Friday, November 09, 2007

தலைவர் கலைஞரின் முதல்வர் பதவி முட்டாள்களுக்கு உறுத்தல்!


ஈழத்தமிழர்கள் குறித்து வெளிப்படையான தன் எண்ணத்தைச் சொல்லி அல்லது ஈழத்தமிழர்களின் நலனுக்காக கலைஞர் பதவி துறப்பாரா? போன்ற அரைவேக்காட்டுத்தானமான கேள்விகள் எழுகின்றன. அதை எழுப்புபவர்கள் ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்டவர்களா? இதற்கு முன்பாக ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்தவர்களா? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர்களந்து நோக்கமென்ன என்பதையும் தமிழர்கள் உணரவேண்டும்.

ராஜிவ் காந்தி கொலையை திமுக தூண்டிவிட்டு நடத்தியதாக வாக்களர்களை நம்ப வைத்து பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்த ஜெயலலிதாவை அடுத்த தேர்தலின் போதே வாக்காளர்கள் உணர்ந்து கொண்டு வீட்டுக்கு அனுப்பினர். தன் வெற்றிக்கு இராஜிவின் மரணம் மூலதனம் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்த ஜெ தன் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக ஒரு கட்டத்தில் அறிவித்து காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தினர்.

ஜெ வின் அரசியலை நன்றாக புரிந்து கொண்ட மக்கள் அடுத்த தேர்தலில் பர்கூரில் அவரை புறமுதுகிட்டு ஓட வைத்தனர். 1996 ல் நடந்த தேர்தலில் கலைஞரின் திமுக ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிபுரிந்து சமத்துவ புரம், ஏழைப்பெண்களுக்கு இலவச திருமணம் போன்று பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தது.

ஜெ ஆட்சியில் கிராமங்களில் கஞ்சி தொட்டி திறந்தது போன்ற அவல நிலை எதுவும் இல்லாவிட்டாலும் 'பணப் புழக்கம் இல்லை' என்ற பொய்பிரச்சாரத்தை ஆதிக்க பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுத்து அதைப்பற்றியே அந்த பத்திரிக்கைகளில் தலையங்கமாக எழுத / பேச வைத்து மக்கள் மனதில் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தினார் ஜெ. இதற்காக அவரது குலக்கொழுந்துகளான சோ வகையறாக்கள் பெரிதும் உதவினர்.

அதுமட்டுமல்ல லெட்டர் பேடு கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்ந்து கொண்டு மாபெரும் கூட்டணி என்ற மாயை ஏற்படுத்தியும், மதிமுக - திமுக கடைசி கட்ட மோதல்களில் தனித் தனியாக பிரிந்ததன் மூலம் குறைந்த வாக்கு வேறுபாட்டில் பல இடங்களிலும், மூப்பனார் தாமாக தந்த தமாகா கூட்டணி (செத்தும் கெடுத்தார் இந்த சீதக்காதி) தயவினாலும் அதிமுக வெற்றி பெற்றது.

இதையெல்லாம் அரசியல் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு என்ற இமேஜ் அவர் பர்கூரில் யானையின் காதில் புகுந்த சிற்றெறும்பான சுகவனத்திடம் தோற்றபோதே உடைந்துவிட்டது. சென்ற தேர்தலில் கூட்டணிக்காக ஜெ எவ்வளவோ முயன்றும் காங்கிரஸ் அதிமுகவை நெருங்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதால் வேறு வழியின்றி தானே விலங்கு மாட்டிய வைகோவிற்கு தன் கையால் பூச்செண்டு கொடுத்து போஸ் கொடுத்தார். அரசியலில் நேர்மையோ, வெட்கமோ எதுவும் இல்லை என்பதற்கு சாட்சியாக இருவரின் புகைப்படமும் வரலாறு படைத்தது. தமிழின வரலாற்றில் எட்டப்பனுக்கு இணையான இடம் வைகோவுக்கும் கிடைத்தது.

