Tuesday, April 08, 2008

ஒகேனக்கல் பிரச்சினையும், பார்ப்பனர்கள் கும்மாளமும்!

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் இப்போதெல்லாம் கும்மாளமிடுவது பார்ப்பனர்கள். காவிரி பிரச்சினையாக இருந்தாலும் சரி, பெரியாறு, ஒகேனக்கல் பிரச்சினையாக இருந்தாலும் சரி. பார்ப்பனர்களுக்கு அந்த பிரச்சினை தீரவேண்டுமென்ற அக்கறையெல்லாம் எதுவுமில்லை. அப்பிரச்சினைகளை காரணம் காட்டி கலைஞரை திட்டி தீர்க்கலாமே என்ற மகிழ்ச்சி தான் அதிகமாக தென்படுகிறது. தற்போது இணையத்தில் பார்ப்பனர்கள் எழுதிவரும் கட்டு உரைகளையே இதற்கு நல்ல உதாரணமாக காட்டலாம்.

பிரச்சினை பாஜக ரூபத்தில் தொடங்கியபோது ஒகேனக்கல் குறித்த அக்கறை இல்லாத பார்ப்பனர்கள் அங்கே வெறியாட்டம் நடந்து, தமிழகத்திலும் மானமுள்ள தமிழர்களால் போராட்டம் நடத்தப்பட்டு கலைஞரின் விவேகத்தால் இப்பொழுது கொந்தளிப்பு அடங்கிய நிலையில், கலைஞரை திட்ட காரணம் கிடைக்காதா என்று நாக்கை தொங்கப்போட்டு அலைந்த பார்ப்பனர்களுக்கு திடீரென ஒகேனக்கல் திட்டம் மீது அக்கறை வந்திருக்கிறதாம். இதுபோல எப்போதாவது பார்ப்பனர்களுக்கு தமிழ் மீதும், தமிழன் மீதும் அக்கறை பிறக்கும்.

தில்லையிலே தமிழுக்கு இடம் கேட்டபோதும் வராத அக்கறை, தமிழை கட்டாயப்பாடமாக சேர்க்கும்போது வராத அக்கறை கலைஞரையும், திராவிட இயக்கங்களையும் திட்ட வாய்ப்பு கிடைத்தால் மட்டும் பார்ப்பனர்களுக்கு வந்துவிடும். ஒகேனக்கல் பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறும், இருதரப்பிலும் ரத்தக்களறி ஏற்படும், கலைஞரின் ஆட்சி கலைக்கப்படும், மத்தியில் ஐ.மு. ஆட்சி கலைந்து பாஜக ஆட்சி ஏற்படும் என்றெல்லாம் எதிர்பார்த்த ஒட்டுண்ணி பார்ப்பனர்களுக்கு கலைஞரின் விவேகமான அணுகுமுறை ஏமாற்றத்தை தான் அளித்திருக்கும். அந்த ஏமாற்றம் தந்த ஆற்றாமை தான் அவர்களை இப்படி எழுதவும், பேசவும் வைக்கிறது.

Saturday, April 05, 2008

மூன்றாம் பாலுக்கு அங்கிகாரம் ‍ கலைஞர் அரசின் சாதனை

தொலைக்காட்சியில் திருநங்கையான சக பதிவர் ஒருவர் பங்கு பெற்ற நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள். அவர் தன் அனுபவத்தை விவரிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக கண்கள் குளமாகி இருக்கும். இப்படி சமூகத்தில் உரிய அங்கிகாரம் கிடைக்காமல் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முறையான அங்கிகாரத்தை தலைவர் கலைஞர் அவர்களின் அரசு அளித்துள்ளது

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் தால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் பால் இனத்தவருக்கு என் குடும்ப அட்டையில் மேலும் புதிதாக ஒரு பால் சேர்க்கப்பட்டு அதை சில திருநங்கைகளும் பெற்று இருக்கிறார்கள். இந்த புரட்சியின் மூலம் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த நாற்பது ஆயிரம் பேர் பயனடைவர். குடும்ப அட்டை போல் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் இதே போல் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். வரும் காலத்தில் அப்படி மாற்றம் நிகழுமானால் அதன் முழு பெருமையும் தலைவர் கலைஞர் அவர்களையே சேரும்

பாலம் கட்டுவது பற்றி பேசினால் தலைவர் கலைஞர் அவர்கள் விளம்பரம் தேடுகிறார் என்று அக்கறைப்படும் பத்திரிக்கைகளே இதே போல் சத்தம் இல்லாமல் தலைவர் அவர்கள் செய்து வரும் சாதனை பற்றி நீங்கள் என்றாவது மக்களிடம் கொண்டு சென்றது உண்டா. தலைவர் அவர்களிடம் குறை காண வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா

Thursday, April 03, 2008

ராமர் போய் ஒகேனக்கல்

பாரதீய ஜனதா என்று ஒரு கேவலமான கட்சி. இவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமானால் ஒன்று எதையாவது இடிக்க வேண்டும், அல்லது கலவரம் வந்து சில‌ ஆயிரம் பேர் மாள வேண்டும், உயிர் துறப்பவர்கள் இந்துவா, முஸ்லிமா என்பது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. உருப்படியான ஒரு பிரச்சினையை மக்களிடம் எடுத்து செல்ல துப்பில்லாத இந்த இரத்தம் குடிக்கும் கட்சி இப்போது கர்நாடகாவில் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் மொழி வெறி

கர்நாட்காவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுவிட்ட பாரதீய ஜனதாவுக்கு சுழல் முறை ஆட்சி என்ற திட்டம் தோல்வி அடைந்ததும் அதன் அதிகார வெறி முற்றிவிட்டது போலும். மே மாதம் தேர்தல் என்ற நிலையில் இருக்கும் கர்டநாடகாவில் தன் இரத்த தாகத்தை தீர்த்துக் கொள்ள ஓகேனக்கல் பிரச்சினை வரப்பிரசாதமாக் கிடைத்து இருக்கிறது. மனித பிணங்களை ஓட்டுகளாக மாற்றுவதில் தான் இவர்கள் மன்னர்கள் ஆயிற்றே

தமிழ்நாட்டில் வந்து ராமர் பாலம் என்ற பெயரில் ஊளையிட்ட இந்த நரிக‌ளின் வால்க‌ள் ஒட்ட நறுக்கப்பட்டன. இப்போது கர்நாட‌காவில் ராமர் மற்றும் இந்துத்வா வெறி செல்லாது என்று அறிந்து கொண்டு மொழி வெறியை வளர்ப்பதில் முன் நிற்கின்றனர். மொத்தத்தில் இவர்களுக்கு என்றுமே மக்களை பிளவுபடுத்தி அதில் இன்பம் காண்பது இந்த பண்டாரங்களுக்கு தான் வழக்கமாகிவிட்டது

Monday, March 31, 2008

கன்னட வெறியர்கள் வெறியாட்டம் போடுமளவுக்கு கலைஞர் என்னதான் பேசினார்? - கலைஞரின் முழுப்பேச்சு!

நேற்று சென்னையில் பாலம் திறப்புவிழாவில் கலைஞர் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம் பற்றி பேசியதால் இன்று கன்னடவெறியர்கள் கர்நாடகாவில் வெறியாட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறார்களாம். தமிழ் திரைப்படங்கள் ஓடும் தியேட்டர்களை தாக்கி வருகிறார்களாம். வன்முறையை தூண்டக்கூடிய விதத்திலே அவருடைய பேச்சு இருந்தது என்று தமிழ் விரோத, திராவிட விரோத சக்திகள் விஷமப் பிரச்சாரம் செய்யலாம் என்பதால் கலைஞர் நேற்றைய விழாவிலே பேசிய முழு உரையை கீழே தருகிறோம்.

”இரண்டு பெயர்கள் கொண்ட சாலைகள் - இந்தப் பகுதியை இணைக்கின்ற பாலம் கட்டப்பட்டு அதனுடைய திறப்பு விழா நிகழ்ச்சியை இன்று நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இது பாலங்களின் இணைப்பு மாத்திரமல்ல - உஸ்மான் சாலை, மகாலிங்கபுரம் சாலை என்ற பெயர்களால் இரண்டு சமயங்களின் இணைப்பாகவும் இன்றைக்கு விளங்குகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த இணைப்பு தான் நாட்டிலே வர வேண்டுமென்று முற்போக்கு எண்ணம் கொண்ட கட்சிகள் அனைத்தும் விரும்புகின்றன. அந்த எண்ணம் படைத்த பெரியவர்கள், இளைஞர்கள் அனைவரும் விழைகின்றார்கள் - அந்தச் சமயங்கள் பாலங்களால் இணைக்கப்பட வேண்டுமென்று. அந்தப் பாலங்கள் தான் ”மேம்பாலம்” எனப்படும்.

அப்படிப்பட்ட பாலங்கள் அமையாவிட்டால், அது மேம்பாலம் அல்ல - மேம்பாலம் என்பது மேலான பாலம், மேன்மையான பாலம், மேம்படு தல் என்றால் மேன்மை அடைதல் என்று பொருள். எப்பொழுது பாலங்களுக்கு மேன்மை கிடைக்கின்றது, சிறப்பு கிடைக்கின்றது, பெருமை கிடைக்கின்றது? ஒன்றுபட முடியாத இரு சக்திகளை ஒன்றுபடுத்தி, பாலமாக அமைத்தால் அது தான் மேம்பாலம்.

அந்த மேம்பாலம் தமிழகத் திலே மாத்திரமல்ல, இந்தியத் திருநாடு முழுவதும் அமைந்திட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை இந்தப் பாலம் திறப்பு விழாவிலே தெரிவித்துக் கொண்டு என்னைப் போல் நீங்களும் அந்த விருப்பத்தைப் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய அமைச்சர் தம்பி ஸ்டாலின் அவர்கள் மாநகராட்சியின் வாயிலாகப் புரிந்துள்ள சாதனைகளையெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார். தம்பி டி.ஆர். பாலு அவர்கள் இந்தியத் திருநாட்டில் அமைத்து வருகின்ற சாலைகளைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார், தொடுத்துச் சொன்னார். இவைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய நாம் ஆற்றிய பணிகள், ஆற்ற வேண்டிய பணிகள், ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணிகள் - எதிர்காலத்திலே ஆற்றப் போகின்ற பணிகள் - அத்தகைய பணிகளுக்கு நம்மை இன்றைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அது நமக்குச் சார்புடைய பணி அல்ல, மக்களுடைய பணி, மக்களுக்காக நாம் ஆற்றுகின்ற பணி.

இங்கே கட்டப்படுகின்ற பாலம் யாருக்காக? நாம் மாத்திரமே நடந்து செல்வதற்காகவா? அல்லது வாகனங்களிலே ஏறிச் செல் வதற்காகவா? அல்ல. நம்மை எந்த மக்கள் தேர்ந்தெடுத்து பொறுப்புக்கு அனுப்பினார்களோ, அந்த மக்களுக்காக அவர்கள் எளிதாகப் பயணம் செய்ய - அவர்களுடைய பயணங்கள் கடுமையானதாக இல்லாமல் இருக்க - நாம் ஆற்றுகின்ற பணியின் ஒரு துளி தான் இங்கே கட்டப்பட்டு, இன்று திறக்கப் பட்டுள்ள இந்த மேம்பாலம் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேயர் அவர்களும், முன்னாள் மேயராகவும், இந்நாள் தமிழக அமைச்சர்களில் ஒருவராகவும் விளங்குகின்ற தம்பி ஸ்டாலின் தான் மேயராக இருந்த காலத்திலே உருவாக்கிய ஒன்பது பாலங்கள் - அந்தப் பாலங்கள் கட்டுவதற்காகப் போடப்பட்ட மதிப்பீடு - கட்டி முடிக்கப்பட்ட பிறகு பார்த்த கணக்கில் மிச்சப்பட்ட பணம் - ஏறத்தாழ முப்பது கோடி ரூபாய் (அதைக் கூட 30 லட்சம் என்று வாய் தவறி ஆர்வத்தின் காரணமாகச் சொன்னார்) - நான் சரியாக கணக்கு வைத்திருக்கிறேன். (கைதட்டல்) அப்படி வீணாகப் பணத்தைச் செலவழிக்காமல், சிக்கனமாகச் செலவழித்து - செலவழிக்கப் படுகின்ற பணம் நல்ல காரியத்திற்கு நல்ல நிலையோடு ஒழுங்கான கணக்கோடு செலவழிக்கப்பட்டு, அப்படி உருவான பாலங்கள் தான் பத்து என்று திட்டமிட்டு முடிவுற்ற ஒன்பது பாலங்கள்.

அந்த 9 பாலங்களைக் கட்டி யதின் விளைவு என்ன என்பதை தம்பி ஸ்டாலின் இங்கே கோடிட்டுக் காட்டினார். கோடிட்டுத் தான் காட்ட முடியும். அந்தப் பாலங்கள் கட்டியதால் என் மீது விழுந்த ரத்தக் கோடுகள் எத்தனை என்பதை உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருக்க மாட்டீர்கள். அத்தகைய ரத்தக் கோடுகளை நானும், தம்பி பாலுவும், தம்பி ஸ்டாலினும், தம்பி மாறனும் அந்த நாளில் ஏற்றுக் கொண்டு, பரவாயில்லை, மக்கள் நேரடியாகத் தர வேண்டிய பரிசை மக்களுக்காக ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்கிற சிலர் தந்திருக் கிறார்கள் என்று நன்றி தெரிவித்தோமே தவிர, இன்றைக்கும் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அவர்களைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல், அவர்களுக்கு பரிசளித்துக் கொண்டிருக்கிறோமே அல்லாமல், இது தான் அண்ணா வழி என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறல்ல.

தி.மு. கழக அரசு கடந்த இரண்டாண்டு காலத்திற்கு மேலாக - இப்போது ஐந்தாவது முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டாண்டு காலத்திலே ஆற்றியிருக்கின்ற பணிகள் - அளித்த வாக்குறுதிகள் - அவைகள் நிறைவேற்றப்பட்ட பாங்கு, இதையெல்லாம் நான் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள். என்னென்ன பணிகளை ஆற்றுவோம் என்று சொல்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, இந்தியாவினுடைய பொருளாதார மேதை என்று சொல்லப்படுகிறவர்களில் ஒருவரான நண்பர் ப. சிதம்பரம் அவர்கள் இது தான் இந்தத் தேர்தலுக்குக் கதாநாயகன் - தி.மு.க. தேர்தல் அறிக்கை - என்று அன்றைக்குச் சொன்னார்.

இப்போது இரண்டாண்டுகளில், அந்தத் தேர்தல் அறிக்கை யிலே என்னென்ன அறிவித்தோமோ, அவைகளை யெல்லாம் வாய்மையோடு நிறைவேற்றி மக்கள் புன்னகையோடு அவைகளை வரவேற்று - நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் - அதே சிதம்பரம் அவர்கள் டெல்லியிலே, ஏன் அவருடைய சொந்த ஊரான காரைக்குடியிலே ஒரு விழாவிலே பேசும்போது, தமிழ்நாட்டு வரவு செலவுத் திட்டம், மற்ற மாநிலங் களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடிய திட்டம் என்று சொன்னார்.

