்று ஊழல் செய்து ஒவ்வொரு மந்திரியும் இவ்வளவு கப்பம் கட்டுங்கள் என உத்தரவிட்டது யார்? நீங்கள்தானே! அத னால்தானே நாங்கள் தவறு செய்தோம். ஊழல் வழக்குகளை சந்திக்கிறோம். இன்னமும் ஊழல் வழக்குகள் பல பாக்கியுள்ளது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
நன்றி!
இப்படிக்கு,
செல்வம் (எ)
டி.எம்.செல்வகணபதி
(அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மாஜி அமைச்சரும் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளருமான செல்வகணபதி எழுதிய கடிதம்தான் இது. இக்கடிதத்தைப் படித்துவிட்டுத்தான் ஜெயலலிதா, செல்வகணபதியை கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.)
உங்களின் பாசத்திற்குரிய செல்வம் எழுதுவது. நீங்கள் டெல்-யில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபொழுது அப்பொழுது டெல்லியில் எல்.எல்.பி. படித் துக்கொண்டிருந்த மாணவனான என்னை சேலம் முன்னாள் எம்.பி. கண்ணன் உங்களது உதவி யாளராக நியமித்தார். அன்று முதல் செல்வம் என பாசமாக நீங்கள் அழைத்த போதெல்லாம் நாய்க்குட்டிபோல ஓடிவந்த என்னை இன்று நட்டாற்றில் விட்டுவிட்டீர்கள்.
98-ம் ஆண்டு திருநெல்வேல்யில் கட்சி மாநாடு நடத்த 3 கோடி ரூபாய் சசிகலா கேட்டார். கடன் வாங்கி கொடுத்தேன். அதை திருப்பிக்கேட்டேன். அன்று முதல் சசிகலா என்மீது கோபம் கொண்டார். அன்று முதல் எனக்கு இறங்கு முகம்தான். அதேநேரம் வாழப் பாடியாரை எதிர்த்து என்னை நிற்கவைத்தீர்கள். நான் அந்தத் தேர்தலில் ஜெயித்தேன். அந்த வெற்றியும் உழைப்பும் சசிகலா மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன். நடக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் பேச்சைக் கேட்டு செயல்படும் நீங்கள் அவர்களின் கைப்பாவையாகவே மாறிவிட்டீர்கள்.
2001-2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான வழக்குகளை எல்லாம் சரி செய்துகொண்டீர்கள். என் மீதான சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கை அப்படியே விட்டுவிட்டீர்கள். நீங்களும் நானும் குற்றவாளிகளாக இருந்த ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கை அதிகாரிகளைப் பயன்படுத்தி விடுவித்துக்கொண்ட நீங்கள் சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் என்னை விடுவித்துக்கொள்ள, நான் அதிகாரிகளைச் சந்திக்க எடுத்த முயற்சிகளை எல்லாம் தடுத்துவிட்டீர்கள்.
கடந்தவாரம் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 150 சாட்சிகளுக்கும் வாரண்ட் பிறப்பித்து ஆஜராக உத்தர விட்டுவிட்டார். அந்த வழக்கு வேகம் பெறப்போகிறது. இப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உங்களுடன் பேச பல முறை முயற்சி செய்தேன். சசி கலாவின் ஆட்கள் விடவில் லை. அதன்பிறகு என் மனைவிக்கு கேன்சர் என நான் சசிகலாவின் உறவினர் மூலம் சொல்லி அனுப்பியதால் தான் நீங்கள் என்னிடம் தொலை பேசியில் சில நிமிடங்கள் பேசினீர்கள். அப்பொழுது உங்களிடம் இந்த வழக்கு விபரங்களை சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
ஒருசில மாதங்களுக்கு முன்பு தலைமைக் கழகத்தில் நீங்கள் தி.மு.க.வுக்கு போகப் போகிறீர்களா? அதற்காக வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? என கேள்வி கேட்டீர்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்பொழுது எங்களைப்போன்ற கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எதுவும் செய்யாமல் நடுத்தெருவில் நிற்கவைத்தீர்கள். அதனால் தி.மு.க. அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே நீங்கள் தி.மு.க.வுக்குப் போகப்போகிறீர்களா? என விசாரணை நடத்துகிறீர்கள்.
ப்ளசண்ட் ஸ்டே, கலர் டி.வி., சுடுகாட்டு கூரை ஊழல் போன்ற வழக்குகளின் காரணமாக செல்வகணபதியால்தான் நான் ஜெயிலுக்குப் போனேன் என கட்சிக்காரர்களிடம் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள்.
நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
அன்று ஊழல் செய்து ஒவ்வொரு மந்திரியும் இவ்வளவு கப்பம் கட்டுங்கள் என உத்தரவிட்டது யார்? நீங்கள்தானே! அத னால்தானே நாங்கள் தவறு செய்தோம். ஊழல் வழக்குகளை சந்திக்கிறோம். இன்னமும் ஊழல் வழக்குகள் பல பாக்கியுள்ளது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
நன்றி!
