Thursday, May 07, 2009

வைகோவுக்கு சவால்



ஈழம் பெற்று தந்துவிடுவேன் என்று சொன்னதற்காக கேட்ட ஆறு தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை நாலு சீட்டுகள் கிடைத்தாலே போதும் என்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருப்பதாக சொல்லும் வைகோ அவர்களே உங்களுக்கு ஒரு சவால். உங்கள் கூட்டணி கட்சி தலைவியுடன் ஒரே மேடையில் உங்கள் டிரேட் மார்க் பேச்சான ரத்த ஆறு பேச்சை பேச முடியுமா. அல்லது குறைந்தபட்சம் பிரபாகரன் பேரையாவது ஜெயலலிதா முன்னிலையில் உச்சரிக்க முடியுமா? ஏற்கனவே ஒரு முறை ரத்த ஆறு என்று பேசிவிட்டு பின்னர் "அந்த" அர்த்தத்தில் கூறவில்லை என்று அந்தர் பல்டி அடித்ததும் அதன் பிறகு வாயை பொத்திக் கொண்டு சமர்த்தாக இருப்பதற்கும் என்ன காரணம் வைகோ அவர்களே

10 comments:

Anonymous said...

Kalignar mathirithaan ivarum komedi pantraar illa

said...

//Anonymous said...

Kalignar mathirithaan ivarum komedi pantraar illa
//

ஆனால் எல்லா அறிவாளிகளும் கலைஞரை மட்டும் தான் காய்ச்சி எடுக்கிறார்கள்

said...

எதைத் தின்றால் பித்தம் தெளியும்?
இஞ்சி தின்றால் பித்தம் தெளியும்
அல்லது எலுமிச்சம் பழத்தை இரண்டாய் நறுக்கி உச்சந்தலையில் நன்றாக தேய்த்து விட கொண்ட பித்தம் தானே விலகும்.

said...

யாருக்கு என்று சொல்லவே இல்லையே பின்னூட்டம் பெரியசாமி அண்ணே

said...

உங்கள் கேள்வி நல்லா இருக்கிறது உடன் பிறப்பே வைகோ ஜெயாவுடன் கூட்டணி வைத்த பின்னரும் தன்னுடைய ஈழ ஆதரவிளிருந்தோ இல்லை விடுதலை புலிகளின் நிலை பாட்டிலிருந்தோ என்றுமே மாறியதில்லை . கலைஞர் அவர்கள் அண்ணா துவங்கிய கட்சியை தன குடும்பத்திற்காக எழுதி வைத்து கொண்டு சுயநல பதவி ஆசையோடு தான் செயல் படுகிறார் .

தமிழை சொல்லி ஆட்சியை பிடித்து தமிழனின் சுய மரியாதையை சோனியாவிடம் அடகு வைத்த காரணம் என்ன .

said...

சுரேஷ் குமார்! ஈழம் பற்றி கலைஞர் முதல் அனைவரும் பேசுகிறார்கள், இங்கு கேள்வி பிரபாகரன் பற்றியது, இந்த விஷயத்தில் ஜெவும் வைகோவும் நேரெதிர் நிலைப்பாடு உடையவர்கள்

said...

ஆனால் ஈழம் என்ற பார்வையில் ஒன்றுப்பட்டு உள்ளார்கள், கருணாநிதியை முதலில் தெளிவாக முடிவு எடுக்க சொல்லுங்கள் போன வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிலை எங்கள் நிலை, இன்று விடுத்த அறைகூவல் நம்புங்கள் ஈழம் அமைக்க பாடுபடுவேன்.

Anonymous said...

திமுகவின் எதிரிகள் என்று பார்த்தால்,

ஜெயலலிதா - கன்னடம்
வைகோ - தெலுங்கு
எம்ஜியார்- மலையாளி
பிரபாகரன் - மலையாளி

இவர்கள் கலைஞரை தமிழருக்கு துரோகம் செய்ததாக கூறுவது எப்படிப்பட்ட நடிப்பு!

கலைஞர் தமிழர்கள் மீது பொறுப்பு மிக்கவர். இவர்களை போல கொலைவெறி ரத்தவெறி பிடித்தவரில்லை.

Anonymous said...

பிரபாகரன் மலையாளியா?

அதனால் தான் எம்ஜிராமச்சந்திரனை பக்கம் ஒதுங்கிவிட்டாரா?

Anonymous said...

தமிழினத்தலைவர் ஒரே ஒருவர்தான்.

அவர் கலைஞர் மட்டுமே.

மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் தமிழினத்தலைவராக முடியாது.

மலையாளி பிரபாகரனை வைத்துக்கொண்டு தமிழினத்தலைவரை இழிவு படுத்துவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமுடியாது.

இதே கும்பல்தான் முன்பு மலையாளி எம்ஜியாரை வைத்துக்கொண்டு கலைஞரை அவமானப்படுத்த முயற்சி செய்தது, பின்னர் கன்னடிகா ஜெயலலிதாவை வைத்து அவமானப்படுத்த முயற்சி செய்தது பின்னே தெலுங்கு கோபால்சாமி நாயுடுவை வைத்து அவமானப்படுத்த முயற்சி செய்தது.

எல்லாமே மண்ணைக்கவ்வியது.

தமிழின உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் வாழும் மற்ற மொழிபேசும் மக்களுக்கு எதிரிகளல்ல. ஆனால், அவர்கள் தமிழினத்தலைவர் என்று தங்களுக்குத்தாங்களே பட்டம் சூட்டிக்கொள்வதோ, அதன் மூலம் கலைஞரை அவமரியாதை செய்ய நினைப்பதோ அனுமதிக்கமுடியாது.

இன்று மலையாளி பிரபாகரனையே தமிழினத்தலைவர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு சில தமிழுணர்வாளர்கள் சிதைவுண்டிருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணா கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.

கத்தியை வைத்து உணர்வுப்பெருக்கத்தை ஏற்படுத்திவிடலாம். அதன் பின தமிழுணர்வாளர்கள் உணர்வுப்பெருக்கில் ஆதரவாகவும் நின்றிடலாம்.

ஆனால் புத்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிஞர் அண்ணாவின் வழி நின்று தமிழர்களை அரவணைத்து வழிநடத்திச் செல்லும் தங்கத்தலைவர் கலைஞரை காலம் போற்றும்.

வாழ்க கலைஞர், அவரே ஒரே தமிழினத்தலைவர்.