Tuesday, June 16, 2009

தமிழ்மணம் (புதிய) ஓட்டளிப்பில் உள்ள சிக்கல்

தமிழ்மணம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பல பதிவர்களுக்கு சுண்ணாம்பு தடவியது நினைவிருக்கலாம். ஒரு சில நல்ல பதிவர்களை தவிர்த்து பலரும் பரபரப்புக்காக தலைப்பை வைத்து கல்லா கட்டி வந்தார்கள். உள்ளே மேட்டர் இருக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு தலைவர் அல்லது பிரபலத்தை மிக கேவலமாக விமர்சித்து தலைப்பு வைத்து பிழைப்பு ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். நாளடைவில் இந்த வித்தையில் வல்லுநர்களாகவும் ஆனார்கள். இப்படியே ஒப்பேற்றி வந்ததாலோ என்னவோ அவர்களுக்கு வேறு நல்ல மாதிரி எழுதுவது என்றால் என்ன என்பதையே மறந்துவிட்டார்கள் போலும். தமிழ்மணம் வாக்கெடுப்பில் வந்த மாற்றத்தால் இவர்கள் நிலைகுலைந்தது என்னவோ உண்மை. அதனால் ஏதோ நல்லவனாக மாறிவிட்டது போல் சில இடுகைகள் எழுதினார்கள். ஆனாலும் அடிக்கடி ஏற்படும் அரிப்பை தீர்த்துக் கொள்ள பழைய பாணி இடுகைகளையும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள்

நம்மை பொறுத்தவரை தமிழ்மணம் மாற்றத்தை வரவேற்கிறோம். நாம் என்றுமே தமிழ்மணம் ஓட்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஏனென்றால் கலைஞர் என்ற சொல்லை பயன்படுத்திய குற்றத்திற்காகவே பல பதிவர்களின் இடுகைகளுக்கு தொடர்ச்சியாக நெகட்டிவ் ஓட்டுகள் போட்டு அவர்களை காய வைத்து வருகிறது ஒரு கூட்டம். அதுவும் நம்மை பற்றி கேட்க வேண்டுமா நம் வலைப்பதிவே கலைஞர் பெயரில் அல்லவா இயங்குகிறது அதனால் என்ன தான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் நம்முடைய இடுகையை வாசிக்காமலேயே நேராக நெகட்டிவ் ஓட்டு போடுவதற்கென்றே ஒரு கூட்டம் நம் வலைப்பதிவுக்கு வருகை தருகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பழைய இடுகைகளை சென்று பார்த்தால் பெரும்பாலும் மைனஸிலேயே ஓட்டு எண்ணிக்கை இருக்கும். என்ன தான் மைனஸ் ஓட்டுகள் குத்தினாலும் நம் மனம் தளரவில்லை. நாம் தான் ஜன்நாயக வழி நடப்பவர்கள் ஆயிற்றெ. ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தால் இயந்திரம் சரி இல்லை என்று சொல்வதற்கு நாம் ஒன்றும் எதிர் கட்சிகள் அல்லவே. சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற போது இதே இயந்திரங்கள் தானே இருந்தன அப்போது மட்டும் அடக்கி வாசித்தார்களே

இப்போது மீண்டும் தமிழ்மணம் ஓட்டெடுப்புக்கு வருவோம். தமிழ்மணம் தற்போது வாசகர்கள் வாக்களிக்க விரும்பினால் ஓபன் ஐடி மூலம் வாக்களிக்க வலியுறுத்துகிறது. இதில் எந்த குறையும் இல்லை. ஆனால் ஒரு முறை நீங்கள் வாக்களித்துவிட்டால் அதே இணைப்பில் இருந்து வேறு கணக்கை பயன்படுத்தி மீண்டும் வாக்களிக்க முடியாது. இது நல்ல விஷயம் தானே இதனால் கள்ள ஓட்டு போடுவது தடுக்கப்படுகிறதே என்ற கேள்வி எழலாம். இது மிகவும் சரி தான். ஆனால் ஒரே இணைப்பை பயன்படுத்தும் இருவர் இந்த முறை மூலம் வாகளித்தால் ஒருவரின் வாக்கு தான் பதிவாகும். அடுத்தவர் வேறு இணைப்பை பயன்படுத்தி தான் வாகளிக்க முடியும்.

2 comments:

said...

அருமையான பதிவு உடன்பிறப்பு :-)

said...

மிக்க நன்றி லக்கி