Tuesday, May 22, 2007

உடன்பிறப்புகளுக்கு வெட்கமும் உண்டு, வேதனையும் உண்டு!

கடந்த சில நாட்களாக தினகரன் கருத்துக் கணிப்பால் விளைந்த குழப்பங்களும், அதன் விளைவாக ஏற்பட்ட துன்பியல் சம்பவங்களும் தமிழ் இணைய உலகில் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. சட்னி, சாம்பார்களும், போலித்தமிழர்களுமாக கூட்டு சேர்ந்து இந்நிகழ்ச்சிகளை இந்திய சுதந்திர திருநாளைப் போல கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தாலும், தமிழின் மீதும், தமிழர் மீதும் அக்கறை கொண்டு விவகாரத்தை நடுநிலையோடு விவாதிக்கும் பதிவர்களையும் காணமுடிகிறது.

ஜெயாடிவியை கண்டு ஆனந்தப்பட்டும், துக்ளக்கை படித்து புளகாங்கிதப் பட்டும் பதிவிட்ட பதிவர்களுக்கு சாட்டையடியாக உடன்பிறப்பு வரவனையான் “யோக்கியவான் எடுக்கட்டும் முதல் கல்லை” என்று எழுதினார். அவரது பதிவின் உண்மை நோக்கத்தை மறைத்து திமுககாரன் கொலையை ஆதரிக்கிறான் என்ற ரீதியிலான கும்பலோடு கோவிந்தா ரக கூச்சல்களை இவ்வாரம் காணமுடிகிறது.

நடந்த சம்பவங்களுக்கு திமுககாரன் வெட்கம் மட்டும் படவில்லை. வேதனையும் படுகிறான். நடந்த நிகழ்ச்சிகளை மறக்கவோ அல்லது மறைக்கவோ திமுக தலைமை எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதனால் தான் சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்று கேட்காமல் நேர்மையுடன் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறார் தமிழக முதல்வர்.

இச்சம்பவத்திற்கும் முன்னதாக சில வன்முறை சம்பவங்களில் திமுகவினரின் பெயர் அடிபட்ட போதெல்லாம் கட்சிக்காரன் என்ற வகையில் சப்பைக்கட்டு கட்டாமல் நீதிக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்த வரலாறு திமுகவுக்கே சொந்தம். மதுரை லீலாவதி கொலைவழக்கு உட்பட தான் ஆட்சியில் இருந்த உள்ளாட்சிகளை கலைத்தது வரைக்கும் ஏகப்பட்ட உதாரணங்களை திமுககாரனால் காட்டமுடியும்.

அதேவேளையில் ஒரு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே எந்த விசாரணையும், ஆதாரமும் இன்றி மூன்று கொலைகள் செய்த ரவுடி அழகிரி என்று சன் டிவி, ஜெயா டிவி மற்றும் துக்ளக் வகையறாக்கள் கூச்சல் போட்டதில் உள்நோக்கம் மட்டுமன்றி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கக் கூடிய லாவகமும் தெரிந்தது. அழகிரி வன்முறை சம்பவத்தை லைவ் ரிலேவாக கேட்டுக் கொண்டிருந்தார் போன்ற கற்பனைக்கெட்டாத இட்டுக்கதைகளின் உள்நோக்கம் என்னவென்றும் நாம் ஆராயவேண்டியிருக்கிறது.

சி.பி.ஐ. விசாரணையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டால் அவரை காப்பாற்ற கலைஞர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. அதே நேரத்தில் ஆராயாமல் நீதி வழங்க அவர் மதுரை பாண்டிய மன்னனும் அல்ல. மிசா காலத்தின் போதே உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் தன் மகனை சட்டத்துக்கு கட்டுப்பட்டு காவலர் வசம் ஒப்படைத்தவர் டாக்டர் கலைஞர்.

பூரண மதுவிலக்கு வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று ஒரு புறம் போராட்டம் நடத்திக் கொண்டே மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 200 கோடி அளவிலான சலுகைகள் வேண்டும் என்று அறிக்கை விட்டு இரட்டை வேடம் போடும் குணம் கொண்டவர் அல்ல கலைஞர். அவரது உள்ளம் தெள்ளிய நீரோடை.

நீதிக்கும், ஜனநாயகத்துக்கும் கட்டுப்பட்டு தலைவன் வழியில் நிமிர்ந்த நன்னடை போடும் உடன்பிறப்புகள் நடந்த சம்பவங்களுக்காக வெட்கம் மட்டுமல்ல. வேதனையும் அடைகிறோம். சட்டப்பூர்வமான விசாரணையில் வெளிவரும் உண்மைகளுக்கு தலைவணங்குவோம்.

