Thursday, January 10, 2008

உளியின் ஓசை - கலைஞர் பாடல்!


தலைவர் கலைஞர் கதை வசனம் எழுதியிருக்கும் ‘உளியின் ஓசை' படத்துக்கு ஒரு பாடலையும் சமீபத்தில் எழுதியிருக்கிறார். அப்பாடலை இசைஞானி இளையராஜா பாடி இசையமைக்கிறார்.

அலை யெலாம் நடனம் ஆடும்: தமிழர்
கலை யெலாம் தமது பண்பைப் பாடும்.
காடுகளில் ஓடி விளையாடுகின்ற
பீடு மிகு மானினமும்,

பாடும் இசை
ஜோடிக் குயில்
தாளமொடு
பாவ மிடு
கான மயில்
புள்ளினமும்

பட்டுக்கொடி,
கொற்றக் குடை
சுற்றிச் சுழல்
வெற்றித் திரு
முத்துத் தமிழ்
கற்றுச் சுடர்
பெற்றுக் குலச்
சோழ தேசப்
புகழ் பாடித்
தொழுதிடுவோம்


1 comments:

said...

முதல்வருக்கு என் வாழ்த்துக்கள்

உங்கள் வருகையியும் உங்கள் விமர்சனத்தையும் எதிர்பார்கிறேன்

வால்பையன்