Saturday, May 23, 2009

இத்தாலிய ராணி இந்திய ராணி ஆன கதை


வர வர பதிவர்களின் காமெடி டைம் எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறது. நேற்று வரை திருமதி.சோனியா காந்தி அவர்களை எப்படி எல்லாம் வசை மாறி பொழிந்தார்கள் இத்தாலிய ராணி என்று சொல்லி வந்தார்கள். இன்று ஒரே நாளில் இத்தாலிய ராணி அவர்களுக்கு எல்லாம் இந்திய ராணி ஆகிவிட்டார். அதற்கு காரணம் மந்திரி சபை தொடர்பாக தொடர்ந்து வரும் இழுபறி தான்

இதே காங்கிரஸ் அரசு தானே தமிழர்களை கொல்ல துணை போவதாக நேற்று வரை சொல்லி வந்தார்கள் இன்று அதே காங்கிரசுக்கு இவர்கள் துதி பாடுகிறார்களே. இப்போதாவது புரிகிறதா இவர்களுக்கு இருப்பதெல்லாம் தமிழன் மீது உள்ள பற்றா அல்லது தி.மு.க. மீது உள்ள வெறுப்பா என்று. தமிழ்நண்டு கதையில் வரும் நண்டுகள் யாரென்று தெரிகிறதா இப்போது

வெறும் ஜாதி கட்சி நடத்துபவர்களே 7 + 1 என்று கறாராக பேசி காரியத்தை கச்சிதமாக முடிக்கிறார்கள். எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி வெற்றி பெற்று கொடுத்துவர்கள் என்பதால் இழுபறி இருக்கதானே செய்யும். மன்மோகன் சிங் அவர்களே தி.மு.க. அமைச்சர்கள் திரும்பி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்

தமிழ்நண்டு பதிவர்கள் இத்தனை நாள் திருமதி.சோனியா காந்தி அவர்களை அர்ச்சனை செய்து வந்தார்கள் இனிமேல் தினம் தினம் காவடி தான்

3 comments:

Vadivel said...

Thamasu! Thamasu! Thamasu!

Anonymous said...

//இனிமேல் தினம் தினம் காவடி தான்//

இனிமேல் தினம் தினம் காமெடி தான்

Anonymous said...

3 கேபினட் கன்பார்ம் மாதிரி தெரியுதே