31 comments:

Anonymous said...

//உடன்பிறப்புகளுக்கு வெட்கமும் உண்டு, வேதனையும் உண்டு! //

சபாஷ்!

said...

லக்கிலுக்,
பதிவுக்கு நன்றி!

Anonymous said...

////////////////////////////
சி.பி.ஐ. விசாரணையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டால் அவரை காப்பாற்ற கலைஞர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.
////////////////////////////

அழகிரி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டால் . . .

இதுலயே உங்க வண்டவாளம் தெரியுதே. . . . .?

தினகரன் மீது தாக்குதல் நடத்தியதை ஏன் போலிஸ் காரர்கள் வேடிக்கை பார்த்தார்களாம்.

போய் தடுத்திருக்க வேண்டியது தானே . . . . ?

Anonymous said...

//பூரண மதுவிலக்கு வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று ஒரு புறம் போராட்டம் நடத்திக் கொண்டே மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 200 கோடி அளவிலான சலுகைகள் வேண்டும் என்று அறிக்கை விட்டு இரட்டை வேடம் போடும் குணம் கொண்டவர் அல்ல கலைஞர். அவரது உள்ளம் தெள்ளிய நீரோடை.//

இந்த பத்தியை தவிர்த்திருக்கலாம்

said...

//தினகரன் மீது தாக்குதல் நடத்தியதை ஏன் போலிஸ் காரர்கள் வேடிக்கை பார்த்தார்களாம்.

போய் தடுத்திருக்க வேண்டியது தானே . . . . ?//

அனானி அவர்களே!

அங்கே வேடிக்கை பார்த்த போலிஸ்காரன் நானல்லவே? அவர்கள் ஏன் தடுக்கவில்லை என்பதை அவர்கள் தான் சி.பி.ஐ. விசாரணையில் சொல்லவேண்டும்.

said...

//இரட்டை வேடம் போடும் குணம் கொண்டவர் அல்ல கலைஞர். அவரது உள்ளம் தெள்ளிய நீரோடை.//

இது கொஞ்சம் ஓவரு...:)))))))

மக்கள் இறக்கி - ஏற்றி - இறக்கி - ஏற்றி இருக்காங்க... நீங்க சொல்வது போல் இருந்தால் நிறந்தர முதல்வராக இருந்திருக்கனுமே,
அப்பாவியாக இருந்தால்ல் அரசியலில் வெற்றிகரமாக வலம் வந்திருக்க முடியாதுங்க சாமியோவ் !
:))))

said...

//பூரண மதுவிலக்கு வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று ஒரு புறம் போராட்டம் நடத்திக் கொண்டே மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 200 கோடி அளவிலான சலுகைகள் வேண்டும் என்று அறிக்கை விட்டு இரட்டை வேடம் போடும் குணம் கொண்டவர் அல்ல கலைஞர். அவரது உள்ளம் தெள்ளிய நீரோடை.//

கோவி அவர்களே!

இந்த பாராவை முழுமையாகப் படிக்கவும். நான் குறிப்பிட்டிருக்கும் "மதுவிலக்கு" சமாச்சாரம் போல எப்போழுதாவது கலைஞர் இரட்டை வேடம் போட்டிருக்கிறாரா?

அப்படி போட்டிருக்கிறார் என்றால் அதுகுறித்த விவரங்களை தாருங்கள். கலைஞரின் மறுபக்கத்தையும் அறிய ஆவலுடன் இருக்கின்றோம்.

said...

//மக்கள் இறக்கி - ஏற்றி - இறக்கி - ஏற்றி இருக்காங்க... நீங்க சொல்வது போல் இருந்தால் நிறந்தர முதல்வராக இருந்திருக்கனுமே,//
கோவியாரே,
பெருந்தலைவர் காமராஜரை கூட மக்கள் இறக்கினாங்க .அப்போ உங்க பார்வையில பெருந்தலைவர் என்ன குழம்பிய குட்டையா?

நீங்க நடுநிலமைவாதி தான் .நான் ஒத்துக்குறேன்.

said...

உடன்பிறப்புகள் வெட்கப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
அதை கொஞ்சமாச்சும் தி மு க பொதுக்குழுவில் வெளிப்படுத்தியிருக்கலாமே என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.

said...

