Sunday, January 30, 2011

மருதமலை மாமணியே முருகய்யா.....

கோடி கட்சிகளிலே நல்ல கட்சி எந்த கட்சி ?
கொங்குமணி தமிழ்நாட்டினிலே புனித கட்சி எந்த கட்சி ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் கட்சி எந்த கட்சி ?
தலையாய தலைவரெல்லாம் இருந்த கட்சி தி.மு.க கட்சி....
திருக்குவளை மாமணியே கலைஞரைய்யா
தொண்டர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா
(தி.மு.க)

தேர்தல் நந்நாளில் மைக்குடன் எந்நாளும்
தொண்டர்களை கொண்டாடும் எங்கய்யா
(தி.மு.க)

கோடிகள் கொடுத்தாலும் தலைவனை நான் மறவேன்
நாடியென் வினை தீர நீ உடனே வருவாயே
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த ஆறுமுகன் நீயே
எழுபிறப்பிலும் எங்க தலைவன் நீயே ஆ..
(தி.மு.க)

சக்தித் திருமகன் எங்கள் தலைவரை மறவேன் நான் மறவேன்
மக்கள் பிரச்சனை தீர்த்திட முதல்வராய் வருவாய் மீண்டும் வருவாய்ய்
தமிழ்நாட்டின் தலைமகனே அழகிய தமிழ்மகனே
தொண்டரெல்லாம் உனதுபலம் அதுவே உனது வெற்றிபலம்
காலமெல்லாம் முதல்வராக இருப்பாய் தலைவராக
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் முதல்வராய் கலைஞரய்யா

Friday, January 14, 2011

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்



Thursday, July 15, 2010

கார்ட்டூன்



முதல்வரை தாஜா பண்ணும் பச்சோந்தி பா.ம.க.




Thursday, June 03, 2010

கலைஞர் பிறந்த நாள் - குழந்தைகளுக்கு தங்க மோதிரம், செயின்



நன்றி - http://www.tutyonline.net/view/31_4483/20100603160617.html

Thursday, October 08, 2009

கார்ட்டூன்



Monday, July 20, 2009

குஜராத் கள்ளச்சாராயம் - "சோ" அய்யா கார்ட்டூன் போடுவாரா



தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும். சென்ற வாரம் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 150 வரை மாண்டதாக செய்தி வந்ததை பற்றி அவர் ஏதும் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. இதுவே தமிழ்நாட்டில் நடந்து இருந்தால் உருப்படியாக கருத்து எதுவும் சொல்ல தெரியாவிட்டாலும் தன்னுடைய நக்கல் பேச்சால் தமிழக அரசை காய்ச்சி எடுத்து இருப்பார். இன்னும் சில மாதங்களுக்கு இன்றே காட்டூன் வரைந்து ஓயாமல் வெளியிட்டு வருவார்.

குஜராத் கள்ளச்சாராயம் பற்றி அவர் ஏதும் கார்ட்டூன் வரைந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் சோ ஆதரவு தளம் என்று அறியப்பட்ட தளம் ஒன்றில் தான் இங்கே இணைக்கப்பட்டுள்ள படம் இடம் பெற்று இருந்தது. இந்த கார்ட்டூன் துக்ளக் இதழில் இடம் பெற்றதா என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் ஆதரவு கார்ட்டூன் என்பது மட்டும் கார்ட்டூனை பார்த்தாலே தெரிகிறது. இதே சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்று இத்தனை பேர் மாண்டு இருந்தால் இவர்கள் எல்லாம் மாண்டுவிட்ட அப்பாவிகளுக்கு போராடும் போராளிகளாக மாறி இருப்பார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்றதோ சோ ராமசாமி அவர்கள் ராம் ராஜ்ஜியமாக நினைக்கும் குஜராத்தில் அல்லவா. அதனால் 150 பேர் உயிரை குடித்த கள்ளச்சாராயத்தை குட்டி பிசாசு என்று அலட்சியமாக கருதுகிறார்கள். இங்கே இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கள்ளச்சாராய மார்க்கெட் குஜராத்தில் கொடிகட்டி பறக்கிறதாம் அந்த மார்க்கெட்டுக்கு ஆளும் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் அது இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. சோ அய்யாவுக்கு இது கூட தெரியாமல இருக்கும்

Friday, July 10, 2009

பா.ம.க. இனி மெல்ல அழியும்

சில தினங்களுக்கு முன் பா.ம.க. மீண்டும் சாதியை கையில் எடுக்கிறது என்ற செய்தியை மீள் பதிவிட்டு இருந்தோம். இப்போது கலைஞர் அவர்களும் அவ்வாறே ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி மாறி பச்சோந்தி தனத்தை பச்சையாக கடைப்பிடித்து வந்த பா.ம.க. வுக்கு தேர்தல் தோல்வி செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது. ஆனால் தோல்விகான பொறுப்பை ஏற்கும் பக்குவம் இன்னும் அதற்கு இல்லாததையே தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகள் காட்டுகின்றன

முதலில் பணம் வென்றது என்றார்கள் அப்புறம் அதிகாரம் வென்றது என்றார்கள். பின்னர் ஓட்டு இயந்திரத்தை குறை சொன்னார்கள். வெற்றி பெறும் போது நன்றாக இயங்கும் ஓட்டு இயந்திரம் தோல்வி அடைந்துவிட்ட போது மட்டும் கோளாறாக தெரிகிறது. திடீரென்று இனி வரும் தேர்தல்களில் கூட்டணி இல்லை என்று அறிக்கை வந்தது. இப்படி எந்த வழியில் செல்வது என்ற குழப்ப நிலையில் தான் இன்று பா.ம.க. இருக்கிறது

