Wednesday, March 28, 2007

பா.ம.க. ஒரு நல்ல எதிர்க்கட்சியா?

கடந்த சில நாட்களாக தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் அறிக்கைப் போர் நடந்து வருகிறது. பா.ம.க. தலைவர் இராமதாஸ் அவர்கள் தி.மு.க. அரசு மீது மதுவிலக்கு மற்றும் பல விஷயங்களில் குறை கூறி வருகிறார். இதற்கு இராமதாஸ் அவர்கள் கூறும் காரணம் பா.ம.க. ஒரு நல்ல எதிர்க்கட்சியாகவும் செயல்படும் என்று பதில் சொல்கிறார். ஒரு கூட்டணி கட்சி ஒரு நல்ல எதிர்க்கட்சியாகவும் செயல்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கூட்டணி கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வேறுபாடுகள் உண்டு என்பதை அவர் உணர வேண்டும்

எதிர்க்கட்சிகளுக்கு என்று ஒரு பொறுப்பு இருந்தாலும் அவர்கள் அதை மதிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் சட்டசபையில் அமளி செய்யலாம், மைக்குகளை பிடுங்கி எறியலாம், ஏன், உண்ணாவிரதம்(???) கூட இருக்கலாம். ஆனால் கூட்டணி கட்சிகள் இப்படி எல்லாம் நடந்து கொள்வது நல்லதல்ல. ஏதாவது பிரச்சினை இருந்தால் முதல்வரை நேரிலேயே சந்தித்து தீர்வு காணலாம். அதை விட்டுவிட்டு பத்திரிக்கைகளில் அறிக்கை விடுவது நல்லதல்ல

பிரச்சினை முதலில் வீரபாண்டியார் விஷயத்தில் இருந்து ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். வீரபாண்டியார் தன் கட்சிக்காரர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் பா.ம.க.வை மதிக்கவில்லை பா.ம.க.வினருக்கு சில பொறுப்புக்களை வழங்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு. கடந்த தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை பிற கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துவுட்டு கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தது தி.மு.க. தேர்தலில் சீட் கிடைக்காத கட்சியினருக்கு இப்படி மற்ற பொறுப்புகளை வழங்கி அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பது இயல்பானது தான். இது கூட தெரியாமல் ஒருவர் அரசியல் நடத்தலாமா. இது அரசியலில் பாலபாடம். அப்படி என்றால் தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டபோது என்ன செய்து கொண்டு இருந்தார்

பா.ம.க.வுக்கு எப்போதுமே ஒரு இமேஜ் உண்டு. அது தேர்தலுக்கு முன் ஒரு மாதிரியும் தேர்தலுக்குப் பின் வேறு மாதிரியும் நடந்து கொள்வது. அது இப்போது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது

22 comments:

said...

இவ்வளவு நாள் அது வேதாளமாக தெரியவில்லையோ??? வேண்டுமெனில் அரவணைப்பதும், தேவையில்லை என்றால் எட்டி உதைப்பதுதான் இப்போதைய அரசியலின் பால பாடம். மருத்துவர் அதை என்றுமே சிறப்பாக செய்து வருகிறார்.

said...

அருமையான அலசல் பாஸ்.பா.ம.க வுக்கு ஆப்பு வைக்கும் படலம் ஆரம்பமாகி விட்டது.

said...

//கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தது தி.மு.க//

கூட்டணி ஆட்சியா? நல்ல காமடி லக்கி. திமுக மட்டும் தானே அமைச்சரவையில் இருக்கிறது?

பின்னர் இது எப்படி கூட்டணி ஆட்சியாகும்?

மத்தியில் நடக்கின்றதே அது தான் கூட்டணி அரசு.

தமிழகத்தில் மைனாரிட்டி அரசுக்கு வெளியில் இருந்து சில கட்சிகள் ஆதரவு தருகின்றன.அவ்வளவுதான்.

பாமக ஒரு நல்ல எதிர்க்கட்சியாகவே செயல்படுகின்றது. அரசின் தவறுகளை விமர்சித்தாலோ, அரசுக்கு பொதுப் பிரச்சினைகளில் அறிவுரை கூறினால் தான் அது நல்ல எதிர்க்கட்சி. ஆகவே பாமக நல்ல எதிர்க்கட்சி.