வீரய்யன் என்ற பெயரில் வரும் அனானி கொண்டையை கிராப் வெட்டி விட்டு வரவும். இல்லையேல் தொப்பியை போட்டு மறைத்தாவது வரவும். இந்த வலைப்பூவிலும் ஐ.பி. கவுண்டர் இருக்கிறது :-)

said...

//லக்கிலுக் சைட்...
வீரய்யன் என்ற பெயரில் வரும் அனானி கொண்டையை கிராப் வெட்டி விட்டு வரவும். இல்லையேல் தொப்பியை போட்டு மறைத்தாவது வரவும். இந்த வலைப்பூவிலும் ஐ.பி. கவுண்டர் இருக்கிறது :-) //

:)))))))))


லக்கி வைதீக பாப்பனைக்காட்டிலும் லௌகிக பாப்பான் ஆபத்தானவன்.




நடந்த சம்பவங்களுக்கு வேதனைப்படுவதை ஒவ்வொருவருக்கும் தனி மடல் அனுப்பவேண்டும் போல. நான் எழுதியது அதை விமர்சிப்பவரின் அரசியல் தகுதி குறித்துதான் நான் அதில் எழுதியிருந்தேன். அதிலும் கூட்டணியில் இருக்கிறார்கள் என்கிற காரணத்துகாக பிறரை விமர்சிக்கவில்லை. அதிலும் "சவுக்கடி" செருப்படி" போன்ற வரலாற்று சிறப்புமிகு உறுதிமொழிகள் சொல்லி எந்த வித மனசங்கடமில்லாமல் அதை மிறீயவர்களை பற்றி நான் எழதக்கூடவில்லை.

மருத்துவரின் குடும்பமும் அரசியலில் தானே இருக்கிறது. அவர்களும் தொலைக்காட்சி நடத்துகிறார்கள் தானே. அதே இயக்கத்தில் முன்பு இளைஞரணி மாநில தலைவராக இருந்தவர் "ஜாண் பாண்டியன்" (ஜிவகாருன்ய இயக்க போரட்டத்தில் ஆயுள் சிறைதண்டனை அனுபவிக்கிறார்) அதன் பின் வந்தவர் பசுபதி பாண்டியன் இவர் தென் மாவட்டதில் புத்த மத சிந்தனைகளை அரிவாளினைக்கொண்டு பரப்பியதில் 10க்கும் மேற்பட்ட கொலைவழக்குகள் நிலுவையில் இருப்பதால் இப்போது திண்டுக்கல்லில் இருக்கிறார்.

" நான் வெட்கப்படுகிறேன் " நீங்கள்....

said...

//உடன்பிறப்புகள் வெட்கப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
அதை கொஞ்சமாச்சும் தி மு க பொதுக்குழுவில் வெளிப்படுத்தியிருக்கலாமே என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.//

சம்பவத்துக்கு பிறகு திமுக பொதுக்குழு இன்னமும் கூடவில்லை. கூடும்போது உங்கள் கருத்தை பரிசீலிக்க தலைவருக்கு கடிதம் எழுதுகிறேன் :-)

Anonymous said...

பின்னூட்டத்தைப் போட்டு பதில் கூறவும் தைரியம் இருந்தால். அனாவசியப் பேச்சு எதுக்கு?

மறுபடியும் கேக்கறேன். மூன்று பேரைக் கொன்னுட்டு என்ன பொன் விழா வேண்டியிருக்கு?

வீரய்யன்

said...

//மறுபடியும் கேக்கறேன். மூன்று பேரைக் கொன்னுட்டு என்ன பொன் விழா வேண்டியிருக்கு?//

சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் சேவை செய்திருப்பதால் பொன்விழா வேண்டியிருக்கு.

பதில் சொல்லியாச்சு போதுமா?

கொண்டை சுத்தமா செட் ஆவலே :)

said...

III //உடன்பிறப்புகள் வெட்கப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
அதை கொஞ்சமாச்சும் தி மு க பொதுக்குழுவில் வெளிப்படுத்தியிருக்கலாமே என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.//

சம்பவத்துக்கு பிறகு திமுக பொதுக்குழு இன்னமும் கூடவில்லை. கூடும்போது உங்கள் கருத்தை பரிசீலிக்க தலைவருக்கு கடிதம் எழுதுகிறேன் :-)III

செயற்குழுவை பொதுக்குழு என்று எழுதியது என் தவறு தான்.

செயற்குழு என்று வைத்துக்கொண்டு பதிலளித்திருக்கலாம் - தவறின் இடுக்கில் நுழைந்து தப்பிப்பதை விட!