வேறு வழி எதுவும் தெரியாததால் இறுதியில் பா.ஜ.க. நிலைமைக்கே வந்துவிட்டது பா.ம.க. பா.ஜ.க. ஒவ்வொரு தேர்தலின் போதும் மத வெறியை கிளப்பும். தேர்தலில் தோல்வி அடைந்தால் மத வெறியை இன்னும் அதிக ஆவேசத்துடன் வெளிப்படுத்தும். மதத்தை கைவிட்டதால் தான் ராமர் தேர்தலில் கைவிட்டுவிட்டதாக சொல்லி மதவெறியை ஊதி ஊதி பெரிதாக்கும் அதே மாதிரி தேர்தலில் தோல்வி அடைந்த பின் பா.ம.கவுக்கும் ஞானோதயம் வந்துவிட்டது போல் இருக்கிறது. மீண்டும் வன்னிய எழுச்சி என்று ஜாதியை தூக்க ஆரம்பித்துவிட்டது.

தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் சாதி சாதி என்று வெறி பிடித்து அலைந்தால் பா.ம.க. இனி மெல்ல அழியும்

Thursday, July 02, 2009

அஞ்சாநெஞ்சன் ஆடும் அதிரடி ஆட்டம்



தென் மாவட்ட மக்களை கவர முதல்வன் பட பாணியில் களம் இறங்கிய மு.க.அழகிரி, அதிரடி நடவடிக்கை மூலம் 100க்கு 100 என்ற கணக்கில் தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்துள்ளார்.

தமிழக முதல்வரின் மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கடந்த காலங்களில் மதுரையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி கட்சியினருக்கு பல்வேறு பொறுப்புகளை பெற்றுத் தந்தார். தற்போது, திமுக தலைவர் கருணாநிதியால் தென் மண்டல அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டது.

அதன் மூலம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினருக்கு பொறுப்புகளையும், பதவிகளையும் இவர் கை காட்டும் நபருக்கே கட்சி மேலிடம் வழங்கி வந்தது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி வேட்பாளர் நியமனத்திலும், தொகுதியை திமுகவினருக்குப் பெற்றுத் தருவதில் வாக்குறுதியும் அளித்து அதை நடைமுறையிலும் கொண்டுவந்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில் மு.க.அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. அமைச்சர் பதவியேற்ற பின்னர், முதல்வன் பட பாணியில் மு.க.அழகிரி மக்கள் குறை தீர்க்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். திமுகவினருக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டுவந்த அவர் கடந்த சில நாட்களாக திட்டப் பணிகளில் மக்களுக்கு பயன்படும் வகையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய அதிரடி நடவடிக்கையை கேள்விபட்டு தென் மாவட்டத்தை சேர்ந்த ஆதரவற்ற மக்கள் மனுக்களுடன் அவரது வீட்டை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் கூட தனது வீட்டில் காத்திருந்த முதியவரை அழைத்து, அவரது மனுவை பெற்றுக் கொண்ட அழகிரி, முதியோர் பென்ஷனுக்காக பல ஆண்டுகளாக அலைவதைக் கேட்டறிந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு, 64 வயதான அந்த முதியவர் அவர் ஊருக்குச் செல்லும் முன்பே அதிகாரிகள் அவரது வருகைக்காக காத்திருந்தனர். 24 மணி நேரத்தில் அவரது பிரச்சனையையும் தீர்த்து வைத்தனர்.
இதேபோன்று, தூத்துக்குடியில் ஒரு திருமண விழாவிற்கு வந்த அழகிரியை சந்தித்து, தூத்துக்குடி செல்வ விநாயகபுரத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது 4 மகன்களயும் கடந்த ஜனவரி மாதம் சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோது அருகே உள்ள கல்குவாரி குட்டையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை வருத்தத்துடன் மனுவாக வழங்கினார். மனுவை வாங்கி படித்த மு.க.அழகிரி ஆட்சியர் கோ.பிரகாஷை வரவழைத்து சம்பவ இடத்திலேயே பாதிக்கபட்ட பெண்ணுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இப்படி அழகிரியின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருப்பதாக மதுரை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், தூத்துக்குடி திருமணவிழாவில் பேசுகையில் கூட திமுகவினருக்கு ஒரு கட்டளையிட்டார். ஒன்றியம், நகரம், மாவட்ட அளவிலான நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் அடிதட்டு ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலப் பணிகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடமும் மனுவாக வழங்கி அதைப் பெற்றுத் தரவேண்டும் என திமுகவினருக்கு கட்டளையிட்டார்.

அழகிரியின் இந்த அதிரடி நடவடிக்கை வருகிற சட்டமன்ற தேர்தலில் 100க்கு 100 என்ற வெற்றியை பறிப்பதற்காக இருப்பதாக தெரிகிறது. எப்படியோ பலநலதிட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்தால் நல்லதுதானே?