கடைசியாக நடந்த தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும் என்றும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வெட்கத்தை விட்டு சோ ராமசாமி போன்றவர்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதினார்கள். ஜெ. விசுவாசம் கொண்ட வடநாட்டு பத்திரிகைகள் அதிமுகவுக்கு ஏதோ பெரிய மக்கள் ஆதரவு இருப்பது போலவும், அவர் தென்னாட்டு மார்க்கெட் தாட்சர் போலவும் சித்தரித்து கட்டுரைகளையும், கருத்துக்கணிப்புகளையும் எழுதினார்கள்.

திமுக - கூட்டணி கட்சிகள் வெற்றிபெரும் என்று ஒரு சிலர் மட்டுமே சொன்னார்கள். அவர்களும் கூட திமுக தனித்து ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொன்னார்கள். ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு எட்டாம் வள்ளலை போல இடங்களை வாரியிறைத்து திமுகவை பலமற்றதாக்கியிருந்தார் கலைஞர்.

என்னன்னவோ முயற்சித்தும் அதிமுக வெற்றி பெறமுடியவில்லை. போதாக்குறைக்கு விஜயகாந்த் ஒருபக்கம் அதிமுக வாக்கு வங்கி வாக்காளர்களில் உள்ள திரை ரசிகர்களை இழுக்க, திரைப்பட ஹீரோவுக்கு ஒட்டுப்போடும் வாக்காளர்களின் பெரும் பகுதியை அதிமுக இழந்தது.


********

தற்போது எந்த விதத்திலும் கலைஞர் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதால் ஈழப்பிரச்சனையில் தங்களுக்கு அக்கறை உள்ளது போல் காட்டிக் கொள்வதற்காக கலைஞரைப் பார்த்து 'ஈழத் தமிழர் நலனுக்காக பதவி விலக தயாரா?' என்று கேட்கிறார்கள், இதன் மூலம் கலைஞர் அக்கறை இல்லாதவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது, ஒரு வேளை கலைஞர் கோபப்பட்டு பதவியை தூக்கி எரிந்தால் தேர்தலில் தில்லுமுல்லு செய்து, சோ ராமசாமி மூலமாக விஜயகாந்தை வளைத்து (வைகோ எப்பவுமே அனாதைதான்) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நப்பாசை ஜெவுக்கும், அவரை ஆதரிக்கும் கோமாளிகளுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவாரா?

இராஜிவ் காந்தி கொலையில் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பது போல் குற்றம் சுமத்திய போது, மறுத்து எதுவும் பேசாமல் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக கிடைத்த தேர்தல் தோல்வியில் துவண்டுவிடாமல் இருந்தது. தன் மீது விழுந்த வீன் பழியை எந்த மேடையிலும் சொல்லிக் காட்டி அனுதாபம் தேடாதது இதெல்லாம் தியாகம் இல்லையா? தான் குற்றமற்றவர், விடுதலை போராட்ட அமைப்புகள் தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர் வெளிப்படையாகவே சொல்லி இருக்க முடியும் தானே?

ஏன் சொல்லவில்லை. தானே அவ்வாறு சொன்னால் தமிழர் எவருமே ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வரமாட்டார்கள் என்ற உயர்ந்த எண்ணமே காரணம். தான் பேசாமல் இருந்துவிட்டால் அவர் கருத்தையே அக்கறை உள்ள பலரும் ஈழத்தமிழர்கள் குறித்த கருத்தாக பேசுவார்கள் என்பதே காரணம். அவர் வெளிப்படையாக பேசினால் அதை மலின அரசியல் ஆக்கி காங்கிரசிடம் ஆதாயம் அடைய முயல்வார்கள். அது தமிழ்நாட்டு நலனுக்கும், ஈழத்தமிழர் நலனுக்கும் கேடாக போய்விடும் என்பதாலேயே மெளனமாக இருந்தார், இருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவரா ?
முட்டாள்களின் எண்ணத்தில் இருப்பது ஈழத்தமிழர்களின் மீதான அக்கறையா? அல்லது கலைஞர் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியா?

இளைஞர்களுக்கு வழிவிடுவோம் - தலைவர் கலைஞர்!