Anonymous said...

அழகிரி குற்றவாளி என்றால், பேருந்து எரிப்பில் 3 மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கு மீண்டும் ஆரம்பித்து அதற்கு காரணமான் ஜெயலலிதாவையும் கைது செய்ய வேண்டும்

புள்ளிராஜா

Anonymous said...

//
லக்கி வைதீக பாப்பனைக்காட்டிலும் லௌகிக பாப்பான் ஆபத்தானவன்
//

நீங்களே அவங்கள பெரியாள ஆக்கிவிட்டுவிங்க போலருக்கே..

அப்ப பிறப்பால தான் ஜாதி, குணம் எல்லாம் நிர்ணயிக்கப்படுதா

said...

முன்பு ஒரு முறை திருநாவுக்கரசர் எனக்கு 'பெரியாரைத் தெரியாது. அண்ணாவைத் தெரியாது...எம்ஜிஆரை மட்டுமே தெரியும்' என்று கூறியது சர்ச்சையை கிளப்பியது. அதிமுக உறுப்பினர் ஒருவர் அப்படி பேசியது அதிசயம் இல்லை.

ஆனால் இன்று மதுரையில் நிலமை வேறு, கலைஞரைக் கூடத் தெரியாத கும்பல் ஒன்றுதான் இங்கு திமுக என்ற பெயரில் வலம் வருகிறது. திமுகவின் ஆதர்ச கொள்கைகளான இட ஒதுக்கீடு பற்றியோ, பகுத்தறிவு பற்றியோ ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக பேசக்கூடிய ஒரு தலைவரை, மதுரையில் சுட்டிக்காட்ட முடியுமா?

பிடிஆர், பொன் முத்துராமலிங்கம், காவேரி மணியம் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய யாரும் இன்று இல்லாமல் மதுரையில் திமுக என்பது தினகரனில் எழுதியபடிதான் இருக்கிறது.

இப்போது மதுரையில் இருப்பது நீங்கள் குறிப்பிடும் திமுக இல்லை!

said...

//செயற்குழுவை பொதுக்குழு என்று எழுதியது என் தவறு தான்.

செயற்குழு என்று வைத்துக்கொண்டு பதிலளித்திருக்கலாம் - தவறின் இடுக்கில் நுழைந்து தப்பிப்பதை விட!//

சட்ட நடவடிக்கையோ, விசாரணையோ செய்ய கட்சி செயற்குழுவுக்கு அதிகாரம் இல்லை. அதனால் தான் வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

செயற்குழுவில் என்னவெல்லாம் பேசப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் கட்சிக்காரர்கள் உட்பட பத்திரிகைகளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

செயற்குழுவில் வருத்தமும், வேதனையும் நிச்சயமாக தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று உளமாற நம்புகிறேன்.

said...

நல்ல நகைச்சுவை பதிவு

ஹாஹாஹ

said...

உண்மைத் தமிழன்!

மீருன்னு சூசி ஊரே செய்லு கொட்டி நவ்வுத்தாயி. மீரு இக்கட ஒச்சி நவ்வுத்தாரா? :-)

Anonymous said...

//மீருன்னு சூசி ஊரே செய்லு கொட்டி நவ்வுத்தாயி. மீரு இக்கட ஒச்சி நவ்வுத்தாரா? //

அட திருட்டு முழி,குழந்தை லக்கி ,கொல்டி பாஷையில மழலை பேசுதே!

Anonymous said...

இங்கே அனானியா வாந்தி எடுக்குற புடுக்கு ஹைதரபாத்துலே இருக்கானா? அவனோட ஐ.பி. 202.153.38.4 இதுவா?

அமுக புலனாய்வு குழு
ஹைதராபாத் கிளை

Anonymous said...

//இங்கே அனானியா வாந்தி எடுக்குற புடுக்கு ஹைதரபாத்துலே இருக்கானா?//

ஆஹா. அந்த குடுமி தான் இந்த குடுமியா? Liquor Buttocksனன் பத்திதானே புலனாய்வு குழு கேட்குது?

said...

//செயற்குழுவில் வருத்தமும், வேதனையும் நிச்சயமாக தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று உளமாற நம்புகிறேன்.//

உங்கட நம்பிக்கைக்குப் பாராட்டுக்கள்!