ஏதோ அன்றைக்கு தேர்தலுக்காக இது தான் கதாநாயகன் என்று சொன்னார் என்று யாரும் கருதக் கூடாது, தேர்தல் முடிந்து இரண்டாண்டிற்குப் பிறகு கூட, அவைகளை யெல்லாம் நிறைவேற்றி வருகின்ற ஆட்சி, தி.மு. கழக ஆட்சி என்பதை நெஞ்சு நிமிர்ந்து பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால், இது தனிப்பட்ட ஒரு கருணாநிதியினுடைய - தனிப்பட்ட ஒரு தி.மு.க. உறுப்பினருடைய திறமை அல்ல. உங்களுடைய எதிர்பார்ப்பு, உங்களுடைய வலிமை, உங்களுடைய நம்பிக்கை - இவைகளுக்குக் கிடைத்த வெற்றி தான் இது என்று சொன்னால் - இதை சுருக்கமாக அப்படியே சொல்ல வேண்டுமேயானால் ”உங்களுடைய வெற்றி” - நீங்கள் கண்ட வெற்றி - நீங்கள் கண்ட பயன் இது என்று சொன்னால் அதை யாரும் மறுத்திட இயலாது.

அந்த வெற்றிகளிலே ஒன்றாகத் தான் இங்கே இன்றைக்கு இந்தப் பாலத்தைத் திறந்து வைத்திருக்கிறோம். இது ஒன்றும் நான் ஏற்கனவே கட்டிய முசிறி - குளித்தலை பாலத்தைப் போல அவ்வளவு நீண்ட நெடிய பாலம் அல்ல. திருமானூரிலே காவேரியிலே கட்டிய பாலத்தைப் போல அவ்வளவு பெரிய பாலம் அல்ல. ஆனால் அதை விட அதிகம் பயன் தரக் கூடிய பாலமாக இந்தப் பாலம் அமைந்திருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையிலேயே ஒரு அனுபவம் உண்டு - இந்தப் பாலத்தைப் பார்க்கும்போது அது நினைவுக்கு வருகிறது. ஸ்டாலின் குழந்தையாக இருந்த போது, நாங்கள் இங்கே ஜக்கரியா காலனி என்ற பகுதியிலே என்னுடைய குடும்பத்தோடு குடியிருந்தோம். அப்போது ஒரு நாள் ஸ்டாலினுக்கு பசியோ என்னவோ தெரியவில்லை - ஊக்கை எடுத்து விழுங்கி விட்டான். வயிற்றுக்குள் சென்ற ஊக்கு தலைகீழாகச் செல்லாமல் நேரடியாகச் சென்று எந்த இடத்திலே அது குத்தி நிற்குமோ என்ற அச்சத்தை எங்களுக்கெல்லாம் ஏற்படுத்தி, உடனடியாக டாக்டருக்கு போன் செய்து, உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாருங்கள் என்றார்கள்.

நாங்கள் இந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு டாக்டர் வீட்டிற்குப் புறப்பட்டோம். அப்போது இங்கே பல பேருக்குத் தெரியாது. நானும் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களும், மற்றவர்களும் இந்தவழியாக ஏ.வி.எம். ஸ்டுடியோ விற்கு வரும்போதெல்லாம் எங்களைத் தடுத்து நிறுத்துகின்ற ஒரு ரயில்வே கேட் உண்டு. அந்தக் கேட்டைத் தாண்டித் தான் கோடம்பாக்கம் செல்ல வேண்டும். அந்தக் கேட் பூட்டப்பட்டு விட்டால் மீண்டும் அரை மணி நேரம் ஆகும் திறப்பதற்கு. அது வரையில் அந்தப் பக்கம் வந்தவர்கள் அப்படியே அங்கே நிற்க வேண்டும் - இந்தப் பக்கம் வந்தவர்களும் இங்கேயே நிற்க வேண்டும்.

நாங்கள் ஸ்டாலினைத் தூக்கிக் கொண்டு - வயிற்றிலே உள்ள ஊக்கை எடுப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து எடுப்பதா, அல்லது மருந்து கொடுத்து எடுப்பதா, எப்படி எடுப்பது என்ற கிலேசத்தோடு வந்து கொண்டிருக்கும்போது, தொண்டை வரையிலே சென்ற ஊக்கு, இங்கே ரயில்வே கேட் மூடிக் கிடந்த காரணத்தால், நாங்கள் உடனடியாக இந்த ரயில்வே லைனைத் தாண்ட முடியாமல் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்ட காரணத்தால், தொண்டையிலே இருந்த ஊக்கு வயிற்றுக்குள்ளேயே போய் விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டார் விழித்தோம்.

மிகுந்த வேதனைக்காளானோம். அதற்குப் பிறகு கேட் திறந்தது. இந்த அரை மணி நேர தாமதத்தால் தொண்டையிலிருந்து சுலபமாக வெளியே எடுக்கப்பட வேண்டிய ஊக்கு வயிற்றுக்குள்ளும் போய் விட்டது. ஆனால் வருகிற ஆபத்துக்கள் எனக்கானாலும், அல்லது தி.மு.க. விலே உள்ள எந்தத் தோழருக்கானாலும், ஸ்டாலினைப் போன்ற தி.மு.கழகத்தின் தொண்டனுக்கு ஆளானாலும் யாருக்கு ஆபத்து என்றாலும் சுபலமாகப் போய் விடும் என்பதற்கு அடையாளமாக மறுநாள் சாப்பிட்ட வாழைப் பழத்தோடு, ஊக்கும் வெளிவந்து விட்டது. அதனால் ஸ்டாலினும் தப்பித்துக் கொண்டான். வாழைப்பழ வைத்தியத்திலேயே அவன் வாழ பழம் என்ற அந்தப் பெயரை, அந்தப் பழம் பெற்றது. (கைதட்டல்)

இதைச் சொல்வதற்குக் காரணம் - அவ்வளவு நெருக்கடியான இடம் - போக்குவரத்து நெரிசல் - போக்குவரத்து தடை - இடையூறு. அந்த இடையூறைக் கடந்து செல்ல முடியாமல் மக்கள் அங்குமிங்கும் தவித்த காலக் கட்டம். அப்படி இருந்த நிலை மாறி இன்று ஜக்கரியா காலனி ஆனாலும் சரி, தியாகராயநகர் ஆனாலும் சரி, உஸ்மான் சாலை ஆனாலும் சரி, மகாலிங்க புரம் சாலை ஆனாலும் சரி எல்லாம் ஒன்றையொன்று கலக்கின்ற வகையிலே - ஒன்றையொன்று சந்திக்கின்ற வகையிலே இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதென்றால் நாம் கடந்த காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறதல்லவா?

என்ன செய்வது? என்னுடைய பழக்கம், கடந்த காலத்தை எண்ணிப் பார்ப்பது. பல பேர் கடந்த காலத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு வருவதில்லை. அவர்கள் என்ன ஜக்கரியா காலனியிலா தங்க வேண்டியிருந்தது? நான் அல்லவா ஜக்கரியா காலனியிலே தங்கியிருந்தேன். எனவே அந்தக் காலத்திலே இருந்த கஷ்டங்கள் இன்றைக்கு நீங்கின என்றால், அதற்குக் காரணம் எது சொன்னாலும் அந்தக் காரணங்களிலே ஒன்றாக இந்தப் பாலமும் விளங்கு கிறது என்பதை யாரும் மறுத்திட முடியாது. அத்தகைய ஒரு பாலத்தை இங்கே உருவாக்கியிருக்கின்ற மாநகராட்சி மன்றத்தையும், மேயரையும், அதற்கு உறுதுணையாக இருந்த இந்த அரசின் சுறுசுறுப்பான அமைச்சர் தம்பி ஸ்டாலினையும் (பலத்த கைதட்டல்) நான் பாராட்ட, வாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இந்தப் பகுதியிலே உள்ள மக்களுக்கு ஒரு வார்த்தை - ஒரு வேண்டுகோள் - பாலத்தை நல்ல முறையிலே பயன்படுத்துங்கள் - பரவாயில்லை, பாலம் நன்றாக இருக்கிறது, மேலே மண்டபம் போல் விளங்கு கிறது, இங்கே கடை வைக்கலாம் என்று ஆரம்பித்து விடாதீர்கள். இதிலே போஸ்டர் ஒட்டலாம், இங்கே குடி கூட - குடி என்றால் குடும்பம் கூட நடத்தலாம் என்று ஆரம்பித்து விடாதீர்கள். அதற்கெல்லாம் இடம் கிடைக்கும்.

ஒவ்வொரு விழாவிலும் நான் பார்த்திருக்கிறேன். முரசொலி அலுவலகத்திற்கு முன்னால் உள்ள பாலத்தில் எத்தனை கடைகள்? எத்தனை குடும்பங்கள்? எத்தனை பேர் அங்கே வாழ்கிறார்கள் என்பதை யெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அப்படியெல்லாம் செய்தால், நீங்கள் உங்களுடைய பொருளை, உங்களுடைய உடைமையை நீங்களே வீணாக்கிக் கொள்கிறீர்கள் என்று அதற்குப் பொருள். நமக்குள்ள கடமையை மறந்து விடக் கூடாது.

நேற்று பாருங்கள் - டி.வி. யிலே காட்டினார்கள். கடற்கரையிலே ஒரு நாய் - அதற்கு ஜூலி என்று பெயரெல்லாம் வைத்திருக்கிறார்கள். அந்த நாய் என்ன செய்கிறது? கடலோரம் செல்கின்ற குழந்தைகள், கடல் அலையின் பக்கம் எந்தக் குழந்தை நின்றாலும், அந்த நாய் ஓடிச் சென்று அந்தக் குழந்தைகளில் சட்டையைப் பிடித்திழுத்து, தண்ணீருக்குள் சென்றால் விழுந்து அமுங்கி விடுவாய், என்ற எச்சரிக்கையை ஊமை மொழியிலே சொல்லி, அந்தக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கரையிலே விட்டு விட்டுத் தான் போகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்து பதினைந்து குழந்தைகளை அது காப்பாற்றுகின்ற - அந்தப் பணியை அந்த நாய் செய்த போது நான் எண்ணிக் கொண்டேன். ஒரு நாய்க்கு உள்ள அறிவு நம்முடைய மனிதர்களுக்கு வரவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். அது வர வேண்டுமா? வேண்டாமா? வர வேண்டும்.

நாமும் மற்ற மனிதர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இருக்கின்ற சுற்றுச்சூழல் அபாயங்கள் என்ன என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களை யெல்லாம் காப்பாற்றுகின்ற அந்தப் பண்பை, பண்பாட்டை, அந்த அன்பை, அந்தக் கருணைச் செயலை நாம் செய்தாக வேண்டும். நாம் மக்கள் பகுதியிலே இருப்பவர்கள் தான். நாம் மக்களிலே ஒரு பிரிவு தான். மக்களுக்காக நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியவர்கள் தான். அதை மறந்து விடக் கூடாது. அப்போது தான் எல்லோரும் சேர்ந்தால் தான் என்ன தான் மேயர் பணியாற்றினாலும், என்ன தான் செயலாளர்கள் பணியாற்றினாலும், என்ன தான் அமைச்சர் பெருமக்கள் பணியாற்றினாலும், என்ன தான் காவல் துறை யினர் பணியாற்றினாலும், என்ன தான் நானே கூடப் பணியாற்றினாலும் நீங்கள் எல்லாம் ஒத்துழைக்கா விட்டால், அந்த ஒத்துழைப்பு கிடைக்கா விட்டால் பணி முழுமையாகாது.

அந்தப் பணியை முழுமையாக ஆக்க வேண்டுமேயானால், இதையே நாம் செய்ய வேண்டும். நமக்கென்ன கவலை என்று இராமல் எல்லோருக்கும் கவலை உண்டு, எல்லோருக்கும் இதிலே பொறுப்பு உண்டு - ஒரு நாய் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படும் போது, மனிதர்கள் நம்முடைய பொறுப்பை உணர வேண்டாமா என்று தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று உங்களை யெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னொன்று - இங்கே இந்தப் பாலம் கட்டிய இந்த நிலையைப் பார்க்கின்றேன். இதை கர்நாடகா அனுமதிக்கிறதா என்று எனக்குத் தெரிய வில்லை. ஏனென்றால் சென்னையிலே கட்டுகின்ற பாலத்தை கட்டாதே என்று சொல்லுகின்ற அந்தக் குணத்தை கர்நாடகா பெற்றிருக்கும் என்றே கருதுகின்றேன். கர்நாடகத்திலே இருக்கின்ற ஒரு ”பிரகஸ்பதி” - ஒரு கட்சியின் தலைவர் - ஜனதா கட்சியின் தலைவர் - அவர் தேர்தலிலே நிற்க வாக்குகளைச் சேகரிக்க வேண்டுமென்பதற்காக ஒகேனக்கல் திட்டத்தை அங்கே கட்டக் கூடாது - ஒகேனக்கல் தங்களுக்குச் சொந்தம் என்று சொல்கிறார்.

அதற்கு தம்பி துரைமுருகனை விட்டே நான் பதில் சொல்ல முடியும். இருந்தாலும் நானே பதில் சொல்கிறேன் என்றால், தமிழ் நாட்டு மக்களுடைய சார்பாக ஆறு கோடி மக்களின் சார்பாக மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை, கேள்விக் குறியாக ஆகியிருக்கிறதே, இப்படி ஆகலாமா என்று கேட்பவர்களின் சார்பாக நான் இந்தக் கேள்வியை கர்நாடக மாநிலத்திலே உள்ளவர்களுக்கு அல்ல - இந்தியாவை வழி நடத்துகின்ற அரசிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

கடந்த நான்கைந்து நாட்களாக தமிழகத்தின் தலைவர்கள் - ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் கர்நாடகத்தினுடைய இந்த வேடிக்கைக் கூற்றை எதிர்த்து அறிக்கைகள் விடுகிறார்கள், ஆர்ப்பாட்டங் களை நடத்துகிறார்கள், அணி வகுத்துச் செல்கிறார்கள். அவர்களை யெல்லாம் நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், அவர்களின் தமிழ் உணர்வை நான் போற்றுகிறேன், புகழ்கிறேன். அதே நேரத்திலே நான் கர்நாடகத்திலே உள்ளவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். எதை நீங்கள் தமிழகத்தார் உரிமையோடு செய்ய இது வரை வழி விட்டீர்கள்?

காவேரியிலே இடைஞ்சல், அதைப் போலவே இன்றைக்கு ஒகேனக்கல் குடி தண்ணீர் - ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் எல்லாம் போடப்பட்டு, கர்நாடக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்று, மத்திய சர்க்காரும் சம்மதம் கொடுத்து, நிறைவேற்றப்படுகின்ற திட்டம் ஒகேனக்கல் குடிநீர் திட்டம். எங்களுக்கு குடகிலே இருந்து வருகின்ற தண்ணீர் தான் இல்லை என்றால், குடிநீருக்காக பயன் தருகின்ற ஒகேனக்கல் தண்ணீரும் கிடையாதென்று சொன்னால் என்ன ஆவது?