இப்படிக்கு,
செல்வம் (எ)
டி.எம்.செல்வகணபதி
(அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மாஜி அமைச்சரும் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளருமான செல்வகணபதி எழுதிய கடிதம்தான் இது. இக்கடிதத்தைப் படித்துவிட்டுத்தான் ஜெயலலிதா, செல்வகணபதியை கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.)
Tuesday, August 26, 2008
அவாள் நமக்கு சவால் - (சோ) ராமசாமியுடன் ஒரு பேட்டி
இங்கே பல அம்பிகள் கலைஞரிடம் பேட்டி காண்கிறார்கள் அதே மாதிரி ஒரு உடன்பிறப்பு அம்பிகளின் குருநாதரான சோ ராமசாமியிடம் பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை
உடன்பிறப்பு: கலைஞருக்கு வயது ஆகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
(சோ) ராமசாமி: அம்பி! வாஜ்பேயியை பார் ஏற்கனவே ரிடையர் ஆகி கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறார், அத்வானி பிரதமர் ஆவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். அது போல் கலைஞரும் அத்வானி போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்
உடன்பிறப்பு: கலைஞர் ஏதாவது சொன்னால் உடன் கார்டூன் போடும் நீங்கள் ரஜினி மன்னிப்பு விஷயம் பற்றி இன்னும் எனக்கு தெரியாது என்று சொல்கிறீர்களே
(சோ) ராமசாமி: உண்மை தான் அம்பி! நான் எப்போதும் முரசொலி மட்டும் தான் வெளிவந்த உடனேயே படித்துவிடுவேன். மற்ற தினசரிகளை எல்லாம் பழைய பேப்பர் கடையில் தான் வாங்குவேன்
உடன்பிறப்பு: ஸ்டாலின் லண்டன் போனது மற்றும் ஜெயலலிதா கொடநாடு போய் ஓய்வு எடுத்தது பற்றி உங்கள் கருத்து
(சோ) ராமசாமி: அம்பி! ஸ்டாலின் லண்டனுக்கு என்னையும் அழைத்தால் கூட போயிருக்கமாட்டேன் ஏனென்றால் எனக்கு பஸ்போர்ட் எல்லாம் கிடையாது. ஆனால் ஜெயலலிதா உள்ளூர் கொடநாட்டுக்கு கூட என்னை அழைக்காததில் கொஞ்சம் வருத்தமே. அப்படி என்ன குறை கண்டுவிட்டார் என் ஜால்ராவில் என்று தெரியவில்லை
உடன்பிறப்பு: உங்களை போன்ற ஒத்த கருத்து உடைய ஞாநி மற்றும் மதன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
(சோ) ராமசாமி: அம்பி! நீ என்ன கேட்க வருகிறாய் என்பது எனக்கு புரிகிறது. ஞாநி ஒரு பொழைக்க தெரியாத மனிதர் அவர் இப்படி குமுதத்தில் மாங்கு மாங்கு என்று எழுதுவதற்கு பதில் அம்மாவிடம் சரணடைந்தால் அவர் காலத்துக்கும் செட்டில் ஆகிவிடலாம். என்னை தொடர்பு கொண்டால் நல்ல டீலாக முடித்து கொடுப்பேன் அதில் எனக்கு ஒரு கட்டிங் கொடுத்து விட வேண்டும். மதனை பற்றி நினைக்கும் போது எனக்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல அம்பி இருக்கிறான் என்று பெருமிதமாக இருக்கிறது
உடன்பிறப்பு: ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: அது பற்றி கணிக்க நான் ஆருடம் சொல்பவன் அல்ல
உடன்பிறப்பு: மோடி பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: இது ஜனநாயக நாடு அவர் பிரதமாராக வரும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது
உடன்பிறப்பு: கலைஞர் அவாள் நமக்கு சவால் என்று கவிதை பாடி இருக்கிறாரே
(சோ) ராமசாமி: பாவம் அவரால் கவிதை தான் எழுத முடியும் என்னை போல் கேணை தனமாக கார்ட்டூன் போட முடியுமா?
உடன்பிறப்பு: அப்போ அவர் செஞ்சா நீங்களும் செவீங்களா?