முதல்வன் பாணியில் மு.க.அழகிரி


Wednesday, July 01, 2009

சாதியை மீண்டும் கையில் எடுக்கும் ராமதாஸ்

சாதிக் கட்சியாக தோன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் 11 ஆண்டு கால தேனிலவு முடிவுக்கு வந்து விட்டது. கடந்த 1998ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி வாய்ப்புள்ள அணியில் இணைந்து தேர்தலை சந்தித்து கணிசமான அளவு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை பெற்று வந்தார் டாக்டர் ராமதாஸ்.

இந்த முறையும் அஇஅதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் திமுகவிலிருந்த விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தார். அன்புச் சகோதரியிடம் 7 இடங்களைப் பெற்று போட்டியிட்ட ராமதாசுக்கு வாக்காளர்கள் பட்டை நாமம் அளித்தனர்.

கடந்த 1983ம் ஆண்டு வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ராமதாஸ் நெற்றி, மார்பு மற்றும் முதுகில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு ஆயிரம் பேருடன் சென்னை மெரினா கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு வன்னியர்களுக்கு பட்டை நாமம் தானா என்று கேள்வி எழுப்பினார். சரியாக 26 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தேர்தலில் அவருக்கு பட்டை நாமம் அளித்து விட்டனர்.

தேர்தலில் தோல்விக்கு திமுகவின் ஆள்பலம், பணபலம், தேர்தல் முறைகேடு போன்றவற்றை காரணமாகக் கூறிக் கொண்டிருந்த ராமதாஸ் தற்போது வன்னியர்கள் மத்தியில் தமக்கு சரியும் செல்வாக்கை சரி செய்து கொள்ள மீண்டும் சாதிப் போராட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்.

வேலு}ரில் இன்று நடைபெற்ற பாமக பிரமுகர் பூண்டி நடராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் எங்களுக்கு பட்டை நாமம்தானா என்று கடந்த 1983ம் ஆண்டு எழுப்பிய கேள்வியை தற்போதும் எழுப்ப வேண்டிய நிலை வந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார். தலைமைச் செயலகத்தில் ஒரு அரசுத்துறை செயலர் கூட வன்னியர் இல்லை என்று தற்போது மீண்டும் இல்லை புராணம் பாடத் தொடங்கிவிட்டார்.

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும் மேலும் 107 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்ப்டோர் பட்டியலில் இணைந்ததால் வன்னியர்களுக்கு 10 சதவிகிதம் கூட இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது வன்னியர்களை மறந்துவிட்டு, மது, போதை, புகை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ராமதாசுக்கு ஆட்சி அதிகாரம் போனவுடன் மீண்டும் வன்னியர்களின் நிலைவு வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்பாக வன்னியர்களின் கோரிக்கைகள் பற்றி பேசி பின்னர் அதை மறந்துவிட்டு, தற்போது அவை நிறைவேறாமல் இருப்பதற்கு இமயமலையில் போய் முட்டிக் கொண்டால் விமோசன் கிடைக்குமா என்று புலம்பத் தொடங்கியிருக்கிறார்.

ராமதாசின் இந்தப் புலம்பல்கள் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி என்பதை வன்னியர் சமுதாய மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும், இனியும் அவரது பேச்சுக்கள் எடுபடாது என்றும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்

ராமதாசின் புலம்பல்

Tuesday, June 30, 2009

முதல்வர், துணை முதல்வருக்கு பத்திரிக்கையாளர் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்ட தமிழக அரசியல் வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், துரித நடவடிக்கை எடுத்த முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படுள்ளது.

ராமநாதபுர மாவட்ட தமிழக அரசியல் என்ற வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் என்கிற ரவிச்சந்திரன் ராமநாதபுரம் நகர திமுக செயலாளர் ரத்னம் மற்றும் சிலரால் காரில் கடத்தப்பட்டுள்ளார். மேலும் நிருபர் கிஷோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த செயலுக்கு சென்னை பிரஸ் கிளப், கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிருபர் கிஷோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறையினரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக முதல்வர் கருணாநிதி பாராபட்சம் பாரமல் கடும் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் தி.மு.க., நகரச் செயலர் ரத்தினம் பிடியில் இருந்த நிருபர் கிஷோர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையின் பேரில் விடுவிக்கப்படடுள்ளார். மேலும் நகரச் செயலர் ரத்தினம் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் நகர தி.மு.க., செயலர் ஆர்.ஜி.ரத்தினம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் தி.மு.க., உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

பத்தரிக்கையாளர்களின் உணர்வுகளை அறிந்து புரிந்து தக்க தருணத்தில் நேர்மைக்கு துணை நின்று நிருபர் கிஷோரை உயிருடன் மீட்ட தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ரத்தினம் மீது உடனே நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்

நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, June 25, 2009

அல்-ஜசீராவில் நக்கீரன்



Wednesday, June 24, 2009

டிரான்சிஸ்டரும், டேப் ரிக்கார்டரும் - நினைவலைகள்



கால ஒட்டத்தின் சுழற்சியில் காணாமல் போன் விஷயங்கள் சில தொலைந்து போன விஷயங்கள் பல. அப்படி நினைவுகளுக்குள் கரைந்து போன விஷயங்களை அசை போடுவது தான் இந்த இடுகை. ஒரு பத்து இருபது வருடத்துக்கு முன்னெல்லாம் பல வீடுகளை அலங்கரித்த முக்கியமான மனமகிழ் சாதனம் தான் டிரான்சிஸ்டர். இது ஒரு வகையில் வானொலி மாதிரியே பயன்பட்டாலும் இதற்கு ஏன் டிரான்சிஸ்டர் என்ற பெயர் வந்தது என்று சிறுவயதிலேயெ அடிக்கடி குழம்பிக் கொள்வேன். எங்கள் தெருவில் ஒரு சிஸ்டர் (தமிழில் அக்கா) சதா நேரமும் அந்த டிரான்சிஸ்டரையே வைத்து பாட்டு கேட்டு கொண்டு இருப்பார்கள். சிஸ்டர்கள் எல்லாம் அதிகம் விரும்புவதால் ஒரு வேளை அதனால் தான் அதற்கு டிரான்சிஸ்டர் என்ற பெயர் வந்திருக்குமோ என்ற அளவுக்கு சிந்தித்து இருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் கரண்ட் போனால் வானொலி இயங்காது ஆனால் டிரன்சிஸ்டர் பேட்டரி கட்டையில் இயங்கும் என்ற ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும் கண்டறிந்தேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டிரான்சிஸ்டர் வெகுஜன புழக்கத்தில் தன் சிறப்பை இழந்தது

எங்கள் தெருவில் ஒரு இஸ்திரி கடை இருந்தது அந்த கடைக்காரர் ஒரு டிரான்சிஸ்டர் வைத்து இருந்தார். அவர் அதிகாலையில் வந்து தனது கடையை திறக்கும் போது அந்த டிரான்சிஸ்டரை ஆன் செய்தால் இரவு கடையை மூடிவிட்டு போகும் போது தான் அதை நிறுத்துவார். பல சமயங்களில் அந்த இஸ்திரி கடை டிரான்சிஸ்டர் தொல்லையாகவே தெரிந்தாலும் மாலை வேளைகளில் கரண்டு போய் வீட்டுக்கு வெளியே வந்து உட்கார்ந்து இருக்கும் போது அது மட்டுமே பொழுதுபோக்காக அமையும். அப்படி ஒரு நாள் கரண்டு இல்லாத மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் பொழுதை கழித்து கொண்டு இருக்கும் போது தான் அந்த டிரான்சிஸ்டர் வழி வந்த செய்தியில் இலங்கைக்கு விஜயம் செய்த ராஜீவ் காந்தியை ஒரு சிங்களவன் துப்பாக்கியால் தாக்கிவிட்டான் என்ற செய்தியை சுடச்சுட கேட்டோம். உடனே தெருவில் போவோர் வருவோர் உட்பட அந்த இஸ்திரி கடையை சுற்றி செய்தி கேட்பதற்கென்றே கூட்டம் கூடியது. செய்தி முடிந்தவுடன் பெரிசுகள் எல்லாம் இந்த விஷயத்தை துவைத்து காயப்போட்டு கொண்டு இருந்தார்கள். இணையத்தில் ஏதாவது ஒரு விஷயம் கிடைத்தால் அதை வைத்து வலையுலகில் சில காலம் ஓட்டுவோமே அது மாதிரி அந்த அரசியல் ஞானிகள் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் சிலரின் வாதங்கள் நன்றாகவே இருக்கும். ராஜீவ் காந்திக்கு இலங்கை வலை விரிக்கிறது என்றும் இந்தியா இலங்கையை நம்பக் கூடாது என்றும் அவர்கள் பேசியது நன்றாக நினைவு இருக்கிறது



இந்த டிரான்சிஸ்டரிலேயெ இன்னொரு வகை உண்டு அது பாக்கெட்டு டிரான்சிஸ்டர். இது முக்கியமாக இளசுகளின் பேவரைட்டாக இருந்தது. இன்றைய தேதியில் ஏதோ ஐபாடு வாய்ப்பாடு என்றெல்லாம் பிலிம் காட்டி கொண்டு திரிகிறார்களே இவர்கெளுக்கெல்லாம் முன்னோடி தான் இந்த பாக்கெட்டு டிரான்சிஸ்டர், டிரான்சிஸ்டரின் மின்யேச்சர். கைக்கு அடக்கமாக இருக்கும். அரபு நாடு ஒன்றுக்கு சென்று திரும்பி வந்த சலீம் பாய் பல நாட்களாக இந்த பாக்கெட்டு டிரான்சிஸ்டரை வைத்து தான் பிலிம் காட்டிக் கொண்டு இருந்தார். நாங்கள் கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதற்கு அவரை தான் நச்சரிப்போம்

டிரான்சிஸ்டருக்கு இணையான மற்றொரு மனமகிழ் சாதனம் டேப் ரிக்கார்டர். இது இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் வெகுவாக குறைந்துள்ளது. இப்போதெல்லாம் முழு நேர மியூசிக் சேனல்களின் ஆக்கிரமிப்பால் வீடுகளில் வெறும் ஆடியோவை மட்டும் கேட்பது கணிசமாக குறைந்துவிட்டது. டேப் ரிக்கார்டரில் கேசட்டு போட்டு பாடல் கேட்பதை விட அதில் நம் குரலை பதிவு செய்து அதை கேட்பதில் தான் அலாதி பிரியம். எங்கள் வீட்டுக்கு டேப் ரிக்கார்டர் வந்த போது அதை நாங்கள் எதிர்பார்க்காததால் கேசட்டு எதுவும் இல்லை அதுவும் இரவு நேரம் ஆகிவிட்டது அதனால் பக்கத்து வீட்டில் சென்று கேட்டோம். கிறுத்துவரான அவரோ புதுசா டேப் வாங்கியிருக்கீங்களா முதலில் யேசு பாட்டை போடுங்க என்று சொல்லி சில கிறுத்துவ பாடல் கேசட்டுகளை கையில் கொடுத்தார். பிரீயா கிடைக்கிற மாட்டுக்கு பல்லையா பிடிச்சு பார்க்க முடியும் என்று அன்று இரவு மட்டும் கிறித்துவ பாடலகள் ஒலிபரப்பினோம். கேசட் கொடுத்தவருக்கும் அதை கேட்டு சந்தோஷம். எப்படா விடியும் அடுத்த நாள் அப்ப வரும் என்று தூங்கினோம். அடுத்த நாள் வந்தது, நண்பர்கள் வீட்டுக்கு சென்று இருக்கிற கேசட்டுகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து அலற விட்டுட்டோம்ல

இதுக்கு எத்தனை மார்க் போடுவாங்க?

இப்பெல்லாம் நாலு வரியில பதிவு போட்டு அதுக்கு சம்மந்தமே இல்லாம நச்சுன்னு ஒரு படம் போட்டாதான் மார்க் போடுவாங்களாம். இது கூட தெரியாம பல பேர் மாங்கு மாங்குன்னு எழுதறாங்களேனு நெனச்சா பாவமா இருக்கு. அதான் நமக்கும் ஒரு ஆசை நமக்கு எத்தனை மார்க் போடுவாங்கன்னு. என்ன இருந்தாலும் இந்த காலத்து யூத்துக கூட எல்லாம் போட்டி போட முடியுமா நம்மால? ஏதோ நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி ஒரு படத்தை போட்டிருக்கேன் ஏதோ பாத்து போடுங்க பாஸு பார்டர்ல பாஸ் ஆனாலும் ஓகே தான் பாஸு.



இந்த படத்தில் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு இருக்கா? இருந்தா படத்தை எடுத்த போட்டோகிராபருக்கு மார்க்கை குறைச்சுட்டு நமக்கு சேர வேண்டிய மார்க்கை குடுத்துடுங்க பாஸு

Tuesday, June 23, 2009

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இலங்கை அனுமதி

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான "சேவா இன்டர்நேஷனல்' என்ற அமைப்பிற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தமிழர்கள் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை அரசு அமைத்துள்ள அகதி முகாம்களில் மட்டும் சுமார் 3 லட்சம் தமிழர்கள் சிறைச்சாலையைவிட கொடுமையான சூழலில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இலங்கையில் அவதிப்பட்டு வரும் தமிழர்களுக்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருள்கள் அடங்கிய "வணங்காமண்' கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அந்தக் கப்பல் தற்போது சென்னை துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பான "சேவா இன்டர்நேஷனல்' உள்ளிட்ட சில அமைப்புகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
"உணவு, உடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், கம்பளிப் போர்வைகள், குடைகள், கொசுவலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு விரைவில் அளிக்கப்படும்' என்று சேவா இன்டர்நேஷனல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

"சுனாமி ஏற்பட்டபோது சேவா இன்டர்நேஷனல் அனுப்பிய குஜராத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் இலங்கையில் மருத்துவச் சேவையில் ஈடுபட்டனர். அதேபோல தற்போதும் குஜராத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் மருத்துவக் குழுவினர் இலங்கைக்குச் செல்வார்கள்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்

நன்றி: தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணி: ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இலங்கை அனுமதி

Monday, June 22, 2009

அறிமுகம்: குட்டி உடன்பிறப்பு

கழகத்தின் அடுத்த தலைமுறை களத்தில் இறங்கிவிட்டது. களப்பணி ஆற்றுவதற்கு இன்னும் வயது ஆக வேண்டும் இந்த குட்டி உடன்பிறப்புக்கு. ஆனால் இணையத்தில் கழகப்பணி ஆற்றுதவற்கு இப்போதே தயாராகிவிட்டார். நமது முந்தைய இடுகையான பஜ்ஜி பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம் மூலமாக தான் கண்டுகொண்டோம் இந்த சீறும் சிறுவயது சிங்கத்தை. அந்த பின்னூட்டத்தை வாசித்தவுடன் அனுபமிக்க ஒரு கழக தோழராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை தொடர்பு கொண்ட போது தான் தெரிந்தது அவர் இன்னும் சிறுவர் அணி தான் என்று. சிறுவர் ஆனாலும் ஆற்றலில் வியக்க வைக்கும் அறிவு நிரம்பவே இருக்கிறது. தொடர்ந்து இணையத்தில் பதிவுகளை வாசித்து வந்து கொண்டு இருக்கிறார். அவரை இணையத்தில் எழுத அழைத்த போது அவர் சற்றும் அதை எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர் சார்பாக அவரது பின்னூட்டத்தை இங்கு இணைத்து இருக்கிறோம். கூடிய விரைவில் நம் குட்டி உடன்பிறப்பு தன் சொந்த பெயரியேலேயே எழுதுவார் என்று எதிர்பார்க்கிறோம்

==================================================================
உடன்பிறப்பு பஜ்ஜி என்றவுடன் ஒரு நினைவு வருது பகிர்ந்துக்க ஆசை.