சாதனை அரசு

நாமெல்லாம் சேர்ந்து வளர்த்திடும் கழகம், வலிவும், பொலிவும் கொண்டதாக; "நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக'' எழில் கூடி ஏற்றமுடன் தளர்ச்சியின்றி வளர்ச்சியுற்று வாழ்க என்பார்களே; வயது முதிர்ந்தோர் வாயார மனமார; அது போன்ற வாழ்த்துக்களை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களுக்கான சாதனைகளைச் செய்து இந்த அரசும் பெற்று வருகிறது.

அரசினை நடத்தும் கழகமும் - அரசுக்குத் துணை நிற்கும் தோழமைக் கட்சிகளும் பெற்று வருவதை நாடறியும், நல்லோர் அறிவர் - வளம் பெருகுது; வயலிலே பயிர் தழைக்குது - என்றாலும்கூட; பெருகப் பெருகத்தான் - தழைக்கத் தழைக்கத் தான் - இன்னும் சற்று மேலும் பெருகிட; தழைத்திட வேண்டுமென்ற தணியாத ஆசை உரிமையுடைய உழவனுக்கு ஏற்படுகிறது! அதுபோல எனக்கு ஏற்படும் அவா மிகுதியின் அடையாளமாகவே இந்தக் கடிதம்!

இளைஞர் அணி மாநாடு

இளைஞர் அணியின் செயலாளராகவும் இருக்கிற உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி ஸ்டாலின்; அந்த அணியின் மாநில அமைப்பு, மாவட்ட அமைப்புகள், மற்றுமுள்ள அமைப்புகளை அணிவகுத்திடச் செய்து, ஆக்கபூர்வமானதொரு அருஞ்செயலை இளைஞர் அணி மாநில மாநாடு என்று; டிசம்பர் 15, 16 நாட்களில் நெல்லைச் சீமையில் நடத்திட தலைமைக் கழகத்தின் அனுமதியைப் பெற்றுள்ளார். அதற்கான தொடக்கப் பணிகள் தொடங்கிவிட்ட செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இளைஞர்கள் ஓர் இயக்கத்தின் நாடி நரம்புகளாகவும் - அரிய தியாகங்களைச் செய்து; அனுபவம் பெற்ற அகவை முதிர்ந்தோர் அந்த இயக்கத்தின் இரத்த நாளங்களாகவும் - அமைந்து, அந்த இயக்கத்திற்கு அளிக்கும் உயிரோட்டமே; அந்த இயக்கத்தைக் கொள்கைக் குன்றமாகவும் - என்றும் வற்றாத ஜீவ நதி உருவாகிப் பெருகி வரும் உச்சி முகடாகவும் விளங்க வைக்கக் கூடியதாகும்.

போர்க் குரல்

"கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்'' என்றும் - அத்தகைய இளைஞர் கூட்டத்தைப் பார்த்து; "மக்களிடையே எழுச்சிக்கு மருந்தாகுங் காண்!'' என்று அறிவுறுத்தியும் நமது பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் திருவாரூர் மாணவர், இளைஞர் மாநாட்டுக்கு 1942-ம் ஆண்டு அறிவுரையும் அனல் கக்கும் வாழ்த்துரையும் அனுப்பி வைத்தாரே; அதற்குப் பிறகு அடிக்கடி இளைஞர்கள், மாணவர்கள் அணி வகுப்புகள், கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் நடை பெற்றிருந்தாலுங்கூட; அனைத்துமே மொழிப்போர் வெற்றியைக் கொண்டாடி முடித்து விட்டன.

முழுப் போர் ஒன்று தமிழ்ச் சமுதாயத்துக்குத் தேவைப்படுவதை எண்ணிப் பார்த்து; சமுதாயத் துறையில், அரசியல் துறையில், பொருளாதாரத் துறையில் என எல்லாத் துறைகளிலும் எழுப்பிடும் போர்க்குரல், வெற்றி முரசாக ஒலித்திட "எழுக இளைஞனே!'' என்று அறவழி அழைப்பு விடுத்திடவே நெல்லையில் மாநில இளைஞர் அணி மாநாடு!.

லட்சியங்களை மாற்றி..

