Friday, May 29, 2009

தோல்வியால் சோர்ந்துவிடாதீர்கள் எதிரிகளே

நேற்று திருமண விழா ஒன்றில் பேசிய கலைஞர் அவர்கள் ஆரியர் - திராவிட போராட்டம் பற்றி பேசிவிட்டாராம் உடனே பொங்கி எழுந்துவிட்டார்கள் வலையுலக நடுநிலைவாதிகள். நடுநிலைவாதிகள் என்றால் கலைஞரை மட்டும் விமர்சிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது போலும். கலைஞரின் பேச்சில் குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பார்கள் என்பதற்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் தேவை இல்லை.

கலைஞரின் பேச்சில் முதல் வரியிலேயே அவர் சொன்னது தோல்வியால் துவண்டுவிடாதீர்கள் எதிரிகளே எங்களை தொடர்ந்து விமர்சித்து கொண்டே இருங்கள் என்று சொன்னார். அப்படி சொன்னதோடு நிற்காமல் எதிரிகளுக்கு தேவையான பாயிண்டுகளையும் அவரே எடுத்து கொடுத்து இருக்கிறார். அது தான் ஆரியர் - திராவிட போராட்டம். கலைஞர் சொன்னது போலவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள் எதிரிகள். கலைஞரை பின்பற்றுவதில் உடன்பிறப்புகளையும் மிஞ்சிவிட்டார்கள்

யார் ஒருவர் தன் தாளங்களுக்கு ஏற்ப மற்றவர்களை ஆட்டுவிக்கிறாரோ அவரே உண்மையாண தலைவர். அந்த வகையில் எதிரிகளின் நாடித் துடிப்பை மிக துல்லியமாக அறிந்து வைத்து இருக்கிறார் கலைஞர். சோர்ந்துவிடாதீர்கள் எதிரிகளே

4 comments:

said...

ஓகே பாஸ். தேங்க்யூ

said...

அட்ரா சக்கை! பத்து வரியும் முத்து வரி பதிவு!

said...

//அதிஷா said...

ஓகே பாஸ். தேங்க்யூ
//

பாஸ். நான் உங்களை சொல்லவில்லை

said...

நன்றி அபிஅப்பா