Friday, May 11, 2007

கலைஞர் 50 - சுவையான தொகுப்பு!

குளித்தலை தொகுதி வேட்பாளராக 1957&ல் ஜெயித்து தமிழக சட்டசபையில் நுழைந்த கலைஞர் கருணாநிதிக்கு இந்த ஆண்டு சட்டசபையில் அவரது பொன்விழா ஆண்டு. இந்த 50 ஆண்டுகளில், சட்டசபையில் கருணாநிதி உதிர்த்த நகைச்சுவை முத்துக்கள் பலப் பல. அவற்றில் சில முத்துக்கள் மலரும் நினைவுகளாக இங்கே..!

பீர் முகம்மது: ‘‘விவசாயக் கூலிகளுக்குக் கருத்தடை ஆபரேஷன்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. அரசு இதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்!’’

கருணாநிதி: ‘‘கருத்தடை செய்துகொள்ள வேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மது கூட அவரது தந்தைக்கு 33&வது பிள்ளை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’ (8.3.68)

-----------------------
கே.விநாயகம்: ‘‘மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?’’

கருணாநிதி: ‘‘இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.’’ (14.3.69)

-----------------------
ஜேம்ஸ்: ‘‘மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு, ‘ஒன் சைடெட் லவ்’ போலத் தான் இருக்கிறது.’’

கருணாநிதி: ‘‘ஒன் சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை!’’ (26.2.70)

-----------------------
அப்துல் லத்தீப்: ‘‘கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவது பற்றி ஆலோசிக்குமா?’’

கருணாநிதி: ‘‘ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ‘முதலை’ கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது.’’ (8.12.71)

-----------------------
கோவை செழியன்: ‘‘ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மய மாக்கிவிட்டால் பிரச்னை இருக்காது அல்லவா?’’

கருணாநிதி: ‘‘ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனை வரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்!’’ (18.12.71)

-----------------------
காமாட்சி: ‘‘மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை... இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?’’

கருணாநிதி: ‘‘மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன் னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே!’’ (14.3.73)

-----------------------
கருணாநிதி: ‘‘நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ் காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.’’

அனந்தநாயகி: ‘‘அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன் றைக்கு இங்கே வந்து உட்கார்ந் திருக்கிறீர்கள்!’’

கருணாநிதி: ‘‘அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம்.’’ (23.3.73)

-----------------------
சோனையா: ‘‘தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக் கிறது... தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்.’’

கருணாநிதி: ‘‘பல பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களைக் கூறி, உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்ட நான் விரும்ப வில்லை.’’ (27.3.73)

-----------------------
பி.ஹெச்.பாண்டியன்: ‘‘புலி பசித் தாலும் புல்லைத் தின்னாது!’’

கருணாநிதி: ‘‘புல் என்பது புல்லா, bullலா?’’ (16.2.1989)

-----------------------
பி.ஹெச்.பாண்டியன்: ‘‘ஹை கோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே வாங்கி விட்டால், வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல் கிறார்?’’

கருணாநிதி: ‘‘‘காலி’கள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான்!’’ (7.4.89)

-----------------------
ஆர்.சிங்காரம்: ‘‘இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா? புதிய வித்வான் களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான் கள்!’’

கருணாநிதி: ‘‘நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா?’’ (4.5.89)

-----------------------
நூர்முகம்மது: ‘‘கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல் வருடைய கருணை கொண்ட கடைக்கண் பார்வை குமரியின் மீது திருப்பப்பட்டு, அம் மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற் சாலையை அமைக்க, முதல்வர் முன் வருவாரா?’’

கருணாநிதி: ‘‘குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது!’’ (6.5.89)

-----------------------
பி.வி.ராஜேந்திரன்: ‘‘உப்பு உற்பத்தி மரணப் படுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து, அது சவப்பெட்டிக்குள் சென்று கொண்டு இருப்பதை உணர்கிறீர்களா?’’

கருணாநிதி: ‘‘தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப்பெட்டிக்குள் போய்விட்டதா என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க, அதற்கும் உப்புதான் தேவை!’’ (20.1.90)

-----------------------
ரகுமான்கான்: ‘‘இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம் கூட ஜாமீனில்தான் இருக்கிறார்கள்!’’

கருணாநிதி: ‘‘தவறான தகவல்! என்னையும் பேராசிரியரையும் அந்த வழக்கில் விடுதலை செய்துவிட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக் கிறார்.’’ (9.4.90)

-----------------------
வி.பி.துரைசாமி: ‘‘ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?’’

கருணாநிதி: ‘‘அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்!’’ (24.4.90)

-----------------------
குமரி அனந்தன்: ‘‘நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு ஐயப் பாடு...’’

கருணாநிதி: ‘‘குமரி அனந்தனுக்கு அப்படியரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சித்துப் பாருங்கள்.’’ (7.5.90)

(நன்றி : விகடன்)


4 comments:

said...

என்ன பூக்குட்டி, இதைத்தான் பாலாபாய் தொகுத்து போட்டுட்டாரே..
நீங்களுமா..

இருந்தாலும் சிலேடைகள் இரட்டை சுவை. :))

சென்ஷி

said...

சுவையான தொகுப்புக்கு நன்றி பூக்குட்டி!

said...

கலைஞரின் சொல்லாடலை தொகுத்தால் முடிவே இருக்காது நல்ல முயற்சி

said...

Supppppperappppppu...
Xcellent coverage...