அந்த வருத்தமும் வேதனையும், கண்டனமும் கொஞ்சமாவது 'வெளி'ப்படுத்தியிருந்தால் இதை போட்டு மெல்லும் 'அபிஷ்டு'க்களின் வாயில் அவலாகும் அவலத்திலிருந்து சற்றே தப்பித்திருக்கலாம்ங்கற ஆதங்கம்தான்ய்யா எனக்கு! வேறென்ன?!

Anonymous said...

//ஆஹா. அந்த குடுமி தான் இந்த குடுமியா? Liquor Buttocksனன் பத்திதானே புலனாய்வு குழு கேட்குது?//

ஹா ஹா ஹா ஹா

வீரய்யன்

Anonymous said...

லக்கி,

ஒனக்கு ஆட தெரியுது ஆடுறே. எவ்ளோ நாளைக்கு தான் ஆடுறேன்னு பாப்போம். ஏற்கனவே தைலாவரம் பார்ட்டி முறுக்கிக்கினு இருக்காரு. கவுந்ததுமே இருக்குடி உங்களுக்கு வேட்டு.

Anonymous said...

லக்கி,
வெக்கம்,சூடு,சொரணை எதுவும் இல்லாத கும்பல் தான் எங்க ஆரிய கும்பல். சூடு சொரணை இருக்குறதாலே உங்களுக்கு வெக்கம் வருது? சொரணை இல்லாத எங்க குடுமி கும்பலுக்கு வெக்கமோ, மானமோ ஏது? என்னோட liquor buttocksனன் பேரு எனக்கு புடிக்கல.பெருங்கொள்ளுண்ட கழுதைரையன்ன்னு தூய ஆரியப் பெயரா வச்சுக்கொண்டு திரியப் போறேன்.என்னை மாதிரி அல்பங்களுக்கு இதை விட ஏது பேறு?

என்னோட ஐ.பி. 202.153.38.4. நான் ஹைதராபாத்துலே எங்க குலத்தொழிலை கவனிச்சுக்கறேன்.

said...

//வெக்கம்,சூடு,சொரணை எதுவும் இல்லாத கும்பல் தான் எங்க ஆரிய கும்பல். சூடு சொரணை இருக்குறதாலே உங்களுக்கு வெக்கம் வருது? சொரணை இல்லாத எங்க குடுமி கும்பலுக்கு வெக்கமோ, மானமோ ஏது? என்னோட liquor buttocksனன் பேரு எனக்கு புடிக்கல.பெருங்கொள்ளுண்ட கழுதைரையன்ன்னு தூய ஆரியப் பெயரா வச்சுக்கொண்டு திரியப் போறேன்.என்னை மாதிரி அல்பங்களுக்கு இதை விட ஏது பேறு?

என்னோட ஐ.பி. 202.153.38.4. நான் ஹைதராபாத்துலே எங்க குலத்தொழிலை கவனிச்சுக்கறேன்.//

அனானி!

உங்கள் சூடு, சொரணை, குலத்தொழில், ஐ.பி. இதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. தயவுசெய்து இந்த கழிவுகளை வேறு எங்கேயாவது இனிஷியலாக நம்பர் போட்ட பதிவர்கள் இருப்பார்கள், அங்கே போய் கழியவும்.

Anonymous said...

//வெக்கம்,சூடு,சொரணை எதுவும் இல்லாத கும்பல் தான் எங்க ஆரிய கும்பல். சூடு சொரணை இருக்குறதாலே உங்களுக்கு வெக்கம் வருது? சொரணை இல்லாத எங்க குடுமி கும்பலுக்கு வெக்கமோ, மானமோ ஏது? என்னோட liquor buttocksனன் பேரு எனக்கு புடிக்கல.பெருங்கொள்ளுண்ட கழுதைரையன்ன்னு தூய ஆரியப் பெயரா வச்சுக்கொண்டு திரியப் போறேன்.என்னை மாதிரி அல்பங்களுக்கு இதை விட ஏது பேறு?//


லக்கி அய்யா,
என்ன இது?ஜன்னி கண்டுடுச்சா?குழலி அய்யா ஏதோ வேகத்துல உங்களுக்கு வெட்கம் இல்லையான்னு கேட்டுட்டாரு.அதுக்காக இப்படியா?

said...

//லக்கி அய்யா,
என்ன இது?ஜன்னி கண்டுடுச்சா?குழலி அய்யா ஏதோ வேகத்துல உங்களுக்கு வெட்கம் இல்லையான்னு கேட்டுட்டாரு.அதுக்காக இப்படியா?//

சிங்கப்பூர் அனானி,

சிண்டு முடியற வேலை வேணாமே? :-)))))))))))