Saturday, June 06, 2009

பாமகவிலிருந்து புதுச்சேரி ராமதாஸ் திடீர் விலகல்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் பாமக எம்.பி பேராசிரியர் ராமதாஸ் திடீரென பாமகவிலிருந்தும், அரசியலை விட்டும் விலகி விட்டார். மீண்டும் பேராசிரியர் பணிக்கு அவர் திரும்பி விட்டார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் பேராசிரியர் ராமதாஸ். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அழைப்பை ஏற்று பாமகவில் இணைந்து செயல்பட்டார்.

பாமகவின் முக்கிய கொள்கைகள் வகுத்தலில் பங்காற்றியவர் ராமதாஸ். பாமகவின் பிரபலமான மாதிரி பட்ஜெட்டுக்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

கடந்த லோக்சபாவில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாக செயல்பட்டு வந்தார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியிடம் தோல்வியுற்றார்.

இந்த நிலையில் திடீரென பாமகவை விட்டும், அரசியலை விட்டும் விலகி விட்டார் ராமதாஸ்.

இதுகுறித்து பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ் (இவர் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் திண்டிவனம் எம்.பி.) கூறுகையில்,

பேராசிரியர் ராமதாஸ் குடும்ப சூழல் மற்றும் உடல்நிலை காரணமாக பா.ம.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி உள்ளார். தனது விலகல் கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளார். இனி அவர் அரசியலில் ஈடுபடமாட்டார்.

எம்.பி.யாக இருந்தபோது அவர் சிறப்பான முறையில் பணிகளை செய்தார். பல்கலை கழகத்திற்கு அவரது பணி தேவைப்படுவதால் அவர் மீண்டும் அந்த பணிக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்

செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்

4 comments:

said...

அப்புடி போடு சக்கை!

said...

ராமதாஸுக்கு சரியான ஆப்பு

said...

பச்சோந்தி ராமதாஸுக்கு சரியான ஆப்பு

anil said...

he realized good peaple can not win the current elections that is why he said good by to politics.
he does not loose any thing but we peaple are the real loosers