இன்று மாலையிலே பத்திரிகைகளில் எல்லாம் கொட்டையெழுத்துச் செய்திகள். தமிழ்நாட்டு பஸ்களை யெல்லாம் உடைப்போம், உள்ளே விட மாட்டோம், ஒகேனக்கல் திட்டத்தை நினறைவேற்றினால் தமிழ்நாட்டு பஸ்களை எல்லாம் உடைப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். பஸ்களை அல்ல, எங்கள் எலும்புகளை உடைத்தாலும் சரி, நாங்கள் அதற்காக கவலைப்பட போவதில்லை, நிச்சயமாக ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதை மாத்திரம் நான் இது தான் அதைச் சொல்லக்கூடிய சரியான சூழ்நிலை, வாய்ப்பு என்ற முறையிலே எடுத்துச் சொல்லி, இந்தப் பாலம் கர்நாடகத்திலே உள்ள காங்கிரஸ் கட்சி அல்லாத - கர்நாடகத்திலே உள்ள அ.தி.மு.க. அல்லாத - கர்நாடகத்திலே உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத - மற்றக் கட்சிகளைக் கேட்கிறேன். அந்தக் கட்சிகள் எல்லாம் - தேர்தலிலே நிற்கின்ற ஜனதா கட்சியாக இருந்தாலும், அல்லது அதற்குத் துணை போகின்ற கட்சிகளாக இருந்தாலும், அந்தக் கட்சிகள் எல்லாம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

இதை வைத்து தேர்தலை நடத்துவதென்றால் ஒரு தேசத்திலே ஒரு பகுதியை அழித்து விட்டு, ஒரு பகுதி மக்களை பட்டினி போட்டு விட்டு, அவர்களை தண்ணீரற்றவர்களாக ஆக்கி விட்டு, அவர்களை தாகத்தால் தவிக்க விட்டு விட்டு அவர்களுடைய திட்டங்களை யெல்லாம் சீர்குலைத்து விட்டு நீங்கள் வாழ முடியும் என்று கருதினால், நீங்கள் வாழலாம். ஆனால் இந்தியாவின் ஒற்றுமை வாழாது, இந்தியாவின் பலம் வாழாது. இந்தியாவின் இறையாண்மை வாழாது. அதற்கு வழி வகுக்காதீர்கள் - கர்நாடகத்திலே உள்ள அவசரக்காரர்களே - நான் என்னைப் பொறுத்தவரையிலே பல முறை இப்படிப்பட்ட பிரச்சினைகள் நம்முடைய மாநிலத்திற்கும், பக்கத்து மாநிலத் திற்கும் வந்த போதெல்லாம் பொறுமை காத்திருக்கிறேன்.

கேரளாவிற்கும் நமக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தது உண்டு. அப்போதெல்லாம் இரு மாநில ஒற்றுமை, அங்கு வாழ்வோரும் நாம் தான் - இங்கு வாழும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர்கள் தான் - கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் என்ற இந்த மொழிகளுக்குச் சொந்தக்காரர்கள் எல்லாம் சகோதரர்கள் தான். நமக்குள்ளே சகோதரச் சண்டை வேண்டாம் என்று கருதுகிறவன் நான்.

யாரோ சில சமூக விரோதிகள் இதைப் பெரிதாக ஆக்கி, இதைத் தீப்பற்றச் செய்து விடுவார்கள், அதற்கு இடம் தரக் கூடாது என்று தான் பொறுமையாக இருந்து வருகிறேன். என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையை - மத்திய அரசு உணரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இன்றைக்கு அங்கே சிறு துளியாக இருக்கின்ற இந்தப் பகை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு பொறி பெரும் தீயாக மாறாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் இந்தியாவின் ஒற்றுமையின் பெயரால் கேட் கிறேன், ஒருமைப்பாட்டின் பெயரால் கேட்கிறேன், இறையாண்மையின் பெயரால் கேட்கிறேன். வெறும் இந்தத் தண்ணீருக்காக மாத்திரமல்ல, கண்ணீர் விட்டுக் கேட்கிறேன் - இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், இந்தியாவை பலகீனப்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்து இந்த அளவோடு இந்த விழாவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.

Thursday, March 27, 2008

திரு மு.க. முத்து பேட்டி

20 வருடங்களுக்கு பின் சினிமாவில் பாடகராக அவதாரம் எடுத்துள்ள திரு. மு.க.முத்து அவர்கள் மாட்டுத்தாவணி என்ற படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார். பாடல் பாடி முடித்த பின்னர் அவர் கொடுத்த பேட்டி

கேள்வி:- மீண்டும் திரை உலகுக்கு மறு பிரவேசம் செய்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- எல்லாம் ஆண்டவன் செயல்.

கேள்வி:- நீங்கள் பகுத் தறிவு குடும்பத்தை சேர்ந்தவர் அல்லவா? ஆண்டவன் என்று குறிப்பிடு கிறீர்களே?

பதில்:- நான் ஆண்டவன் என்று குறிப்பிட்டது என் தந்தையை. அவரில்லாமல் நானில்லை. அடுத்து இந்த படத்தில் என்னை பாட வைத்த இசையமைப்பாளர் தேவாவுக்கு நன்றி.

கேள்வி:- தொடர்ந்து சினிமாவில் பாடுவீர்களா?

பதில்:- நான் 20 வருடங் களுக்கு முன்பு சினிமாவில் பாடினேன். அதன்பிறகு, இப்போதுதான் பாடியிருக் கிறேன். ஆனால், இடையில் தினமும் பயிற்சி செய்து வந்தேன். என்னை மீண்டும் சினிமாவில் பாட வைத்ததில் முக்கிய பங்கு என் மகன் டாக்டர் அறிவுநிதிக்கு உண்டு. தொடர்ந்து சினிமா வில் பாட முடிவு செய் திருக்கிறேன்.

கேள்வி:- மீண்டும் நடிப் பீர்களா?

பதில்:- சந்தர்ப்பம் கிடைத்தால் நடிப்பேன். டைரக்டர் கே.ராஜேஸ்வர் ‘இந்திர விழா’ என்ற படத்தில் நடிப்பதற்காக என்னை கேட்டிருக்கிறார். யோசித்து சொல்கிறேன் என்று பதில் சொல்லி இருக்கிறேன். அந்தப் படத்தில் எனக்கு கதாநாயகனுக்கு அப்பா வேடம்.

கேள்வி:- சினிமாவில் மீண்டும் பாடுவதற்கு முன்பு உங்கள் தந்தையிடம் வாழ்த் துப் பெற்றீர்களா?

பதில்:- அப்பாவுடன் போனில் பேசி வாழ்த்துப் பெற் றேன். என்னை வளர்த்த சண்முகசுந்தரம்மாளிடம் நேரில் வாழ்த்துப் பெற்றேன்.

கேள்வி:- இன்னும் உங்கள் குரல்வளம் ‘கணீர்’ என்று இருக்கிறதே?

பதில்:- என் மாமா சிதம்பரம் ஜெயராமன் மிகப் பெரிய பாடகர். அந்த ரத்த தொடர்பு எனக்கு இருக்கு மல்லவா?

Monday, March 24, 2008

கலைஞர் அரசுக்கு பூமாலை!
























அரும்பாடு பட்டு செய்தித்துண்டுகளை தொகுத்தவர் : தோழர் ஸ்டாலின்!

Thursday, March 20, 2008

தமிழக பட்ஜெட் 2008 - சிறப்பு அம்சங்கள்

தமிழக அரசின் 2008-2009-ம் ஆண்டுக்கான ‌நி‌‌தி ‌நிலை அ‌றி‌க்கையை ‌நி‌தி அமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் இ‌ன்று ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் தாக்கல் செய்தா‌ர். அத‌ன் ‌சிற‌ப்ப‌‌ம்ச‌‌ம் வருமாறு:

* பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு.

* தைத் திங்கள் முதல் நாளை தமி‌ழ்‌ப் புத்தாண்டென கொண்டாட முடிவு.

* சமத்துவக் கொள்கையை நிலைநாட்ட பெரியார் சிலையுடன் கூடிய சமத்துவபுரங்கள்

* தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை வரம்பின்றி வரி விலக்கு.

* சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு.

* பன், ரஸ்க், சோயா எண்ணெ‌ண், வெல்லம் ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு - மற்றும் பல பொருட் களுக்கு வரி குறைப்பு

* பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - 25 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 ‌விழு‌க்கா‌‌ட்டை அரசே வழங்கும்.

* கூட்டுறவு வங்கிகள் மூலம் 1500 கோடி புதிய பயிர்க்கடன்.

* கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டி ரூ.4 ஆகக் குறைப்பு.

* சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்

* திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள்

* புதிய திருப்பூர் மாவட்டம் உதயம்

* புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன்னமராவதி புதிய வருவா‌ய் வட்டங்கள்

* திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள்- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம்.

* வேலூர் நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்

* 3500 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்படும்

* ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் - ரூ.15,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு.

* ரூ.6000 மகப்பேறு நிதி உதவி பெற இனி வருமான சான்றித‌ழ் தேவையில்லை.

* சிறு வணிகம் செ‌ய்யும் மகளிர் உட்பட 2 இலட்சம் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50 கோடி கடன்.

* கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூ.15 கோடி கடன் அறவே ரத்து.

* ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூ.5 கோடி அறவே தள்ளுபடி.

* கேபிள் டிவி நடத்துவோர் மீதான கேளிக்கை வரி ரத்து - ஏற்கனவே உள்ள நிலுவை ரூ.16 கோடி முழுவதும் தள்ளுபடி

* பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவா‌ய், நடுத்தர வருவா‌ய், உயர் வருவா‌ய் பிரிவினர் கடனைத் திருப்பி செலுத்தினால் அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி
செ‌ய்யப்படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி.

* 50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து

* அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்புக் கட்டணம் ரத்து

* விசைத்தறி நெசவாளர்களுக்கு தனி நல வாரியம்

* புத்தகப் பதிப்புத் துறையில் பணிபுரிவோருக்கு ஒரு தனி நல வாரியம்

* கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு தனி நல வாரியம்.

* நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம்

* அரவாணிகள் நல வாரியம் - மற்றும் வேலை வா‌ய்ப்பு பயிற்சி.

* அருந்ததியர் உள் ஒதுக்கீடு - பரிந்துரை செ‌ய்ய நீதிப‌தி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு நியமனம்

* விபத்தின்றி ஓட்டும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசு.

* கழிவு நீர்க் குழா‌ய்களில் தூ‌ய்மைப்பணி புரிவோருக்கு பாதுகாப்பு உடைகள், இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனை

* கழிவு நீர் குழா‌ய்களில் இறங்கி பணிபுரிவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள்.

* 27 தமி‌ழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் குடும்பங்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

* தமிழகத்தின் சிறப்புகளை ஒருங்கே சித்தரிக்கும் “கையளவில் தமிழகம்” கவின் கலைக் கூட‌ம்

* சின்னத்திரை கலைஞர்களுக்கு நல நிதியம் - ஒரு கோடி ரூபா‌ய் நிதி ஒதுக்கீடு.

* ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஓர் உடற்பயிற்சி நிலையம்.

* தமி‌ழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் 1000 மாணவ- மாணவியர்களுக்கு கணினி பரிசு

* சமுதாயக் கல்லூரிகளில் ஏழை மாணவ மாணவியருக்கு ரூ.1000 உதவித்தொகை

* எயிட்ஸ் நோயினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க அரசின் சார்பில் அறக்கட்டளை - ரூ.5 கோடி ஒதுக்கீடு

* 5440 கிராமங்களில் இணைய வசதிகளுடன் கூடிய பொதுச்சேவை மையங்கள் - அங்கே அரசு சான்றித‌ழ்கள், விண்ணப்பங்கள் பெறவும், கட்டணங்கள் செலுத்தவும் வசதி

* மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான நவீன மீன்பிடி தொழில்நுட்பப் பயிற்சி மையம் அமைக்கப்படும்

* குளச்சலில் புதிய மீன்பிடி துறைமுகம்.

* வேலூர் நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

* குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தரும் புதிய செம்மை நெல் சாகுபடி 18.75 லட்சம் ஏக்கரில் அறிமுகம்.

* அனைத்து மாவட்டங்களுக்கும் துல்லிய பண்ணை முறை விவசாயம் விரிவாக்கம்.

* விவசாயிகள் நடவு, அறுவடை இயந்திரங்கள் வாங்க 25 சதவிகித மானியம்.

* இந்த ஆண்டிலிருந்து பயறுவகைகளை அரசே கொள்முதல் செ‌ய்யும்.

* ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பத்தாயிரம் விவசாயிகள் சுயஉதவிக் குழுக்கள் - ரூ.10 கோடி சுழல்நிதியாக அரசு நிதியுதவி

* ரூ.150 கோடியில் கல்லணைக் கால்வா‌ய் மேம்பாட்டுத் திட்டம்.

* ரூ.12 கோடியில் காளிங்கராயன் கால்வா‌ய் மேம்பாட்டுத் திட்டம்.

* காவிரியுடன் மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளான - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு -- வைகை - குண்டாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டம்.

* ரூ.369 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்.

* ரூ.550 கோடி செலவில் 48,500 தடுப்பணைகள், ஊருணிகள் அமைக்கும் பெருந்திட்டம்.

* ரூ.12 கோடியில் மதுரை வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* ரூ.211 கோடி மதிப்பீட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - ரூ.2 இலட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.

* அரசு அலுவலர்களுக்கு 47 சதவீதமாக 1.1.2008 முதல் அகவிலைப்படி உயர்வு.

* ஓ‌ய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவு ஈட்டுத் தொகை ரூ.50,000லிருந்து ரூபா‌ய் ஒரு இலட்சமாக உயர்வு.

* 10,000 உயர் கலப்பின கறவைமாடுகளை 5000 பெண்களுக்கு வழங்கும் திட்டம்.

* அனைத்து காவல் நிலையங்களுக்கும் இணைய வசதி.

* காவ‌ல்துறை ஆணைய‌த்‌தி‌ன் பரிந்துரைகள் ஆ‌ய்வு செ‌ய்யப்பட்டு, ஆவன செ‌ய்யப்படும்

* ரூ.100 கோடியில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்படும்.

* புதிய சட்டமன்ற வளாகம் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.75 கோடி ஒதுக்கீடு

* 100 புதிய அரசு உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* 100 புதிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* 450 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.312 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

* அனைவருக்கும் இடைநிலைக் கல்வி - புதிய திட்டம் - ரூ.200 கோடி ஒதுக்கீடு

* 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணித ஆ‌ய்வகங்கள் -ஆ‌‌ய்வக மற்றும் அறிவியல் சாதனங்கள்

* 500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொழி ஆ‌ய்வகங்கள்

* 100 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் நூலக வசதிகள்

* 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 606 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 2,200 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் - ரூ.71 கோடி ஒதுக்கீடு

* அரசு கல்லூரிகளில் 500 கூடுதல் வகுப்பறைகள்

* அரசு மகளிர் கல்லூரிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள்

* அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் டிஜிடல் எக்ஸ்ரே கருவிகள்

* வேலூர் மற்றும் தேனியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள்

* தமிழகமெங்கும் ஒரே தொலைபேசி எண் மூலம் அவசர மருத்துவ ஊர்தி சேவை

* 227 அரசு மருத்துவ மனைகளுக்கு கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் நியமனம்

* இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் நடைபெற்று ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக சென்னையில் சிறப்பு மருத்துவ மையம்.

* தொழிலில் பின்தங்கிய பகுதிகளான திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், திருவண்ணாமலை மாவட்டத்தில் செ‌ய்யாறு, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.

* ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் தொழிற்சாலையை ரூ.82 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கும் திட்டம்

* கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் மின்னணு மாவட்ட திட்டம் அறிமுகம்

* 1350 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகள் இருவழித் தடங்களாக மாற்றப்படும்.

