Wednesday, April 18, 2007

அரட்டை கச்சேரி

குடுமி1: வாங்கோண்ணா! நமஸ்காரம்...

குடுமி2: நமஸ்காரம்டா அம்பி.. நல்லாயிருக்கேலா?

குடுமி1: எங்கண்ணா இப்பெல்லாம் நாடு போற போக்கே சரியில்ல.. இனி கொஞ்சம் கஷ்டம் தான்..

குடுமி2: ஏண்டா அம்பி.. இப்படி பேசற

குடுமி1: இல்லண்ணா. இப்ப அரசாங்கம் அனைவரும் அர்ச்சகர் ஆகாலாம்ன்னு பெரியார் அப்ப சொன்னத இப்ப செயல்படுத்திட்டா. அதோட இப்ப அரசாங்கம் எல்லோரும் படிக்க அப்ளிகேசன் வேற வாங்கிட்டாங்க. அதான் இனி கொஞ்சம் கஷ்டம்.

குடுமி2: அதனால் என்ன?

குடுமி1: இல்ல இன்னைக்கு படிக்க வைக்கிறா. நாளைக்கு அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் எல்லாத்திலேயும் இப்படி படிச்சாவவெல்லாத்தையும் இடஒதுக்கீடு அப்படின்னு சொல்லி நம்மல தூக்கிட்டு போஸ்டிங் போட்டுட்டாங்கன்னா. என்ன பண்றது. ஏன்னா இப்ப இதுவும் ஒரு தொழில் ஆயிடிச்சு. மொதல்ல ஏமாத்திகிட்டு இருந்தோம். இப்ப மக்கள் புரிஞ்சிகிட்டு கேள்வி கேக்கிறாங்க. இன்கம்டாக்ஸ் வேற கட்டறமாதிரி நோட்டிஸ் எல்லாம் வருது. போற போக்க பார்த்த மடம் எல்லாத்தையும் அரசு கையகப்படுத்திடுச்சினா. பல ஆயிரம் கோடிகள் இருக்குது. நாம பரவாயில்லை. மடம் ஓனருங்களுக்கெல்லாம் இன்னும் கஷ்டம் தான்.

குடுமி2: இடஒதுக்கீடுன்னா கேஸ் போட்டுவோம் ஓய். நம்மவா விட்டுவாளா?

குடுமி1: அப்படி நினைக்காதண்ணா. உயர்கல்வியில் இடஒதுக்கிடு கொண்டு வந்து அடிமடியில கைய வச்சிட்டா. தா.பாண்டியன் சொன்னத கேட்டியேலா?

" இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி தொடர்பான பிரச்சனை. இது போன்ற பிரச்சனைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தடுக்க ஒரு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் " (இந்திய கம்யூ தலைவர் தா.பாண்டியன்)

அப்படி ஏதாவது கொண்டுவந்துட்டா அவ்வளவு தான். திக வேற நீதிமன்றத்திலேயும் இடஒதுக்கிடு கேக்கிறா. என்னவாகப்போவதோ.

குடுமி2: எனக்கு வயசாயிடிச்சி. அதான் இதுபோல செய்தியெல்லாம் படிக்கறது இல்ல. எல்லாத்துக்கும் காரணம் அந்த பெரியார் தான். அவர் ஆரம்பிச்சு வச்சார். அத பாலோ பண்ணிட்டே வந்துட்டா நம்மூர்ல. நாம அடங்கிட்டோம் இங்கே வேற வழி இல்லாமா. இதுல பொருளாதாரத்திற்கும் எதற்கும் சம்பந்தமில்லை. இப்ப வடக்கு பக்கமும் இது போல ஒரு இயக்கம் ஆரம்பிச்சிட்டா. போற போக்க பார்த்தா வடக்கிலேயும் நாம மாறாவேண்டியது தான். இனியும் பழைய குப்பைய வச்சிக்கிட்டு ஓட்டமுடியுமா? உண்மையில் பெரியார் சூப்பர்மேன் தான் அம்பி.

குடிமி1: வடக்கு பக்கம் என்ன இயக்கம்? எனக்கு தெரியாதுண்ணா?

குடுமி2: சங்பரிவாருக்கு சவால் விடும் சூத்ரா அமைப்பு அதோட கொள்கை பரப்புச் செயலாளார் இப்படி பேசியிருக்கார் : "தயாராக இருக்கச் சொல்லுங்கள் அவர்களை! ஆரிய வர்த்தத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்க பெரியார் பூமியாம் தமிழ்நாட்டிலிருந்து எழுச்சிச் சுடரேந்தி வருகிறேன்" என்று உணர்ச்சிபொங்கப் பேசுகிறார் ஜே.பி.பாபு உத்தரப்பிரதேசத்தில் கடந்த இரண்டாண்டு களாக இயங்கிவரும் 'வி°வ சூத்திர மகா சபா' அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர். அவரோட பேட்டிய படிக்க இங்க போடா அம்பி
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=6369&hl=

குடுமி1: அவா நம்மவாவ ஒடுக்காம விடமாட்டா போலிருக்குது.

3 comments:

said...

:-))))

said...

I read ur post regularly. Each and every post is very good.

Thalaivar pugal parapum ungaluku En manamaartha vaazhthukal Nanbare.

Anonymous said...

பேசும் பொழுதுதான் 'அவாள், இவாள்' ன்னு சொல்லாம 'அவால்-இவால்' என்றெல்லாம் வருகிறதென்றால், நாக்குல தர்பையைப் போட்டு கொளுத்த வேண்டும் என்பார்கள்....எழுதும்போதுமா இந்த பிழைகள்?...இந்த லட்சணத்தில் இவர்கள் தமிழை வாழவைக்கிறார்களாம்...வெட்கம்,வெட்கம்.