ஒரு தடவை மயிலாடுதுறையிலே 1965ம் ஆண்டு. நான் பிறக்கவில்லை. எங்க தாத்தா, கோ சி மணி ஆகியோர் ஒரு பொது கூட்டத்துக்கு ஏற்பாடு. அண்ணா,சிறப்பு பேச்சாளர். அண்ணாநடிப்பிசை புலவர் கே ஆர் ராமசாமி அவர்களிடம் காரை இரவல் வாங்கிகிட்டு ஓட்டுனர் கிடைக்காமையால் டி. என் ராஜரத்தினம் அவர்களின் ஓட்டுனரை கூட்டிகிட்டு அண்ணா காஞ்சியில் இருந்து கிளம்பியாச்சு.

நம்ம அண்ணா கொள்ளிடம் ஆற்றை தாண்டி வரும் போது ஆற்று மணல் பார்த்தவுடன் காரை நிப்பாட்டிட்டு படுக்கை போட்டுட்ட்டாரு.

இங்கயோ செம கூட்டம். எத்தனை நேரம் தான் சமாளிப்பது. அப்ப உடனே ஒரு கார் ஏற்பாடு செஞ்சு அன்னிக்கு கோவில் திருமாளம் என்ற ஊர்ல இருந்த கலைஞரை தூக்கிகிட்டு வந்தாச்சு.

கலைஞருக்கு அப்போ உடல் நிலை சரியில்லை. பேச முடியாதா நிலை. ஆனா அவருவந்து மேடையிலே உட்காந்து கிட்டு N. கிட்டப்பாவை முழங்க சொல்லிட்டூ உட்காந்து இருக்கார்.

கூட்டம் நடப்பது நகராட்சி பூங்கா. அப்ப கீழே ஒரு நடமாடும் பஜ்ஜி கடை. பஜ்ஜி வாசம் மூக்கை துளைத்ததாள் கலைஞர் கூட ஒன்னு வாங்கி சாப்பிட்டார்.

கலைஞரே சாப்பிட்ட உடனே கூட்டம் முழுக்க அண்ணாவின் வருகையை மறந்து விட்டு பஜ்ஜி கடைக்கு போயிடுச்சு. 10 நிமிஷம் எல்லா வாழைக்காய், வெங்காயம் எல்லாம்போச்சு.

இதை கலைஞரும் கவனித்து கிட்டே இருக்கார்.

ஆச்சு. அண்ணா வந்தாச்சு. அண்ணாவுக்கு பஜ்ஜி வாசம் பிடித்து போக கலைஞரை பார்த்து "ஒரு பஜ்ஜி வாங்குங்க தம்பி"

அதுக்கு கலைஞர் அண்ணாவிடம் "ஏன் அண்ணா உங்களுக்கு ஆதித்தனாரை பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால ஆதித்தனார் பஜ்ஜி சாப்பிடனுமா? என்று கேட்க அண்ணாவுக்கு புரிஞ்சு போச்சு.

மேடையில் இருந்த யாருக்கும் இது என்ன என்பது என தெரியலை.

என்ன கூத்துன்னா வாழைக்காய் எல்லாம் தீர்ந்து போன்ன பின்னே தின தந்தி பேப்பரை கட் பண்ணி மாவில் துவைத்து பஜ்ஜி வியாபாரம் நடந்து கிட்டு இருந்தது. மேடையில் இருந்தாலும் கலைஞர் அதை கவனிச்சு கிட்டு இருந்திருக்கார்.

உங்க பஜ்ஜி பதிவிலே இதை நான் ஆசை ஆசையா பதிகிறேன்!

Friday, June 19, 2009

பஜ்ஜிமணம், பஜ்ஜிகூடு, பஜ்ஜிலிஷ், "சூடான பஜ்ஜிகள்", பஜிவர்கள் மற்றும் பஜிவர் கூட்டம்

இது உங்களுக்கு தெரிஞ்ச கதை தான் ஆனா திரைக்கதையை மட்டும் வித்தியாசமா அமைக்க முயற்சி செய்து இருக்கிறேன். கலைஞரும் பொறுப்புகளை எல்லாம் தளபதிகிட்ட கொடுத்துவிட்டு மீண்டும் கலைச்சேவை ஆற்ற கிளம்பிவிட்டார். அதனால் நமக்கும் கதை, திரைக்கதை பக்கம் ஆர்வம் வந்துவிட்டது. ஓக்கே, இப்போது கதைக்கு போகலாம். இது ஒரு வரலாற்று கதை என்பதால் எல்லா விஷயங்களையும் தொகுத்தால் பல பாகங்களாக விரிவடையும் அதனால் இது ஒரு நல்ல அறிமுகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஊரில் ஒருவர் முதன் முதலாக பஜ்ஜி கடை ஆரம்பித்தார். அந்த கடையில் பஜ்ஜி சுட ஆரம்பித்தால் ஊர் முழுவதுமே பஜ்ஜிமணம் கமழும். இதனால் கடையில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. இந்த கடையை பஜ்ஜிமணம் என்றே அழைப்போம். அதே ஊரில் இன்னொரு பஜ்ஜி கடையும் வந்தது. ஒரே ஊரில் இரண்டு பஜ்ஜி கடைகள் இருந்தாலும் இரண்டாவது கடையிலும் பஜ்ஜி விற்பனை நன்றாகவே நடந்து வந்தது. இந்த கடையின் பெயர் பஜ்ஜிகூடு என்பதை இந்நேரம் நீங்கள் யூகித்து இருப்பீர்கள். போக போக பஜ்ஜி சாப்பிடுபவர்கள் அதிகமானார்கள். இதனால் இவர்களுக்கு பஜிவர்கள் என்ற பெயரும் வந்தது. பஜிவர்கள் பஜ்ஜி கடையை தவிர சில சமயங்களில் ஸ்டார் ஓட்டல்களிலும் சந்தித்து கொள்வார்கள். இந்த சந்திப்புகள் பஜிவர் கூட்டம் என்று அழைக்கப்படும். பஜிவர் கூட்டம் என்று அழைக்கப்பட்டாலும் இந்த சந்திப்புகளின் போது இவர்கள் ஆர்டர் செய்வது என்னவோ போண்டாவை தான்