* 90 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

* நாகர்கோவில் மற்றும் அரியலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

* ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 5 மாநகராட்சிகள் - 7 நகராட்சிகளில் நகர்புறச் சாலைகள் மேம்பாடு

* போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகரில் அதிவேக உயரச் சாலை

* இந்திரா வீட்டு வசதித் திட்டம் - கான்கிரீட் கூரைகள் அமைக்க தமிழக அரசு வழங்கும் கூடுதல் மானியம் ரூ.12,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு

* தமி‌ழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 22,000 வீடுகள் கட்டப்படும்.

* மேலும் 2521 கிராம ஊராட்சிகளில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம்

* அய‌ல்நாட்டு வா‌ழ் தமிழர்கள் தம் சொந்த ஊர்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓர் அறக்கட்டளை

* மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு.

* ரூ.750 கோடி செலவில் இந்த ஆண்டு, வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்

* 25,000 மகளிர் புதிய சுய உதவிக் குழுக்கள்.

* 1,50,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.150 கோடி சுழல்நிதி.

* மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம்

* தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.500 மாதாந்திர உதவித் தொகை.

* காதுகேளாத குழந்தைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க நிலையிலேயே பயிற்சி அளிக்கும் மையங்கள்.

* அரவாணிகளாக உணர்வோருக்கு இடைக்கால தங்கும் விடு‌தி

* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் நிதி ஆண்டிலிருந்து 4 ‌விழு‌க்காடு வட்டி மானியம்.

* கைத்தறி நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் - நெசவாளர் பங்கையும் அரசே செலுத்தும்.

* காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

* பனைத் தொழிலாளர்களுக்கு இலவசக் கருவிகள்.

* கைவினைஞர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

* ஆதிதிராவிட மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25 புதிய மாணவர் இல்லங்கள்.

* 25 ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்களுக்கு சொந்தக் கட்டடங்கள்.

* 8 புதிய ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளிகள் - 3 புதிய பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உணவுப்படி, மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூ.400 லிருந்து ரூ.450 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.500 லிருந்து ரூ.550 ஆகவும் உயர்வு.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான மாநில அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.50,000 லிருந்து ஒரு இலட்சமாக உயர்வு.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு 25 புதிய இல்லங்கள்- இவர்கள் தங்கி பயிலும் 25 இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள்.

* சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ரூ.40 கோடி கடன் உதவி.

* 350 சத்துணவு மையங்கள் மற்றும் 2000 குழந்தைகள் மையங்கள் நவீனமயம் ஆக்கப்படும் - எரிவாயு இணைப்பு மற்றும் ப்ரஷர் குக்கர்கள் வழங்கப்படும்.

* சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கடலின் அடியில் மீன் அருங்காட்சியகம்.

* 25,000 ஏக்கர் பரப்பில் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டம்.

* அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சங்கங்கள்.

* 2006-07ஆ‌ம் ஆ‌ண்‌டி‌‌ன் மொ‌த்த வருவா‌ய் ரூ.51,505 கோடி

* 2006-07ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் மொ‌த்த செல‌வின‌ம் ரூ.51,421 கோடி

* கட‌ன், மு‌ன்பண‌ம், மூலதன‌ம் ம‌தி‌ப்பு ரூ.9,876 கோடி

* ப‌ற்றா‌க்குறை ரூ.9,792 கோடி

Wednesday, March 19, 2008

மருத்துவர் ராமதாஸ் பயோடேட்டா - நன்றி குமுதம்

பெயர்: மருத்துவர் ராமதாஸ்
வயது: சீட்டுக்காக அலையும் வயதல்ல
தொழில்: கூட்டணி பலத்தில் அரசியல் நடத்துவது
உபதொழில்: டெல்லியில் மகன் கவனித்துக் கொள்கிறார்
நண்பர்கள்: புதியதாய் தேடவேண்டும்
எதிரிகள்: லிஸ்டில் முதலில் கலைஞர்
பிடித்த இடம்: இன்னும் பிடிக்க முடியவில்லை
பிடித்த உடை: வேட்டி சட்டை - மக்களுக்கு, மகனுக்கல்ல
பிடித்த வேலை: கூட்டணியை ஊசலாட்டத்தில் வைத்திருப்பது
விரும்புவது: முதல்வராக
கிடைப்பது: ராஜ்யசபை சீட்டுக்கே திண்டாட்டம்
சமீபத்திய எரிச்சல்: விஜயகாந்தின் வளர்ச்சி
நீண்டகால எரிச்சல்: கலைஞரின் சாமர்த்தியம்
ஒரே பொழுதுபோக்கு: அரசை திட்டுவதும் பாராட்டுவதும்
ஒரே சாதனை: மரம் வெட்டுவதை மறந்து மரம் வளர்ப்பது

Thursday, March 06, 2008

ஞானி என்னும் சகுனி

தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி திரு.ஞானி ஆனந்தவிகடனில் தரம் தாழ்ந்து எழுதிய போதே அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்தேன். அது இப்போது உறுதியாகிவிட்டது. ஆனந்தவிகடனில் இருந்து அடித்துவிரட்டப்பட்ட போதே மனிதருக்கு உரைத்து இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையிம் தரம் தாழ்ந்து போவதில் தன்னைத் தானே அவர் முந்திக் கொள்கிறார்





ஜெ - சசி பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக கலைஞர் மற்றும் மக்கள் தொலைக்காட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லும் ஞானி மேலே உள்ள இரண்டாம் படத்தில் உள்ள நிகழ்ச்சி நடந்த போது அகில இந்திய அளவில் ஊடகங்கள் எல்லாம் இதே போல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுதினாரா. பெண்ணீயத்துக்கு ஆதரவாக செயல்பட்டாரா. இப்போது மட்டும் அவ்வாறு நடந்து கொள்வதற்கு வெறும் துவேசம் தான் காரணமா. தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வு எடுக்க அறிவுரை செய்யும் ஞானி முதலில் அதை தான் பின்பற்றட்டும். அவர் மட்டும் இன்னும் இளைஞரா என்ன?

Tuesday, March 04, 2008

சுஜாதாவும் மனிதநேய காவலர்களும்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்துக்கு முதலில் என் ஆழ்ந்த அனுதாபங்கள். சுஜாதா அவர்களின் மறைவுக்கு தமிழ்மணமே சில மணிநேரம் செயலிழந்து அஞ்சலி செலுத்தியது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தும் பதிவுகள். மனிதநேயம் இன்னும் நிறையவே மீதம் இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே பெருமபலும் எழுதுபவர்கள் தங்கள் சிறுவயதில் சுஜாதா அவர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த பாதிப்பு இன்னும் இருப்பதால் இன்னும் எழுதிக் கொண்டு இருப்பவர்கள்

இந்த அஞ்சலி பதிவுகளுக்கு நடுவே சில விமர்சனப் பதிவுகள். அந்த பதிவுகளுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். எதிர்த்தவர்கள் அனைவருமே தங்களை மனிதநேயக் காவலர்களாக காட்டிக் கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் இங்கே காணப்படும் படத்தை ஒரு கணம் பார்க்கவும்




இந்த படம் மிகவும் பரிச்யமானது தான். இந்த முறை கழகம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியபோது மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டது. உங்களுக்கும் வந்திருக்கும். நம் பதிவுலகின் மனிதநேயக் காவலர்களுக்கும் வந்திருக்கும். தலைவர் கலைஞர் அவர்களை அரசியல் தலைவர் என்கிற ரீதியில் விரும்பாவிட்டாலும் அவரின் வயதை கருத்தில் கொண்டு சிறிய நாகரீகம் கூட கடைப்பிடிக்காதவர்கள் இந்த படத்தை உருவாக்கியவர்கள். இந்த படம் தங்கள் மின்னஞ்சல் பெட்டியில் வந்த போது நம் மனிதநேயக் காவலர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று தங்கள் மனசாட்சியை கொஞ்சம் எழுப்பி கேட்பார்களா. அல்லது இவர்கள் மனிதநேயம் சில வேளைகளில் மட்டும் தான் விழித்துக் கொள்ளுமா?

Wednesday, February 27, 2008

தமிழ் வலைப்பதிவர்களே ஒன்றுபடுங்கள்

கடந்த சில நாட்களாக தமிழ் வலைப்பதிவர்களிடையே நடந்து வரும் மோதல் மோசம் அடைந்து வருவதால் இந்த பதிவை எழுதுகிறேன். இதில் எனக்கு தெரிந்த கருத்துகளை எழுதுகிறேனே தவிர யார் சரி யார் தவறு என்று அல்ல. வலைப்பூக்களின் மூலம் நம்மால் எவ்வளவோ நல்லவை செய்ய முடியும் ஆனால் நம் தமிழ் வலைப்பூவுலகம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாலேயே இந்த பதிவை எழுதுகிறேன்

யார் இந்த டி.பி.சி.டி என்று திரு. கோவியார் அவர்கள் எழுதிய பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன் http://govikannan.blogspot.com/2007/10/tbcd.html

//
பல சமயங்களில் இது தான் தமிழ் வலைப்பதிவுலகின் சாபக்கேடோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவர் எழுத ஆரம்பித்தால் அவர் என்ன எழுதுகிறார் என்பதை மறந்துவிட்டு அவர் யார் என்ன செய்கிறார் என்று அறிய விழைகிறோம். இதனால் தான் தனி மனித தாக்குதல் மலிந்து கிடக்க காணப்படுகிறது தமிழ்ப் பதிவுலகம்

//

நான் பயந்தது போலவே தான் இப்போது நடந்து வருகிறது. பதிவர்கள் கோவியார், குழலி, செந்தழல் மற்றும் ஓசை செல்லா ஆகியோர் மூத்த பதிவர்கள். எனக்கு வலைப்பூ பற்றி அறிமுகம் கிடைக்கும் முன்னரே இவர்கள் எல்லாம் நட்சத்திரங்கள். நான தவறாது படிக்கும் பதிவுகள் இவர்களுடையது. இன்று அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுகளால் அவர்களுடைய எழுத்துக்கள் எல்லாம் புறம் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது

எனக்கும் பதிவர் வட்டம் மொக்கைப் பதிவுகள் போன்றவற்றில் ஈடுபாடு கிடையாது என்றாலும் உடன்பிறப்பு லக்கிலுக் கேட்டுக் கொண்டதால் சில தடவைகள் பத்வர்களுடன் சந்தித்து இருக்கிறேன். என்னுடைய பார்வையில் இவர்கள் எல்லோருமே தங்கள் எழுத்துக்கள் மூலம் எதையோ சாதிக்கப் பிறந்தவர்கள் என்று தான் எண்ணி இருந்தேன். இவர்கள் முட்டிக் கொள்வதால் நமக்கென்ன இன்று என்னால் இருக்க முடியவில்லை

எழுதுபவர்களின் எழுத்தை மறந்துவிட்டு அவர்களின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட வேண்டும். இவர்கள் தங்கள் கருத்துகளால் மோதி தமிழ் பதிவுலகை சுவாரஸ்யமாக ஆக்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சூழலுக்காக ஏங்கிக் கிடக்கும் தமிழ் வாசகன் என்னும் நிலையில் இருந்து இதைக் கேட்டுக் கொள்கிறேன்

Monday, February 25, 2008

செல்வி.ஜெயலலிதாவுக்கு கலைஞர் பிறந்தநாள் வாழ்த்து.

"ஆரியக் குடும்பத்து ஆரணங்கு தான் நான்" என்று
அறை நடுவே அறைகூவல் விடுத்திட்ட அம்மையார்க்கு
அறுபதாம் அகவை வர;
வசந்தம் வந்தது என வாழ்த்துப் பாடி
ஆயிரக்கணக்கில் செலவிட்டு
அவர் சீடகோடி விளம்பரங்கள் செய்திடுங்கால்,
"சூரியக்குடும்பத்து சூழ்ச்சிகள் தாக்காது காத்திடும்
ஈரிலைப் பந்தலென" அவரை வர்ணித்து;
சூரியன் மீது சுள் என்று கோபத்தை உமிழ்கின்றாரே;
என்ன விந்தை?
அண்ணா கண்ட சின்னம் சூரியன் என்பதும்
அதன் பெயரையே டி.வி., க்கு வைத்துள்ளார் என்பதும்
அறியாமல் செய்த தவறா?
அண்ணாவையே மறந்து
அழுக்காறு மிகுந்ததின் விளைவா?
அம்மையே நீவீர்
வாழ்க நன்று;வாழ்க!

Friday, February 22, 2008

வருவான் புதிய பாரதி! - கலைஞர் கவிதை!!

மகளிர் நலனை முன்னிட்டு மலிவுவிலை அரிசி கொடுத்தால் - அதை
மகளிர் சிலரே கூட்டுச்சேர்ந்து கடத்தல் வேட்டை நடத்துவதோ?

தேட்டை போடும் கூட்டமொன்று இந்தத் தேசத்தில் இருக்கலாமா?
தேர்தல் அறிக்கை வாக்குறுதி; திமுக நிறைவேற்றிக் களிக்கும்போது; அதைத்

திருடிப் பிழைத்து திரவியம் குவிப்போர் திசைதிருப்ப முனையலாமா?
தின்னக் கிடைத்த உணவில் மண்ணையள்ளிப் போடுவதுதான் நியாயமாகுமா?

எத்தனை உயிர்கள் வாழ்வதற்குப் பயன்படும் அரிசி
எத்தர்கள் கூட்டம் தின்று ஏப்பமிடுவதற்கோ; அடச்சீ!

அன்பும், கருணையும் தான் அம்மாவும் தாயும்; அன்னையுமென்பார்;
அவர்களே அரிசி கடத்த ஆரம்பித்து விட்டால்;

”அக்ரமச் செயல்களிலேதான் ஆணும் பெண்ணும் சமம்” என்று
அடித்துப்பாட வருவான் புதிய பாரதி!

அதுவரையில் காத்திராமல்
அய்யாமாரே; அம்மாமாரே; -

அரிசி கடத்தல் விட்டொழிப்பீரே;
அல்லால் நல்லோர் பழிப்பாரே!

Tuesday, February 19, 2008

பட்டைய கிளப்புது தலைவர் கணைக்கள்..

சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியிலே தொடங்கப்பட்டதாயிற்றே, அதற்கு கட்டிடம் கட்ட நாம் ஏன் நிதி ஒதுக்க வேண்டுமென்ற அற்ப புத்தியோடு செயல்படாமல் திமுக ஆட்சி நடந்து கொண்டுள்ளது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: 'அய்யகோ! அய்யகோ!' வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்பது, என் சிந்தனையில் தானே முதலில் உதித்தது-அதற்கு இப்போது கருணாநிதி அடிக்கல் நாட்டு விழா நடத்துவதா?' என்று ஜெயலலிதா தலையைப் பிய்த்துக் கொள்கிறாரே!

பதில்: சிந்தனைச் செல்வியே, தலையில் அடித்து அடித்துக் கதறி-அது சிதறி விடப் போகிறது பாவம்! திருவள்ளுவர் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் வரவேற்புரை ஆற்றிய பொதுப்பணி அமைச்சர் தம்பி துரைமுருகன் 'இந்தப் பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சியிலே ஆரம்பிக்கப்பட்டது என்றாலும், இதுவரை பல்கலைக் கழகத்திற்கான கட்டிடம் கட்டப்படவில்லை. இப்போது அந்தப் பல்கலைக்கழகத்திற்காக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது' என்று குறிப்பிட்டதை ஜெயலலிதா ஏனோ வசதியாக மறந்து விட்டார் என்பதுதான் தெரியவில்லை.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தியை நான் நன்கறிவேன். அதற்கு முதல் துணைவேந்தராக ஒரு பெண்மணி அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நியமிக்கப்பட்டார். அவரும் மூன்றாண்டு காலம் பதவியிலே இருந்தார். ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக கட்டிடம் கட்டப்படவில்லை. அது மாத்திரமல்ல.