(சோ) ராமசாமி: வேற வழி இல்லை அம்பி, அவர் கவிதை எழுத அதை நக்கல் நையாண்டி பண்ணி தான் பொழப்பு ஓடுது அவர் முரசொலியில் எழுதவில்லை என்றால் துக்ளக்கை இழுத்து மூடிவிட்டு அம்மா சரணம் பாட போக வேண்டியது தான்
உடன்பிறப்புக்கு இப்போது லேசாக கண்ணை கட்ட ராம்ஸ் மாமியிடம் சாரி சோ ராமசாமியிடம் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார்
உடன்பிறப்பு: கலைஞருக்கு வயது ஆகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
(சோ) ராமசாமி: அம்பி! வாஜ்பேயியை பார் ஏற்கனவே ரிடையர் ஆகி கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறார், அத்வானி பிரதமர் ஆவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். அது போல் கலைஞரும் அத்வானி போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்
உடன்பிறப்பு: கலைஞர் ஏதாவது சொன்னால் உடன் கார்டூன் போடும் நீங்கள் ரஜினி மன்னிப்பு விஷயம் பற்றி இன்னும் எனக்கு தெரியாது என்று சொல்கிறீர்களே
(சோ) ராமசாமி: உண்மை தான் அம்பி! நான் எப்போதும் முரசொலி மட்டும் தான் வெளிவந்த உடனேயே படித்துவிடுவேன். மற்ற தினசரிகளை எல்லாம் பழைய பேப்பர் கடையில் தான் வாங்குவேன்
உடன்பிறப்பு: ஸ்டாலின் லண்டன் போனது மற்றும் ஜெயலலிதா கொடநாடு போய் ஓய்வு எடுத்தது பற்றி உங்கள் கருத்து
(சோ) ராமசாமி: அம்பி! ஸ்டாலின் லண்டனுக்கு என்னையும் அழைத்தால் கூட போயிருக்கமாட்டேன் ஏனென்றால் எனக்கு பஸ்போர்ட் எல்லாம் கிடையாது. ஆனால் ஜெயலலிதா உள்ளூர் கொடநாட்டுக்கு கூட என்னை அழைக்காததில் கொஞ்சம் வருத்தமே. அப்படி என்ன குறை கண்டுவிட்டார் என் ஜால்ராவில் என்று தெரியவில்லை
உடன்பிறப்பு: உங்களை போன்ற ஒத்த கருத்து உடைய ஞாநி மற்றும் மதன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
(சோ) ராமசாமி: அம்பி! நீ என்ன கேட்க வருகிறாய் என்பது எனக்கு புரிகிறது. ஞாநி ஒரு பொழைக்க தெரியாத மனிதர் அவர் இப்படி குமுதத்தில் மாங்கு மாங்கு என்று எழுதுவதற்கு பதில் அம்மாவிடம் சரணடைந்தால் அவர் காலத்துக்கும் செட்டில் ஆகிவிடலாம். என்னை தொடர்பு கொண்டால் நல்ல டீலாக முடித்து கொடுப்பேன் அதில் எனக்கு ஒரு கட்டிங் கொடுத்து விட வேண்டும். மதனை பற்றி நினைக்கும் போது எனக்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல அம்பி இருக்கிறான் என்று பெருமிதமாக இருக்கிறது
உடன்பிறப்பு: ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: அது பற்றி கணிக்க நான் ஆருடம் சொல்பவன் அல்ல
உடன்பிறப்பு: மோடி பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: இது ஜனநாயக நாடு அவர் பிரதமாராக வரும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது
உடன்பிறப்பு: கலைஞர் அவாள் நமக்கு சவால் என்று கவிதை பாடி இருக்கிறாரே
(சோ) ராமசாமி: பாவம் அவரால் கவிதை தான் எழுத முடியும் என்னை போல் கேணை தனமாக கார்ட்டூன் போட முடியுமா?
உடன்பிறப்பு: அப்போ அவர் செஞ்சா நீங்களும் செவீங்களா?
(சோ) ராமசாமி: வேற வழி இல்லை அம்பி, அவர் கவிதை எழுத அதை நக்கல் நையாண்டி பண்ணி தான் பொழப்பு ஓடுது அவர் முரசொலியில் எழுதவில்லை என்றால் துக்ளக்கை இழுத்து மூடிவிட்டு அம்மா சரணம் பாட போக வேண்டியது தான்
உடன்பிறப்புக்கு இப்போது லேசாக கண்ணை கட்ட ராம்ஸ் மாமியிடம் சாரி சோ ராமசாமியிடம் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார்
Monday, July 28, 2008
வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்ற முடியாது!
வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்ற முடியாது!
(கலைஞர் கேள்வி - பதில்)
கேள்வி :- “விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி” என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு “தினமணி” ஒருவரது பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே?
கலைஞர் :- ஆமாம் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் - 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு - விவசாயிகள் கடனை ரத்து செய்ததும் - யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு (?) வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!
விவசாயிகளுக்காக தி.மு.கழக அரசு செய்த சாதனைகளின் பட்டியல் வேண்டுமா? இதோ :-
இந்தியாவிலேயே முதன்முதலாக 1990இல் தி.மு. கழக அரசு தான் விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம்; தொடர்ந்து எத்தனையோ எதிர்ப்புகள், சிரமங்களுக்கிடையிலும் நீடிக்கப்பட்டு அதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
டிசம்பர் 1996இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக விளைபொருள் இழப்புக்காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.
