Wednesday, April 29, 2009

பிரபாகரன் இல்லாத ஜெயலலிதாவின் ஈழம்

ஜெயலலிதாவும் சிங்களவனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் பேசுகிறார்கள். சிங்களவன் என்ன சொல்கிறான் என்றால், ஈழத்துக்கு இங்கே இடமில்லை வேண்டுமானால் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று. ஜெயலலிதா தனி ஈழம் அமைந்தே தீரும் என்கிறார் ஆனால் பிரபாகரனை பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. பிரபாகரன் இல்லாத இத்தகைய ஈழம் அமையத் தான் பலர் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுமாறு வெட்கமே இல்லாமல் கேட்கிறார்கள். சூது வாது தெரியாத அப்பாவி ஈழத் தமிழ்ப் பதிவர்களும் இவர்களை நண்பர்களாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்

என்ன சொன்னார் ஜெயலலிதா என்பதை ஆராயாமலே பப்பர மிட்டாய் பார்த்த பட்டிக்காட்டன் போல் தலை ஆட்டுகிறது ஒரு கூட்டம். நாளை ஜெயலலிதா வேறு எதாவது சொன்னாலும் இதே மாதிரி தான் தலை ஆட்டும் அந்த கூட்டம். ஜெயலலிதா நெருங்கிய நட்பு பேணிய சங்கராச்சாரியார், ஜெயலலிதா விமரிசையாக திருமணம் நடத்திக் காட்டிய வளர்ப்பு மகன் கதை எல்லாம் மறந்து போய்விட்டது போல் இவர்களுக்கு. அவர் அகராதியில் இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஈழத் தமிழ் பதிவர்கள் இந்த தலையாட்டும் கூட்டத்தை நம்பி இருக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இவர்களின் உள்நோக்கத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும்

தனி ஈழம் பற்றி பேசிய ஜெயலலிதா வெளிப்படையாக பிரபாகரனை பற்றி எதுவும் சொல்லவில்லை தான் ஆனால் பிரபாகரன் பற்றி தான் முன்னர் கூறிய கருத்துக்களை இன்னும் திரும்ப பெறவில்லையே. பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொன்னதையோ, புலிகளை தீவிரவாதிகள் என்று சொன்னதையோ அவர் இன்னும் மறுக்கவில்லை. மாறாக இத்தனை நாட்கள் வேனில் சென்று பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, இந்த தேர்தலில் தீவிரவாதிகள் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்து இருப்பதால் ஹெலிகாப்டரில் செல்வதாக இரு தினங்களுக்கு முன்னர் கூட குறிப்பிட்டு இருக்கிறார். இவர் பாஷையில் தீவிரவாதிகள் என்றால் யார் என்று சொல்ல தேவை இல்லை

சரி, திடீரென்று அடுத்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவும் பிரபாகரன் எனது நண்பர் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர் என்று கேட்கலாம். அவர் சொன்னாலும் சொல்வார், தேர்தல் நேரம் அல்லவா அதனால் எது வேண்டுமானாலும் சொல்லுவார். தூங்கும் கலை வல்லுநர் இப்போது தான் கூரியரில் ஒரு சி.டி. அனுப்பினார். அதை பார்த்த பின் தான் தெரிந்தது பிரபாகரன் எனது நண்பர் என்று ஒரு டுபாக்கூர் கதையை அவிழ்த்து விடுவார். அந்த கதையையும் பரப்புவதற்கு தான் ஒரு கூட்டம் தயாராய் இருக்கிறதே

ஜெயலலிதா விடாக்கண்டராம் அதனால் எப்படியும் ஈழம் பெற்று தந்துவிடுவார் என்று மாலனே ஒத்துக் கொள்கிறார். ஏற்கனவே கச்சத் தீவை மீட்பேன் என்று சூளுரைத்தவர் தானே இந்த விடாக்கண்டர், கச்சத் தீவு என்னானது என்று கொஞ்சம் மாலன் கேட்டு சொல்வாரா. அதோ பார் காகம் என்று நாம் சொன்னால் நம்பமாட்டார்கள் அதுவே அதோ பார் வெள்ளை காகம் என்று அவர்கள் சொன்னால் ஆமாம் அதுவும் தலைகீழாக பறக்கிறது என்று இவர்களும் சேர்ந்து கொள்வார்கள். நல்லா இருங்கடே!!

8 comments:

said...

:) :)

said...

ஆமாம் கருணாநிதி ரொம்ப நல்லவர் இவரது கபட நாடகங்கள் உலகறிந்ததே. ஜெயலலிதாவின் நாடகமும் அனைவருக்கும் புரியும். ஒருவரும் ஓட்டுப்பொறுக்கிகள் தான் இம்முறை அண்ணன் விஜயகாந்த் இவர்கள் இருவருக்கும் ஆப்படிப்பார் அப்போ ஓலமிடுங்கள்.

Anonymous said...

எங்க தொகுதில கை நிக்குது யாருக்கு போடறது.உங்க மனசாட்சிய கேட்டு சொல்லுங்க.

Anonymous said...

பிரபாகரன் தலைமையில் ஈழம் வந்தால் அது எவருக்கும் நல்லதில்லை.

said...

\\ஜெயலலிதா விடாக்கண்டராம் அதனால் எப்படியும் ஈழம் பெற்று தந்துவிடுவார் என்று மாலனே ஒத்துக் கொள்கிறார். ஏற்கனவே கச்சத் தீவை மீட்பேன் என்று சூளுரைத்தவர் தானே இந்த விடாக்கண்டர், கச்சத் தீவு என்னானது என்று கொஞ்சம் மாலன் கேட்டு சொல்வாரா. \\

என்ன உடன்பிறப்பு உங்களுக்கு லோ பிரஷரா என்னை மாதிரி! நானும் பிரஷரை ரைஸ் பண்ணிக்க அப்ப அப்ப மாலன் பதிவு படிப்பேன்!

said...

அனா பாருங்க கோவியார் பதிவிலே நீங்க போட்ட சிலம்பாட்டம் ஆஹா ஒதுங்கி நின்னு கண்குளிர சந்தோஷமா பார்த்துகிட்டு இருந்து கடைசியா ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன்! சூப்பர்!

Anonymous said...

சரத் பொன்சேகா ' தமிழ்னாட்டு அரசியல்வாதிகளைக் கோமாளி என்று சொன்னபோது மாலனை மறந்துபோனது ஆச்சரியமாக இருக்கின்றது.

புள்ளிராஜா

said...

\\ஜெயலலிதா விடாக்கண்டராம் அதனால் எப்படியும் ஈழம் பெற்று தந்துவிடுவார் என்று மாலனே ஒத்துக் கொள்கிறார். ஏற்கனவே கச்சத் தீவை மீட்பேன் என்று சூளுரைத்தவர் தானே இந்த விடாக்கண்டர், கச்சத் தீவு என்னானது என்று கொஞ்சம் மாலன் கேட்டு சொல்வாரா. \\

JAYANEWSல வேலை கிடைக்கறதுக்காக காமெடி பண்றார், எல்லோரும் சிரிச்சு வைங்க...