2005ஆம் ஆண்டு அந்தத் துணைவேந்தரின் பதவிக் காலம் முடிந்த பிறகு, அடுத்த துணைவேந்தரை நியமிப்பதற்காக துணைக் குழுவினைக் கூட, அமைத்து ஆலோசிக்க அதிமுக ஆட்சி அதன் பின்னர் ஒன்பது மாத காலம் பதவியிலே இருந்த போதிலும் எந்த முயற்சியையும் செய்யவில்லை.

திமுக 2006ம் ஆண்டு பதவிக்கு வந்த பிறகு தான் துணைக் குழுவினை உடனடியாக அமைத்து, துணை வேந்தரும் நியமனம் செய்யப்பட்டு அவர்தான் தற்போது அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார். அது மாத்திரமல்ல, திருவள்ளுவர் பெயரால் உள்ள பல்கலைக்கழகம் ஏதோ ஒரு மூலையில் ஒரு பழைய கட்டிடத்தில் இடப் பற்றாக்குறையோடு இயங்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் அந்தப் பல் கலைக்கழகத்திற்கு ஒரு கட்டிடம் கட்டப்பட வேண்டுமென்ற எண்ணமும் இந்த ஆட்சிக்கு ஏற்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா தான் தற்போது நடைபெற்றுள்ளது.

திமுக ஆட்சியில் தொடங் கப்பட்ட உழவர் சந்தைகளை எல்லாம் முறையாக நடக்கவிடாமல் செய்தும், பெரியார் நினைவு சமத்துவபுரங்களை இயங்க விடாமல் செய்தும், திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்களை எல்லாம் அசூயை எண்ணத்துடன் வீட்டுக்கு அனுப்பியதைப் போல, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியிலே தொடங்கப்பட்டதாயிற்றே, அதற்கு கட்டிடம் கட்ட நாம் ஏன் நிதி ஒதுக்க வேண்டுமென்ற அற்ப புத்தியோடு செயல்படாமல் திமுக ஆட்சி நடந்து கொண்டுள்ளது.

ஆனால் அவசர புத்தியும், கெட்ட நினைப்பும் எப்போதும் கொண்ட அம்மையார் அவசர அவசரமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் என் மூளையில் தானே முதலிலே உதித்தது என்று அறிக்கை விடுத்துள்ளார். அதனால் தான் அது இத்தனை காலம் மூலையில் கிடந்தது போலும்!

கேள்வி: 'ஆன்மீகமும்- அறிவியக்கமும், ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று முதல்வர் புதிய உபதேசம் செய்கிறார். எல்லோரும் குழம்பிப் போய் உள்ளனர்' என்று வைகோ பேசியிருப்பது பற்றி?

பதில்: ஓ! வைகோவா?. 'சேது திட்டம் பற்றி பிரதமருக்கு கருணாநிதி ஒரு கடிதம் கூட எழுதவில்லை-எழுதியதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே போய் விடுகிறேன்' என்று அறைகூவல் விடுத்து, அதற்கு நான் பதில் அளித்து பிரதமருக்கு எழுதிய கடிதங்களை பகிரங்கமாக வெளியிட்டவுடன், அறைகூவல் விட்ட அந்தப் புயல், அதே புயல் வேகத்திலேயே கரை கடந்து அஞ்ஞானவாசம் போய் விட்டதே.

வேலூர் நாராயணி ஆலய விழாவில் நான் பேசியது, 'அறிவியக்கமும் ஆன்மீகமும் இரட்டைக் குழந்தைகள்- ஆனால் ஒட்டிப் பிறந்தவை அல்ல!' என்ற வாசகமாகும். என் செய்வது, குழம்பிப் போனவர்கள் குழப்பிக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்!

சரி, தோழமைக் கட்சித் தலைவி விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களை ஆதரிப்பவர்கள் பற்றியும் இவர் மீது பாய்ந்த பொடா பற்றியும், நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் பக்கம் பக்கமாக அறிக்கை விடுகிறாரே, அந்த அறிக்கைகள் வெளிவந்த ஏடுகள் இவர் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்க வில்லையோ?

ஒருவேளை பழைய பாசத்தோடு எனது பேச்சுக்களையும், அறிக்கைகளையும் மட்டுமே இவர் அரைகுறையாகப் படித்துக் கொண்டிருக்கிறாரோ?

கேள்வி: திமுக அரசு சார்பில் 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே?

பதில்: இது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால் சில ஏடுகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்று தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் என்பது தான் தமிழக அரசின் சட்டம். இந்த அறிவிப்பை தமிழ் உணர்வு மிக்க கட்சிகளின் தலைவர்களும், சான்றோர்களும் வரவேற்று தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கேள்வி: தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்று தமிழக அரசின் சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், தமிழகத்தில் அனைத்து நிலையிலும் தமிழ்மொழி வழியாகத் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவினையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: வரவேற்கப்பட வேண்டிய கருத்து, நாமும், நீண்ட காலமாக சொல்லி வருகின்ற கருத்து. கல்வியைப் பொறுத்தவரையில் நான் ஏற்கனவே கூறியதைப் போல அவசரப்பட்டு எந்த முடிவினையும் அறிவித்து நடவடிக்கை எடுத்து விட முடியாது.

தமிழ் பற்றி 1970களில் நான் ஏற்கனவே அறிவித்து, நடைமுறைப்படுத்த முனைந்து, அதன் காரணமாக தமிழகத்திலே மாணவர்கள் தூண்டி விடப்பட்டு, பெரிய புரட்சியும், கிளர்ச்சியும் நடந்து, அதன் பின்னர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளின்படி அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது தமிழர்கள் அறிந்த வரலாறாகும்.

தோழமை கட்சியின் கடமை என்ற நோக்கோடு இந்த அரசுக்கு உதவிகரமான மற்றொரு யோசனையைத் தான் மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

கேள்வி: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன் என்று நடிகர் ஒருவர் அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: அரசினால் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் கூடத் தான் இருக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சியில் சிலரது முகங்களை காட்டினால் கூட 'பாவம்'' என்று கூட நினைத்து மறுத்த காலம் ஒன்று உண்டு. தற்போது அதே தொலைக்காட்சியில் அன்றைக்கு புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்களின் முகங்கள் எல்லாம் தாராளமாகக் காட்டப்படுகின்றன. அதற்கு செஞ்சோற்று கடன் கழிக்க வேண்டாமா? அதன் விளைவு தான் அரசுக்கு எதிராக அவர்கள் பெயரால் தற்போது வெளிவரும் சில அறிக்கைகள்.

கேள்வி: சாலை விபத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?

பதில்: என்னையும் கவலையடையச் செய்கின்ற செய்தி தான் இது. நான் ஒவ்வொரு முறையும் இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளை சந்திக்கின்ற நேரத்தில் எல்லாம் இதைப் பற்றியே தெரிவித்து இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கூறி கொண்டு தான் இருக்கிறேன்.

மற்ற மாநிலங்களை விட வாகனங்கள் தமிழகத்திலே அதிகம் என்றும், சாலைகள் எல்லாம் இங்கே பராமரிக்கப்பட்டு ஒழுங்காக இருப்பதால் வாகனங்களை ஓட்டுவோர் மிகக் கடுமையான வேகத்தில் செல்கிறார்கள் என்றும் காரணங்கள் எனக்கு சொல்லப்பட்டன. எனினும் எப்படியும் விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட வேண்டும்.

சாலை விபத்தில் தமிழகம் முதலிடம் என்ற இந்த செய்தியினை வெளியிட்ட நாளேடு அதிலேயே மற்றொரு தகவலையும் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதிலும் 2006ம் ஆண்டு 1 லட்சத்து 5 ஆயிரத்து 725 பேர் இறந்துள்ளனர் என்றும், அதில் ஆந்திராவில் 12,661 பேர், மகாராஷ்டிரத்தில் 11,934 பேர், உத்தரபிரதேசத்தில் 11,520 பேர், தமிழ்நாட்டில் 11,009 பேர் என்று செய்தி வந்துள்ளது.

எனவே இறப்பைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு 4வது இடத்திலே இருக்கின்றது என்ற அளவில் நாம் சற்று திருப்தி அடையலாம். ஆனால் முழு திருப்தி அல்ல.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


தமிழன் ஏமாந்த சோணகிரி அல்ல!

எதிர்க்கட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா தனது சொந்த தொலைக் காட்சிக்கு தானே அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றினை அனைத்து ஏடுகளும் முக்கியத்துவம் தராத நிலையில், ஒரு நாளிதழ் மட்டும் அந்தப் பேட்டியினை முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கின்றது.

அந்தப் பேட்டியிலே அந்த அம்மையார் எனக்கொரு சவால் விடுத்திருப்பதாக வந்த செய்தியில் - ”தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது குற்றம் ஆகாது என்று பொடா வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார். அந்தத் தீர்ப்பை அவரால் காட்ட முடியுமா?” என்று கேட்டதாக அந்த நாளிதழ் கூறுகிறது.

25-1-2008 அன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுதலைப் புலிகள் குறித்து பேசிய பிரச்சினை குறித்து 29-1-2008ஆம் தேதியன்று தமிழகச் சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதன் மீது நான் பேசும்போது, ”அருமை நண்பர் திருமாவளவனும் மற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுகின்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை யெல்லாம் சட்ட ரீதியாகத் தான் சந்திக்க வேண்டியிருக்கிறது. வேறு வழியில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். பொடா சட்டம் பயன்படுத்தியும்கூட, அந்தப் பொடா சட்டத்தைப் பயன்படுத்தியது சரியா அல்லவா என்ற வினா எழுந்த போது, உச்ச நீதி மன்றத்தினுடைய தீர்ப்பு அது பற்றி என்ன வெளியிட்டது என்றால், தடை செய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று உச்ச நீதி மன்றத்தினுடைய தீர்ப்பிலே ஒரு வரி வெளி வந்திருக்கிறது. குற்றம் ஆகாது என்பதற்காக இப்பொழுது இங்கே ஞானசேகரன் எடுத்துக்காட்டிய அந்த வார்த்தைகள், முன்னாள் முதலமைச்சரைப் பற்றி அல்லது இப்பொழுது விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி சொல்லப்பட்ட இந்த வாசகங்களை எல்லாம் பேசலாம் என்று பொருள் அல்ல. அது எங்கே கொண்டு போய் விடும் என்பதையும் நாம் அறியாதது அல்ல. அதை நான் ஆதரிப்பவனும் அல்ல” என்று கூறி அது அவைக் குறிப்பிலே இடம் பெற்றுள்ளது.

என்னுடைய இந்தப் பேச்சுத் தான் தவறு என்றும், உச்ச நீதி மன்றத் தீர்ப்பிலே தடை செய்யப்பட்ட எந்தவொரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று தீர்ப்பில் எந்த இடத்திலும் சொல்லப் படவில்லை என்றும் பேரவையில் ஜெயலலிதா பேசினார்.

அன்றையதினமே சட்டத் துறை அமைச்சரான தம்பி துரைமுருகன் பேரவை யிலேயே உச்ச நீதி மன்றத்தின் முழுத் தீர்ப்பினையும் கொண்டு வந்து, நான் குறிப்பிட்ட பகுதி எங்கே வருகின்றது என்பதையும் எடுத்துக் காட்டினார். அந்தச் செய்தி அவைக் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. மறுநாள் முரசொலியிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. மறுநாள் ஏட்டில் வெளி வந்த செய்தியைப் பார்க்கவில்லை. அவருக்கு தீர்ப்பினைக் காட்டிய வழக்கறிஞர்களிடமும் அதைப் பற்றி முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் பேரவையில் தவறாகப் பேசியிருக்கிறார்.

அது மாத்திரம் அல்ல. “இந்து” நாளிதழ் இந்தச் செய்தி பற்றி என்னிடம் சிறப்பு பேட்டி ஒன்றினைக் கேட்டு, அது 3-2-2008 தேதியன்று தெளிவாக ”இந்து” நாளிதழிலே வெளி வந்திருக்கிறது. அதையும் ஜெயலலிதா படிக்கவில்லை. இது மாத்திரமல்ல, சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், பேரவையில் ஜெயலலிதா இவ்வாறு தவறான செய்தியினைக் கூறியிருக்கிறார் என்று ஒரு உரிமைப் பிரச்சினையைக் கொடுத்து, அந்தச் செய்தியும் ஏடுகளிலே வெளி வந்திருக்கின்றது.

அதற்குப் பிறகாவது முதலமைச்சராக இருந்த ஒருவர் தனது வழக்கறிஞர்களிடம் கூறி, அந்தத் தீர்ப்பினைக் கேட்டுப் பெற்று முழுமையாகப் படித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும், அதன் அடிப்படையில் நேர்காணல் பேட்டியில் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்பதைப் போல, திருப்பித் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக மாறி பேரவையில் முதன் முதலில் என்ன பேசினாரோ, அதையே சொல்லி வருவது மட்டுமல்ல, எனக்கு சவாலே விடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் கூற்று எவ்வளவு தவறானது என்பதை நான் ஏற்கனவே இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியிலே தெளிவாக்கியிருக்கிறேன் என்ற போதிலும், ஜெயலலிதாவின் நேர்காணல் பற்றி அந்த நாளிதழில் வெளி வந்த செய்திக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை தெளிவாக்குவது நல்லதென நினைக்கிறேன்.

16-12-2003 அன்று உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் எஸ். ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் - ஜெயலலிதா கேட்டுள்ள வினா பற்றி - நீதிபதிகள் தெரிவித்திருக்கும் பகுதி வருமாறு :-

”நோக்கத்துடன் - செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடா சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந் தால் மட்டுமே, அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ள போது, ஒரு நபர் ”பகிரங்கமாக அறிவிப்பதாலோ" (20வது பிரிவின் கீழ் உள்ளபடி) அல்லது ”ஆதரவைக் கோரினாலோ" அல்லது ”ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ, அல்லது ஏற்பாடு செய்ய உதவினாலோ அல்லது ஒரு கூட்டத்தில் பேசினாலோ” (21வது பிரிவு), ஒரு பயங்கர வாத அமைப்பின் எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கரவாதச் செயலைச் செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்?

அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே 20 அல்லது 21 அல்லது 22வது பிரிவுகளின் கீழ் குற்றம் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும். ஒரு நபர் பயங்கரவாதச் செயலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் அல்லது பயங்கர வாதச் செயலைச் செய்ய உதவும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்கும் அல்லது செய்து முடிக்க உதவி செய்யும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே, இந்தப் பிரிவுகள் பொருந்தும். இந்த முறையில் இந்தப் பிரிவுகள் புரிந்து கொள்ளப்பட்டால் தவறாகப் பயன்படுத்துகிற வழி இருக்காது” என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கூற்று தவறு என்பதற்கும், நான் பேரவையில் கூறியது உண்மையானது என்பதற்கும் தீர்ப்பில் உள்ள இந்த வரிகள் போதும் என்பதை இதனைப் படிக்கும் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் பருவ காலத்தில் மழை பெய்யத் தவறினாலும் அல்லது உழவர்களின் எதிர்பார்ப்புக்கு மேல் மழை பொழிந்தாலும் - ஒரு கொள்ளையோ, கொலையோ நடந்து அதை நடத்திய கொடியவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாலும் - ஏதாவது ஒரு குக்கிராமத்தில் குடி தண்ணீர் கிடைப்பதில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும் - எங்கேயோ ஒரு நகரத்தில் சாலை விபத்து ஒன்று நடந்தாலும் - விலைவாசியில் சற்று உயர்வு தென்பட்டாலும் - ”தி.மு.க. ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும்" என்று மத்திய அரசைப் பார்த்து ஆணையிடுவதும்; நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழக ஆட்சியினுடைய சாதனைகள், தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு தொகை தொகையாக பெருக்கெடுப்பதைப் பார்த்து ஜெயலலிதா பெருமூச்சு விடுகிறார், புலம்புகிறார், அலறுகிறார்.

ஐயோ, இந்த ஆட்சியைக் கலைத்தால் தான் தனக்கு நிம்மதி என்றும் - கலைப்பீர்களா, மாட்டீர்களா என்று தூது விட்டும் பார்க்கிறார். கலைத்தே தீருவேன் என்று தோள் தட்டி முழக்குகிறார்.

தேர்தல் நேரத்து வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொன்றாக - வரிசையாக - ஏழையெளியோர், உழவர் பெருமக்கள், உழைப்பாளி வர்க்கத்தினர் உவகை அடையும்படி தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற கழக ஆட்சி இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் தொடருமேயானால், திட்டமிட்டபடி புதிய சட்டமன்ற மாளிகை கட்டி முடித்து விடுவார்களே - சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தமிழகம் எதிர்காலத்தில் வளம் கொழிக்கும் அற்புதத்தை விளைவித்து விடுவார்களே - மெட்ரோ ரெயில் திட்டம் வரவிருக்கிறதே, சென்னையிலிருக்கும் நெரிசல் குறைந்து விடுமே - ஊராட்சி, பேரூராட்சிகளுக்கெல்லாம் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத் தின் கீழ் உரிய நிதி வழங்கி பட்டிதொட்டி முதல் பட்டினங்கள் வரை வளமை கொழிக்கும் பூமியாக தமிழகம் மாறி விடுமே - இப்பொழுதே இருபது இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய அளவிற்கு தொழிற்சாலைகள் தொடங்கும் நிலை தோன்றியுள்ளதே - ராமனாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், ஒகனேக்கல் குடிநீர் திட்டம் போன்ற பெருந் திட்டங்கள் எல்லாம் முடிவுற்று அந்தப் பகுதி மக்களின் தாகம் தணிந்து விடுமே - சென்னையில் மட்டும் மையம் கொண்டிருந்த தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி தமிழகம் முழுவதும் பரவி விடுமே - மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டமும் செயல்படத் தொடங்கி விட்டதே - அனைத்து தரப்பினருக்கும் தனித்தனியாக வாரியங்கள் அமைக்கப் பட்டு, அவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கான ரூபாய்க்கான உதவி நிதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறதே - எல்லோராலும் மறக்கப்பட்ட அரவாணிகளுக்குக் கூட வாரியம் அறிவிக்கப்பட்டு விட்டதே - அருந்ததியருக்கு தனி ஒதுக்கீடு தர அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதே - என்று இத்தனையும் - இன்னும் எத்தனையோ திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு முடிவடையும் என்றால் பிறகு தன்னைப் போன்ற - தன்னலச் சுகவாசி களுக்கு தமிழ்நாட்டில் மதிப்பு - மரியாதை - மகிமை - மாண்பு என்று எந்த மண்ணாங்கட்டி தான் மிஞ்சப் போகிறது?

அதனால் இவையெல்லாம் கண்ணுக்கு இனிய சாதனைகளாக - கருத்துக்கு இனிய பணிகளாக விதைத்து, முளைத்து, வேரோடி, செடியாகி, கொடியாகி, பூத்துக் குலுங்குகின்ற புதிய தமிழ்நாட்டை - மக்களும் காணாமல் - மனச்சாட்சியற்ற தானும் காணாமல் - அதற்குள் சாதனை புரியும் சரித்திரப் பொன்னேடாம், தி.மு. கழக ஆட்சியை இல்லாமல் செய்து விடுவது ஒன்று தான் - பிறவி எடுத்தப் பயனாகும் என்றும், தன் இனத்துக்கு தேடித் தந்த வரப் பிரசாதம் என்றும் எண்ணுகிற ஜெயலலிதா,
விடுதலைப் புலிகளை நாம் ஆதரிக்கிறோம் என்று பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி மத்திய அரசிடம் மண்டியிடுகிறார். மக்களைப் பயமுறுத்துகிறார்.

அன்று மகாமக குளத்திலே நடத்திய மாயாஜாலங்களை மறைத்தது போல் இவரது ஆட்சியில் நடத்தப்பட்ட மகா பாதகங்களை மறைத்திடலாம் என்று - அந்தப் பாதகச் செயல்களால் பழி வாங்கப்பட்ட மக்கள், அரசு அலுவலாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் - இவர்கள் எல்லாம் அந்தக் கொடுமைகளை மறந்து விடுவார்கள் என்றும்; தவறுக்கும் தவறான தப்புக் கணக்குகளைப் போடுகிறார். விடுதலைப் புலிகளுக்கும், பிரபாகரனுக்கு,ம் எம்.ஜி.ஆர். உதவிய அளவுக்கு அதில் கடுகளவு கூட கருணாநிதி உதவவில்லை என்றும் - பிரபாகரனுக்கு இலங்கையிலே ஒரு துன்பம் என்றால் தமிழ்நாடு எரிமலை ஆகுமென்றும், பூகம்பம் ஆகுமென்றும் இந்து, எக்ஸ்பிரஸ் நாளேடுகளுக்கு அளித்த சிறப்பு பேட்டிகளிலும் எச்சரித்த ஜெயலலிதா - அய்யோ; இன்றைக்கு விடுதலைப் புலிகளை இந்த அரசு எந்த வகையிலும் ஆதரிக்காமல் இருக்கும்போதே - அவர்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்போதே - மீறி நடப்பவைகளை தடை செய்து கடுமையான தண்டனைகளை வழங்கிக் கொண்டிருக்கும்போதே - அதற்கான புள்ளி விவரங்களை ஆதாரப் பூர்வமாக அவைநடுவே எடுத்துக் காட்டிய பிறகும் - அம்மையார் ஜெயலலிதா ஆவேசமாக அலறுகிறார், ஆட்சியைக் கலை, கலை என்று அண்டப்புளுகுகளை அள்ளிக் கொட்டுகிறார்.

என் செய்வது? சகல சுக பாக்கியங்களுடனும், சப்ர கூட மஞ்சத்தில் அவர் சயனித்திருப்பதற்கும் - சகல சௌபாக்கியங்களுடன் உல்லாச வாழ்வில் உருண்டு புரண்டு திளைப்பதற்கும் - அவருக்கு தேவைப்படுகிறது பதவி, பதவி, பதவி, பதவி.
அதனால்தான் மத்தியில் உள்ள அரசைப் பார்த்து கூப்பாடு போடுகிறார் உதவி, உதவி, உதவி, உதவி என்று!

மக்கள் பணியே மகேசன் பணி என்று தொண்டாற்றும் இந்த மண்ணின் மைந்தர்களை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டுமாம்! மக்களின் தலைகளை உருட்டிப் பந்தாடிய மாபாவிகள் மீண்டும் மகுடம் புனைய வேண்டுமாம்! இதை ஏற்றுக் கொள்ள எமது தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்த சோணகிரிகளா? இளித்தவாயர்களா? இல்லை, இல்லை, இல்லை!

அன்புடன்
மு.க

Sunday, February 17, 2008

ஆன்மீகமா,அறிவியலா? கலைஞர் விளக்கம்

//வேலூர் ஷ்ரீபுரம் ஓம்தி நாராயணி பீடம் சார்பில் 320 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்கைக்கு நிதி உதவி வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. நிதி உதவியை வழங்கி, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., மூன்றாம் முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது, கிருபானந்தவாரியாரை அழைத்து கருணை இல்லம் துவக்கப்பட்டது. அதன் மூலம், ஆன்மிகம், அறிவியல் என எதைப் படித்தாலும், உணவுடன் கல்வி வழங்கப்பட்டது. 320 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு பணம் வழங்குவது சாதாரண விஷயமில்லை. நோய் வந்ததை புரிந்து கொள்ளாமல், `காத்தவராயன்' ஆவி வந்தது என தெய்வங்கள் மீது பழி சுமத்திய காலமும் உண்டு. இப்போது அனைத்தும் புரிந்து கொள்ளும் உலகமாக மாறிவிட்டது.தற்போதைய ஆட்சியில், கடந்த நவ., முதல் இதய அறுவை சிகிச்சை செய்ய ரூ.20 ஆயிரம் வரை அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. ஒரு அரசே இத்தனையும் செய்ய முடியுமா? அப்போது தான் நாராயணி பீடம் தேவைப்படுகிறது. சக்தி அம்மா என்ற இளம் துறவி ஆன்மிக தொண்டு செய்து வருகிறார். ஆன்மிகம், அறிவு இயக்கம் இரண்டும் இரட்டை குழந்தைகள். ஒட்டிப்பிறந்த குழந்தைகள் அல்ல. தனித்தனியான குழந்தைகள். ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்ள கூடாது. அவை இரண்டும் சேர்ந்தால், செயல்பட முடியாது. சென்னை அண்ணா அறிவாலயம், வேலூர் பொற்கோவில் இவை தனித்தனியாக இருந்து ஏழை மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றன. நான் இங்கு வந்ததால் நாராயணி உருவ கடவுளை ஏற்றுக் கொண்டேன் என்பது அர்த்தம் அல்ல. `கருணாநிதி கடவுளை ஏற்றுக்கொள்கிறார். கடவுள் கருணாநிதியை ஏற்றுக்கொள்கிறதா' என்பது எல்லாம் தேவை இல்லை. கடவுள் ஏற்றுக் கொள்வது போல, நல்ல விஷயங்கள் செய்தால் போதும்.ஆன்மிகம், அறிவு இரண்டும் ஒரே குறிக்கோளை நிறைவேற்றும் போது, மோதிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆன்மிகமும், அறிவு இயக்கமும் ஒன்றோடு ஒன்று மோதாமல் சமுதாய பணி செய்ய வேண்டும்.நான் அதிகாலையில் யோகா கற்றுக் கொள்கிறேன். எனக்கு கற்றுக் கொடுக்கும் தேசிக்காச்சாரியின் தகப்பனார், யோகா கற்றுக் கொண்டதால் 102 வயது வரை வாழ்ந்தார். அந்த வயது வரை வாழ நான் யோகா கற்கவில்லை. உங்களுக்கு உழைக்கவே யோகா கற்றுக் கொள்ளுகிறேன். அவர் யோகா கற்றுக்கொடுக்கும் போது, `நாராயணி நமக' என சொல்ல சொல்வார். அதை சொல்லுவதில் எனக்கு சங்கடம். அதை சொல்லிவிட்டு மறைக்கவும் என்னால் முடியாது. அவரிடம் என்னுடைய கொள்கையை திணிக்க முடியாது. `நாராயணி நமக' என்றால் `சூரிய நமஸ்காரம்' என்று அவர் சொன்னார். அதற்கு பதில், `ஞாயிறு போற்றுதல் என சொல்லலாமா' என்று கேட்டேன்.இரண்டின் பொருள் ஒன்றுதான்; ஓசை தான் வேறு. ஞாயிறு போற்றுதல் என சொல்லலாம் என தேசிகாச்சாரி கூறினார். இப்போது, அவரும் அதே தான் சொல்லி வருகிறார்.//
நன்றி-தினமலர்

தலைவர் ஆன்மீகத்திற்கு எதிரி அல்லர்.இருள் மண்டிக்கிடந்த சமூகத்தில் ஆன்மீகம் என்னும் போர்வையில் புரட்டு வேலை செய்யும் ஆசாமிகளை எதிர்க்கவே ஆன்மீகத்தையும் எதிர்க்க வேண்டிய சூழல் உருவானது.ஆன்மீகம் என்பதும் இன்பத்தை தேடி அலையும் வேட்கையில் (அல்லது தேடலில்) ஒரு கட்டம் தான் .கலைஞரும் கூட இன்பத்தைத் தேடி அலைபவர் தான்,அவருக்கு இன்பம் என்பது போராட்டம்.தமிழினத்தின் உரிமைக்காக,முன்னேற்றத்திற்காக போராடுவதே அவருக்கு இன்பம் பயப்பதாக உள்ளது.கலைஞர் வழியில் எல்லோராலும் போக முடியாது.அவர்கள் ஆன்மீக வழியிலே செல்கிறார்கள்.அவ்வாறானவர்களின் உணர்வுகளை கலைஞர் புரிந்து,மதித்து நடக்கிறார்.
இதை உணராமல் சில கோமாளிகள் கலைஞர்,கடவுளை வணங்குகிறார்,ஊருக்கு தான் உபதேசம் செய்கிறார் என்றெல்லாம் புழுதி வாரித் தூற்றுகின்றனர்.இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது ,அவர் மஞ்சள் துண்டு அணிந்து விட்டார் என்பது.கலைஞரின் புகழை குலைக்கும் முயற்சி என்பது சூரியனை போர்வை போட்டு மறைக்கும் முயற்சி தான்.ஆன்மீகத்தின் தேவையை,ஆத்திகரின் உணர்வை புரிந்து நடந்து கொண்டால் அவரும் ஆத்திகராகி விட்டார் என்று அற்ப சந்தோசம் அடைகின்றனர்.கலைஞரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு நாத்திகர் என்றே நிரூபித்து வருகிறார்.

Thursday, February 14, 2008

டாக்டர் கலைஞர் கொண்டாடிய காதலர்தினம்!

‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜூனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன் களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘முதியோர் காதல்’ புத்தகம் வீட்டு நூலகத்திலிருந்து எட்டிப்பார்த்துச் சிரிக்கிறது. அதுவும் ஓர் அழகின் சிரிப்புதானே!

வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிற நெல்சன் மண்டேலா, ஒரு நடுத்தர வயது மங்கையைக் காதலித்துக் கட்டித்தழுவும் படங்கள் ஏடுகளை அலங்கரிக்கும் இந்தக் காலத்தில், நான் காதலைப் பற்றி ஒரு கட்டுரைதானே எழுதுகிறேன். எனவே, என் கொள்ளுப் பேரர்களும் பேத்திகளும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள்.

‘‘காதல் வர்ணனைகளைக் காட்டாற்று வெள்ளமெனப் பொழிந்து தள்ளிய இந்தப் பேனா, இப்போது மிகச் சாதாரண நடையில் சில செய்திகளைச் சொல்லப் போகிறது.’’