மீண்டும் நவம்பர் 1997இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக - விவசாயிகளுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட்பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர். மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசினால் ரத்து செய்யப்பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.
இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000/; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000/- நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.
மூன்று குதிரைத்திறன் கொண்ட ஆயில் என்ஜின்களுக்குப் பதிலாக ஐந்து குதிரைத் திறன் கொண்ட ஆயில் என்ஜின்கள் வாங்க சிறு விவசாயிகளுக்கு 25 விழுக்காடு அளவிற்கும், மிகச்சிறு விவசாயிகளுக்கு 30 விழுக்காடு அளவிற்கும், தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இன விவசாயிகளுக்கு 50 விழுக்காடு அளவிற்கும் மானியத் தொகை கழக அரசினால் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் 13 சதவிகித வட்டி 12 சதவிகிதமாகவும், 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு விதிக்கப்படும் 16 சதவிகித வட்டி 15 சதவிகிதமாகவும் குறைப்பதென்று 24-10-2000 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
30-6-99க்கு முன்பு தவணை தவறிய வேளாண்மை சார்ந்த கடன்களுக்கு, 31-7-2000க்குள் வட்டியுடன் கடனைச் செலுத்திய 3,40,727 சிறிய, பெரிய விவசாயிகள் அனைவர்க்கும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.
1998-99ல் நடப்புக் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 6.25 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
1999-2000இல் இந்த ஊக்குவிப்புத் தொகை 7 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை 2,42,817; நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 100 என்பது 1997இல் ரூ.150 ஆகவும், 2000-2001இல் ரூ. 200 ஆகவும் தற்போது 2006இல் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 400 ஆகவும் கழக அரசிலே உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த பாதைக் கட்டணம் (கூசயஉம சுநவே) 2000-2001இல் கழக அரசில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க கழக அரசில் திரு.கோலப்பன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு அமைக்கப்பட்டு - அவரது பரிந்துரைகளையேற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது.
விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனியாக நல வாரியம் ஒன்று தொடங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு 1 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேர் இதுவரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு - இது வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 7 விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு 159 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 963 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தை களை தமிழகமெங்கும் அமைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல விலையிலே விற்கவும், வாங்கிப் புசிப்போர் நியாய விலையிலே அவைகளைப் பெறவும் வழி வகை செய்ததும் தி.மு. கழக அரசு தான்.
2006ஆம் ஆண்டு பதவிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே பிறப் பிக்கப்பட்ட மூன்று ஆணைகளில் ஒன்றே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்தது தான். கடன்களை ரத்து செய்தது மாத்திரமல்லாமல், புதிய கடன்களை அவர்கள் 1500 கோடி ரூபாய் அளவிற்கு பெறவும் நிதி நிலை அறிக்கையிலே வசதி செய்யப்பட்டது.
விவசாயிகளின் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-2007இல் 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்து, அதனை 2007-2008இல் 5 சதவிகிதமாக மேலும் குறைத்து, அதுவும் போதாதென்று இந்த ஆண்டு முதல் வட்டி வீதத்தை 5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாகக் குறைத்துள்ள ஆட்சியும் தி.மு. கழக ஆட்சி தான்.
நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப் பண்படுத்தி இலவசமாக அளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கி யுள்ளது.
2008-2009ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு நெல் கொள் முதல் விலையை சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 850 ரூபாய் என்றும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 880 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்து அறிவித்தவுடன், தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1000 ரூபாய் என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1050 ரூபாய் என்றும் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
***
கேள்வி :- காவேரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயி களை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் தினமணியில் விஷம் கக்கி யிருக்கிறாரே?
கலைஞர் :- காவேரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டுமேயானால் - அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதி மன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்; தமிழக தி.மு.க. அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.
அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதியான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவசரக்கார அரசியல் வாதிகள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்ச நீதி மன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும் - அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவேரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபர மறிந்தவர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கிறார்கள்.
***
கேள்வி :- வருமான வரித்துறைக்குப் பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிரமுகர் பேசியதாக “தினமணி” பிரசுரித் திருக்கிறதே?
கலைஞர் :- வருமான வரிக்குப் பயந்து இப்போது காங்கிரஸ் காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!
***
கேள்வி :- “ஒகேனக்கல்” கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப் பிரமுகர் உளறியிருக்கிறாரே?
கலைஞர் :- பாவம்; ஒகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது - ஒகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிதி ஆதாரத்தைத் தேடிய நேரத்தில் ஜப்பான் நாட்டு உதவியை நாடி யிருந்தோம். அப்போது “பொக்ரான்” குண்டு பரிசோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.
அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது உண்மை. ஆனால் 2006இல் தி.மு.கழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடந்த பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசு சார்பிலும் - மாநில அரசுகள் சார்பிலும் பேசப்பட்டு - பிரச்சினைகள் இல்லாமல் விரைவில் நிறைவேற்றப்பட்டு - தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட இருக்கிறது.
விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகி விட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட “தினமலர்” நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என்பதையும் எழுதியுள்ளது. “போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்றவாறு அவர் பேசத் துவங்கினார். அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தகவலையே திரும்பத் திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார். தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்துகொண்டார். காவிரி பிரச்சினை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய்தது” என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந்தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
***
(கலைஞர் கேள்வி - பதில்)
கேள்வி :- “விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி” என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு “தினமணி” ஒருவரது பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே?
கலைஞர் :- ஆமாம் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் - 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு - விவசாயிகள் கடனை ரத்து செய்ததும் - யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு (?) வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!
விவசாயிகளுக்காக தி.மு.கழக அரசு செய்த சாதனைகளின் பட்டியல் வேண்டுமா? இதோ :-
இந்தியாவிலேயே முதன்முதலாக 1990இல் தி.மு. கழக அரசு தான் விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம்; தொடர்ந்து எத்தனையோ எதிர்ப்புகள், சிரமங்களுக்கிடையிலும் நீடிக்கப்பட்டு அதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
டிசம்பர் 1996இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக விளைபொருள் இழப்புக்காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.
மீண்டும் நவம்பர் 1997இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக - விவசாயிகளுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட்பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர். மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசினால் ரத்து செய்யப்பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.
இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000/; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000/- நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.
மூன்று குதிரைத்திறன் கொண்ட ஆயில் என்ஜின்களுக்குப் பதிலாக ஐந்து குதிரைத் திறன் கொண்ட ஆயில் என்ஜின்கள் வாங்க சிறு விவசாயிகளுக்கு 25 விழுக்காடு அளவிற்கும், மிகச்சிறு விவசாயிகளுக்கு 30 விழுக்காடு அளவிற்கும், தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இன விவசாயிகளுக்கு 50 விழுக்காடு அளவிற்கும் மானியத் தொகை கழக அரசினால் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் 13 சதவிகித வட்டி 12 சதவிகிதமாகவும், 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு விதிக்கப்படும் 16 சதவிகித வட்டி 15 சதவிகிதமாகவும் குறைப்பதென்று 24-10-2000 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
30-6-99க்கு முன்பு தவணை தவறிய வேளாண்மை சார்ந்த கடன்களுக்கு, 31-7-2000க்குள் வட்டியுடன் கடனைச் செலுத்திய 3,40,727 சிறிய, பெரிய விவசாயிகள் அனைவர்க்கும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.
1998-99ல் நடப்புக் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 6.25 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
1999-2000இல் இந்த ஊக்குவிப்புத் தொகை 7 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை 2,42,817; நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 100 என்பது 1997இல் ரூ.150 ஆகவும், 2000-2001இல் ரூ. 200 ஆகவும் தற்போது 2006இல் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 400 ஆகவும் கழக அரசிலே உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த பாதைக் கட்டணம் (கூசயஉம சுநவே) 2000-2001இல் கழக அரசில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க கழக அரசில் திரு.கோலப்பன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு அமைக்கப்பட்டு - அவரது பரிந்துரைகளையேற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது.
விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனியாக நல வாரியம் ஒன்று தொடங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு 1 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேர் இதுவரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு - இது வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 7 விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு 159 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 963 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தை களை தமிழகமெங்கும் அமைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல விலையிலே விற்கவும், வாங்கிப் புசிப்போர் நியாய விலையிலே அவைகளைப் பெறவும் வழி வகை செய்ததும் தி.மு. கழக அரசு தான்.
2006ஆம் ஆண்டு பதவிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே பிறப் பிக்கப்பட்ட மூன்று ஆணைகளில் ஒன்றே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்தது தான். கடன்களை ரத்து செய்தது மாத்திரமல்லாமல், புதிய கடன்களை அவர்கள் 1500 கோடி ரூபாய் அளவிற்கு பெறவும் நிதி நிலை அறிக்கையிலே வசதி செய்யப்பட்டது.
விவசாயிகளின் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-2007இல் 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்து, அதனை 2007-2008இல் 5 சதவிகிதமாக மேலும் குறைத்து, அதுவும் போதாதென்று இந்த ஆண்டு முதல் வட்டி வீதத்தை 5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாகக் குறைத்துள்ள ஆட்சியும் தி.மு. கழக ஆட்சி தான்.
நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப் பண்படுத்தி இலவசமாக அளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கி யுள்ளது.
2008-2009ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு நெல் கொள் முதல் விலையை சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 850 ரூபாய் என்றும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 880 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்து அறிவித்தவுடன், தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1000 ரூபாய் என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1050 ரூபாய் என்றும் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
***
கேள்வி :- காவேரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயி களை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் தினமணியில் விஷம் கக்கி யிருக்கிறாரே?
கலைஞர் :- காவேரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டுமேயானால் - அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதி மன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்; தமிழக தி.மு.க. அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.
அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதியான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவசரக்கார அரசியல் வாதிகள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்ச நீதி மன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும் - அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவேரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபர மறிந்தவர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கிறார்கள்.
***
கேள்வி :- வருமான வரித்துறைக்குப் பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிரமுகர் பேசியதாக “தினமணி” பிரசுரித் திருக்கிறதே?
கலைஞர் :- வருமான வரிக்குப் பயந்து இப்போது காங்கிரஸ் காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!
***
கேள்வி :- “ஒகேனக்கல்” கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப் பிரமுகர் உளறியிருக்கிறாரே?
கலைஞர் :- பாவம்; ஒகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது - ஒகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிதி ஆதாரத்தைத் தேடிய நேரத்தில் ஜப்பான் நாட்டு உதவியை நாடி யிருந்தோம். அப்போது “பொக்ரான்” குண்டு பரிசோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.
அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது உண்மை. ஆனால் 2006இல் தி.மு.கழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடந்த பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசு சார்பிலும் - மாநில அரசுகள் சார்பிலும் பேசப்பட்டு - பிரச்சினைகள் இல்லாமல் விரைவில் நிறைவேற்றப்பட்டு - தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட இருக்கிறது.
விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகி விட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட “தினமலர்” நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என்பதையும் எழுதியுள்ளது. “போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்றவாறு அவர் பேசத் துவங்கினார். அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தகவலையே திரும்பத் திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார். தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்துகொண்டார். காவிரி பிரச்சினை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய்தது” என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந்தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
***
Saturday, July 05, 2008
ஓடி ஒளிந்து ஓய்வெடுப்பவரும் - ஓடியாடி உழைப்பவரும்!
தொண்டர்களை போராட்டத்தில் ஈடுபடும்படி தூண்டிவிட்டு - தான் அதில் பங்கேற்காமல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அறிக்கைமேல் அறிக்கை விட்டு குளு குளு கொடநாட்டு அரண்மனையில் தோழி சகிதம் ஓய்வெடுத்து வருபவர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்.
தலைவர் கலைஞரின் பொது வாழ்வில் ஓய்வு என்ற சொல்லுக்கே இடமில்லை. அண்மையில் ‘இந்தியா டுடே’ இதழ் தயாரித்த கலைஞர் சிறப்பிதழில் கலைஞரின் ஒரு நாள் - காலைத் தொடங்கி இரவு வரை அவரின் பணிகளை கவனித்து சொல்லும் போது காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11.30 மணி வரை அவர் உழைத்துக் கொண்டிருப்பதாக அந்த இதழ் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது. சதா சர்வகாலமும் அவர் விழித்துக் கொண்டு உழைத்துக் கொண்டே இருப்பதால் தமிழகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொது வாழ்வில் அவர் கண்ட களமும் பெற்ற விழுப்புண்களும் இன்று வெத்துவேட்டு அறிக்கை நாயகி அறியாது - புரியாது.
தலைவர் கலைஞர் அவர் உழைப்பு, கண் துஞ்சாமை, தியாகம், போராட்டம், விழுப்புண் ஆகிய அழகிய நற்பண்புகளால் அரசியலில் அனைவராலும் மதிக்கப்படுபவர்.
1945-ஆம் ஆண்டிலேயே புதுவையில் திராவிடர் கழக மாநாட்டில் ‘சிவகுரு’ சீர்திருத்த நாடகத்தில் நடித்ததற்காக எதிரிகளின் கடுந்தாக்குதலுக்கு ஆளானார் தலைவர். இதே ஆண்டில் அவர் மீது சட்ட எரிப்பு வழக்கு 1948-ஆம் ஆண்டு திருவையாற்றில் கறுப்புக் கொடிப் போராட்டம், 1950-ஆம் ஆண்டு இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், 1951-ஆம் ஆண்டு இராஜாஜிக்கு கருப்புக் கொடி போராட்டம், 1953-ஆம் ஆண்டு கல்லக்குடிப் போராட்டம், 1957-ஆம் ஆண்டு நங்கவரம் விவசாயிகள் போராட்டம், 1958-ஆம் ஆண்டு நேருவுக்கு கருப்புக் கொடி போராட்டம், இதே ஆண்டில் திருச்சி பீடித் தொழிலாளர் போராட்டம், 1959-ஆம் ஆண்டு தஞ்சை எஸ்.எம்.டி. பேருந்துத் தொழிலாளர் போராட்டம்,
1962-ல் விலைவாசி உயர்வு போராட்டம்,
1963 - 1964 - 1965 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தனிமைச் சிறை, 1967-ல் சைதைத் தொகுதியில் போட்டியிட்ட போது எதிரிகளால் கடுந்தாக்குதலுக்குள்ளானார்.