ஒரு நாள் திடீரென பஜ்ஜுகூடு கடை மூடப்பட்டது. பஜ்ஜிமணம் கடையும் கை மாறியது. இந்த சமயத்தில் பஜ்ஜிமணம் கடையின் மணம் பக்கத்து ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்த கடையின் சிறப்பம்சம் என்ன வென்றால் இந்த கடையில் ஒரு ஓரத்தில் ஒரு பத்து பஜ்ஜிகளை சூடான பஜ்ஜிகள் என்று வரிசைப்படுத்தி வைத்து இருப்பார்கள். இந்த சூடான பஜ்ஜிகளை வாங்குவதற்கு கூட்டம் முட்டி மோதிக் கொண்டு வரும். பல சமயங்களில் இந்த சூடான பஜ்ஜிகளை வாங்குவதற்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கலவரமே நடந்து இருக்கிறது. இதனால் பஜ்ஜி மணம் கடை அவ்வப்போது சூடான பஜ்ஜிகளை எடுப்பதும் மீண்டும் வைப்பதுமாக இருந்தது

பஜ்ஜிமணத்தின் ஆதிக்கம் நிலவி வந்த பஜ்ஜி உலகில் திடீரென ஒரு புதிய பஜ்ஜி கடை தோன்றியது. இந்த கடையை பஜ்ஜிலிஷ் என்று அழைப்போம். இந்த கடை ஒரு புது விதமான யுக்தியை அறிமுகப்படுத்தியது. நீங்கள் அந்த கடையில் நீங்கள் சாப்பிட்ட ஐட்டம் உங்களுக்கு பிடித்து இருப்பதாக சொன்னால் மட்டுமே அதை அவர்கள் தங்கள் கடை ஷோ கேசில் வைப்பார்கள். இந்த முறை நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பஜ்ஜிலிஷ் கடையும் அல்லோலகல்லோலப்பட்டது. பஜ்ஜிமணமும் காலத்திற்கேற்ப பல மாற்றங்களை செய்து தன்னுடைய பஜிவர் வட்டத்தை இன்னும் விரிவுபடுத்தியது.

பஜ்ஜிமணம் மற்றும் பஜ்ஜிலிஷ் ஆகிய கடைகளின் வெற்றியை பார்த்த பக்கத்து ஊர்களிலும் பல கடைகள் தோன்ற ஆரம்பித்தன. பஜிவர்ஸ், பஜ்ஜிவெளி, பஜ்ஜிப்பதிவுகள், பஜ்ஜிடி, பஜ்ஜிமம் போன்ற கடைகள் தோன்றி பஜ்ஜி மார்க்கெட்டை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டன. இதுவரை பஜ்ஜி மார்க்கெட்டை கண்டு கொள்ளாமல் இருந்த பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கூட பஜ்ஜி உலகத்தை திரும்பி பார்க்க ஆரம்பித்து இருக்கின்றன. இந்த முன்னேற்றங்கள் பஜ்ஜி உலகில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வெள்ளித்திரையில் காணவும்

இந்த கதைக்கு வரும் ஆதரவை பொறுத்து தொடர்ந்து கதைகள் வெளிவரலாம் இல்லை என்றால் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வந்த மாதிரி நாமும் மீண்டும் அரசியல் பதிவுகளுக்கு வரும் நிலை உருவாகலாம். அதனால் கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் தவறாமல் மரியாதையாக உங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றிவிட்டு செல்லவும்

Thursday, June 18, 2009

யாழ்ப்பாணத்தில் உதயசூரியன்

யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் தாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக த.வி. கூ. தலைவர் வீ . ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கூட்டுக்கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கும் இடமளிக்கப்படும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுச்சின்னமாகிய குத்துவிளக்கு சின்னத்தில் வவுனியாவில் போட்டியிடுவது என்று முன்னர் தீர்மானித்திருந்தன. எனினும் தற்போது, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தமது சின்னமாகிய நங்கூரம் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாகத் தெரிவித்திருக்கிறது. இது செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதனால், அதற்கு தம்மால் இணங்க முடியாது என்று ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

முன்னர் இணங்கியபடி, குத்து விளக்கு சின்னத்தில் வவுனியாவிலும், உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணத்திலும் கூட்டாகப் போட்டியிடத் தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு மற்ற கட்சிகள் தயாரில்லாவிட்டால் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் தாங்கள் தனித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்

நன்றி: பாரிஸ்தமிழ்

Wednesday, June 17, 2009

சட்டப்பேரவையா? நாடக மேடையா?

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே தான் காரசாரமான விவாதம், மோதல், அமளி, ரகளை எல்லாம் நடக்கும்.

ஆனால் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்ட சம்பவம் இன்று அரங்கேறியிருக்கிறது.

நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கட்சித் தலைமைக்கும் அவருக்கும் இடையே நல்லுறவு இல்லை.

எஸ்.வி.சேகர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவப் போவதாக ஏற்கெனவே இரண்டு, மூன்று முறை செய்திகள் வெளியானது. ஒருமுறை தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவரை அதிமுகவினர் வந்து குண்டு கட்டாக தூக்கிச் சென்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்த போது சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் அவையில் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினை வாழ்த்தியும் பேசினார்.

இதனைப் பொறுக்காத அதிமுகவினர் எஸ்.வி.சேகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். பின்னர் பேசிய சேகர், அதிமுகவினரால் தமது உயிருக்கு ஆபத்து என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக உறுப்பினர் கலைராஜன் இனி பேசினால் போட்டுவிடுவேன் என்று தம்மை மிரட்டுவதாகவும், சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார் என்றும், தன் அருகில் அமர்ந்துள்ள உறுப்பினர்கள் தம்மை துரோகி என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய கலைராஜன், நாளைக்கே பன்றிக் காய்ச்சல் வந்து சேகர் படார் என்று போய்விட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா என்று கேட்டுள்ளார்.

இந்த விவாதம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் மறுத்துவிட்டார்.

சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க வேண்டிய இடம். அங்கு கொள்கை ரீதியிலான மோதல்கள் இருந்தால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மோதல் என்ற நிலை மாறி தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களே தங்களுக்குள் மோதிக் கொள்ளும் இடமாகவும் சட்டப்பேரவை மாறியிருப்பது பரிதாபத்திற்குரியது தான்.

இதுபோன்ற நிகழ்வுகள் இனி சட்டப்பேரவையில் அரங்கேறாமல் உறுப்பினர்கள் கவனத்துடன் செயலாற்ற வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். தங்கள் கட்சிக்குள் உள்ள வேறுபாடுகளை சட்டப்பேரவையில் வைத்துக் கொள்ளாமல் கட்சி அலுவலத்தில் வைத்துக் கொள்வது ஜனநாயகத்திற்கு நல்லது

நன்றி: நிகழ்வுகள்

பிராமணர்களே இல்லாத கட்சி ?!!?

ஒரு வாதத்திற்காக ஒரு கேள்வி கேட்கிறேன். நம் பெரு மதிப்பிற்குரிய திரு.சோ ராமசாமி அவர்கள் கொங்கு வேளாளர் பேரவையில் சேருவாரா. என்ன இது பைத்தியக்காரத்தனமான கேள்வியாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா. இதுக்கே இப்படி நினைத்தீர்கள் என்றால் இன்னும் கேளுங்க. சரி சோ ராமசாமியை விடுவோம். வேறு ஒரு பிராமணர் அதே கொங்கு வேளாளர் பேரவையில் சேருவாரா. இது அதைவிட பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதா. இன்னும் கேளுங்கள், இப்போது பிராமணர் எதுக்கு கொங்கு வேளாளர் பேரவையில் சேர வேண்டும் அவர்கள் பிராமண அமைப்பில் தானே சேருவார்கள் என்ற யதார்த்தம் இந்நேரம் உங்களுக்கு புரிந்து இருக்கும்

இப்போது கொங்கு வேளாளர் பேரவையை சேர்ந்த ஒருவர் எங்கள் கட்சி தான் பிராமணர்களே இல்லாத கட்சி அதனால் நாங்கள் தான் உண்மையான திராவிட கட்சி என்று தம்பட்டம் அடித்தால் உங்களுக்கு என்ன தோன்றும். இங்கே உதாரணம் தான் வேறு. உண்மையிலேயே ஒரு சாதி கட்சியை சேர்ந்த சிலர் இப்படி தான் தாங்கள் உண்மையான திராவிட கட்சி என்று சொல்லி வருகிறார்கள். என்னவோ பிராமணர்கள் எல்லோரும் இவர்களின் சாதிக் கட்சியில் சேர்வதற்கு விண்ணப்ப படிவத்தை நிரப்பி வைத்துக் கொண்டு இவர்கள் கட்சி வாசலில் இரவு பகலாக கியூவில் நிற்பதை போல் இவர்கள் கொடுக்கும் பில்டப் இருக்கிறதே அப்பப்பா காமெடியிலும் செம காமெடி

ஆனால் இப்படி தங்கள் கட்சியில் பிராமணர்களே இல்லை என்று சொல்லி திராவிடம் பேசும் இவர்கள் அமைச்சர் பதவி பெறுவதற்கும், ராஜ்ய சபா உறுப்பினர் ஆவதற்கும் கையேந்தி நிற்பது என்னவோ பிராமணர் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்தாலும் திராவிடத்தை தூக்கி கடாசிவிட்டு அந்த கட்சி வாசலில் காத்து இருப்பார்கள். இந்த பச்சோந்தி தனத்தை எல்லாம் சுட்டி காட்டினால் அவர்களுக்கு மறக்காமல் பார்ப்பன அடிவருடி பட்டத்தையும் கொடுத்து மகிழ்வார்கள் இந்த நவீன திராவிடர்கள்

திராவிடம், திராவிடம் என்று பேசிக் கொண்டே சக திராவிட கட்சிகளுக்கு குழி பறிப்பதில் வல்லவர்கள் இவர்கள். திராவிடம் என்பதெல்லாம் தங்கள் சாதி வெறியை மறைக்கும் வெறும் கருவி தான் இவர்களுக்கு