இப்படிச் சுருக்கமாக என் காதல் (தோல்வியுற்ற) கதை ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் முதல் பாகம் 74-வது பக்கத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தக் காதல் நடந்த நாட்களையும் அது தோல்வியுற்ற காரணத்தையும் நினைத்துச் சுவைக்கும் வயது இப்போது எனக்கு! அதனால் அந்தக் காதல் படிக்கட்டுகளில் என் நினைவுக் கால்களால் சற்று நடந்து திரும்புகிறேன். ஆம்; அன்று எழுதாததை அல்லது எழுத விட்டுப் போனதை, இன்று எழுதுகிறேன். எழுதக்கூச்சப் படும் இளமைப்பருவம் பறந்துவிட்டதால் இந்த முதுமைக்கு ஏற்பட்ட துணிச்சல். வெட்கம் மறந்து விட்ட நிலையில் எழுதிடத் தூண்டுகிறது என்னை; அதனால் எழுதுகிறேன்.

கொடி ஊர்வலங்கள் - கூட்டங்களில் முழக்கங்கள் - கொள்கை பரப்பிட நாடகங்கள் என்று கோடை வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்த நான், இடையிடையே திருவாரூர் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைகளுக்கும் சென்று திரும்பிக் கொண்டிருந்த பள்ளிப்பருவ காலமது. அப்போதுதான் அவளிடம் நானும், என்னிடம் அவளும் மனத்தை பறி கொடுத்த நிகழ்ச்சி நடந்தது. அவள் பெயர்... அவள் பெயர்... உண்மைப் பெயரைச் சொல்ல வேண்டாம்... ஏனென்றால் அவள் இன்னும் உயிரோடு இருக் கிறாள். குறிப்பாக, சாந்தா என்று ஓர் அடையாளப் பெயர் வைத்துக் கொள்வோமே! சாந்தா என்பதில் ஓர் எழுத்து மாறினால் அவள் உண்மைப் பெயர். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று பரிசுப் போட்டி வைக்க விரும்பவில்லை. அந்த சாந்தா என்னுடன் அதே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு வகையில் தூரத்து உறவும்கூட! நல்ல உறவில்தானே பொல்லாத பகையும் முளைத்துத் தொலைக்கும். எங்கள் இரு வீட்டாருக்கும் பேச்சுவார்த்தைகள் கூட இல்லாத அளவுக்கு செமப்பகை! அந்தப் பகை நடுவே, எங்களுக்குள் பனிப்புகை நடுவே புகுந்த கதிர்போல காதல் தோன்றிவிட்டது. அவள் பள்ளிக்குப் புறப்படும் நேரம் பார்த்து நானும் புறப்படுவேன். ஆரூரின் அகன்ற சாலைகளில் அவள் ஒரு பக்கம் போவாள். நான் இன்னொரு பக்கமாகத் தொடர்ந்து நடப்பேன். அவள் திரும்பிப் பார்க்கிறாளா என்று நான் அவள் பின்னால் நடப்பதும் உண்டு. நான் திரும்பிப் பார்ப்பதை அவள் கடைக்கண்ணால் கண்டிட அவள் என் பின்னால் நடப்பதும் உண்டு.

மாலையில் பள்ளி முடிந்ததும் அவள், தட்டச்சு கற்றுக் கொள்ள கமலாலயக் குளக்கரையில் இருந்த ஒரு ‘டைப் ரைட்டிங்’ நிலையத்துக்குச் செல்வாள். நானும் தட்டச்சு கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக என் வீட்டில் பொய்யுரைத்து மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்தை அந்த நிலையத்தில் வீணாக்கிக் கொண்டிருந்தேன். அவள் தட்டச்சு பயிற்சி முடித்துப் புறப்பட்டவுடன் நானும் புறப்பட்டு விடுவேன். என் தட்டச்சுப் பயிற்சியில் ஆங்கில எழுத்துக்களான ‘எல்&ஓ&வி&இ’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை. அந்த எழுத்துக்களை மட்டுமே தட்டச்சுப் பொறிக்குப் பதிலாக என் இதயத்தில் அடித்துப் பழகி, பதிய வைத்துக் கொண்டு சில நாட்கள் பைத்தியமாகத் திரிந்தேன்.

‘கண்ணொடு கண் நோக்கும் காதல்’ பிறகு கடிதக்காதலாக மாறியது. திருவாரூரில் நான் தங்கிப் படித்துக் கொண்டிருந்த வீட்டில் ஒரு சிறுவனும் சிறுமியும் என் அன்புக்குப் பாத்திரமானவர்கள். காலை எழுந்தவுடன் அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பேன். சரியாகப் படிக்கச் சொல்லி அவர்களைக் கண்டிப்பதும் உண்டு. அந்தச் சிறுவனை மட்டும் காதைத் திருகித் தண்டிப்பதும் உண்டு. நான் தங்கிப் படித்த அந்த வீட்டுக்கு அருகில் அதே தெருவில்தான் என் சாந்தாவின் வீடும் இருந்தது. அவள் வீட்டுக் கொல்லைப்புறமும் என் பள்ளி நண்பன் ஒருவன் வீட்டுத் தெருவாசல் பகுதிகளும் எங்கள் விழிக்கணைகள் பாயும் காதல் களங்களாக இருந்தன. சில நாட்களில் என்னிடம் பாடம் பயின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி எங்களுக்கிடையே ‘தூதி’ ஆகி விட்டாள். ஒரு நாள் சந்தித்தே தீருவது என்று எங்கள் கடிதங்கள் உறுதிமுழக்கமிட்டன. அதன்படி அந்தி மாலை நேரத்தில் அவள் அம்மன் கோயிலுக்குப்போய் அர்ச்சனை செய்துவிட்டு, தட்டுடன் திரும்பும்போது அந்தக் குறுகலான சந்தில் உள்ள ‘வீரனார் கோயில்’ முன்பு, அரைகுறை இருட்டில் அருகருகே சந்தித்துவிட்டோம். அந்த ‘வீரனார்’ அறிய மறக்கமாட்டேன் என்று கையடித்துச் சத்தியம் செய்தாள். மனசாட்சி அறையக் கைவிடமாட்டேன் என்று நானும் உறுதி அளித்தேன். உடனே பிரிந்து விட்டோம்; அச்சம் எங்களை ஓங்கி ஓங்கி உதைத்ததால்!

சாந்தாவுக்கு மாப்பிள்ளை தேட அவசரத் திட்டம் வகுக்கப் பெற்றது. அவளோ கடைசிவரை போராடி இருக்கிறாள் எனக்காக. அதற்குள் அந்த வீட்டில் நடக்கும் அமளி என் வீட்டுக்கதவுகளைத் தட்டிவிட்டது. என்னிடம் கேட்டார்கள். ஆமாம் என்றேன். பகையை மறந்து சாந்தாவையே எனக்குப் பெண்கேட்க என் தந்தையும் தாயும் முதற்கட்டமாக என் உறவினர்களை அனுப்பினார்கள். அதற்குக் கிடைத்த பதில் என்ன?

‘‘அவன் கட்சி கட்சி என்று உருப்படாமல் அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கா பெண் கொடுக்க முடியும்? அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், அவன் சுயமரியாதைக் கல்யாணமல்லவா செய்து கொள்ள வேண்டுமென்பான். சரி, பெண் கொடுக்கிறோம். புரோகிதத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பானா?’’

பதில், பயங்கரமான கேள்விகளாக வெடித்தெழுந்தன. அந்தக் கேள்விகள் வடிவத்து நிபந்தனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்தனை எத்தனை சுயமரியாதைத் திருமணங்களை நான் முன்னின்றும் நானே சென்று வாழ்த்தியும் நடத்தி வைத்திருக்கிறேன். புரோகிதத் திருமணமென்றால் முடியாது என்று மறுத்தேன். அதற்கிடையே அவள் கடிதம் வந்தது கண்ணீரால் எழுதப்பட்டு! ‘‘காதலா? கொள்கையா?’’ இதுதான் அந்தக் கடிதத்தின் கருப்பொருள்.

‘‘ஊருக்குத்தான் உபதேசம்.

உனக்கும் எனக்கும்

இல்லையடியென்று கூறுவது

எத்தனின் செயல் அல்லவா?’’

என்ற கருத்தமைந்த பதிலை கண்டிப்பான பதிலை அவளுக்கு எழுதினேன். அவள் தனது பிடிவாதத்தினால் பெற்றோரை இணங்க வைப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவளே இணங்கி விட்டாள் & அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட!

ஏன். அவள்தான் அந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாதா? இல்லை, நான்தான் என் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக்கூடாதா? அவளுக்குத்தான் ‘வீரனார்’ கோயில் சத்தியம் என்ன ஆயிற்று? எனக்குத்தான் நான் மனசாட்சிப்படி வழங்கிய உறுதி எங்கே யோயிற்று? எப்படியோ இங்கே காதல் ஒரு பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டு விட்டது.

அதன் பின்னர் சில நாட்களில் ஒரு திகில் செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. எனை விடுத்து வேறொருவனை மணந்த சாந்தா விதவையாகி விட்டாள்! அவள் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தொடர்ந்து இருந்துவந்த பகை, அவளுக்கு ஏற்பட்ட அந்தச் சோகத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல அகன்று இருவீட்டார் உறவிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அந்த நேரத்தில் என் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, சாந்தாவின் மறுமணத்திற்கு அவளது வீட்டார் சம்மதம் தெரிவித்தார்கள். அவளுக்கு மறுவாழ்வு அளிக்க வந்தவனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அவனையும் வாழ்த்தினேன். அன்று என் விருப்பப்படி சீர்திருத்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் எங்களைப் பிரித்த அவளது பெற்றோர், சீர்திருத்தத்திலும் தீவிர சீர்திருத்தமான விதவைத் திருமணத்திற்கே ஒப்புதல் அளித்தார்கள் என்பது ஒரு விந்தையே!

அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் எப்போதோ பார்த்த ஞாபகம் எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதுடையாள் _ ஆனாலும், இளமையில் நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை. அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல் அப்படியே மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக; இப்போது நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.

- ஜூனியர் விகடன் இதழில் கலைஞர் எழுதிய காதல் படிக்கட்டு!

Tuesday, February 05, 2008

நடுவண் அரசுக்கு நமது வேண்டுகோள்!

நடுவண் அரசுக்கு நமது வேண்டுகோள்!

(கலைஞர் கடிதம்)- 5.2.2008

மக்களின் கஷ்டங்களைப் போக்கத் தான் அரசு இருக்கிறது. அந்தக் கஷ்டங்களைப் பங்கிட்டுக் கொள்கின்ற மனப்பான்மையோடு தான் நாம் அரசு நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களின் கஷ்டங்களில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அத்தியாவசிய பண்டங்களை நியாய விலைக்கடைகள் மூலமாக சலுகை விலையில் வழங்கிடுவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

அதே எண்ணத்தோடு சாமான்ய மக்களுக்குப் பயன்படும் வகையில் கிலோ அரிசி இரண்டு ரூபாய் விலைக்கு இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இந்த அரசு வழங்கிவருகிறது. இதன் காரணமாக பாரதியின் கனவான தனி ஒருவனுக்கு உணவில்லை என்ற நிலைமை தமிழ் நாட்டில் இல்லை என்றாக்கியிருக்கிறோம். அதே மாதிரியாகத் தான் சாதாரண, நடுத்தர மக்களின் நலன் கருதி, சிமெண்ட் விலையினை குறைப்பதற்கு வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட முயற்சிகளை எடுக்காத நேரத்தில், நாம் அந்த முயற்சிகளை எடுத்து - மக்களின் கஷ்டங்களையும், கட்டுமானப் பணியாளர்களின் சிரமங்களையும் சிந்தித்துப் பார்த்து அவற்றைப் போக்கிடும் வகையில் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் என்று சலுகை விலை நிர்ணயித்திருக்கின்றோம்.


வேலையில்லாதவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, 13-5-2006இல் இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு இந்த 20 மாத காலத்தில் மட்டும் 2 இலட்சத்து 32 ஆயிரத்து 417 இளைஞர்கள் பணியிலே அமர்த்தப் பட்டுள்ளார்கள். படித்து விட்டு வேலையில்லாமல் தமிழ் நாட்டில் இருக்கின்ற எண்ணற்ற இளைஞர்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் வகையில் - அவர்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்து, இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 448 இளைஞர்களுக்கு வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இதுவரை 78 கோடி ரூபாய் இந்த அரசினால் வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே தமிழக அரசில் தொகுப்பூதியம் பெற்றுவந்த பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்ணீரைத் துடைத்திடும் வகையில் அவர்களுக்கெல்லாம் கால முறை ஊதியம் வழங்கிடுவதென்று முடிவெடுத்து, இதுவரை பள்ளிக் கல்வித் துறையில் 53 ஆயிரத்து 5 ஆசிரியர்கள்; நகராட்சி நிர்வாகத் துறையில் பொறியாளர்கள், நகர அமைப்பு அலுவலர்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என 3 ஆயிரத்து 63 பணியாளர்கள்;
மின் வாரியத் துறையில் 6 ஆயிரம் பணியாளர்கள்; மக்கள் நல்வாழ்வுத் துறையில் 1505 மருத்துவர்கள், 419 ஒப்பந்த மருந்தாளுநர்கள், 3636 செவிலியர்கள்; பொதுப்பணித் துறையில் 1056 தினக் கூலிப் பணியாளர்கள், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 258 தினக் கூலிப் பணியாளர்கள் என மொத்தம் 68 ஆயிரத்து 942 தொகுப்பூதியப் பணியாளர்கள் இந்த ஆட்சியிலே இந்த 20 மாத காலத்தில், கால முறை ஊதியம் வழங்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு மக்கள் நலப்பணியில் இந்த அரசு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், எங்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி வேலை வாங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, அதனை வாய் மொழி கோரிக்கையாக வைத்தால் ஒரு வேளை பயன் கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் மறியல், ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கைகள் மூலமாக உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக இன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகத்திலே மறியல் போராட்டத்தை நடத்துகின்றார்கள்.
சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தற்போது நியாய விலைக் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட வில்லை, இது வெறும் அறிவிப்போடு இருக்கிறது என்று ஆளுநர் உரை மீது கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்களே அறிவார்கள்.

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என்று அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே, அவர்கள் ஆட்சியிலே என்ன விலைவாசி அதலபாதாளத்திலா இருந்தது?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2001ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை எவ்வளவு, ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த அளவிற்கு விலை உயர்ந்தது என்பதை புள்ளிவிவரங்கள் கூறும்.

தற்போது நடைபெறுகின்ற ஆட்சியிலும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலுமே விலைவாசிகள் ஓரளவு ஏறி உள்ளது என்பதை நான் மறுக்கவில்லையெனினும்; அதைக் கூட மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது இங்கே பரவாயில்லை என்பதை கீழ்க்கண்ட புள்ளி விவரங்களிலிருந்து அறியலாம்.


அரிசி
தமிழ்நாட்டில் கிலோ 15 ரூபாய்
கேரளாவில் கிலோ 18.50 ரூ.
மராட்டியத்தில் கிலோ 16 ரூபாய்
டெல்லியில் கிலோ 17 ரூபாய்.

துவரம் பருப்பு.
தமிழ்நாட்டில் கிலோ 38 ரூபாய்
கர்நாடகாவில் கிலோ 42 ரூபாய்
கேரளாவில் கிலோ 48 ரூபாய்
மராட்டியத்தில் கிலோ 40 ரூ.
மேற்கு வங்கம் கிலோ 40 ரூ.
டெல்லியில் கிலோ 42 ரூ.

