Friday, February 22, 2008

வருவான் புதிய பாரதி! - கலைஞர் கவிதை!!

மகளிர் நலனை முன்னிட்டு மலிவுவிலை அரிசி கொடுத்தால் - அதை
மகளிர் சிலரே கூட்டுச்சேர்ந்து கடத்தல் வேட்டை நடத்துவதோ?

தேட்டை போடும் கூட்டமொன்று இந்தத் தேசத்தில் இருக்கலாமா?
தேர்தல் அறிக்கை வாக்குறுதி; திமுக நிறைவேற்றிக் களிக்கும்போது; அதைத்

திருடிப் பிழைத்து திரவியம் குவிப்போர் திசைதிருப்ப முனையலாமா?
தின்னக் கிடைத்த உணவில் மண்ணையள்ளிப் போடுவதுதான் நியாயமாகுமா?

எத்தனை உயிர்கள் வாழ்வதற்குப் பயன்படும் அரிசி
எத்தர்கள் கூட்டம் தின்று ஏப்பமிடுவதற்கோ; அடச்சீ!

அன்பும், கருணையும் தான் அம்மாவும் தாயும்; அன்னையுமென்பார்;
அவர்களே அரிசி கடத்த ஆரம்பித்து விட்டால்;

”அக்ரமச் செயல்களிலேதான் ஆணும் பெண்ணும் சமம்” என்று
அடித்துப்பாட வருவான் புதிய பாரதி!

அதுவரையில் காத்திராமல்
அய்யாமாரே; அம்மாமாரே; -

அரிசி கடத்தல் விட்டொழிப்பீரே;
அல்லால் நல்லோர் பழிப்பாரே!

1 comments:

Anonymous said...

Ippathaan Bharathiyaith therikirathu, kalaignarukku!

vaazhtthukkal!!