இப்படியாக கலைஞரின் போராட்டக்களங்கள் நீள்கிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 2001-ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று ஜெயலலிதா ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் அடித்து இழுத்துச் சென்ற காட்சியை இன்றளவும் எந்தத் தி.மு.க. தொண்டனும் மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான். கிறுத்துவர்களுக்கு புனித வெள்ளி, இஸ்லாமியர்களுக்கு ஈகைத் திருநாள் போல் தி.மு.க. தொண்டனுக்கு ஜூன் 30.
சீமாட்டிகளும் சிங்காரிகளும் கலைஞரின் தியாகத் தழும்புகளுக்கு அருகே கூட வர முடியாது. அவர் ஒரு சிறைப் பறவை.
கலைஞரின் நல்லாட்சியை இன்று அகில இந்தியாவே வியந்து போற்றுகிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆர்.இரகுபதி அவர்கள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களை பாராட்டியது வரலாற்று வரிகளில் அடிக் கோடிட்டுக் காட்ட வேண்டிய ஒன்று.
"பொறுமை, விருப்பு, வெறுப்பற்ற
உயர்ந்த மன உறுதி - நீதித்துறைமீது
மரியாதை கொண்ட மிகச் சிறந்த ராஜியவாதி
முதல்வர் கலைஞர் அவர்கள், அரசின் தலைவரான
முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை
வைத்திருக்கிறேன். எந்தப் பிரச்சினை
களுக்கும் லாவகமாக தீர்வு காண்பதில்
திறமைக்குப் பெயர் கலைஞர்"
என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அறிக்கை ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் விடுத்த குட்டு ஒன்றா இரண்டா?
உச்சநீதிமன்றத்தால் தகுதி இழப்புக்குள்ளாகி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தனது மனசாட்சியை அவர் கேள்விக்குள்ளாக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் அடங்காப்பிடாரியின் மனசாட்சியே கேள்விக்குள்ளாக் கியது.
நீதிபதிகளைப் பற்றி எந்த விவாதமும் உள் நோக்கம் கற்பிக்கிற வகையில் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படக்கூடாது என்று அரசியல் சட்டப்பிரிவு 211 தெளிவாக கூறுகிறது. ஆனால் இதையும் மீறி 4.2.2005 அன்று தமிழக சட்டப்பேரவையில் நீதிபதிகளை தாறுமாறாக விமர்சனம் செய்தவர் அரிதாரபொம்மையான அம்மையார்.
முதல்வர் தலைவர் கலைஞரை இந்தியாவின் அனைத்துத் துறை வல்லுனர்களும் பாராட்டுகின்றனர். காரணம் அவர் உழைப்பாளி, தியாகி, இன்முகத்துடன் மக்களுக்காக சிறைச் சென்றவர்.
அலங்காரப் பதுமைகள் - தங்கம் முலாம் பூசிய அலுமினியப் பளிங்குகளால் கலைஞரை ஒன்றும் செய்துவிட முடியாது.
தலைவர் கலைஞர் அலங்கார பொம்மையல்ல - தியாகங் களால் செதுக்கப்பட்ட சிற்பம். எத்தனையோ ஜூன் 30களை கண்டவர்.
(நன்றி : முரசொலி)
தலைவர் கலைஞரின் பொது வாழ்வில் ஓய்வு என்ற சொல்லுக்கே இடமில்லை. அண்மையில் ‘இந்தியா டுடே’ இதழ் தயாரித்த கலைஞர் சிறப்பிதழில் கலைஞரின் ஒரு நாள் - காலைத் தொடங்கி இரவு வரை அவரின் பணிகளை கவனித்து சொல்லும் போது காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11.30 மணி வரை அவர் உழைத்துக் கொண்டிருப்பதாக அந்த இதழ் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது. சதா சர்வகாலமும் அவர் விழித்துக் கொண்டு உழைத்துக் கொண்டே இருப்பதால் தமிழகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொது வாழ்வில் அவர் கண்ட களமும் பெற்ற விழுப்புண்களும் இன்று வெத்துவேட்டு அறிக்கை நாயகி அறியாது - புரியாது.
தலைவர் கலைஞர் அவர் உழைப்பு, கண் துஞ்சாமை, தியாகம், போராட்டம், விழுப்புண் ஆகிய அழகிய நற்பண்புகளால் அரசியலில் அனைவராலும் மதிக்கப்படுபவர்.