கடலைப் பருப்பு
தமிழ்நாட்டில் கிலோ 32 ரூ.
கேரளாவில் கிலோ 44 ரூ.
மராட்டியத்தில் கிலோ 37 ரூ.
மேற்கு வங்கத்தில் கிலோ 35 ரூ.
டெல்லியில் கிலோ 35 ரூ.

கடலை எண்ணெய்
தமிழ்நாட்டில் கிலோ 70 ரூ.
கேரளாவில் கிலோ 75 ரூ.
மராட்டியத்தில் கிலோ 93 ரூ.
மேற்கு வங்கத்தில் கிலோ 86 ரூ.
டெல்லியில் கிலோ 121 ரூ.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய பொருட்களான துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்ததாலும், சர்வதேசச் சந்தையில் விலை உயர்ந்ததாலும், இவற்றின் விலை கடந்த ஓராண்டு காலமாக நமது நாடு முழுதும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வினால் சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையிலும், இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இப்பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலமாக, சந்தை விலையை விடக் குறைவான விலையில் வழங்கும் சிறப்புத் திட்டத்தை நமது தமிழக அரசு தான் துவங்கி செயல்படுத்தி வருகிறது.

நாடெங்கிலும் இந்தப் பொருட்களின் விலையில் உயர்வு ஏற்பட்ட போதிலும், தமிழக அரசு மட்டும் தான் அரசு மானியம் அளித்து, இப்பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மேற்கூறியவாறு, சந்தை விலையைவிட குறைந்த விலையில் பொருட்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு வெளிச் சந்தையில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றின் விலை குறைந்ததையொட்டி அரசின் விற்பனை விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 13000 மெட்ரிக் டன் துவரம்பருப்பு, 8000 மெட்ரிக் டன் உளுந்தம்பருப்பு, ஒரு கோடியே 40 இலட்சம் லிட்டர் பாமாயில், 5500 மெட்ரிக் டன் மைதா, 1800 மெட்ரிக் டன் ரவை ஆகியன விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இவ்வாறு குறைந்த விலையில் வழங்கப்பட்டதோடு மட்டுமன்றி இவ்வாறு நியாய விலைக் கடைகளில் இப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதன் மூலமாக வெளிச் சந்தையிலும் துவரம்பருப்பின் விலை ரூபாய் 40 லிருந்து ரூபாய் 38 ஆகவும், உளுத்தம்பருப்பின் விலை ரூபாய் 46 லிருந்து ரூபாய் 38 ஆகவும் குறைந்துள்ளது.
பாமாயில் விலை மட்டுமே, மலேசியா போன்ற நாடுகளில் இருப்பு குறைந்ததன் காரணமாகவும், பயோடீசலுக்காக எண்ணெய்கள் பயன்படுத்தப் படுவதாலும், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து, நமது நாட்டிலும் சிறிது விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு விலைவாசி உயர் விலிருந்து பொதுமக்களைக் காக்க தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய நடவடிக்கைகள் பயனளித்துள்ளன.

அதன் தொடர்ச்சியாகத் தான் ஆளுநர் உரை விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து கட்டுக்குள் வைக்கவும், சர்வதேச அளவில் பாமாயில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டும், தற்போது பிப்ரவரி, 2008 முதல் மேலும் ஆறு மாத காலத்திற்கு சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, ரவை மற்றும் மைதா ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும், இதனால், வெளிச்சந்தை விலை ஓரளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, ஏழை, எளிய மக்கள் நியாய விலைக்கடைகள் மூலமாக இந்த அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து பெற இயலும் என்றும் அறிவித்தேன்.

அனைத்திந்திய அளவிலே கூட மத்திய அரசு; தமிழக அரசு கடைப்பிடிக்கும் இந்த முறையை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாட்டினைச் செய்தால் அது நல்ல பலனை விளைவிக்கும் என்பது என் நம்பிக்கை யாகும். மற்ற மாநிலங்களிலே விலைகள் குறையும்போது, தமிழகத்தில் மேலும் விலை குறையவும் அது உதவிடும். இந்த நமது கருத்தை வேண்டுகோளாகவே எண்ணி நடுவண் அரசு செயல்படுத்திட முன்வரலாம்.

Monday, February 04, 2008

ஓணம் பண்டிகை - தலைவர் கலைஞர் விளக்கம்!

கேள்வி :- ”ஊடல்” என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்திப் பேசப் போய்; அது, தி.மு.க. வுக்கும், பா.ம.க. வுக்கும் இடையே பெரிய விமர்சனப் பொருளாகி விட்டதே?

கலைஞர் :- ஊடல் என்றால் தவறாகப் பொருள் கொள்ளத் தேவை யில்லை.

”இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு"
என்பது குறள் - அதாவது எந்தத் தவறும் இல்லாத நிலையிலும் கூட - காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது - இப்படி ஊடல் பற்றி உரைக்கிறது அய்யன் வள்ளுவன் வழங்கியுள்ள குறள். அது மட்டுமா?

”ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்”
அதாவது; காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும். இந்த வார்த்தையைக் கூட நான் எப்போது கூறினேன் என்பதையும் நினைவூட்டிட விரும்புகிறேன். ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு என் பதில் உரையைத் தொடங்கும்போது, அதனைப் பாராட்டி பத்திரிகைகள் எழுதி யிருந்த விமர்சனங்களைக் குறிப்பிட்டேன்.

அப்போது, ”தமிழ் ஓசை, பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்ற ஏடு. இப்போது நமக்கும் அவர்களுக்கும் கொஞ்சம் ஊடல் இருந்தாலும் கூட, (இல்லை என்கிறார் கோ.க. மணி, ஊடல் இருந்தாலும்கூட என்று சொன்னதை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்)
இந்த விளக்கம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?



கேள்வி :- ”அரசியல் தலைவர்களின் தொலைபேசிப் பேச்சு ஒட்டுக் கேட்கப்பட உத்திரவிடப்படவில்லை யென்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் சிறந்த ஜனநாயக வாதி - கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கையுடையவர் - விமர்சனங்களை ஓரளவு வரவேற்பவர் - எனவே முதல்வர் கூறியதை நம்புகிறேன். சில முந்திரிக் கொட்டை அதிகாரி கள் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு நீதி விசாரணை நடத்தலாம்” என்று டாக்டர் அய்யா கூறியுள்ளது பற்றி?


கலைஞர் :- அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுவதில்லையென்று ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு தெரியாமலோ - தெரிந்தோ எந்த ஒரு அதிகாரி; அப்படி அரசியல்வாதி களின் தொலைபேசியில் ஒட்டுக் கேட்கிறார் என்பதை ஆதாரங்களுடன் வழங்கினால் அதன் மீது தக்க நடவடிக்கை எடுத்திட இந்த அரசு தயாராக இருக்கிறது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு ஏட்டிலே ஒரு செய்தி வந்தது என்பதற்காக ஒரு விசாரணை என்று ஒரு அரசு இயங்க முற்பட்டால் அது எங்கே போய் முடியும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?



கேள்வி :- மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் நாகர் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய போது, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்குதடையின்றி தொடங்கி விட்டதாகவும், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- மத்திய நிதியமைச்சரின் பேட்டி ஒவ்வொரு ஏட்டிலும் ஒவ்வொரு விதமாக வந்துள்ளது. டெல்லியிலிருந்து வரும் "எகானமிக் டைம்ஸ்" ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி தான் இந்தக் கேள்வி. மத்திய நிதி அமைச்சரின் கருத்துக்கு நான் ஏற்கனவே விளக்கம் தந்திருக்கிறேன். விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்கு தடையின்றி தொடங்கி விட்டதாக கூறுவது சரியல்ல. அதற்கு தமிழக அரசு நிச்சயமாக இடம் தராது. அதற்கு உதாரணம் தான் கடந்த இருபது மாதக் காலத்தில் அவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விடுதலைப் புலிகள் 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 92 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார் கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இன்றைக்கும் சிறையிலே 40 பேர் இருக்கிறார் கள் என்றும், அத்தனை விவரங்களையும் நான் தெரிவித்திருக்கிறேன். இதெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியும் அரசு என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா?



கேள்வி :- காங்கிரஸ் உறுப்பினர் திரு. ஞானசேகரன் சட்டப் பேரவையில் பேசும்போது உளவுத் துறையை முடுக்கி விட வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- அவரே பேசும்போது, கடந்த 2 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் தமிழகத்திலே 102 பேர் ஊடுருவி யிருக்கிறார்கள் என்றும், அவர்களில் 40 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அதற்கெல்லாம் காரணம் உளவுத் துறை முடுக்கி விடப்பட்டது தான்.

மேலும் அவரே திலீபன், செல்வராஜ் ஆகியோரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார். அதற்கும் காரணம் உளவுத் துறை முடுக்கி விடப்பட்டது தான்.

கியூ பிராஞ்சுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட ஞானசேகரன் - உளவுத் துறையைக் கண்டித்தார். வேடிக்கை என்னவென்றால் - கியூ பிராஞ்ச் என்பதே உளவுத் துறையின் கீழே செயல்படுவது தான். அது தெரியாமல் தமிழகத்தின் உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அவர் அங்கே கேட்ட போது ஆச்சரியமாக இருந்தது.



கேள்வி :- சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும், எந்தத் தடத்தில் என்பது முக்கியமல்ல, நமக்கு திட்டம் தான் முக்கியம் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் கூறியிருக்கிறாரே?

கலைஞர் :- இதே கருத்தை நானும் தொடக்கத்திலே எதிர்ப்பு கிளம்பியதுமே தெரிவித்திருக்கிறேன். ஆனால் உண்மை என்ன வென்றால் வேறு பாதை வழியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வழியில்லை என்கிறார்கள். மேலும் 60 சதவிகித அளவிற்கு மேல் திட்டம் நிறைவேற்றப் பட்டு விட்டது. இந்த நிலையிலே வேறு மாற்று வழித் தடம் என்று கூறுவது, திட்டத்தை நிறைவேற்ற விடாமல் செய்வதற்காகத் தான் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. ஆறு வழித் தடங்கள் என்று கூறப்பட்டு, அத்தனை வழித் தடங்களைப் பற்றியும் ஐம்பதாண்டு காலத்திற்கு மேல் ஆராய்ச்சி செய்யப்பட்டு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் தற்போதைய திட்டம் எடுத்துக் கொள்ளப் பட்டது. கடந்த காலத்தில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போது, யாரும் ராமர் பாலம் பற்றி சொல்லவே இல்லை என்பதும், திட்டம் தொடங்கப்பட்ட போதும் இத்தகைய எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பதும், திட்டம் தொடங்கப்பட்டு 60 சதவிகித பணிகள் நிறைவேறியுள்ள நிலையில் இந்தப் பெயரைச் சொல்லி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது திட்டத்தை நிறைவேற விடாமல் செய்வதற்கான சதி வேலை என்று தான் கருதப்படுகிறது. தென் தமிழகம் வளர்ந்து விடக் கூடாது என்பதற்காகவும், அதிலே நம்முடைய ஆட்சிக்கு பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், பல்வேறு முயற்சிகளிலே அந்த சதிகாரர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தான் உண்மை.


கேள்வி :- இன்றைய ”ஜனசக்தி" நாளிதழில் ”சட்டமன்றம் ஒரு பார்வை" என்ற தலைப்பில் இரா. பாஸ்கர் என்ற தோழர் ஒருவர் கட்டுரையைப் படித்தீர்களா?

கலைஞர் :- படித்தேன். அந்தக் கட்டுரையில் பிரதான எதிர்க் கட்சி பற்றிக் குறிப்பிடும்போது, ”பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமா என்கிற சந்தேகம் எழுகிற அளவிற்கு அந்த இயக்கத்தின் பெயரையோ, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பெயரையோ மாற்றுக் கட்சியினர் உச்சரித்தாலே அ.தி.மு.க. வினர் உரக்கக் குரல் எழுப்புவதும், அனைவருமாக எழுந்து நின்று கொண்டு கூச்சல் போடுவதுமே அக்கட்சியின் சட்டமன்ற சாதனையாக உள்ளது" என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டுரையில், ”அ.தி.மு.க. பொதுச் செயலாளரான, எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) ஏதோ சுவாரஸ்யமாகப் பேசுவதாகக் கருதி நிதியமைச்சரை நோக்கி நீ என்ன பேராசிரியரா? உதவிப் பேராசிரியர் தானே? சட்ட அமைச்சர் என்ன சட்ட நிபுணரா? தலைமைச் செயலர் திரிபாதி என்ன சட்ட மேதையா என்றெல்லாம் ஏகத்துக்கும் ஏகடியம் செய்தார். அன்றைக்கு ஜெயலலிதா அவையில் பேசிய விதமோ, தன்னை சட்ட மேதை போலக் கருதிக் கொண்டு சட்ட நுணுக்கங் களைப் புட்டு வைப்பது போல் இருந்தது. ஆளும் கட்சித் தரப்பில் எடுத்து வைத்த எதிர்க் கேள்விகளுக்குக் கூட அவரால் சரிவர பதிலளிக்க முடியாமல் திணறிப் போய், என்னைத் திசை திருப்ப முயல்கிறீர்கள் என்று கூறி, அவர் தான் திசை மாறினார்" என்றும் கட்டுரையாளர் எழுதியிருப்பது உண்மையை உணர்த்துவதாக உள்ளது.



கேள்வி :- மலையாளத்தில் ”ஓணம்” பண்டிகை கொண்டாடு கிறார்களே; அதற்கு ஒரு புராணக் கதை கூறி, அதைக் கேரள வரலாறு என்கிறார்களே?

கலைஞர் :- கதையைப் படிக்கும்போதும், பகுத்தறிவுடன் சிந்திக்கும் போதும் வரலாறு போலவே தோன்றுகிறது - மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் புராணமாகவும் தெரிகிறது. எப்படியோ இன்றைக்கு நாட்டில் நடைபெறும் நடப்புகளை இந்தக் கதை நமக்கு நினைவூட்டுகிறது! அதாவது கேரள நாட்டை மாவலி மன்னன் என்பவன் ஆண்டு வந்தான். மக்கள் தேவை களை உணர்ந்து அவற்றை நிறைவு செய்து ஆட்சி புரிந்தான். அவன் ஆட்சியில் சாதனை இல்லாத நாட்களே இல்லை. அவனை அப்படியே விட்டுக் கொண்டு போனால் பிறகு அவனை வெல்ல முடியாமல் போய் விடும்.

தேவாதி தேவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் ஆகி விடும். அதனால் அவனை உடனடியாக ஒழிக்க வேண்டுமென்று திருமாலிடம் போய் முறை யிட்டார்கள். உடனே திருமால், மாவலி மன்னனை தந்திரமாக மாளச் செய்து விட்டார். அவன் சாகும்போது திருமாலிடம் ஒரு வரம் கேட்டான். ”நான் இறந்த நாளை ஓணம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். அன்று நான் கேரளாவுக்கு வந்து என் நாட்டு மக்களைச் சந்தித்து அவர்களுடன் குதூகலமாக இருக்க வேண்டும்" என்று கேட்டான். திருமாலும் அதற்கு இணங்கி அவ்வாறே அருள் புரிந்தார். அந்த நாள் தான் மாவலி மன்னன் புகழ்பாடும் ஓணம் பண்டிகை - பூத உடலைப் புதைத்தார்கள் - மாவலியின் புகழ் உடலை அந்தப் புல்லர்களால் புதைக்க முடிந்ததா? முடியவில்லை என்பதால் தான் ”ஓணம்” விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.