இளைஞனாக என் போன்றோர் இருந்தபோது தான் "நெருப்பின் பொறிகளே நீங்கள்தான் தேவை!'' என்று ஈரோட்டுக் குரலும் - காஞ்சியின் முழக்கமும் கேட்டது; எங்களை நோக்கி! - அன்று கிளம்பிய இளைஞர் பட்டாளத்தின் ஒரு துளிதான் நீங்கள் தலைவன் என்று ஏற்றிப் போற்றுகின்ற இந்தக் கருணாநிதி! இந்த உண்மையை நான் ஒருக்கணமும் மறந்து விட மாட்டேன்-மறந்தோர் சிலர் பொது வாழ்விலேயே மதிப்பற்று "புழுக்கை''களாக ஆகிவிட்ட காட்சியை கண்டு கொண்டுதானே இருக்கிறோம்.

அதனால் இன்றைக்கு ஒன்று - நாளைக்கு ஒன்று என இலட்சியங்களை மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டு, அதற்கேற்ப தனது பேச்சாற்றலைப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள், "இலட்சியம்'' என்ற சொல்லை அறிந்தவர்களே தவிர, இலட்சியம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டோரல்லர்! உணர்ந்தால்தானே அதன்படி நடக்கிறோமா? நடக்கவில்லையா? என்பதை பகுத்தறிந்து அதற்கேற்ப நமது வாழ்வை வகுத்துக் கொள்ள முடியும்.

பொது வாழ்க்கை

நாம் யார்? - நமது இனம் யாது? நமது மொழி எது? மொழிக்காக இழப்புகள் பலவற்றை ஏற்றவர்கள்; உயிரையே விட்டவர்கள், மொழியைக் காத்திடும் போருக்கு இளைஞர்களை, மாணவர்களை, மக்களைத் தயாரித்தவர்கள், அதற்காக கடும் அடக்குமுறைகளை ஏற்றுக் கொண்டவர்கள்- அவர்களைப் பற்றியெல்லாம் நினைத்துப் புகழ்ந்துரைத்தால் மட்டும் போதுமா? நாமும் அவர்களைப் போல தியாகச் சிந்தை - உறுதி உள்ளம் பெற வேண்டாமா?

நான் முதன் முதலாகப் பொது வாழ்வில் எப்படி அடியெடுத்து வைத்தேன் என்பதைத் தெரிந்துகொள்வதே; இளைஞர்களுக்கும் - மூத்தவர்களுக்கும் - தேவையானதும் - இன்றியமையாததுமான ஒன்றாகும் - இதற்குப் பொருள் "நான் காட்டிய வழியில் செல்'' என்பதல்ல; காட்டப்பட்ட கடுமையான தியாகிகளின் வழிகளை நான் பின்பற்றியது போல உன் போன்ற இளைஞர்களும், மாணவர்களும் பின்பற்ற வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.

இளைஞர்களுக்கு வழி விடுவோம்

நெல்லை மாநாடு தொடங்கும் வரையில் நிறைய எழுதப் போகிறேன் - இது முதல் கடிதம்தான் - இளைஞர்களே கூடி மாநாடு நடத்தினால்தான் எனக்கு மகிழ்ச்சி! ஏற்புடையதுமாகும்! மூத்தோர் ஆதரவாளர்களாக விளங்கட்டும். மாநாடு தொடக்கத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரிகைகளில் கண்டேன் - இளைஞர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு மாறாக; அகவை முதிர்ந்த அமைச்சர்களே அந்தப் புகைப்படத்தை அடைத்துக் கொண்டு நிற்கின்ற காட்சி; சிறிது ஏமாற்றத்தை எனக்குத் தராமல் இல்லை!

இளைஞர்கள்; மூத்தோர்களாக ஆகாமல் இருக்க முடியாது - ஆக வேண்டும் - அதே சமயம்; இளைஞர்களுக்கு வழி விடாமல் அந்த மூத்தோர் அடைத்துக் கொள்ளவும் கூடாது. அவரவர்க்குரிய பணிகளை - அவரவர்கள் பகிர்ந்து கொண்டு ஆற்றிட வேண்டும்;

Saturday, November 03, 2007

தமிழ்செல்வன் வீரச்சாவு - தலைவர் கலைஞர் இரங்கல்!


எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?