Monday, May 21, 2007

கலைஞர் மீதான வழக்கு ரத்து

சென்ற ஆட்சியில் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா ஒரு பெரும் சாதனையை செய்தார் அது தான் தற்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தது. கைதுகள் என்றுமே கலைஞருக்கு தடைகல்லாக இருந்தது இல்லை. அந்த தன்னிகரில்லா தலைவருக்கு கைதுகள் என்றுமே படிக்கல்லாக தான் இருந்துள்ளது. என் தம்பி கருணாநிதி பூட்டப்படு இருக்கும் சிறைச்சாலை தான் நான் பாத யாத்திரை போக விரும்பும் புண்ணிய தலம் என்று அறிஞர் அண்ணாவே கூறி இருக்கிறார். எல்லா முறைகளும் கலைஞர் அவர்களே மறியலை தேடிச் செல்வார் ஆனால் இந்த முறை மறியல் அவரை தேடி வந்தது

தான் ஆட்சிக்கு வருவதற்கு முன் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டங்களில் எல்லாம் செல்வி ஜெயலலிதா ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி வந்தார் அது வறுமையை ஒழிப்பேன் என்பதோ அறியாமையை அகற்றுவேன் என்பதோ அல்லது தமிழ்நாட்டின் வளர்ச்சியை பெருக்குவேன் என்பதோ அல்ல. அந்த வாக்குறுதி என்னை சிறையில் பூட்டிய கருணாநிதியை (அவர் மேடைகளில் தான் இப்படி கண்ணியமாக பேசுவார்) அதே சிறையில் தள்ளுவேன் என்பதே. செல்வி ஜெயலலிதா தன் அரசியல் வாழ்வில் அநேகமாக தான் கொடுத்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தியது இந்த வாக்குறுதியாகவே இருக்கும் அந்த அளவிற்கு நாட்டின் மீது அக்கறை(?). இப்படி பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திறாக போடப்பட்ட இந்த வழக்கு தான் இப்போது கைவிடப்படும் நிலைக்கு வந்துள்ளது. கலைஞருக்கு படிக்கற்களாக இருக்கும் கைதுகள் இந்த முறை அவரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறது

கனிந்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். இன்று கலைஞர் என்ற பெயரை கேட்டாலே பல வலைப்பதிவர்கள் தங்கள் வலைப்பக்கங்களில் சிறுபிள்ளை தனமாக எழுதிக் கொண்டு இருப்பதை பார்த்தால் அந்த சீரிய தலைவரின் சிறப்பு என்னவென்று புரியும்