Sunday, February 17, 2008

ஆன்மீகமா,அறிவியலா? கலைஞர் விளக்கம்

//வேலூர் ஷ்ரீபுரம் ஓம்தி நாராயணி பீடம் சார்பில் 320 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்கைக்கு நிதி உதவி வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. நிதி உதவியை வழங்கி, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., மூன்றாம் முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது, கிருபானந்தவாரியாரை அழைத்து கருணை இல்லம் துவக்கப்பட்டது. அதன் மூலம், ஆன்மிகம், அறிவியல் என எதைப் படித்தாலும், உணவுடன் கல்வி வழங்கப்பட்டது. 320 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு பணம் வழங்குவது சாதாரண விஷயமில்லை. நோய் வந்ததை புரிந்து கொள்ளாமல், `காத்தவராயன்' ஆவி வந்தது என தெய்வங்கள் மீது பழி சுமத்திய காலமும் உண்டு. இப்போது அனைத்தும் புரிந்து கொள்ளும் உலகமாக மாறிவிட்டது.தற்போதைய ஆட்சியில், கடந்த நவ., முதல் இதய அறுவை சிகிச்சை செய்ய ரூ.20 ஆயிரம் வரை அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. ஒரு அரசே இத்தனையும் செய்ய முடியுமா? அப்போது தான் நாராயணி பீடம் தேவைப்படுகிறது. சக்தி அம்மா என்ற இளம் துறவி ஆன்மிக தொண்டு செய்து வருகிறார். ஆன்மிகம், அறிவு இயக்கம் இரண்டும் இரட்டை குழந்தைகள். ஒட்டிப்பிறந்த குழந்தைகள் அல்ல. தனித்தனியான குழந்தைகள். ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்ள கூடாது. அவை இரண்டும் சேர்ந்தால், செயல்பட முடியாது. சென்னை அண்ணா அறிவாலயம், வேலூர் பொற்கோவில் இவை தனித்தனியாக இருந்து ஏழை மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றன. நான் இங்கு வந்ததால் நாராயணி உருவ கடவுளை ஏற்றுக் கொண்டேன் என்பது அர்த்தம் அல்ல. `கருணாநிதி கடவுளை ஏற்றுக்கொள்கிறார். கடவுள் கருணாநிதியை ஏற்றுக்கொள்கிறதா' என்பது எல்லாம் தேவை இல்லை. கடவுள் ஏற்றுக் கொள்வது போல, நல்ல விஷயங்கள் செய்தால் போதும்.ஆன்மிகம், அறிவு இரண்டும் ஒரே குறிக்கோளை நிறைவேற்றும் போது, மோதிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆன்மிகமும், அறிவு இயக்கமும் ஒன்றோடு ஒன்று மோதாமல் சமுதாய பணி செய்ய வேண்டும்.நான் அதிகாலையில் யோகா கற்றுக் கொள்கிறேன். எனக்கு கற்றுக் கொடுக்கும் தேசிக்காச்சாரியின் தகப்பனார், யோகா கற்றுக் கொண்டதால் 102 வயது வரை வாழ்ந்தார். அந்த வயது வரை வாழ நான் யோகா கற்கவில்லை. உங்களுக்கு உழைக்கவே யோகா கற்றுக் கொள்ளுகிறேன். அவர் யோகா கற்றுக்கொடுக்கும் போது, `நாராயணி நமக' என சொல்ல சொல்வார். அதை சொல்லுவதில் எனக்கு சங்கடம். அதை சொல்லிவிட்டு மறைக்கவும் என்னால் முடியாது. அவரிடம் என்னுடைய கொள்கையை திணிக்க முடியாது. `நாராயணி நமக' என்றால் `சூரிய நமஸ்காரம்' என்று அவர் சொன்னார். அதற்கு பதில், `ஞாயிறு போற்றுதல் என சொல்லலாமா' என்று கேட்டேன்.இரண்டின் பொருள் ஒன்றுதான்; ஓசை தான் வேறு. ஞாயிறு போற்றுதல் என சொல்லலாம் என தேசிகாச்சாரி கூறினார். இப்போது, அவரும் அதே தான் சொல்லி வருகிறார்.//
நன்றி-தினமலர்

தலைவர் ஆன்மீகத்திற்கு எதிரி அல்லர்.இருள் மண்டிக்கிடந்த சமூகத்தில் ஆன்மீகம் என்னும் போர்வையில் புரட்டு வேலை செய்யும் ஆசாமிகளை எதிர்க்கவே ஆன்மீகத்தையும் எதிர்க்க வேண்டிய சூழல் உருவானது.ஆன்மீகம் என்பதும் இன்பத்தை தேடி அலையும் வேட்கையில் (அல்லது தேடலில்) ஒரு கட்டம் தான் .கலைஞரும் கூட இன்பத்தைத் தேடி அலைபவர் தான்,அவருக்கு இன்பம் என்பது போராட்டம்.தமிழினத்தின் உரிமைக்காக,முன்னேற்றத்திற்காக போராடுவதே அவருக்கு இன்பம் பயப்பதாக உள்ளது.கலைஞர் வழியில் எல்லோராலும் போக முடியாது.அவர்கள் ஆன்மீக வழியிலே செல்கிறார்கள்.அவ்வாறானவர்களின் உணர்வுகளை கலைஞர் புரிந்து,மதித்து நடக்கிறார்.
இதை உணராமல் சில கோமாளிகள் கலைஞர்,கடவுளை வணங்குகிறார்,ஊருக்கு தான் உபதேசம் செய்கிறார் என்றெல்லாம் புழுதி வாரித் தூற்றுகின்றனர்.இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது ,அவர் மஞ்சள் துண்டு அணிந்து விட்டார் என்பது.கலைஞரின் புகழை குலைக்கும் முயற்சி என்பது சூரியனை போர்வை போட்டு மறைக்கும் முயற்சி தான்.ஆன்மீகத்தின் தேவையை,ஆத்திகரின் உணர்வை புரிந்து நடந்து கொண்டால் அவரும் ஆத்திகராகி விட்டார் என்று அற்ப சந்தோசம் அடைகின்றனர்.கலைஞரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு நாத்திகர் என்றே நிரூபித்து வருகிறார்.

2 comments:

Anonymous said...

Sagalagala thirudan ayya avar!
Kovilukku vijayama?

Anonymous said...

கோயில் கொள்ளையர் கூடாரமாக ஆகி விடக்கூடாது என்று சொல்பவரை நீ தான் கொள்ளையன் என்று சொல்லும் அனானி அறிவு கிஞ்சிற்றும் இல்லையா உமக்கு?