1945-ஆம் ஆண்டிலேயே புதுவையில் திராவிடர் கழக மாநாட்டில் ‘சிவகுரு’ சீர்திருத்த நாடகத்தில் நடித்ததற்காக எதிரிகளின் கடுந்தாக்குதலுக்கு ஆளானார் தலைவர். இதே ஆண்டில் அவர் மீது சட்ட எரிப்பு வழக்கு 1948-ஆம் ஆண்டு திருவையாற்றில் கறுப்புக் கொடிப் போராட்டம், 1950-ஆம் ஆண்டு இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், 1951-ஆம் ஆண்டு இராஜாஜிக்கு கருப்புக் கொடி போராட்டம், 1953-ஆம் ஆண்டு கல்லக்குடிப் போராட்டம், 1957-ஆம் ஆண்டு நங்கவரம் விவசாயிகள் போராட்டம், 1958-ஆம் ஆண்டு நேருவுக்கு கருப்புக் கொடி போராட்டம், இதே ஆண்டில் திருச்சி பீடித் தொழிலாளர் போராட்டம், 1959-ஆம் ஆண்டு தஞ்சை எஸ்.எம்.டி. பேருந்துத் தொழிலாளர் போராட்டம்,
1962-ல் விலைவாசி உயர்வு போராட்டம்,
1963 - 1964 - 1965 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தனிமைச் சிறை, 1967-ல் சைதைத் தொகுதியில் போட்டியிட்ட போது எதிரிகளால் கடுந்தாக்குதலுக்குள்ளானார்.
இப்படியாக கலைஞரின் போராட்டக்களங்கள் நீள்கிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 2001-ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று ஜெயலலிதா ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் அடித்து இழுத்துச் சென்ற காட்சியை இன்றளவும் எந்தத் தி.மு.க. தொண்டனும் மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான். கிறுத்துவர்களுக்கு புனித வெள்ளி, இஸ்லாமியர்களுக்கு ஈகைத் திருநாள் போல் தி.மு.க. தொண்டனுக்கு ஜூன் 30.
சீமாட்டிகளும் சிங்காரிகளும் கலைஞரின் தியாகத் தழும்புகளுக்கு அருகே கூட வர முடியாது. அவர் ஒரு சிறைப் பறவை.
கலைஞரின் நல்லாட்சியை இன்று அகில இந்தியாவே வியந்து போற்றுகிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆர்.இரகுபதி அவர்கள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களை பாராட்டியது வரலாற்று வரிகளில் அடிக் கோடிட்டுக் காட்ட வேண்டிய ஒன்று.
"பொறுமை, விருப்பு, வெறுப்பற்ற
உயர்ந்த மன உறுதி - நீதித்துறைமீது
மரியாதை கொண்ட மிகச் சிறந்த ராஜியவாதி
முதல்வர் கலைஞர் அவர்கள், அரசின் தலைவரான
முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை
வைத்திருக்கிறேன். எந்தப் பிரச்சினை
களுக்கும் லாவகமாக தீர்வு காண்பதில்
திறமைக்குப் பெயர் கலைஞர்"
என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அறிக்கை ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் விடுத்த குட்டு ஒன்றா இரண்டா?
உச்சநீதிமன்றத்தால் தகுதி இழப்புக்குள்ளாகி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தனது மனசாட்சியை அவர் கேள்விக்குள்ளாக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் அடங்காப்பிடாரியின் மனசாட்சியே கேள்விக்குள்ளாக் கியது.
நீதிபதிகளைப் பற்றி எந்த விவாதமும் உள் நோக்கம் கற்பிக்கிற வகையில் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படக்கூடாது என்று அரசியல் சட்டப்பிரிவு 211 தெளிவாக கூறுகிறது. ஆனால் இதையும் மீறி 4.2.2005 அன்று தமிழக சட்டப்பேரவையில் நீதிபதிகளை தாறுமாறாக விமர்சனம் செய்தவர் அரிதாரபொம்மையான அம்மையார்.
முதல்வர் தலைவர் கலைஞரை இந்தியாவின் அனைத்துத் துறை வல்லுனர்களும் பாராட்டுகின்றனர். காரணம் அவர் உழைப்பாளி, தியாகி, இன்முகத்துடன் மக்களுக்காக சிறைச் சென்றவர்.
அலங்காரப் பதுமைகள் - தங்கம் முலாம் பூசிய அலுமினியப் பளிங்குகளால் கலைஞரை ஒன்றும் செய்துவிட முடியாது.
தலைவர் கலைஞர் அலங்கார பொம்மையல்ல - தியாகங் களால் செதுக்கப்பட்ட சிற்பம். எத்தனையோ ஜூன் 30களை கண்டவர்.
(நன்றி : முரசொலி)
Subscribe to:
Posts (Atom)