கூட்டணிக் கட்சியாக இருந்து திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதை விட மக்களுக்காகக் கேள்வி கேட்கும் பாமக நல்ல எதிர்கட்சியே.

Anonymous said...

Righly said, It is his basic character. He behaves differently after the election.

said...

//இவ்வளவு நாள் அது வேதாளமாக தெரியவில்லையோ??? //

வேதாளம் திருந்திவிட்டதோ என்று நினைத்தோம் அது இயல்பு மாறாது என்று நிரூபித்துவிட்டது

said...

நன்றி ஜாலிஜம்பர், ஆப்பு தொடரும்

said...

//கூட்டணி ஆட்சியா? நல்ல காமடி லக்கி. திமுக மட்டும் தானே அமைச்சரவையில் இருக்கிறது?//

அரசியல் அடிப்படை தெரியாமல் பேச வேண்டாம் மகேஸ்

தனிப்பெருமாண்மையுடன் ஆட்சி அமைத்து அமைச்சரவையில் இடம் கொடுப்பது கூட்டணி ஆட்சி ஆகாது. அது மாதிரி அது மாதிரி ஆட்சியில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவையை மாற்றிக் கொள்ளலாம்

இராமதாஸ் அவர்கள் மாதிரியே பேசுறீங்க

said...

உடன்பிறப்பு அய்யா,

நீங்க என்ன தான் மஞ்ச துண்டு அய்யாவுக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்தாலும்,கொள்கை என்று வரும் போது,மரம் வெட்டி அய்யாவுக்கு முன் மஞ்ச துண்டு கால் தூசி தான்.உங்களை மாதிரி பிரியாணி பொட்டல கேஸ் தான் மஞ்ச துண்டை சிலாகிக்கும்.

பாலா

said...

//கூட்டணி ஆட்சியா? நல்ல காமடி லக்கி. திமுக மட்டும் தானே அமைச்சரவையில் இருக்கிறது?//

மகேஷ் கட்டுரையை எழுதியது நானல்ல. நமது தோழர் உடன்பிறப்பு. எனினும் அவர் எழுதியதில் எனக்கு 100 சதவிகிதம் உடன்பாடு உண்டு.

அருமையான கட்டுரை அளித்த தோழர் உடன்பிறப்புக்கு நன்றி!!!!

said...

//மக்களுக்காகக் கேள்வி கேட்கும் பாமக //

பா.ம.க. எப்போதும் வட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்காக மட்டும் தான் கேள்வி கேட்குமா? தென் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா?

Anonymous said...

welldone udanpirapu

said...

//பா.ம.க. எப்போதும் வட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்காக மட்டும் தான் கேள்வி கேட்குமா? தென் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா?
//

இது நான் கேட்கும் கேள்வியைத் திசை திருப்பும் வகையிலான எதிர்க்கேள்வி.
நானும் இதே போலக் கேட்க வேண்டும் என்றால் 'சென்னை சங்கமம் நிகழ்சி குறித்து ஜெயா டீவி கேட்ட கேள்விகளுக்குப் பதில் என்ன?'

said...

//தனிப்பெருமாண்மையுடன் ஆட்சி அமைத்து அமைச்சரவையில் இடம் கொடுப்பது கூட்டணி ஆட்சி ஆகாது//

96 MLA தனிப் பெரும்பான்மை என்றால் கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமல் ஆட்சி அமைக்க முயற்சி செய்து பாருங்களேன். கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடப்பதால் தற்போதய திமுக அரசு கூட்டணி அரசே. அரசுக்கு ஒருவரின் தயவு வேண்டும் என்றால் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

//பா.ம.க. எப்போதும் வட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்காக மட்டும் தான் கேள்வி கேட்குமா?//
பாமக மக்களுக்காக கேள்விகள் கேட்டு அரசிடம் போராடுகிறது என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.

Anonymous said...

உடன்பிறப்பு அய்யா,

நாங்க என்ன தான் காமகேடிகளுக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்தாலும்,பொழைப்பு என்று வரும் எவன் காலை வேணும்னாலும் நக்குவோம்.எங்களை மாதிரி உண்டகட்டி கேஸ் தான் காமகேடிகளை சிலாகிக்கும்.

உடன்பிறப்பு அய்யா மேலே இருக்கும் பாலா என்ற பெயரிலான பின்னூட்டம் எவனோ பேமானி போட்டது. தயவுசெய்து அதை நீக்கிவிடவும்.

பாலா

said...

அய்யா,
இதில லக்கிலுக் யாரு, உடன்பிறப்பு யாருய்யா? (இந்த அய்யா வியாதி எப்ப போகும்ன்னு தெரியலை)

said...

//96 MLA தனிப் பெரும்பான்மை என்றால் கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமல் ஆட்சி அமைக்க முயற்சி செய்து பாருங்களேன்//

இப்போது புரிகிறதா இது கூட்டணி ஆட்சி தான் என்று. அமைச்சாரவையில் இடம் கொடுத்தால் மட்டுமே கூட்டணி அரசு ஆகாது என்பதை தான் நானும் சொல்ல வந்தேன்

//பாமக மக்களுக்காக கேள்விகள் கேட்டு அரசிடம் போராடுகிறது என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி//

நான் சொல்ல வந்ததை இன்னும் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்

said...

//நான் சொல்ல வந்ததை இன்னும் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்//

அய்யா நீங்கள் சொல்ல வருவது நன்றாகப் புரிகிறது. நீங்கள் செய்வது வாதத்தைத் திசை திருப்பும் வேலை. அதே வழியில் சென்னை சங்கமம் குறித்து நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலையே கானோமே? உண்மை சுடுகிறதா?

//இப்போது புரிகிறதா இது கூட்டணி ஆட்சி தான் என்று. அமைச்சாரவையில் இடம் கொடுத்தால் மட்டுமே கூட்டணி அரசு ஆகாது என்பதை தான் நானும் சொல்ல வந்தேன்
//
அடுத்தவர்களின் தயவில் ஆட்சி செய்து கொண்டு, அவர்களையே ஏறி மிதிப்பது தான் உடன்பிறப்புகளின் கொள்கையோ?

Anonymous said...

//'சென்னை சங்கமம் நிகழ்சி குறித்து ஜெயா டீவி கேட்ட கேள்விகளுக்குப் பதில் என்ன?'//

அதற்காக சென்னை மையம் அளித்திருக்கும் பதில்களுக்கு உங்களுடைய விளக்கம் என்ன?

கேள்வி கேட்பதாக இருந்தால் யாரு வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் லூசுத்தனமா கேள்வி கேட்கலாம்.

பாப்பானுக்கு தமிழ், தமிழன்னாலே ஆவாது. அவனுங்களுக்கு திமுகவை யாரெல்லாம் எதிர்க்கிறாங்களோ அப்போதைக்கு அவங்கள்லாம் நல்லவனுங்க.

பாப்பார பயலுக கேட்குற பன்னாடை கேள்விகளை எல்லாம் இங்கே அனுமதிக்கனுமா?

said...

//சென்னை சங்கமம் குறித்து நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலையே கானோமே? உண்மை சுடுகிறதா?//

சென்னை சங்கமம் பற்றிய உங்கள் கேள்விக்கு விரைவிலேயே பதில் அளிக்கிறேன்

said...

//அடுத்தவர்களின் தயவில் ஆட்சி செய்து கொண்டு, அவர்களையே ஏறி மிதிப்பது தான் உடன்பிறப்புகளின் கொள்கையோ?//

கூட்டணி கட்சிகளின் தொல்லைகளை பொறுத்துக் கொள்வது தான் உடன்பிறப்புகளின் கொள்கை

Anonymous said...

ஹிஹி.மகேஷ் சங்கமத்தை பத்தி அப்படி என்னய்யா கேட்டார்? அந்த அறிவுபூர்வமான கேள்வி தான் என்ன? என்ன?

Anonymous said...

அம்மா ஆட்சின்னா மூடிட்டு இருப்பானுங்க.கலைஞர்னா கத்துவானுங்க. ராமதாஸ் இருந்து மகேஷ் வரைக்கும்.

வெட்கம்