Monday, February 25, 2008

செல்வி.ஜெயலலிதாவுக்கு கலைஞர் பிறந்தநாள் வாழ்த்து.

"ஆரியக் குடும்பத்து ஆரணங்கு தான் நான்" என்று
அறை நடுவே அறைகூவல் விடுத்திட்ட அம்மையார்க்கு
அறுபதாம் அகவை வர;
வசந்தம் வந்தது என வாழ்த்துப் பாடி
ஆயிரக்கணக்கில் செலவிட்டு
அவர் சீடகோடி விளம்பரங்கள் செய்திடுங்கால்,
"சூரியக்குடும்பத்து சூழ்ச்சிகள் தாக்காது காத்திடும்
ஈரிலைப் பந்தலென" அவரை வர்ணித்து;
சூரியன் மீது சுள் என்று கோபத்தை உமிழ்கின்றாரே;
என்ன விந்தை?
அண்ணா கண்ட சின்னம் சூரியன் என்பதும்
அதன் பெயரையே டி.வி., க்கு வைத்துள்ளார் என்பதும்
அறியாமல் செய்த தவறா?
அண்ணாவையே மறந்து
அழுக்காறு மிகுந்ததின் விளைவா?
அம்மையே நீவீர்
வாழ்க நன்று;வாழ்க!

0 comments: