Wednesday, September 20, 2006

என் தம்பி - அறிஞர் அண்ணா

"என் தம்பி கருணாநிதியின் தமிழ் ஆளுந்திறன், பாத்திரங்களைப் படைக்கும் உயர்தனி ஆற்றல் ஊரும் உலகமும் அறிந்தது; அறிந்து மகிழ்ந்தது; மகிழ்ந்து பாராட்டியது! அவரது எழுத் தோவியத்தில் போற்றத்தகும் முறையில் நற்பணியைச் செய்தவர்.

சிலப்பதிகாரத்தில் தனது வாதங்களை முன் வைத்தாள் கண்ணகி! அவளது எழுச்சிமிகு பேச்சையும் எச்சரிக்கையையும் என் தம்பி எடுத்துரைக்கும் போது மயிர் கூச்செறிகிறது.

கண்ணகியின் ஆத்திரத்தை உணர்ச்சி உருவோடு அமைப்பது ஒரு எழுத்தாளனுக்கு எளிதான காரியமல்ல; ஆனால் கருணாநிதி யாரையும் வீஞ்சுகின்ற அளவில் வெற்றி கொண்டுள்ளார். தான் ஒரு ஒப்புவமையற்ற நடையழகு காட்டும் எழுத்தாளர் என்பதால்!''

பேரறிஞர் அண்ணா (கலைஞரின் சிலப்பதிகார நாடக நூலுக்கு எழுதிய அணிந்துரையில் - 9.1.1968)

1 comments:

Anonymous said...

Enjoyed reading the article. Keep it up!